Popular Posts

Tuesday 12 January 2016

சஹாபாக்களை பற்றி அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்/ஈமானில் அந்தஸ்தில் சிறந்து விளங்கிய சஹாபாக்களை விட அண்ணன் விபரமானவரா ??

சஹாபிகளை விட நாங்கள் அதிகமாக விளங்குவோம் என்று அண்ணன் சொல்கிறார்
 சஹாபிகளை விட அற்புதமாக விளங்கும் அண்ணனின் ஆற்றலை பாரீர் என்று ஒரு வஹ்ஹாபி ஸ்டேடஸ் போடுகிறார் .
 ஈமானில் அந்தஸ்தில் சிறந்து விளங்கிய சஹாபாக்களை விட அண்ணன் விபரமானவரா ??
 சஹாபாக்களை பற்றி அல்லாஹ் சொல்வதை கேளுங்கள் .

 48:29 مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا‌سِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ‌ ؕ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ‌ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا 
 48:29. முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் )அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்கள் ;
 அவர்களுடன் (சஹாபா பெருமக்கள் )இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில்(நிராகரித்தவர்களில் ) எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.
 ஸூரா 47
 சஹாபாக்களை பற்றி தவ்ராத்திலும் ,இன்ஜீலிலும் சொல்லப்பட்டிருக்கிறது .அண்ணனைபற்றி எந்த வேதத்தில் சொல்லப்படிருக்கிறது .???
 அல்லாஹ்வும் அவர்களுடைய ஈமானுக்கு சர்டிபிகேட் கொடுக்கிறான் ? உங்கள் அண்ணனுக்கு யார் கொடுத்தது ??

TNTJ யினர் மறுக்கும் குஸைமா (ரலி) அவர்களின் ஹதீஸும், அதன் உண்மை நிலையும்

TNTJ யினர் மறுக்கும் குஸைமா (ரலி) அவர்களின் ஹதீஸும், அதன் உண்மை நிலையும்
 =====================================================
 TNTJ யினர் தங்களுக்கு பிடித்த ஹதீசுகளை வைத்துக் கொண்டு தங்களுக்கு விருப்பமில்லாத ஹதீசுகளை தட்டி விட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பதை யாவரும் அறிந்ததே.!!!

 இன்று இந்த பகுத்தறிவு வாதம் வைத்து ஹதீஸுகளை தட்டி விடும் போக்கு, தமிழ் உலகில் மக்களையும் அதிகமாக தாக்கி, அடிப்படை மார்க்க அறிவு இல்லாத சகோதர்கள் கூட தங்களுக்கு விருப்பமான மாதிரி ஹதீஸுகளை தட்டி விட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
 சமூகத்தில் இப்போது ஹதீஸுகளின் நிலை, 'உங்கள் மனசு ஏற்கிறதா என்று பாருங்கள் இல்லை என்றால் தட்டி விடுங்கள்,' என்ற நிலைக்கு மக்களை கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். அதற்கு அவர்கள் ஆதாரமாக வைக்கும் ஹதீஸ்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

 என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.

 அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)
 நூல்: அஹ்மத் 15478

 இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டி அளவுகோல் ஒவ்வொரு தனி மனிதனின் கையிலும் இன்று கொடுக்கப் பட்டுள்ளது. விரும்பினவன் விரும்பின ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தட்டி விடலாம்

 நல்ல நிலைப் பாடு தான்.

 இது என்ன கலியாணத்திற்கு பெண் பார்க்கும் விடயமா????

 அவர் அவருக்கு பிடித்தது போல செயற்படுவதற்கு???
 இன்று சாதாரண பாமர மக்கள் கூட ஹதீஸுகளை தூக்கி வீசும் நிலைமைக்கு கொண்டு வந்து வைத்துள்ளார்கள் என்றால். இந்த 1400 ஆண்டுகளாக இமாம்கள் ஹதீஸ் கலைக்காக பட்ட கஷ்டங்களை எல்லாம் தேவை இல்லாமல் ஆக்கி இருக்கிறார்கள்

 5 லட்சம் அறிவிப்பாளர்களை இமாம்கள் திரட்டி இருக்கிறார்கள், எதற்கு திரட்டினார்கள்????

