அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே,
உறவினர்களை பேணி வாழக்கூறிய மார்க்கமான இஸ்லாம், பக்கத்து வீட்டுக்காரர்களையும் எப்படி பேணவேண்டும் வலியுறுத்துகிறது என்று பாருங்கள்..!
ஹதீஸ்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் முஃமினாக (இறை விசுவாசியாக) மாட்டார்.” {முஸ்னத் அபூ யஃலா}
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக்கொள்வீராக. உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக” என்று கூறினார்கள். {ஸஹீஹ் முஸ்லிம்: 5120}
No comments:
Post a Comment