Popular Posts

Monday 25 April 2016

நல்ல நோட்டா ? கள்ள நோட்டா ? நீங்கள் இதில் எந்த நோட்டு ? அசல் எது ? போலி எது ? உண்மை காணுங்கள் ஒரு பொருள் அசலா ? போலியா ? என்பதை எல்லோராலும் கண்டுபிடிக்க முடியுமா ? உண்மையாக எல்லோராலும் கண்டு பிடிக்கமுடியாது .

நல்ல நோட்டா ? கள்ள நோட்டா ?
 நீங்கள் இதில் எந்த நோட்டு ?
 அசல் எது ? போலி எது ?
 உண்மை காணுங்கள் ஒரு பொருள் அசலா ? போலியா ? என்பதை எல்லோராலும் கண்டுபிடிக்க முடியுமா ? உண்மையாக எல்லோராலும் கண்டு பிடிக்கமுடியாது . மாறாக அதை உருவாக்கியவர் சில அடையாளங்களை நிர்ணயித்து இருப்பார்கள் அதைவைத்து மட்டும் தான் அந்த பொருளை அசல் எது !! போலி எது !! என்று கண்டு பிடிக்க முடியும் .
 இந்த அடிப்படையில் நாம் நம்மை பற்றி ஒரு அளவுகோளை பார்ப்போம்.!
 பரிபுரணமான முஸ்லிம்கள் யார் ?
 முஸ்லிம் என்ற பெயர்தாங்கிகள் யார் ?
 என்பதை நாம் ஆய்வு செய்வோம்
 , يايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوت الشيطان انه لكم عدو مبين ( ٢=٢٠٨)
 நம்பிக்கை கொண்டவர்களே !! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் பரிபுரணமாக (முழுமையாக ) நூழைந்து விடுங்கள்; ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவன்= ( 2=208)
 இறைநல்லடியார்களே ! மேலே சொன்ன ஆயத்தை கவனியுங்கள் ;
 இறைவன் பரிபுரணமாக இஸ்லாத்தில் நூழையுங்கள் என்று சொல்கிறான்.அப்போது பெயர் அளவில் இஸ்லாத்தில் நூழைவர்களும் இருப்பர்கள் என்பதை நமக்கு தெளிவாக இறைவன் சொல்லிகாட்டுகிறான்.
 1- முழுமையாக இஸ்லாத்தில் நுழைதல் என்றால் என்ன ?
 2-முழுமையான பரிபுரணமான முஸ்லிம்களுக்கு உரிய அளவு கோள்தான் என்ன ?
 நடைமுறையில் பரிபுரணமான (முழுமையான ) முஸ்லிம்களுக்கு உரிய என்ன அளவுகோளை நாம் வைத்துள்ளோம் என்பதை நாம் முதலில் பார்த்துவிட்டு .அடுத்து இறைவன் எவற்றையேல்லாம் பரிபுரணமான( முழுமையான ) முஸ்லிம்களுக்கு உரிய அளவுகோளாக கூறுகிறான் என்பதை பார்போம் ;
 நம்முடைய அளவு கோளைபார்போம் :
 1-நாவளவில் கலிமாவை மொழிவது
 2-வாரம் ஒருமுறை அல்லது வருடம் இரு முறை அல்லது ஆயுளில் ஒரு முறை பள்ளிக்கு வருவது.
 3-இஸ்லாமிய பெயர்களை வைத்து கொள்வது.
 4-பெற்றோர்கள் முஸ்லீம்களாக இருப்பதால் பிள்ளைகலும் முஸ்லீம்கள்தான் என்று என்னுவது .
 5-குறிப்பிட்ட உணவு முறைகளை சாப்பிடுவது.
 6-தொப்பி,தாடி,தலைப்பாகை ,இது போன்ற அடையாளங்களை வைத்து.
