Popular Posts

Tuesday 26 April 2016

இஸ்லாத்தின் பார்வையில் வஹ்ஹாபிகள்  என்பவர்கள் யார்?, நஜ்த் என்றால் என்ன?, அவர்களின் தோற்றம்,வளர்ச்சி,அகால மரணம்"¶

¶"இஸ்லாத்தின் பார்வையில் வஹ்ஹாபிகள்  என்பவர்கள் யார்?, நஜ்த் என்றால் என்ன?, அவர்களின் தோற்றம்,வளர்ச்சி,அகால மரணம்"¶

♣ புதுமை விரும்பிகளாகிய வஹ்ஹாபிகள் முதன் முதலாக தோன்றிய இடம்

அரேபியாவில் நஜ்து மாகாணம், (இன்று அதன் பெயர் ரியாத்) அங்கு வசிப்பவர்களுக்கு நஜ்தியர் என்று பெயர். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவிய அந்த நஜ்து வாசிகளுக்கு அவர்களின் உள்ளத்தில் குடிக்கொண்டிருந்த பொறாமை குணம் சற்றும் மாறாமல் அது நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே இருந்தது. நபியுல்லாஹ்வின் சமூகம் வந்து உபதேசங்களை கேட்கும் இவர்கள் வெளியில் சென்றதும் அதற்கு நேர் மாற்றமான நச்சு வார்த்தைகளை பேசுவார்கள். குதர்க்க வாதம் புரிவார்கள். இரவெல்லாம் இஸ்லாத்துக்கு எதிராக சதியாலோசனை செய்துகொண்டு இருப்பார்கள்.

♦இதற்கு காரணம் அந்த தீயவர்களின் உள்ளத்தில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது இருந்த பொறாமை. இவர்களின் நிலையை தெரிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இவர்களுக்கு உபதேச தோரணையிலும், கண்டித்தும் பல முறை சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்கள். ஆனால் அது இந்த தீயவர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது.

1) இவர்களை பற்றி தான் அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா தனது திருமறையில் நயவஞ்சகர்கள் (முனாபிகீன்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு எச்சரிக்கை செய்து இருப்பதை திருமறையில் பல இடங்களில் காணலாம்.

2)இவர்களின் போக்கு பற்றி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு வேதனை ஏற்படுவதுண்டு. ஷைத்தான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வரும் போது இந்த நஜ்தியர்களின் உருவத்தில் தான் வருவான். அவனைக் கண்டதும் ஷெய்குன் நஜ்தி (நஜ்தி பெரியார்) வருகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறுவார்கள். இதை அண்மையில் இருக்கும் ஸஹாபாக்கள் இவன் ஷைத்தான் என்று புரிந்து கொள்வார்கள்.

♣ அரேபியாவில் நஜ்து மாகாணம், (இன்று அதன் பெயர் ரியாத்)பற்றி

ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்கள் முபாரக்கான கரங்களை ஏந்தி " யா அல்லாஹ்! எங்கள் ஷாம் தேசத்துக்கும் (சிரியா) பரக்கத்து செய்வாயாக! யா அல்லாஹ்! எங்கள் யெமன் தேசத்திற்கு பரக்கத்து செய்வாயாக!" என்று துஆ கேட்டார்கள். அப்பொழுது பக்கத்திலிருந்த சஹாபாக்கள், " யா ரசூலல்லாஹ்! எங்களுடைய நஜ்து தேசத்துக்கும்" என்றார்கள். மறுமுறையும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன் கூறிய படியே ஷாம், யெமன் இரு தேசங்களுக்காகவும் துஆ செய்தார்கள். மீண்டும் நஜ்தியர்கள் தங்கள் தேசத்துக்காக துஆ கேட்கும் படி கூறவே, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மூன்றாம் முறையாக " அங்கு தான் அதிர்ச்சிகளும், கொந்தளிப்புகளும், பித்னாக்களும் உண்டாகும். ஷைத்தானின் கொம்பு வெளியாகும். அங்குதான் ஷைத்தானுடைய கூட்டங்கள் வெளிக்கிளம்பும்" என்று கூறினார்கள். (ஸஹிஹ் புகாரி)

