Popular Posts

Tuesday 26 April 2016

ஒரு மனிதனின் இறுதி நிலை ? ? ?

ஒரு மனிதனின் இறுதி நிலை ? ? ? ✔ ✔ ✔
👪 "இதை படித்துவிட்டு அழுதே தீருவீர்....✔
📕 " உள்ளம் தொடும் ஒரு கதை " . ✔
📕 " இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன.✔
📕 " நான் அவசர அவசரமாக உளூச் செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது.✔
📕 "உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத்தொழுவார். ✔
📕 " ஸஜ்தாவில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன் நாள் முழுவதும் வேலை,மிக மிக களைப்பாக இருந்தேன். ✔
📕 " திடீரென இடி முழக்கம் போலொரு சப்தம். திடுக்கிட்டெழுந்தேன்.✔
📕 " இது என்ன ? ? ✔
📕 " வியர்த்து வியர்த்துக் கொட்டுகிறது.✔
📕 " எல்லாப்பக்கம் சன சமுத்திரம்.✔
📕 " நான் எங்கே நிற்கிறேன், சிலர் ஓரிடத்தில் விறைத்து நிற்கிறார்கள், சிலர் அங்கும் இங்கும் ஓடித்திரிகிறார்கள். ✔
📕 " சிலர் முழங்காலில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கிறார்கள்.✔
📕 " பயம் என்னைப் பிய்த்துத் தின்னத் துவங்கியது, நான் எங்கிருக்கிறேன் என்பதை சர்வ நிச்சயமாய் உணர்ந்து கொள்கிறேன், இதயம் நெஞ்சு கூட்டில் இருந்து எகிறி வெளியேறத் துடிக்கிறது.✔
📕 " ஆம் " இது இறுதித்தீர்ப்பு நாள் . ✔
📕 " நான் உலகத்தில் இருந்த போது இந்த நாளைப் பற்றி எவ்வளவெல்லாம் கேட்டிருப்பேன், வாசித்திருப்பேன்.✔
📕 " ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இந்த நாள் வரும் என்று நினைக்கவில்லையே ! ! ! ✔
📕 " ஒரு வேளை இதெல்லாம் வெறும் பிரமையோ ?
இல்லை, இல்லை, இதெல்லாம் நிஜமாகவே இருக்கிறது, இந்தப் பயம்… . ✔
📕 " இதுவரை நான் வாழ்நாளில் உணர்ந்ததில்லை,
எனது பெயரைக் கூப்பிட்டு விட்டார்களா என்று ஒருவர் இருவரிடம் பதட்டத்தோடு கேட்டபடி கூட்டத்தோடு நானும் நகர்கிறேன் . ✔
📕 " திடீரென என் பெயர் அழைக்கப்படுகிறது.✔
📕 " ஆமாம், என் பெயரே தான், என் தந்தையின் பெயர் கூட சரியாக இருக்கிறதே .✔
📕 " இந்த சனசமுத்திரம் அப்படியே பிளந்து எனக்கு வழிவிடுகிறது.✔
📕 " இரண்டு மலக்குகள் என் தோள் இரண்டையும் பற்றுகிறார்கள், சந்தேகம் நீங்காத கண்களோடு நடக்கிறேன் . ✔
📕 " மலக்குகள் என்னை நடுவில் அமர்த்தி விட்டு நகர்கிறார்கள், என் முழு வாழ்க்கையும் என் கண் முன்னே ஓடுகிறது ஒரு திரைப்படம் போல், தலையைக் குனிந்து கொள்கிறேன் . ✔