 இங்கு ஒரு சில அடையாளங்களை மட்டும் குறிப்பிட்டு உள்ளேன் ..மேலே சொன்ன இவைகள் தான் ஒரு முழுமையான முஸ்லீமுக் கூறிய அளவு கோள்கள் என நாம் கருதிக் கொண்டிருக்கின்றோம்!
 .இவைகள் தான் ஒரு முழுமையான முஸ்லீம்களுக் கூறிய அளவு கோள்கள் என்று சொல்வதாக இருந்தால் இந்த உலகத்தில் நிறையபேர் இஸ்லாமிர்களின் பட்டியலில் இடம் பெற வேண்டியது வரும் காரணம் !!!
 1=நாவளவில் கலிமாவை மொழிதல் !!!
 லா இலாஹஇல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்று ஒருவர் நாவளவில் கலிமாவைச் சொல்வதால் அவர் முழுமையான முஸ்லீம் என்று சொன்னால் நாம் இவர்களை எப்படி கூறுவது .ஒவ்வொரு இஸ்லாமிய மேடைகளில் இவர் அழைக்கப்பட்டால் இவர் மேடையில் ஏரியவுடன் லா இலாஹஇல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்று சொல்வது மட்டும் அல்ல.இவர் அல்ஹம்து சூ றாவை அழகிய தொனியில் ஒதுவார்!
 இவர் ஒதுவது போல் இன்று நம்மில் ஒரு சிலர் நபர்கள் இது போன்று ஓதக் கூடியவர்கள் இல்லை என்ற பதில் தான் இருக்கும் . சரி அவர் யார் என்பதுதானே உங்கள் கேள்வி அவர்தான் மதுரை ஆதினம் இவரை கலிமாவை நாவின் அளவில் மொழிந்து விட்டார் இவரை நாம் முழுமையான முஸ்லீம் என்று சொல்ல வேண்டியது வரும் ? அவரால் இஸ்லாமி பட்டியலில் இடம் பெற முடியுமா ?
 தெளிவுரை ::
 லா இலாஹஇல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்று சொல்வதின் பொருள் முழுதீனும் அடிப்படையும் இந்த கலிமாவின் மீதே அமைந்துள்ளது.இந்த கலிமா இல்லாமல் ஈமானும் சரியாவது இல்லை.எவரும் முஸ்லிமாகவும் முடியாது.கலிமா சொன்னால் மட்டும் போதாது ஏன் என்றால் எப்போது ஒரு மனிதர் கலிமாவை மொழிகிறாறோ அப்போதே அவர் மீது அல்லாஹூவும் ,ரஸூலும் சொன்ன விஷையங்களின் மீது ஈமான் கொண்டு அதன் படி எடுத்து நடக்கவேண்டும். அப்போது தான் அவர்கள் முழுமையான முஸ்லீம்களாக ஆவார்கள் !!!
 ஒரு உதாரணம் பாருங்கள் :
 ஒரு மனிதன் நிக்காஹ் முடிக்கிறான் என்றால் அது வரையும் அவனுக்கும் அந்த பெண்ணுக்கும் எந்த தொடர்ப்பும் இருக்காது.எப்போது அவன் வாயிலிருந்து قبلت نكاحها அந்த பெண்ணை நான் நிக்காஹ் செய்து கொண்டேன் ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னானோ அதற்க்கு பின்னால் அவன் தான் அந்த பெண்ணின் அனைத்து தேவைகளையும் பூர் த்தி செய்வான் அதாவது உணவு, உடை,இருப்பிடம்,மருத்துவம்,இது போன்ற எல்லாதேவைகளையும் அவன் நிறைவேற்ற வேண்டும் இப்படி அவளுடைய அனைத்து தேவைகளையும் மரணம் வரும்வரை இவன் பூர் த்தி செய்யவேண்டும்.அது அவனுடைய கடமை . இவன் செய்யும் இந்தபெண்ணின் தேவைகளை ( கடமைகள் ) அனைத்தும் அவன் மீது எப்போது பொறுப்பாக மாறியது ! அவன் எப்போது قبلت نكاحها ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னானோ அப்போது இருந்தே அவன் மீது அந்த பெண்ணுடைய அனைத்து தேவையும் இவன் நிறைவேற்றுது கடமையாகுவது போல.....