♦நஜ்தியர்களின் முனாபிக் (நயவஞ்சக) செயல்கள் காரணமாக அடிக்கடி பித்னாக்கள் வேகத்துடன் ஏற்படுவதும், அது பலம் இழப்பதுமாக இருந்தது. நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு பின் 225 வருடங்கள் வரை இஸ்லாமிய உலகம் நிம்மதியோடு இருந்தது. இதற்கிடையில் நஜ்தியர்களால் ஏற்படும் சிறு சிறு குழப்பங்களை எல்லாம் அப்பொழுது வாழ்ந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களாலும் ஆட்சியாளர்களாலும் அப்போதைக்கப்போது அடக்கி ஒடுக்கப்பட்டன.

♣ இப்னு தைமியா என்பவன் யார்?

அப்பொழுது தான் நஜ்தில் இப்னு தைமியா என்பவன் வெளியாகி தீனில் தலையிட்டு நூதன கொள்கைகளை உண்டு பண்ணி, நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஷரிஅத்திற்கு விரோதமான மஸாயீல்களை திரட்டி, 'ஸிராத்தல் முஸ்தகீம்' என்ற நூலை வெளியிட்டு புதிய கிளர்ச்சியை உருவாக்கினான். இந்த நூலில் அதிகமாக நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அஹ்லுல் பைத்துகள், சஹாபாக்கள், இமாம்கள், அவ்லியாக்கள் முதலியோர்களை இழிவுச் சொற்களால் நிந்தித்து எழுதி இருக்கிறான். இதை அவனுடைய சகோதரர்களும், உறவினர்களும் கண்டித்து, மறுத்தும் இருக்கிறார்கள்.

♣இப்னு தைமியா பற்றிய சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் பத்வா

அது மற்றும் அன்றி அப்போது வாழ்ந்த தலை சிறந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களான ஷெய்குல் இமாம் ஷைக் முஹம்மது ஃபர்ஸ் , குதுவதுல் முஹத்திதீன் ஷைக் இப்னு ஹஜர் மக்கி, செய்யத் அஹ்மத் கபீர் பாரியி இன்னும் மக்காவின் முப்தியா இருந்த அல்லாமா செய்யத் அஹ்மத் தஹ்லான் மக்கி ஆகிய மார்க்க மேதைகள் இந்த இப்னு தைமியாவை லஃனத்துச் செய்து காஃபிர் என்று மார்க்க தீர்ப்பு (ஃபத்வா) வெளியிட்டு இருக்கிறார்கள்.

♦ஆனாலும் இவனுடைய சூழ்ச்சியை அறியாமல் சில அறிவீனர்கள் இவனை பின்பற்றினார்கள். இவனுடைய அட்டூழியம் பொறுக்க முடியா மல் எகிப்து அரசாங்கம் பல முறை இவனை சிறை காவலில் வைத்தது. அப்போதும் இவன் அடங்கவில்லை. இறுதியாக சிரியா அரசாங்கம் இவனை கைது செய்து திமிஷ்க் நகர் சிறை கூடத்தில் சாகும் வரை சிறையில் வைத்தது. அங்கேயே இவன் இறந்தான். இப்னு தைமியாவின் பிரதிநிதிகளில் பலர் காலப்போக்கில் ஃபித்னாக்கள் கிளர்ச்சிகள் செய்வதும் எதிர்ப்பின் காரணமாக கேவலப்பட்டு அது மறைவதுமாக இருந்தது.

♣முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவன் யார்?

