Popular Posts

Saturday 23 April 2016

பசுத்தோல் போர்த்திய புலிகளை உங்களுக்கு தெரியுமா ?

பசுத்தோல் போர்த்திய புலிகளை உங்களுக்கு தெரியுமா ?
 ****************************************************************************
 1953 ம் ஆண்டில் இந்திய தலை நகர் டெல்லியிலே இரண்டு நபர்களால் அன்றய சவுதி மன்னரிடம் மானியம் பெற்று துவக்கப்பட்ட இயக்கம்தான் இந்த தப்லீக் ஜமாஅத். இவர்கள்தான் இந்திய மண்ணில் முதலில் வஹாபிஸத்தை விதைத்தவர்கள்.
 .
 இவர்களும் (நுபுவத்) என்னும் சன்மார்கத்தை மட்டும் ஈமான் கொண்டவர்கள் (விலாயத்) என்னும் ஞான மார்கத்தை ஏற்க மறுப்பவர்கள். இவர்களுடைய கொள்கைகளை முழுமையாக வெளிக்காட்டாமல் சுன்னத் ஜமாஅத்தோடு ஒட்டி உறவாடி வருகின்றனர்.
 .
 கேரளா மற்றும் ஆந்திரா மானிலங்களில் சில பள்ளிகளில் இவர்களுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டு போர்ட் தொங்க விடப்பட்டுள்ளது.
 .
 இவர்கள் சுன்னத் ஜமாஅத்தாரின் கொள்கைக்கு மாற்றமாக பள்ளிகளில் பயான் செய்வதுமில்லை இவர்களோடு சேர்ந்து செயல்படும் சுன்னத் ஜமாஅத்தாருக்கும் இவர்களை பற்றியும் இவர்களின் கொள்கை பற்றியும் தெரியாத காரணத்தால் எல்லா பள்ளிகளிலும் இவர்களுக்கு வரவேற்பு.
 .
 ஆனால் இதே கொள்கையை ஏற்றுள்ள தவ்ஹீத் ஜமாஅத்தினரை அடித்து விரட்டுகிறார்கள். இது என்ன நியாயம்? தப்லீக் ஜமாஅத் முக்கா வஹாபி என்றால் தவ்ஹீத் ஜமாஅத் பக்கா வஹாபி இவர்கள் இருவருமே ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள்தான்.
 .
 இவர்களை சுன்னத் ஜமாஅத் மக்கள் என்றுதான் விளங்க போகிறார்களோ? அல்லாஹ்வுக்குதான் வெளிச்சம். நன்றி.
 .
 ஆக்கம்: Azizmaraika Maraika
 .

No comments:

Post a Comment