 கலிமா சொன்னவுடன் அவர் மீது அல்லாஹூவும்,ரஸூலும்,ஏவிய...,தடுத்த ,எல்லா விசையங்களை இவர் வாழ் க்கையில் எடுத்து நடக்க வேண்டும் .அப்போதுதான் இவர் முழுமையாக இஸ்லாத்தில் நூழைந்தவர்.
 2=வாரம் ஒரு முறை அல்லது வருடம் இருமுறை அல்லது ஆயிலில் ஒருமுறை பள்ளிக்கு விஜயம் செய்வது :
 வாரம் ஒருமுறை ஜூம்மா. வருடம் இருமுறை பெருநாள் ,ஆயு லில் ஒரு முறை அதாவது இவராக வரமாட்டார் அவரை சிலர்களில் உதவியால் கொண்டுவர்ப்படுவார்.இவர்கள் தான் முழுமையான முஸ்லீம்கள் என்றால் ? இன்று மாற்று மதத்தை சார்ந்த எத்தனையோ பேர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் அதர்க்காக அவர்களையும் முஸ்லீம்களின் பட்டியலில் சேர்க்க முடியுமா ?
 3= இஸ்லாமிய பெயர்கள் வைத்துக்கொள்வது :
 இஸ்லாமிய பெயர்கள் முழுமையான இஸ்லாமியர்களின் அடையாளமாக எடுத்துக் கொண்டால் ஏற்படும் விளைவுகள்; நம்முடைய இந்திய திருநாட்டில் உள்ள இவர்களை வேண்டுமானால் பெயரை வைத்து கண்டுக்கொள்ளலாம்
 அதாவது அபுதாஹிர் ..,ஜான்சன், முனியான்டி , இந்த பெயர்களை வைத்து இவர்கள் யார் என்பதை எளிதில் கண்டுக்கொள்ளாம் !
 .அபுதாஹிர் என்ற மனிதர் இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்தவர்.!
 ஜான்சன் என்பவர் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர்,
 முனியான்டி என்ற மனிதன் இந்து மதத்தை சார்ந்தவர் என்று சொல்லி விடலாம் ..
 ஆனால் ஸவுதியில்,ஈராக், இது போன்ற நாடுகளில் உள்ள எஹூதிகள் ,நஸ்ரானிகள், கூட இன்று ஃபாதிமா ,..வாஹித்..,ஜைனப் .இது போன்ற பெயர்களை வைத்துள்ளார்கள் அதர்க்காக யூதர்கள் ,கிருஸ்துவர்களை இஸ்லாமிய பட்டியளில் சேர்க்க முடியுமா ?
 4=பெற்றோர்கள் முஸ்லீம்களாக இருப்பதால் பிள்ளைகள் :
 நூஹ் நபி அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் வெள்ள பிரளையம் ஏற்பட்டபோது,அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அந்த கப்பலில் ஏறி தப்பித்துக் கொண்டார்கள் . அவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வெள்ளப்பிரளையத்தில் சிக்கித் தவித்தனர்,அவர்களில் நபி நூஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் மகனும் ஒருவர்.வெள்ளத்தில் சிக்கி தவித்த மகனைக் கண்ட நபி அவர்கள் இறைவனிடம் துஆ செய்தார்
 نادي نوح ربه فقال رب ان ابني من اهلي 4511 நுஹ் நபி தன் இறைவனிடம் '' என் இறைவனே ! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன் . قال ينوح انه ليس من اهلك انه عمل غير صالح46=11 இறைவன் கூறினான் ; நூஹே உண்மையாகவே அவன் உம் குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல. !
