Popular Posts

Monday 8 August 2016

TNTJ மூத்த ஹதீஸ் நிராகரிப்பாளர் பி.ஜெபணத்தை வைத்து பந்தயம் கட்டுவது சூது.

முதல் முறையாக இஸ்லாமிய மார்க்கத்தில் சூத்தாட்டத்தை அறிமுகம் படுத்தி புதிய வரலாறை படைத்துள்ளார் - TNTJ மூத்த ஹதீஸ் நிராகரிப்பாளர் பி.ஜெ

   பணத்தை வைத்து பந்தயம் கட்டுவது சூது. இது இஸ்லாமில் ஹராம். நல்ல விஷயமாக இருந்தாலும்கூட ஹலாலான வழியிலேயே அதை செய்ய
வேண்டும்.

உதாரணமாக, ஒரு முஸ்லிம் குடும்பம் கஷ்டப்படுகிறது அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைக்கவே நான் சூதாடினேன் என்பது போன்ற காரணங்களை யாராவது சொன்னால் மார்க்க அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியுமா?

எடுத்ததற்கெல்லாம் ஆதாரம் கேட்கும் ததஜ சகோதரர்களே!

இப்படி பணத்தை பந்தயமாகக் கட்டி இஸ்லாமை பரப்ப சஹீஹான ஹதீஸ்களில் ஆதாரம் காட்ட முடியுமா?

இப்படி தனக்கு தானே சூனிய செய்ய சொல்ல சஹீஹான ஹதீஸ்களில் ஆதாரம் காட்ட முடியுமா?

பெரும் பாவங்களில் ஒன்று தான் சூனியம் என்று அறிவிப்பு இருக்க... மற்றவரை சூனியத்தை செய்ய சொல்ல சஹீஹான ஹதீஸ்களில் ஆதாரம் காட்ட முடியுமா?

சூனியக்காரன் பேச்சை கேட்டு ஷைத்தானுடைய வழிமுறையை ஏற்று கொண்டு ஒரு பிணத்தின் சாம்பல் மீது சிறுநீர் கழிக்க சஹீஹான ஹதீஸ்களில் ஆதாரம் காட்ட முடியுமா?

அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்கிற  நம்பிக்கைக்கு விஷய பரிச்சை செய்ய சஹீஹான ஹதீஸ்களில் ஆதாரம் காட்ட முடியுமா?

இவ்வாறு எந்த ஒரு  குரான் சுன்னாஹ் ஆதாரம் இன்றி காரியத்தை செய்வதற்க்கு பி ஜெ வெற்றி பெற துஆ செய்யுங்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா ???

சூனியம் என்பது உண்டு அதுவும் அல்லாஹ்வின் நாட்டத்தின் படியே நடக்கும் என்பதே சஹாபாக்கள், தாபியீன்கள் , புஹாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ , இப்னு மாஜா, நஸாயீ போன்ற ஹதீஸ் கலை வல்லுனர்கள், மற்றும் உலகில் வாழும் 99% மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தும், முடிவுமாகும்.

பி.ஜே அவர்களின் சூனியம் என ஒன்று இல்லை என்று ஒட்டுமொத்தமாக மறுக்கும் போக்கு மிக மிக தவறானதாகும்.

அல்லாஹ்வும் அவனது ரஸூலும் உண்டு என்று சொன்ன ஒரு விஷயத்தை அறிவுக்கு பொருந்தவில்லை என்று மறுப்பது வடிகட்டிய குஃப்ர் (நிராகரிப்பாகும்) எனவே இந்த விஷயத்தில் சகோதரர்கள் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.
இஸ்லாம் இந்த உலகில் தடுக்கப்பட முடியாத , தவிர்க்கப்பட முடியாத சக்தி என்பதை சூரா ஸஃப் -ல் திட்ட வட்டமாக அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான். இஸ்லாம் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் பி.ஜே அவர்களின் இந்த விபரீத விளையாட்டு ஈமானை பறிக்க
கூடியது எச்சரிக்கை.நன்மையும், தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்பதே முஃமீன்களின் முழுமையான நம்பிக்கை.