 இமாம்கள் எல்லாம் குந்தி இருந்து கொண்டு 'நீ ஹதீஸ சொல்லு, மனசுக்கு புடிச்சிருந்தா ஷஹீஹ் என்று சொல்கிறோம், இல்லை என்றால் ழஈப் என்று சொல்கிறோம்' என்று சொல்லிவிட்டு போயிருக்கலாம் அல்லவா??

 ஒரு ஹதீஸை திரட்ட 1 மாதம் பயணம் செய்தார்கள் இமாம்கள். தேவையா இது???

 சரி இவர்கள் மேலே குறிப்பிட்ட ஹதீஸின் அடிப்படையில் எத்தனை ஹதீஸுகளை இமாம்கள் தட்டி உள்ளார்கள்????என்பதை இவர்கள் காட்ட வேண்டும்.

 இந்த ஹதீஸ், சில அடிப்படையே இல்லாத செய்திகளை குறிக்கும். உதாரணமாக தப்லீக் ஜமா அத் சகோதர்களின் தஃலீம் தொகுப்பில் ஒரு ஹதீஸ் வருகிறது, தொழுகையை தொடர்ந்து தொழுதவனுக்கு 15 உபகாரம், தொழுகையை விட்டவனுக்கு 5 தண்டனைகள் என்று, இந்த ஹதீஸை படித்ததுமே நமக்கு தோன்றும் இப்படி ஒரு செய்தியை நபிகளார் சொல்லி இருப்பார்களா என்று...

 உண்மையில் இது ஒரு இட்டுக் கட்டப் பட்ட செய்தியாகும்.

 இந்த செய்தி இட்டுக்கட்டப்படதாகும் என இமாம் தஹபி இப்னு ஹஜர் போன்றவர்கள் விளக்கியுள்ளனர்

 அதில் முஹம்மத் இப்ன் அலி பின் அல் அப்பாஸ் என்ற பொய்யன் இடம் பெறுகிறான் அவந்தான் இதை இட்டுக் கட்டினான் என இமாம் தஹபி (ரஹ்) கூறுகிறார்கள்

 இது போன்ற செய்திகளை தான் மேற்குறித்த அஹ்மதுடைய ஹதீஸ் குறிப்பிடுகிறது.

 அதிராம் பட்டினத்தில் TNTJ இற்கும் ADT க்கும் நடந்த விவாதத்தில் 4 ஹதீஸுகளை சுடச் சுட தட்டி விட்டனர்.

 அதில் ஒன்று தான் நபி (ஸல்) அவர்கள் குதிரை வாங்கியதாகவும் அதற்கு குஸைமா (ரலி) அவர்கள் சாட்சி சொன்னதாக அபூதாவூதில் பதிவாகி இருக்கும் ஆதாரபூர்வமான செய்தி

 "நபிகள் நாயகம்(ஸல்) ஒரு கிராம வணிகரிடம் இருந்த குதிரையை விலை பேசி வாங்கி விட்டு அதற்கு உரிய விலையை பெறுவதற்கு தன்னை பின் தொடர்ந்து வருமாறு கூறிவிட்டு நபிகள் நாயகம்(ஸல்) விரைந்து சென்று விட்டார்