 பிறப்பின் அடிப்படையில் ஒருவன் முழுமையான இஸ்லாமியன் ஆகிவிடுகிறான் என்பது உண்மையானால் நூஹ் நபியின் மகன் இஸ்லாமியப் பட்டியலில் வர வேண்டும் வர முடிந்ததா ? !
 இல்லையே....!
 ஆக ஒரு நபியின் மகனுக்கே இந்த நிலையென்றால் நம்மைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை !!
 5=தொப்பி ,தாடி,தலைப்பா,இது போன்றவைகள் :
 இவர் எப்போது பார்த்தாலும் தொப்பி அணிந்து இருக்கிறார் இவர்தான் முழுமையான முஸ்லீம் என்று சொல்வதாக இருந்தால் .இவரையும் நாம் முஸ்லீம் என்று சொல்ல வேண்டியது வரும் அவர் யார் ? அவர்தாங்க போப்பாண்டவர் அவர் எப்போதும் தொப்பி அணிந்து இருக்கிறார்.அதற்க்காக இவரை முஸ்லீம் என்று சொல்லாமுடியுமா ?
 இவர் இஸ்லாமிய பட்டியலில் இடம் பெறமுடியுமா ? தாடி,தலைப்பா இவைகள் இன்று இருக்கிற சீக்கியர்கள்,சிங்,இவர்கள்.அனைவரும் தாடி ,தலைப்பா அணிந்து இருப்பார்கள் . இவர்கள் இஸ்லாமிய பட்டியலில் இடம் பெறமுடியுமா ?
 சட்டம்,மற்றும் வைத்தியத்தின் அரிச்சுவடியே தெரியாத ஒருவன் அது சம்மந்த பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு..
 நான் ஒரு வக்கீல்..!
 என்று நன் ஒரு ,டாக்டர்..
 என்று சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா ?
 அதுபோலதான் இஸ்லாமியர்களின்.. ஆடை,...உணவு முறை...,தோற்றம், இவைகளை வைத்து மட்டும் ஒருவன் முழுமையான முஸ்லீம்மாக முடியாது.!
 .இவைகள் தான் முழுமையான முஸ்லீகளின் அடையாளம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.!
 ஆனால் இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய அடையாளங்கள் இவைகள் அல்ல !
 இந்த அடையாளங்கள் எல்லாம் நம் இந்திய திரு நாட்டில் உள்ள அரசங்க பட்டியலில் அதாவது ரேசன் காடு , வாக்களர் அட்டை ,இஸ்லாமியர்களின் பட்டியலில் வருமே தவிர இறைவன் பட்டியலில் வராது .என்பதை சிந்தித்து கொள்ளுங்கள் !
 .
 இப்போது வாருங்கள் ...!
 இறைவன் எவற்றை எல்லாம் ..பரிபூரணமான இஸ்லாமிய அடையாளமாக சொல்கிறான் என்பதை பார்போம்;!
 يايها الذين امنوا இந்த வசனத்தில் ஆராம்பமாக சொல்வதை பாருங்கள்
 இறை நம்பிக்கையாளர்களே !! என்று சொல்லிருக்கிறான் !
 :
 இறை நம்பிக்கை :: நம்பிக்கை என்றால் வெறும் நாவளவில் இல்லாமல் உள்ளத்திளவில் அது அமைந்திட வேண்டும்.!
 இறைவன் : கொடுத்தவற்றைத் தடுத்திட இயலாது.அவன் தடுத்தவற்றைக் கொடுத்திட இயலாது எங்கின்ற அளவில் அவனின்றி அணுவும் அசையாது,அவனே நாம் பாதுகாவலன் என்ற அசையாத நம்பிக்கை நம்மனதில் பதிய வேண்டும்.!
