தௌபாச் செய்யும் அடியானின் தௌபா ஏற்றுக் கொள்ள பட்டுள்ளதா..? இல்லையா?
எப்படி தெரிந்து கொள்வது?
ஆன்மீக பெரியோர்களிடம் கேட்கப்பட்டது?.
அதற்கான முழுமையான விளக்கம் கூற முடியாது. ஆனாலும், சில அடையாளங்கள் உள்ளன.
அதன் மூலம் தௌபா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? இல்லையா?என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
01. அவர் பாவம் செய்வதிலிருந்து விலகியிருப்பார்
02. அவர் மனதிலிருந்து சந்தோஷம் தூரமாகும்.
03. அல்லாஹ் எங்கும் உள்ளான் என்பதை ஒவ்வொரு மூச்சிலும் நினைப்பார்
04. நல்லவர்களிடம் நெருக்கமாகவும் தீயவர்களிடம் விலகியுமிருப்பார்.
05. உலகியல் ரீதியான பெரிய நிஃமத்தை சிறிதாகவும்,மறுமையின் பெரிய நிஃமத்தை அற்பமாகவும் காண்பார்.
06. எல்லா நேரத்திலும் மௌனத்தைக் கடைப்பிடிப்பார்.
07. எல்லா நேரத்திலும் கடமையானதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவார்
08. எந்த நேரமும் கடந்த கால குற்றங்களைப் பற்றிய சிந்தனையிலேயே கிடப்பார்
09. கவலையும் சிந்தனையும் அவரை விட்டும் அகலாமலிருக்கும்.
10. தான் செய்யும் நற்செயல்கள் மூலம்
இறை பொருத்தம் மட்டுமே எதிர்பார்ப்பாக இருக்கும்.
No comments:
Post a Comment