 குதிரை வியபாரி தாமதமாக சென்றார். அந்த குதிரையை நபிகள் நாயகம் (ஸல்)வாங்கிவிட்டதை அறியாத சிலர்கள் அந்த குதிரையை மீண்டும் விலை பேசினர். நபிகள் நாயகம்(ஸல்) பேசிய விலையை விட சிலர்கள் அந்த குதிரைக்கு அதிக விலை கூறவே குதிரை வியபாரி நபிகள் நாயகத்தை அழைத்து உங்களுக்கு வேண்டும் என்றால் உரிய விலை கொடுத்து குதிரையை வாங்கி கொள்ளுங்கள் இல்லையேல் நான் வேறு நபருக்கு விற்க போகிறேன் என்று குறிப்பிட்டார் இதை செவியுற்ற நபிகள் நாயகம்(ஸல்) நான் அந்த குதிரையை வாங்கி விட்டேனே என்று கூறினார்கள் வணிகர் நான் உங்களுக்கு விற்பனை செய்யவில்லை என்று கூற, இல்லை நான் வாங்கி விட்டேன் என்று மீண்டும் நபிகள் நாயகம் கூற இருவருக்கும் இடையே பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பலரும் நபிகள் நாயகம்(ஸல்) பொய் பேசவே மாட்டார்கள் என்று கூறி வணிகரை எச்சரித்தனர் நீங்கள் வாங்கி விட்டது உண்மையானால் அதற்கு உரிய சாட்சியை கொண்டு வாருங்கள் என்று வணிகர் கூறவே அப்போது அங்கு வந்த குஸைமா பின் ஸாபித் அன்ஸாரி நான் சாட்சி என்று கூறினார்கள். உடனே நபிகள் நாயகம்(ஸல்) குஸைமா அவர்களை நோக்கி திரும்பி நீ தான் அதை பார்க்கவில்லையே எப்படி சாட்சி சொன்னாய் என்று விளக்கம் கேட்டார்கள் .அதற்கு அந்த நபி தோழர் நீங்கள் பெற்று தரும் இறை செய்திகளை முழுமையாக நம்பும் நான் இந்த வணிகருக்கு எதிரான விசயத்தில் எப்படி உங்களை நம்பாமல் இருக்கமுடியும் என்று திருப்பி கேட்டார்கள். உடனே நபி அவர்கள் குசைமா சொல்லும் சாட்சி இரு நபருக்கு இணையான சாட்சியாகும் என குறிப்பிட்டார்கள்." (அபூ தாவூத்)

 இவர்கள் இந்த ஹதீஸை மறுபதற்கு சொல்லும் காரணம்.
 குசைமா அவர்கள் பொய் சாட்சி சொல்லியதாகவும் நபிகள் நாயகம் அவர்கள் அதை ஊக்க படுத்துவது போன்றும் இந்த நபி மொழி அமைவதால் இது ஏற்று கொள்ள தகுந்த நபி மொழி அல்ல! எனவே இந்த நபி மொழியை மறுக்கிறோம். என்று வாதம் வைக்கிறார்கள்.

 அனைத்து ஹதீஸுகளையும் இவர்கள் தலைகீழாக புரிந்தது போல் இதையும் தலைகீழாக புரிந்து உள்ளனர்.
 நபி (ஸல்) அவர்களை மக்கத்து காபிர்கள் கூட உண்மையாளர் என்றே அழைத்தார்கள். அவர் ஒரு நற்குண சீலராக சிறு வயதில் இருந்தே விளங்கினார்கள். என்பது அனைவரும் அறிந்ததே.

 இந்த ஹதீஸில் வரும் குதிரையை விற்றவன் நபி (ஸல்) அவர்கள் கொடுத்த காசை விட அதிகமாக காசு கிடைக்கும் என்று நபிகளாரை பொய்யர் ஆக்க முயன்றான்.

 "இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்" (33:6)

 நம்மை விட நபி (ஸல்) அவர்களை அதிகமாக நேசித்தவர்கள் தான் அந்த உத்தம தோழர்கள்.அந்த அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் நேசித்தார்கள்.

 நபி(ஸல்) அவர்களை பொய்யர் ஆக்க அவன் முயன்றால் சஹாபாக்கள் விடுவார்களா???

 ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் பொய் சொல்ல மாட்டார் என்பது சஹாபாக்களுக்கு தெரியும், 100% இற்கு 200% உறுதியாகவே இருந்தார்கள் அதனால் தான் குஸைமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை உண்மை படுத்துவதற்கு அங்கு வந்து அவ்வாறு சாட்சி சொன்னார்.
 ஒரு முஸ்லிம் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இப்படி தான் நடந்திருக்க வேண்டும்

 நபி (ஸல்) அவர்களை உண்மை படுத்துவதற்கு ஒரு உண்மையை எடுத்து வைத்தால் அது எப்படி பொய்யாகும்???