 இதற்க்கு உதாரணம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையே குறிப்பிடலாம் ;ஏகத்துவத்தை மக்களிடம் எடுத்துரைப்பதற்க்கு முன் அவர்களுக்கு மக்கள் சூட்டிய பெயர் அல் அமீன் ( நம்பிக்கை கூறியவர் ) அஸ்ஸாதிக் ( உண்மையளர் ) என்று மக்களால் புகழ்ந்து கூறினார்கள் ஆனால் எப்போது ஏகத்துவத்தை பிரச்சாரம் பண்ண ஆரம்பித்தார்களோ அப்போது அல் ஜூனுன் (பைத்தியகாரன் ) என்று மக்கள் அழைக்க ஆரப்பித்தார்கள். அதுமட்டுமா ?தாயிஃபிலே பட்ட கல்லடிகள்,சொல்லடிகள்,கொஞ்சம் அல்ல .அதுமட்டுமா !!பல நாட்கள் ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட சமூக பகிஷ்காராம்.செய்தார்கள் .அந்த நாட்களில் பசிக்கு உணவு இல்லாமல் காய்ந்த இலை குலைகளை பஸ்பமாக்கி தண்ணீரில் கலக்கிக் குடித்த கொடுமை !! இவை எல்லாவற்றையும் விட ஸவுர் குகையில் தஞ்சம் புகுந்த வேளையில் எதிரிகள் மோப்பம் பிடித்து அங்கேயும் வந்துவிட எதிரிகளின் கால்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும்,அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கும் தெரிந்தது .அவர்கள் குனிந்து பார்த்தால் இருவரின் தலைகளும் பறிபோய்விடும் நிலை அப்போது நாம் இருவர்தானே இருக்கின்றோம் என்று அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இறைவனை மறந்து சொன்னார்கள் என்பதாக வரலாறு கூறுகிறது,ஆனால் அந்த இக்கட்டான நேரத்திலும்
 ,தோழரே துவண்டு விட வேண்டாம் ! நீர் நினைப்பது போல் நாம் இருவர் மட்டும் இங்கு இல்லை நம்மோடு சேர்ந்து மூன்றாவது அல்லாஹ் இருக்கியறான்( لا تحزن ان الله معنا ( 9=40 === என்று நிராசையடையாமல் நெஞ்சுறுதியோடு கூறினார்களே அது தான் உண்னையான ஈமான்.
 ஆனால் இன்று பார்கின்றோம் ;
 ஆற்றுவது சுதந்திர தின உரை ! ஆனால் (புல்லட் துளைக்காத ) கண்ணாடிக் கூண்டிலிருந்து தான் இறைன்ய அரசு அதிகரிகள் சுதந்திர தின உரை ஆற்றுவார்கள் .!
 ஆனால் அப்படியிருந்தும் '' காந்தி முதல் ராஜீவு காந்தி வரை எதிரிகளால் சுடப்பட்டு இறந்த வரலாறுதான் இந்தியா வரலாறு !
 . ஆனால் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இக்கட்டான நேரத்தில் இறை நம்பிக்கையோடு செயல்பட்ட தால் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் இருப்பு கூன்டை வைத்து பாதுகாக்க வில்லை, மலக்குகள் பட்டாளத்தை வைத்து பாதுகாக்க வில்லை .!
 காற்று பலமாக அடித்தால் அதனுடைய வலைகள் கிழிந்து விடும் அதுதான் சிலந்தி வலை !
 அதை வைத்து காப்பாற்றினானா !! இல்லையா !! இது மாதிரியான ஈமான் உடைய நம்பிக்கை நம்மிடம் உள்ளதா ???
 நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் !! அன்பர்களே இது போன்ற ஈமான் ,நம்பிக்கை நம்மிடம் வருவதற்க்கு நாம் முயற்சி செய்யவேண்டும் !
 .இது போன்ற ஈமானையும் நம்பிக்கையும் தருவானாக ,,,,, !
 இறைவன் குர்ஆனில் சில அடையாளங்களை கூறுகிறான் : انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم و اذا تليت عليهم ايته زادتهم ايمانا و علي ربهم يتوكلون (

No comments:

Post a Comment