ஏறத்தாள 600 வருடங்களுக்கு பின் நஜ்தை சார்ந்த தர்இய்யா என்ற ஊரில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பிறந்தான். இவன் தலையெடுத்து இப்னு தைமியாவுடைய கொள்கைகளைப் பின்பற்றி அதற்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து புதியதோர் மத்ஹபை உண்டாக்க முற்பட்டு இப்னு தைமியா எழுதிய ஸிராத்தல் முஸ்தகீம் என்ற நூலை விரிவு படுத்தி அதற்கு மிருது கொடுத்து ' கிதாபுத் தவ்ஹீத்' என்ற பெயரால் வெளியிட்டான். இந்த சந்தர்ப்பத்தில், துருக்கி அரசர் சுல்தான் அப்துல் ஹமீத் கான் காலமானார். பதவியின் காரணமாக அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டது. துருக்கியின் உதவியை பெற்று கொண்டிருந்த பக்கத்து அரசர்களும் பலம் இழந்தார்கள். அது ஹிஜாஸையும் தாக்கியது. இதை தக்க தருணமாக கொண்டு இப்னு வஹ்ஹாப் நஜ்தி ஒரு படையை திரட்டிகொண்டான். இந்த படையின் தலைவனாக ஸுஊத் என்பவனை நியமித்தான். இவன் ஹஜ்ஜுக்கு போவதாக பாசாங்கு செய்து பெரும் படையுடன் புனித மக்காவுக்குள் நுழைந்து பொருள்களை சூறையாடி ஆண், பெண், வயோதிபர்கள், வாலிபர்கள், குழந்தைகள் என்று பாராமல் கொலை செய்தான்.

♦அந்த மக்காவாசிகள் உயிர் தப்ப கார்மானம் தேடி ஹரம் ஷரீபுக்குள் நுழைந்தார்கள். அப்பொழுதும் அந்த கயவர்கள் அந்த மக்களை உயிரோடு விடவில்லை. ஞாபகார்த்தமான மஸ்ஜிதுகளும், கப்ருகளும் தாக்கப்பட்டன. மக்காவில் புரிந்த அட்டூழியம் போலவே மதீனா முனவ்வராவிலும் அந்த கயவர்கள் கொஞ்சமும் இரக்கமின்றி முஸ்லிம்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார்கள். அப்போது அங்கு இருந்த செய்யதுனா அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதா ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) ஆகியவர்களுடைய மக்பராக்களும் வீழ்த்தப்பட்டது. ஸலவாத்து நூல்கள் ஃபிக்ஹு கிதாபுகள் முதலியவை எரிக்கப்பட்டன. ஜித்தா, தாயிப், மக்கா, மதினா, கர்பலா ஆகியவை இந்த கொடுமைகளுக்கு உட்பட்டது. இந்த அநியாயக்காரர்களின் அட்டூழியம் பெருகி கடைசியாக அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் கப்ரு ஷரீஃபை தரைமட்டமாக்க முற்பட்டபோது, அந்த சில ஷைத்தான்கள் அதிசயமாக செத்து மடிந்தார்கள்.

♦ இவர்கள் இந்தளவுக்கு காட்டுமிராண்டித்தனமாக அப்பாவி மக்களை கொல்லுவதற்க்கு காரணம் அங்கு வாழ்ந்த மக்கள் சுன்னத் வல் ஜமாஅத்தாக இருந்ததே. முஹம்மது இப்னு வஹ்ஹாப் நஜ்தியுடைய மத்ஹப்பின் பிரகாரம் சுன்னத் வல் ஜமாஅத் மக்கள் முஷ்ரிக்குகள், பித்அத்துக்காரர்கள் என்று அவன் நினைத்ததே. அந்த சமயம் உள்நாடு, வெளிநாடுகளிலுள்ள உலமாக்கள், முஃப்திகள் இப்னு வஹ்ஹாப் நஜ்தியின் கொள்கை முற்றும் முழுதாக தவறு என்றும் அதை கடுமையாக ஆட்சேபித்து தக்க ஆதார சான்றுகளுடன் அவரை லஃனத்து செய்து குப்ஃபார் (இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவர்) எனக் தீர்ப்புக்கூறி பல ஃபத்வா கிதாபுகள் வெளியிட்டனர்.