 அப்படியென்றால் உங்கள் வாதப் படி நபி (ஸல்) அவர்கள் பொய் சொன்னார்களா??? நபி (ஸல்) அவர்கள் பொய் சொன்னார்கள் என்று குஸைமா (ரலி) அவர்கள் சொல்லியிருந்தால் அது உங்கள் பார்வையில் ஷஹீஹ் ஆக ஆகி இருந்திருக்கும், அந்த வாதத்தை தான் வைக்க வருகிறார்களா???

 என் அன்பின் சகோதரர்களே!!!இது ஒரு வாதமா ???? யாரவது இப்படி ஒரு வாதம் வைத்து ஹதீஸுகளை தட்டி விடுவார்களா?? நான் தெரியாமல் கேட்கிறேன்???

 அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த tntj யினருக்கு நேர்வழி காட்ட அனைவரும் துஆ செய்யுங்கள்

அமலைக் கொண்டு வஸீலாத் தேடுதல்

அமலைக் கொண்டு வஸீலாத் தேடுதல்



“இஸ்தயீனூ பிஸ்ஸப்ரி வஸ்ஸலாத்தி” (பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் நீங்கள் உதவி தேடுங்கள்) திருக்குர்ஆன் 2 : 153



பொறுமையும், தொழுகையும் மனிதர்கள் செய்கின்ற அமல்களேயாகும். இத்திரு வசனத்தில் இவ்விரண்டைக் கொண்டும் “வஸீலா” உதவிதேடுமாறு அல்லாஹ் விசுவாசிகளைப் பணித்துள்ளான்.



பொறுமை, தொழுகை இரண்டு வகையான வணக்கங்கள் மட்டும் இத்திரு வசனத்தில் கூறப்பட்டிருந்தாலும் “இபாதத்” வணக்கம் அல்லது அமல்கள் என்ற அடிப்படையில் இவ்விரண்டும் தான் வணக்கங்கள் என்றோ அமல்கள் என்றோ சொல்லமுடியாது.



நோன்பு, ஸகாத், ஹஜ்ஜூ, திக்று, பிக்று, முறாக்கபா, முஷாஹதா போன்ற எல்லா நற்கிரியைகளும் மார்க்கத்தில் நல்லமலாக கணிக்கப்படுகின்றன. எனவே இவை அனைத்தையும் கொண்டு நாம் வஸீலாத் தேடலாமென்பது விளங்கும். மேலும் பொறுமையும், தொழுகையும் சிருஷ்டிகள் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து ஆராய்ந்தால் சிருஷ்டிகளைக் கொண்டும் வஸீலாத் தேடலாமென்பது விளங்கும்.



எனவே மேற்கூறிய திருவசனத்தில் நல்லமல்களைக் கொண்டும், சிருஷ்டிகளைக் கொண்டும் வஸீலாத் தேடுவதற்கு மறுக்கமுடியாத ஆதாரமும் இருக்கின்றது.



வஹ்ஹாபிஸத்தை நாடெங்கும் பரப்பிய நல்லவர்கள் இத்திருவசனம் தருகின்ற வெளிப்படையான அர்த்தத்தையும், அது உள்ளடக்கி நிற்கின்ற விளக்கத்தையும் உணராமல்தான் வஸீலாத் தேடுவது கூடாதென்றும், அவ்வாறு கேட்பது “ஷிர்க்” இணைவைத்தலை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.



நபிமொழி . 08



உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர்கள் ஒரு பிரயாணம் செய்தார்கள். அப்பிரயாணத்தின் போது இருட்டாகிவிட்டது. இரவைக் கழிப்பதற்காக வழியில் இருந்த மலைக்குகையொன்றில் நுழைந்தார்கள். அவர்கள் உள்ளே போனபின் மலையுச்சியிலிருந்து விழுந்த கல் ஒன்று அவர்கள் தங்கியிருந்த குகையின் வாயலை அடைந்து விட்டது.



அக்கல் பெரிய கல்லாக இருந்த படியால் அவர்களால் அதை அகற்ற முடியாமல் போயிற்று. அதை அகற்றாமல் அவர்கள் வெளியேற வேறுவழியும் இல்லாமலிருந்தது. குகைக்குள் மாட்டிக் கொண்ட மூவரும் சற்று நேரம் செய்வதறியாது யோசித்துக் கொண்டும், கவலையடைந்து கொண்டுமிருந்தனர்.



