Popular Posts

Saturday 23 April 2016

மரணத்திற்குப் பின் ஏற்படும் நிகழ்வுகளை நம்புதல்

- மரணத்திற்குப் பின் ஏற்படும் நிகழ்வுகளை நம்புதல்

١٣٧- عَنْ هَانِيءٍؒ مَوْلَي عُثْمَانَؓ أَنَّهُ قَالَ: كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَي قَبْرٍ بَكَي حَتَّي يَبُلَّ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ: تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلاَ تَبْكِي وَتَبْكِي مِنْ هذَا؟ فَقَالَ: إِنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ اْلآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ قَالَ: وَقَالَ رَسُولُ اللّٰهِؐ : مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ.

رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في فظاعة القبر...، رقم:٢٣ ٠٨

137. “ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏதேனும் ஒரு கப்ருக்கருகில் நின்றால், தாடி நனையும் வரை அழுவார்கள். “சொர்க்க, நரகத்தைப் பற்றிக் கூறும் பொழுது கூட இவ்வளவு அழுவதில்லையே, கப்ரைக் கண்டு இந்த அளவு அழுகிறீர்களே?’ என்று அன்னாரிடம் கேட்கப்பட்டது. “மறுமையின் தங்குமிடங்களில் முதல் தங்குமிடம் கப்ரு, அதில் ஈடேற்றம் பெற்றவருக்கு அடுத்தடுத்த தங்குமிடங்கள் அதைவிட மிக எளிதாகிவிடும், அந்தத் தங்குமிடத்தில் ஈடேற்றம் பெறாதவருக்கு பிறகு வரக்கூடிய தங்குமிடங்கள் அதைவிட மிகக் கடினமானதாக ஆகிவிடும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். மேலும், “கப்ரில் நிகழும் காட்சியைவிட பயங்கரமான காட்சியை நான் கண்டதில்லை’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களால் உரிமை விடப்பட்ட அடிமை ஹஜ்ரத் ஹானிஇ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதீ)

No comments:

Post a Comment