♣முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் இறுதி நிலை

இறுதியாக இந்த இப்னு வஹ்ஹாப் நஜ்தி, யெமன் நாட்டில் ஒரு தக்வாவுடைய சுன்னத் வல் ஐமாஅத் பெரியாரோடு தன் மத்ஹபை பற்றி தர்க்க வாதம் புரிந்து இறுதியில் படுதோல்வியடைந்து அங்கேயே அகால மரணம் ஆனான். (இவனது அதிர்ச்சிக்குரிய அகால மரணம் பற்றிய விபரம் ஃபுதூஹாதுல் மகிய்யா என்ற நூலிலும் மஙானி கிதாபிலும் காணலாம்) ஆனாலும் இவன் தனது படைக்கு தலைவனாக நியமித்த ஸுஊது என்பவன் அரேபியாவின் ஆட்சியை பிடித்தான். வெறும் அரேபியா என்ற நாட்டை தன் பெயரை முன்னாள் சொருகி ஸஊதி அரேபியா என்று மாற்றினான். அவனுடைய பரம்பரையே இன்று வரை அரேபியாவை ஆட்சி செய்கிறது. நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன் அறிவிப்பின்பட, நஜ்தில் ஷைத்தானின் கொம்பாக தோன்றி ஃபித்னாக்களையும், குழப்பங்களையும் உருவாக்கியவன்தான் இந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி. இவனை பின்பற்றி , இவனது மத்ஹபை ஏற்று, இவனது சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தலைசாய்த்து நடப்பவர்களையே "வஹாபிகள்" என்று சொல்லப்படும்.

நன்றி : Mailof Islam

http://www.mailofislam.com/wahabigal_endral_yaar.html#sthash.ubLIsAVb.xiqq

க்கப்போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள்".(அல்குர்ஆன் : 4:69)

்க்கப்போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள்".(அல்குர்ஆன் : 4:69)

அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு தெளிவாக்குவதற்கும் உங்களுக்கு முன்னிருந்த (நல்ல) வர்களின் நேரான வழிகளில் உங்களை வழி நடத்துவதற்கும், உங்களுடைய தவ்பாவை ஏற்றுக்கொள்வதற்கும் விரும்புகிறான். (அல் குர்ஆன் 4:26)

♦ எனவே இவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் ஈமானை பாதுக்காக்க முயற்சிப்போமாக. ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமின் சகோதரன் ஆவான், ஆதலால் தன் சகோதரனின் ஈமானை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். நாம் அனைவரும் கடைசி வரை நேரான இஸ்லாமிய கொள்கையாகிய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்து எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஸஹாபாக்கள், அவ்லியாக்கள் சென்ற சிராத்துல் முஸ்தகீம் வழிய

இந்த அப்துல் பாஸித் புகாரி என்பவர் வழிகெட்ட வஹ்ஹாபி அமைப்பைச் சேர்ந்தவர்

¶"இந்த அப்துல் பாஸித் புகாரி என்பவர் வழிகெட்ட வஹ்ஹாபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது பற்றி இஸ்லாமிய உம்மத்திற்கு எச்சரிக்கையும் உபதேசமும்"¶

♦இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர். புதிதாக உருவாகி புகழ் பெற்று வருகிறார். இவர் பெரும்பாலும் JAQH  என்னும் வஹாபி அமைப்பை சேர்ந்தவர். இவரது கொள்கைகள், பயான்கள் அனைத்தும் இஸ்லாமிய கொள்கையான அஹ்லுஸ் சுன்னாஹ்விற்கு எதிரானவை. இவர் பாமர முஸ்லிம் மக்களை கவர்வதற்கு கையாளும் தந்திரங்களாவன: தொழுகை, அமல், மரணம், சுவர்க்கம், நரகம் போன்றவைகளை பற்றி உருக்கமாக பேசி மக்களை கவருதல், ஜியாரத் பற்றி தரக்குறைவாக பேசுவார், வஸீலா கேட்பது ஷிர்க் என்று கூறுவான், கூட்டு துஆ இஸ்லாத்தில் இல்லை என்பார் இது போல அவரது அத்தனை கொள்கைகளும் இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானவை.

♦அப்பாவி பாமர மக்கள் இந்த கொடியவனின் உள்ரங்கம் தெரியாமல் இவனது நளினமான பேச்சிலே மயங்கி இவன் பின்னால் சென்று கொண்டு இருக்கின்றார்கள். பொதுவாக இன்று மக்களில் பெரும்பாலானோர் அகீதா (கொள்கை) அறிவு இல்லாமல் உள்ளனர். இவரை போன்ற நளினமாக பேசுவோரின் பேச்சில் மயங்கி வழிகேட்டின் பக்கம் செல்கின்றனர். எனவே, அந்த பாமர மக்களுக்கு இவனை போன்ற வஹாபிகளின் முகத்திரையை கிழித்து உண்மை முகத்தை காட்ட வேண்டும்.