📕 " திடீரென என் கண் முன்னே இன்னொரு உலகம் காட்டப்படுகிறது, அங்கு மனிதர்கள் , ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கிறார்கள் . . ✔
📕 " எனது தந்தை ஒரு சமூக சேவையிலிருந்து இன்னொன்றுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்,அவரது செல்வம் அல்லாஹ்வுடைய பாதையில் செலவு அளிக்கப்படுகிறது . ✔
📕 " எனது உம்மா வீட்டிற்கு வரும் ஏழைகளுக்கு அள்ளி வழங்குகிறார், விருந்தாளிகளுக்கு உணவு அளிக்கிறார். ✔
📕 " நான் கெஞ்சுகிறேன் . ✔
📕 " நானும் அல்லாஹ்வுடைய பாதையில் தான் இருந்தேன் .✔
📕 " மற்றவர்களுக்கு உதவினேன் .✔
📕 " அல்லாஹ்வுடைய தீனை மற்றவர்களுக்கு எத்தி வைத்தேன் . ✔
📕 "எனது தொழுகைகளை நிறைவேற்றினேன் .✔
📕" ரமலானில் நோன்பு நோற்றேன் . ✔
📕 " அல்லாஹ் சொன்னவற்றைச் செய்தேன் . ✔
📕 "வேண்டாம் என்று சொன்னவற்றிலிருந்து தவிர்ந்து கொண்டேன் . ✔
📕 " நான் எவ்வளவு அல்லாஹ்வை நேசித்தேன் என்பதை நினைத்து நான் விம்மி விம்மி அழத் துவங்கினேன் . ✔
📕 " நான் உலகில் எதைத் தான் செய்திருந்தாலும் அது மிகக்குறைவே என்பதை அந்த நிமிடம் உணர்ந்தேன், அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் என்னைக் காப்பாற்ற முடியாது என்று உறுதியாக அறிந்து கொண்டேன் . ✔
📕 " வியர்வை முன்னெப்போதும் இல்லாதளவு பெருகி வழிய நான் நடுநடுங்கினேன் . ✔
📕 " கடைசித் தீர்ப்பை எதிர்நோக்கிய என் கண்கள் மீஸான் தராசில் நிலைகுத்தி நின்றன . ✔
📕 " இதோ தீர்ப்பு " . ✔
📕 " நரகத்திற்குச் செல்வோரின் பெயர்கள் வாசிக்கப்படுகின்றன .✔
📕 " இறைவா…….✔
📕 " என் பெயரும் வாசிக்கப்படுகிறது .✔
📕 "நான் முழங்காலில் விழுந்தேன் என்னால் முடியாது, . ✔
📕 " இங்கே ஏதோ தவறு நடந்திருக்கிறது.நான் எப்படி நரகம் போக முடியும்” என்று கத்திக் கூச்சல் இட்டேன் தலை சுற்றியது, கண்களில் ஒளி மங்கியது . ✔
📕 " மலக்குகள் இருவர் என்னை கொழுந்து விட்டு எறியும் நரகிற்கு அழைத்துச் செல்கிறார்கள் . ✔
📕 " என் கால்கள் கரடுமுரடான தரையில் இழுத்துச் செல்லப்படுகின்றன . ✔
📕 " நான் சப்தமாக அழைக்கிறேன் . ✔
📕 " உதவுங்களே யாராவது " . ✔
📕 "எனது நற்செயல்களை அழைக்கிறேன், ஓதிய குர் ஆனை , தொழுகைகளை அழைக்கிறேன் . ✔
📕 " நபி (ஸல்) அவர்களின் மணிமொழி ஞாபகத்துக்கு வருகிறது, ஐந்து முறை ஆற்றில் குளித்தால் உடம்பு சுத்தமடைவதை போல ஐவேளைத்தொழுகை பாவங்களை அழித்து விடுகிறது .✔
📕 " அழ தொடங்கினேன் .✔
📕 " எங்கே என் தொழுகை ? ? ? ✔