அடுத்து

சூதாட்டாம் மார்க்கத்தில் தடை செய்ய பட்டுள்ளது .. இதற்க்கு ஆதாரம் 

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல் குரான் - 5.90)

சூனியம் என்ற பெயரில் நீங்கள் பந்தயம் கட்டுவது பரிசுகள் பெறுவதும் வாங்குவதும் போல் தான் ஆகையால் இது சூதாட்டமாகாது என்று வாதாடுகிறார்கள்.
உண்மையில் சூதாட்டாம் தான் என்பதை  இவர்கள் கூறும் கூற்றில் இருந்து சில சான்றுகளை முன் வைக்கிறோம்.

//பரிசளிப்பது சூதாட்டத்தில் சேராது. குறிப்பிட்ட விளையாட்டில் வெற்றி பெற்றவருக்கு பத்தாயிரம் ரூபாய் தருவேன் என்று ஒருவர் அறிவிக்கிறார். விளையாடுபவர் இதில் எந்த முதலீடும் செய்யவில்லை. ஒருவருக்குப் பரிசு கொடுத்தால் போட்டியில் உள்ள மற்றவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. போட்டியில் இல்லாத ஒருவர் தனது பணத்தைப் பரிசாக அளிப்பதால் இதில் பணத்தைப் போட்டு பணத்தை எடுத்தல் இல்லை. அப்படி இருந்தால் தான் அது சூதாட்டமாகும். //

விளையாடுபவர் இதில் எந்த முதலீடும் செய்யவில்லை என்று எழுதி வைத்து இருக்கிறார்.

இதற்க்கு  ஒரு உதாரணத்தை சொல்லுகிறேன்.

ஒருவன் தன்னை துப்பாக்கியால் சுட்டால் 50 லட்சம் தவறுவதாக சொல்லுகிறான். குறி பார்த்து சுட்டால் தான் 50 லட்சம் தருவேன், குறி தவறி விட்டால் நீ 50 லட்ச ரூபாய் தரவேண்டும் என பேரம் பேசவில்லை.
இந்த விளையாட்டுடைய (நாடகத்துடைய) பின் விளைவை எவனாக இருந்தாலும் சிந்திப்பான். ஒரு வேலை குறி தவறாமல் அவனை சுட்டு விட்டால், அவனுடைய உயிர் பிரிந்து விடும், ஆகையால்கொலை குற்றத்திற்காக  சிறையில் அடைக்க படுவார் அல்லது இவரையும்  சுட்டு கொள்ள படுவார் அல்லது தூக்கில் ஏற்ற படுவார்.

இந்த நிபந்தனைகளை ஏற்று நடப்பதற்க்கு பெயர் என்ன ??? இது ஒன்னும் கிரிக்கெட் விளையாட்டு அல்ல ... பாதிப்பு இரு தரப்பிலும் உள்ளது.

விஷயத்திற்கு வருவோம்

அதே போல் தான் சூனியமும். அல்லாஹ்வின் நாட்டத்தின் படி பி ஜெக்கு சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்பட்டாலும் படாவிட்டாலும், சூனியத்தை செய்த காரணத்தால், அவனுக்கு நிரந்தர நரகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் குரான் சுன்னாஹ் பின்பற்ற கூடியவராக இருந்தால், சூனியத்தை கற்பது, அதை செய்ய முற்படுவது தடுக்க பட்ட காரியம் என்று உங்களுக்கு தெரியாதா ??? இதற்க்கு கூலி நிரந்தர நரகம் என்று உங்களுக்கு தெரியாதா ????
எதிர் அணியை நிரந்தர நரகத்திற்கு செல்ல முற்படுவது எந்த விதத்தில் நியாயம்...

கொஞ்சமாவது உங்கள் சுய புத்தியை கொண்டு சிந்தியுங்கள் !!! எது சொன்னாலும் நம்பி திரிய வேண்டாம்.