♦(PJ) பீ.ஜே என்று சொல்லக்கூடிய பெரிய ஷெய்த்தானுக்கு இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்ல முடியாது ஏனெனில் அந்த நாடுகள் அவனை தடை செய்துள்ளது. ஆதலால் இன்று வஹாபிகள் தங்களின் வஹாபிஸ கொள்கையை இந்த நாடுகளுக்குள் கொண்டு செல்ல பயன்படுத்தும் ஆயுதம் தான் இந்த சின்ன பீஜே அல்லது சின்ன ஷெய்த்தான் என்று சொல்லக்கூடிய இந்த அப்துல் பாஸித் புகாரி.

♦கடைசியாக, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் ஒழுங்காக வாழ்ந்து வரும் மலேசிய மக்களையும் அவனது நச்சு பேச்சை கொண்டு வழி கெடுக்க அங்கும் காலடி வைத்துவிட்டார். மிக கவலைக்குரிய விடயம். மலேசியா காலா காலமாக நேரான இஸ்லாமிய கொள்கையான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழும் நாடாகும். அந்த நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் கொள்கைகளையும் இந்த வஹாபிகள் மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

♦இதற்கு அந்தந்த நாடுகளில் மறைமுகமாக இயங்கும் வஹாபிஸ இயக்கங்களும், இந்த வஹாபிகளின் கொள்கைகளை அறியாத அப்பாவி சில இயக்கங்களும் இப்படிப்பட்டவர்களை வரவழைத்து தங்களின் பணத்தை வீண் விரயம் செய்கிறார்கள். வீண் விரயம் மட்டுமல்ல அது ஹராமும் கூட. இந்த விடயங்களில் அந்தந்த நாடுகளிலுள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், அரசாங்கமும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.எனவே, அன்பு சகோதரர்களே, தயவு செய்து உங்களால் முடிந்த அளவு இவரை பற்றி உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ, ஈமெயில் மூலமாகவோ தெரியப்படுத்துங்கள்.
நேர்வழியும் பிரயோசனமும் பெற ஏராளமான இஸ்லாமிய உலமாக்களின் பயான்கள் உள்ளன. அவற்றை கேட்டு நேர்வழி பெற செய்யுங்கள்.

♦www.worldtamilbayan.com இது உலக இஸ்லாமிய உலமாக்களின் பயான்கள் அடங்கிய உலகின் மிகப்பெரிய தமிழ் பயான் இணையத்தளம். இதில் 2000 க்கும் மேற்பட்ட பயான்கள் உள்ளன. இவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். உலக இஸ்லாமிய உலமாக்கள், அறிஞர்கள் பற்றி அறிந்துக்கொள்ள இந்த தளம் இருக்கிறது. www.islamicscholars.tk

♣ அப்பாவி பாமர மக்களை வழிகெடுக்க வந்தவர்களைப் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் ஹபீப் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினதும் முன்னச்சரிக்கைகள்:

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.(அல்குர்ஆன் : 6:159)

♦ நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் : 2:42)

♦ எவன் தன் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்ட சமயத்தில் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகளால் செய்த குற்றங்களை (முற்றிலும்) மறந்து விடுகின்றானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இந்த அநியாயக்காரர்கள்) யாதொன்றையும் அறிந்து கொள்ளாதவாறு நாம் அவர்களுடைய உள்ளங்களில் திரையையும், அவர்களுடைய காதுகளில் மந்தத்தையும் நிச்சயமாக ஆக்கிவிட்டோம். ஆதலால், (நபியே!) நீங்கள் அவர்களை நேரான வழியில் (எவ்வளவு வருந்தி) அழைத்தபோதிலும் ஒரு காலத்திலும் அவர்கள் நேரான வழிக்கு வரவே மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 18:57)

♦ (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
(அல்குர்ஆன் : 2:9)

♦ இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்; சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்; ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?. (அல்குர்ஆன் : 63:4)

