Popular Posts

Monday 9 May 2016

பெருநாள் தொழுகையை தொழுகும் முறை ஹனபி :-

பெருநாள் தொழுகையை தொழுகும் முறை ஹனபி :-

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

 தொழுகைக்கான நிய்யத்து சொல்லும் முறை :-

 ஈதுல் அள்ஹா உடைய பெருநாள் தொழுகை வாஜிபான இரண்டு ரக்அத் அதிகப்படியான ஆறு தக்பீர்களுடன் இந்த இமாமை பின் தொடர்ந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ் விற்காக தொழுகிறேன் - என்று நிய்யது செய்து தக்பீர் கட்டிக்கொள்ள வேண்டும் .

 இரண்டு ரக்அத்தில் செய்ய வேண்டிய தொழுகை முறை :-

 முதல் ரகத்தில் :-

 இமாம் அவர்கள் முதல் ரகத்தில் தக்பீர் கட்டி " ஸனா " ஓதுவார் அது போன்று நாமும் தக்பீர் கூறி கையை கட்டி " ஸனா " ஓத வேண்டும் .
 பிறகு இமாம் அவர்கள் - சூரத்துல் பாதிஹா ,மற்றும் துணை சூரா ஓதுவதற்கு முன்பு . தக்பீர் கட்டிய கையை அவிழ்த்து கையக உயர்த்தி அல்லாஹூ அக்பர் என்று மூன்று முறை தக்பீர் கூறி , மூன்றாவது தக்பீர் கையை கட்டிக் கொள்வார். அது போன்று இமாமை பின் தொடர்ந்து நாமூம் தக்பீர் கூறி கையை கட்டிக் கொள்ள வேண்டும் .

 இரண்டாவது ரக அத்தில் :-

 இமாம் அவர்கள் சூரத்துல் பாதிஹா மற்றும் துணை சூரா ஓதுவார் ஓதியபிறகு ருகூவிற்கு முன்பு கட்டிய கையை அவிழ்த்து கையை உயர்த்தி அல்லாஹூ அக்பர் . என்று மூன்று முறை தக்பீர் சொல்லி நான்காவது தக்பீரில் ருகூவிற்கு செல்வார்,பிறகு இரண்டு சுஜூது செய்து பெருநாள் தொழுகையை முடிப்பார் அது போன்று நாமும் செய்து தொழுகையை முடிக்க வேண்டும் .

 [ நூல் = ஹிதாயா ]

 ஞாபகம் வைத்து அதிகப்படியான தக்பீர்களை கூறி முறையாக தொழுகையை முடிக்க வல்ல ரஹ்மான் நமக்கெள்ளாம் அருள் புறிவானாக !

No comments:

Post a Comment