சிந்தியுங்கள் சகோதர்களே !!!

வஸீலா விற்கு ஒரு ஆதாரம்.

பி. ஜே. யின் பித்தலாட்டமும் இஸ்லாமிய உம்மத்திற்கு அது பற்றிய  எச்சரிக்கையும் உபதேசமும்.

பி.ஜே. ஒரு பூஜையா]

PJயின் குப்ரின் பயங்கரமான நிலைப்பாடு

ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்பது நல்ல விஷயம்தானே? இதில் கலந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? என்று சில சகோதரர்கள் நினைக்கலாம். ஆனால் TNTJவினர் ஷிர்க் பட்டியலில் எதையெல்லாம் வைத்துள்ளார்கள் என்று நீங்கள் அறிந்து கொண்டால் உண்மையிலேயே இது ஷிர்க் ஒழிப்பு அல்ல, மாறாக குஃப்ருக்கான அழைப்பு என்பதை புரிந்து கொள்வீர்கள்! இவர்களின் ஷிர்க் பட்டியலில் என்னென்ன இருக்கிறது பாருங்கள். 
நபியவர்களை சூனிய பாதிப்பிலிருந்து அல்லாஹ் பாதுக்காத்ததாக வரும் ஹதீஸ்களை நம்பினால் ஷிர்க்! 
சிஹ்ர் என்ற கலையின் மூலம் கணவன் மனைவியை பிரிக்கும் செயலை கற்று கொண்டார்கள் என்ற அல்குர்ஆனின் 2:102 வசனத்தை நேரடி பொருள் கொண்டு நம்பினால் ஷிர்க்! 
கண்ணேறு என்பது உண்மை என்றும் கண்ணேறுக்கு துஆ செய்ய சொல்லியும் நபியவர்கள் சொன்ன ஹதீஸ்களை நம்பினால் ஷிர்க்! 
அஜ்வா பேரீச்சம்பழம், கருஞ்சீரகம் சம்மந்தமாக நபியவர்கள் சொன்ன ஹதீஸ்களை நம்பினால் ஷிர்க்! 
இப்படி பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் குர்ஆன் வசனத்தை நேரடியாக பொருள்கொண்டு நம்புவதும் ஷிர்க் என்றும் புகாரி, முஸ்லிம் உட்பட எல்லா மார்க்க அறிஞர்களும் இந்த ஷிர்க்கை தெரியாமல் செய்து விட்டார்கள் என்றும் கொஞ்சம் வாய் கூசாமல் அவதூறு சொல்லி, ஷிர்க்கிற்கு பதினான்கு நூற்றாண்டுகளாக யாருமே சொல்லாத புது இலக்கணத்தை சொல்லும் இவர்கள் நடத்தும் நாடகத்திற்கு நாம் செல்லலாமா? யோசியுங்கள்! 
குர்ஆன் ஹதீஸிற்கு தாங்கள் கொடுக்கும் விளக்கத்தை ஏற்காதவர்கள் அனைவரும் முஷ்ரிக்குகள், நரகவாதிகள் என்று சொல்லும் இந்த நவீன   குழப்பவாதிகள் நடத்தும் நாடகத்திற்கு  செல்லலாமா என்பதை யோசியுங்கள் சகோதரர்களே! 
தங்களை தவிர உலக முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகளாக நினைக்கும்  இவர்கள் நடத்தும் நாடகத்திற்கு சென்று அவர்கள் சொல்வதை உண்மைப்படுத்த போகிறீர்களா? 
ஷிர்க்கை ஒழிக்கிறோம் என்ற பெயரில் குஃப்ருக்கு ஆதரவளித்த பாவம் நமக்கு வேண்டாம் சகோததரர்களே! 
..பாவத்திலும், பகைமையிலும்  ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (அல்குர்ஆன் : 5:2) 

Pjயின் குப்ரின் பயங்கரமான நிலைப்பாடு

ஷிர்க் ஒழிப்பு மாநாடு



 بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

 الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد                                                         

SLTJ யை நோக்கி ஓர் மடல்

السلام عليكم ورحمة الله وبركاته 

பி.ஜேயின் குர்ஆன் மொழிபெயர்ப்பு முஸ்லிம் சமூகத்துக்கு அவசியமா? 