♦ அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். மேலும்,, இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள், ”இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்.” என்று கூறினார்கள். (ஷஹீஹ் புகாரி 3611)

♦ அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மேலும்,,) கடைசி காலத்தில் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்களும் வருவார்கள். நீங்களும், உங்களின் மூதாதையர்களும் கேள்விபடாத விஷெயங்களையெல்லாம் உங்களிடத்தில் கொண்டு வருவார்கள். அவர்களைப் பற்றி (உங்களிடம் நான்) முன்னெச்சரிக்கை செய்கின்றேன் (எனது எச்சரிக்கையின்படி நீங்கள் அவர்களிடம் கவணமாக நடந்து கொண்டீர்களானால்) அவர்கள் உங்களை வழிகெடுத்துவிடவும் முடியாது. உங்களை குழப்பத்தில் ஆழ்த்தவும் முடியாது. அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
(நூல் : முஸ்லிம்,முஸ்னத் அஹ்மத் பாகம் 2 பக்கம் 349,மிஷ்காத் 154)

♦”நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்” இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (ஷஹீஹ் புகாரி 100)

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்“  நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் “அல்கவ்ஸர்“) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்“ என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், “இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது“ என்று கூறுவான்.  என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார். (ஷஹீஹ் புகாரி 7049)

♦ஆகவே அப்துல் பாஸித் புஹாரி என்பவர் சத்தியத்தை மறைத்து அசத்தியத்தை கூறி தூய மார்க்கத்தை குழப்புகின்றவர். அந்த அடிப்படையில் இந்த கட்டுரையின் நோக்கம் குர்ஆன் ஹதீஸுக்கு முறனான விளக்கங்களையும், கருத்துக்களையும் பேசிக்கொண்டியிருக்கும் வழி கெட்ட வஹ்ஹாபிகளை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அடையாளம் காட்டுவதாகும்.இது புரியாமல் சிலர் இந்த கட்டுரையை பார்த்து மற்றவர்களைப் பற்றி குறை சொல்லி புறம் பேசித்திரிவது என்று தவறாக விமர்சனம் செய்யலாம். ஆனால் அவ்வாறு இல்லை, ,, உங்களுடைய ஈமானை அசுத்தப்படுத்தக்கூடிய அழிக்க்கூடிய சில விச கிருமிகளை
நம் சமூதாயத்திற்க்கு அடையாலம் காண்பித்து அவர்களினதும் உங்களினதும் ஈமானை பாதுகாக்கும் முயற்ச்சி என்பதை புரிந்து கொள்ளவேண்டும். ஆகவே நேரான பாதையினை அதாவது நபிமார்கள், ஸஹாபாக்கள், இமாம்கள், வலிமார்கள் காட்டிய நேர்வழியில் செல்லுங்கள்.

நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!(அல்குர்ஆன் : 1:6)

(அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.(அல்குர்ஆன் : 1:7)

அந்த நேர்வழி பெற்றவர்களை அல்லாஹ் யார் என்பதை பின்வரும்  வசனத்தில் கூருகிறான். "எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப்போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள்".(அல்குர்ஆன் : 4:69)

அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு தெளிவாக்குவதற்கும் உங்களுக்கு முன்னிருந்த (நல்ல) வர்களின் நேரான வழிகளில் உங்களை வழி நடத்துவதற்கும், உங்களுடைய தவ்பாவை ஏற்றுக்கொள்வதற்கும் விரும்புகிறான். (அல் குர்ஆன் 4:26)

♦ எனவே இவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் ஈமானை பாதுக்காக்க முயற்சிப்போமாக. ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமின் சகோதரன் ஆவான், ஆதலால் தன் சகோதரனின் ஈமானை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். நாம் அனைவரும் கடைசி வரை நேரான இஸ்லாமிய கொள்கையாகிய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்து எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஸஹாபாக்கள், அவ்லியாக்கள் சென்ற சிராத்துல் முஸ்தகீம் வழியில் செல்வோமாக!ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

💐💐ஹலாவதுல் ஈமான்💐💐
✳ BY Moulavi
S.L Abdhur Rahman Ghawsi