📕 " மலக்குகள் நிற்கவில்லை, என் கதறலைக் காதில் போட்டுக் கொள்ளவும் இல்லை . ✔
📕 " நரகத்தின் சுவாலைகளின் வெப்பம் என் முகத்தை எரிக்கிறது, ஒரு முறை நம்பிக்கையின்றித் திரும்பிப்பார்க்கிறேன் . ✔
📕 " ஒரு மலக்கு என்னைப்பிடித்து நெருப்புக் குண்டத்தில் தள்ளி விடுகிறார் . ✔
📕 " ஆவென்று கத்திக்கொண்டே நான் கீழே விழுகிறேன், ஐந்தாறு அடிகள் விழுந்த பின் ஒரு கரம் என்னைப் பற்றி இழுக்கிறது . ✔
📕 " தலையை உயர்த்திப்பார்க்கிறேன்,வெள்ளைத் தாடியுடன் ஒரு முதியவர் . ✔
📕 " நீங்கள் யார் " ? ✔
📕 " நான் தான் உனது தொழுகை ”. ✔
📕 " ஏன் நீங்கள் இவ்வளவு தாமதித்து வந்தீர்கள், இன்னும் கொஞ்ச நேரத்தில் நரகம் என்னை விழுங்கி இருக்குமே” ஆதங்கத்தோடு சொன்னேன் . ✔
📕 " முதியவர் சிரித்தார், " நீ "எப்போதும் கடைசி நேரத்தில் தான் நிறைவேற்றினாய் , மறந்து விட்டாயா ? ? ✔
📕 " ஒரு நொடி…. ✔
📕 " நான் விழித்துக்கொண்டேன் , ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினேன் . ✔
📕 "என் தாயும் தந்தையும் உரையாடுவது கேட்கிறது,
என் உடை வியர்வையில் குளித்திருக்கிறது . ✔
📕 " அல்லாஹு அக்பர் ! அல்லாஹு அக்பர் ! ! 🌷
🌷 " இஷாவிற்கான அதான், உடனே எழுந்து உளூச் செய்வதற்காகச் சென்றேன் .✔
📕 " பாடல்களைக் கேட்டு மனதில் காமத்தை
வளர்க்காதே ! ✔
📕 " திரைப்படங்களை பார்த்து தீமைகளை
செய்யாதே ! ✔
📕 " இறைவனை மறந்து உலகஇன்பங்களுக்கு அடிமையாகாதே ! ✔
📕 " மரணம் ஒரு நாள்" உன்னை சுவைத்தேத் தீரும்
என்பதை மறக்காதே ! ✔
📕 " ஆதமின் மகனே ! ஆடம்பர வாழ்க்கையை
விரும்பாதே ! ✔
📕 " ஏனெனில் நாளை நீ மண்ணறைக்குச் சொந்தமானவன் என்பதை மறக்காதே ! ✔
📕 " மனிதனே ! விதவிதமாக உணவுகளை
உண்டாயே ! ✔
📕 " நாளை மண்ணறைக்குள் உன் உடம்பை புழுக்கள்
உண்ணும் என்பதை நினைத்தாயா ? ✔
📕 " ஆதமின் மகனே ! உதவிகள் செய்வதை வெறுத்து
ஏழைகளை விரட்டியடித்து ஆணவமாக உலகில் வாழாதே ! ✔
📕 " மரணம் உங்கள் முன் என்பதை மறக்காதீர்கள்.✔
📕 " பேரம் பேசி பாவங்களை செய்யும் மனிதனே ! ✔
📕 "படைத்தவன் உன்னை பார்த்த வண்ணமாக
இருக்கிறான் என்பதை மறந்து விடாதே ! ✔
📕 " மனிதனே ! உன்னை இறைவன் மரணத்திற்கும்,
மறுமைக்கும் ஏற்ப படைத்துள்ளான் என்பதை மறக்காதே ! ✔
📕 " என் அருமை இஸ்லாமிய நெஞ்சங்களே ! ✔
📕 "படித்த பின்னர் இதை உங்களுடைய நண்பர்கள் உடன் பகிர்ந்துக்
கொள்ளுங்கள் , நல்லதை செய்யுங்கள்..

No comments:

Post a Comment