அறிவை அறிவைக் கொண்டு மோதும் வழிமுறையைக் கையாள்வதாகக் கூறும் SLTJ யை நோக்கி கூறுகிறோம் : 

பி.ஜேயின் தமிழ் தர்ஜுமா வெளிவந்த போது அதற்கு எதிராக நாம் கொடுத்த பகிரங்க மறுப்புக்கு ஏன் இன்னும் உங்களிடமிருந்து அறிவுபூர்வமாக பதில் வரவில்லை. 

நாம் பி.ஜே தொடர்பாக கொடுத்த மறுப்புகளுக்கு ஏன் அறிவு ரீதியாக பதிலளிப்பதற்கு நீங்கள் பின்வாங்குகிறீர்கள்? 

பி.ஜேயின் மீது நாம் கொடுத்துள்ள ஆதாரபூர்வமான தீர்ப்புகள் அனைத்தையும் முழுவதுமாகப் புறக்கணித்து பி.ஜேயை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதுதான் உங்களின் அறிவை அறிவோடு கையாளும் வழிமுறையா? 

பி.ஜெய்னுல் ஆபிதீனுக்கு நாம் கொடுத்துள்ள மறுப்புகள் : 

•  பிறை விடயத்தில் பி.ஜே சமூகத்தைப் பிளவுபடுத்தி அதில் தனது தனிவழியைக் கையாண்டார் என்பதை நாம் எடுத்துக் காட்டினோம். அதற்கு இது வரை பதில் இல்லை.

•  பி.ஜே இலங்கைக்கு விஜயம் செய்த போது பிறை விடயத்தில் முஸ்லிம்கள் மத்தியிலுள்ள வேறுபாட்டை தீர்ப்பதற்காக அவருக்கு அழைப்புக் கொடுத்து எமது துண்டுப் பிரசுரத்தை அவருடைய கையிலேயே கொடுத்த பின்னரும் அந்த விடயத்தில் கவனம் செழுத்தாதது ஏன்?

•  பி.ஜேயின் தமிழ் தர்ஜுமாவின் குறைகளையும் வழிகேடுகளையும் எடுத்துக் காட்டி அதனை வாசிப்பது ஹராமாகும் என்ற எமது தீர்ப்புக்கு இது வரை பதில் இல்லை.

•  நபிமொழிகளில் பி.ஜே செய்த அநியாயத்திற்கும் துரோகத்திற்கும் மறுப்பளிப்பதற்காக 'நபிமொழியின் உண்மைகளும் மடமையின் தன்மைகளும்' என்ற தலைப்பில் நாம் முன்வைத்த மறுப்புக்கு ஏன் இன்னும் பதில் தரவில்லை?

•  பி.ஜே மார்க்கக் கல்வியை ஒரு கட்டுப்பாடில்லாமல் கையாளும் ஒரு ஸின்தீக் என்று நாம் அறிவித்த பின்னாலும் அதனை மறுத்து ஏன் இன்னும் பதில் வரவில்லை?

•  எனக்கும் பி.ஜே யிற்கும் இடையில் பரிமாறப்பட்ட கடிதங்களில் இறுதியாக நான் எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்காமல் பி.ஜே மௌனமானது ஏன்?

•  பி.ஜேயின் கொள்கைகளையும் காதியானிகளின் கொள்கைகளையும் ஒப்பிட்டு பி.ஜேயானியும் காதியானியும் எவ்வாறு ஒன்றுக் கொன்று ஒப்பாகவும் சமமாகவும் ஆகிறார்கள் என்பதை நாம் எடுத்துக் காட்டினோம். அதற்கும் பதில் தரவில்லை.

