Popular Posts

Tuesday 26 April 2016

"காமிலான ஷைகிடம் முரீதாக இருக்க வேண்டியவர் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள்"¶

¶"காமிலான ஷைகிடம் முரீதாக இருக்க வேண்டியவர் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள்"¶

♦ அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளல் வேண்டும்.

♦ஷைகிற்கு முற்றிலும் கீழ்படிந்து நடத்தல் வேண்டும்.

♦ஷைகின் பேரில் முஹப்பத்தில் மூழ்க வேண்டும். முரீது ஜெயம் பெறுவதற்கு அடையாளம் மற்றவர்களை பார்க்கிலும் தன் ஷைகையே தெரிந்து அவரை நேசிப்பதும், அவர் சொல்வதை மனமுவந்து கேட்டு நடப்பதும், அவரோடு எல்லா கருமங்களிலும் இணங்கி நடப்பதுமாகும்.

♦ தரீகத்தின் அதபுகளை பேணி நடத்தல் வேண்டும்.

♦ தொழுகையே முறையாக பேணி தொழல் வேண்டும் .

♦ஷரீஅத்தின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

♦ எப்போதும் பணிவோடு நடத்தல் வேண்டும்.

♦ ஷைகினால் முரீதுக்கு தரப்பட்ட திக்ரு, வளீபாக்களை தவறாமல் ஓதி வர வேண்டும்.

♦ முராக்கபாவை நியமமாக செய்து வர வேண்டும்.

♦ஒரு முரீது ஷைகிடம் தேவை இல்லாத பேச்சுக்களை பேசுவதை விட்டும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.

♦ ஷைகிற்கு முன்பாக அதபு குறைவாக நடத்தல் கூடாது.

♦ ஷைகிடம் தனது சக ஆத்மீக சகோதரர்களின் குறைகளை கொண்டு செல்லல் கூடாது. தனது சக ஆத்மீக சகோதரர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளல் வேண்டும்.

♦ஷைகிற்கு பிடிக்காத காரியங்களை முரீது செய்வதை விட்டும் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

♦எப்போதும் ஷைகின் துவாவை எதிர்பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்

♦நல்ல குணங்களை கொண்டு உங்கள் கல்பை சுத்தபடுத்த வேண்டும்.

♦அதிகமதிமாக சலவாத் ஓதல் வேண்டும்.

♦நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், வலீமார்களின் மீதும் அளவுகடந்த அன்பு வைக்க வேண்டும்.

♦முரீது ஷைகிடம் பைஅத் வாங்கிய சமயம் தனது ஷைகினால் தனக்கு வழங்கப்பட்ட தரீகாவின் சில்சிலா கிதாபை (ஷஜரா கிதாப்) முறையாக ஓதல் வேண்டும். மேலும் சில்சிலா கிதாபை தனது இறுதி மூச்சி வரை உங்களோடு பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும்.

♦அதிகம் அதிகமாக ராத்திப் மஜ்லிஸ், சலவாத் மஜ்லிஸ், மௌலிது மஜ்லிஸ் போன்றவைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

♦ஹராமான உணவுகளை உட்கொள்ளுதலை விட்டும் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ளல் வேண்டும்.
வல்ல ரஹ்மான் நம்மனைவருக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன்!

No comments:

Post a Comment