•  புனித அல் குர்ஆனின் நம்பிக்கை விடயத்திலும் அல்லாஹ்வின் பெயர் மற்றும் பண்புகள் விடயத்திலும் சூனியத்தின் விடயத்திலும் பி.ஜேயின் ரித்தத்தை எடுத்துக் காட்டி பி.ஜே இஸ்லாத்தை விட்டும் வெளியேறி முர்தத் ஆகிவிட்டார் என்ற எமது பகிரங்கமான தீர்ப்பை நாம் வெளியிட்டோம். அதற்கும் இவர்கள் பதில் தரவில்லை.

இவ்வாறாக பி.ஜேயின் குழப்பங்களின் பட்டியலும் எமது மறுப்புகளின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது.  

உண்மையில் பி.ஜேயிடம்  மார்க்கத்துக்கு முரணான கருத்துகள் இருந்தால் எம்மிடத்தில் முன்வைத்திருக்கலாமே! ஏன் அதனை முன்வைக்கவில்லை என்று அப்துர் ராஸிக் கேள்வி எழுப்புகிறார்.  

ACJU இவர்களுடன் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் இருக்கலாம். அதே போன்றுதான் SLTJ யும் எம்முடன் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளவில்லை. 
நாம் எப்போது இவர்களுக்கு எதிராக ஒரு மறுப்பை முன்வைத்தாலும் இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட விவாதம் செய்தலுக்கு எம்மை இவர்கள் அழைத்து சவால் விடுவதோடு SLTJ யின் பதில் முடிந்துவிடும். 

  
எப்போதுமே எமது கல்வி பெற்றுக் கொள்ளும் வழிமுறையும் அதனை நிலைநாட்டும் வழிமுறையும் அதனைப் பிரச்சாரம் செய்யும் வழிமுறையும் எம்மிடத்தில் நபிவழியே அதன் வழிமுறையாகும். 

  
நீங்களும் நபிவழியை நேசிப்பவர்களாக இருந்தால் மறுப்புகளை நபிவழியில் எதிர்கொள்ளுங்கள். எமது அனைத்து மறுப்புகளையும் எமது இணைய தளத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். 

  

எமது இணைய தள முகவரி : http://tamilsalafi.edicypages.com 

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. பி.ஜே இலங்கை வருகிறார். நீங்கள் கருத்தை கருத்தால் எதிர் கொள்பவரென்றால் எமது கல்வி ரீதியான மறுப்புகளுக்கு கல்வி ரீதியான உங்கள் பதில்களை எமக்கு சம்பந்தமாக்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம். 

SLTJ ஏன் மௌனமாக இருக்கிறது? நாம் முன்வைத்த மறுப்புகளை ஏற்றுக் கொண்டு அவர்கள் மௌனமாக இருக்கிறார்களா?  

எமது மறுப்புகளை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால்  நாம் முன்வைத்துள்ள மறுப்புகளுக்கு கல்வி ரீதியான பதிலை இன்னும் ஏன் இவர்கள் முன்வைக்கவில்லை? 

நபிவழியே நம்வழி 

 சகல வல்லமைமிக்க அல்லாஹ்வுக்கு அல்லாஹ்வுக்குப் புகழ் சேர்த்து இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாமும் ஸலவாத்தும் கூறி அபூ அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி பின் முஹம்மது நூபார் பின் நூஹ் லெப்பை ஆல மரைக்கார் அஸ் ஸைலானி அஸ் ஸலபி அல் அஸரி ஆகிய நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவை நோக்கி இடம் பெயர்ந்ததிலிருந்து ஹிஜ்ரி 1437 முஹர்ரம் பிறை 25 இல் இதனை 8/Nov/2015 வெளியிட்டேன் 

பி. ஜே. யின் பித்தலாட்டமும் இஸ்லாமிய உம்மத்திற்கு அது பற்றிய 

எச்சரிக்கையும் உபதேசமும்.