அவர்களிலொருவர் மற்ற இருவரிடம் நாம் இதிலிருந்து தப்ப முடியாது போலிருக்கிறது. இதற்து என்ன வழிசெய்யலாமென்று கேட்டார். அதற்கு அவர்களில் ஒருவர் நாம் இதிலிருந்து தப்புவதற்கு எந்த வழியுமே இல்லை. எனினும் நாம் நமது வாழ்க்கையில் செய்த அமல்களில் தூய்மையான அமல்களும் இருக்கும் அந்த வணக்கத்தைக் கொண்டு நாம் இப்பொழுது வஸீலாத் தேடிப்பார்ப்போம் என்று ஆலோசனை சொன்னார்.



அவர் கூறிய ஆலோசனையை மற்ற இருவரும் சரி கண்டதால் அவ்வாறே செய்வதென்று முடிவு செய்தார்கள்.



மூவரில் ஒருவர் “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த நோயால் பீடிக்கப்பட்ட பெற்றோர் இருந்தார்கள். நான் காலையில் காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். வரும் பொழுது எனது பெற்றோர்களுக்கும், மனைவி மக்களுக்கும் இராச்சாப்பாட்டுக்காக பால் கொண்டு வருவேன். முதலில் எனது பெற்றோர்களுக்கே அதைக் கொடுப்பேன். அவர்கள் அருந்தி மிஞ்சுகின்ற பாலையே எனது மனைவி மக்களுக்கு கொடுப்பேன். பெற்றோரின் பசிதீராமல் எனது மனைவி மக்களுக்கு நான் கொடுத்ததேயில்லை.



ஒரு நாள் எனது தேவை காரணமாக காட்டில் நான் தாமதமாகியதால் குறித்த நேரத்திற்கு வீடு திரும்ப முடியாமல் போய்விட்டது. சிறிதுநேரம் கழித்து நான் வந்தபொழுது எனது பெற்றோர்கள் என்னை எதிர்பார்த்திருந்து விட்டு உறங்கிவிட்டார்கள். அவர்களை விழிப்பாக்கி அவர்களின் தூக்கத்தை கலைக்க விரும்பாத நான் விடியும்வரை பால் பாத்திரத்தை ஏந்தியவனாக நின்றுகொண்டிருந்தேன். எனது குழந்தைகளோ பசிக்கொடுமையினால் பால் கேட்டு எனது காலடியில் தவழ்ந்து திரிந்தார்கள். அவ்வாறிருந்தும் அவர்களுக்கு கொடுக்காமல் விடியும்வரை காத்திருந்து விடிந்த பிறகு எனது பெற்றோர்களுக்குக் கொடுத்து விட்டுத்தான் எனது பிள்ளைகளுக்குக்கொடுத்தேன்.



இறைவா! நான் இவ்வேலையை எனது பெற்றோர் மீது எனக்கிருந்த பாசத்தினாலும், அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டிய காரணத்தினாலுமேயன்றி யாரிடமும் எதையும் எதிர் பார்த்து நான் அங்கணம் செய்யவில்லை.



எனவே, நான் செய்த இவ்வேலை உன்னிடத்தில் தூய்மையானதாகவும், “இக்லாஸ்” கலப்பற்றதாயுமிருந்தால் இக்கல்லினால் எங்களுக்கேற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்கிவைப்பாயாக என்று வேண்டினார்.



அப்பொழுது அக்கல் சற்று நகர்ந்தது. எனினும் அதன் வழியாக வெளியேற முடியாமலிருந்தது.



இரண்டாம் நபர்“இறைவா! எனது சாச்சாவுக்கு ஒரு மகள் இருந்தாள் அவள் எனக்கு மிக விருப்பமுள்ளவள். அவளுடன் நான் உடலுறவு கொள்ள விரும்பினேன். ஆயினும் அவள் அதற்கு இணங்கவில்லை. இவ்வாறு ஒரு வருடம் ஓடியது.



ஒரு நாள் அவள் என்னிடம் வந்த பொழுது உடலுறவுக்குச் சம்மதிக்கும் நிபந்தனையுடன் 120 தீனார் அவளுக்குக் கொடுத்தேன். அவளுடன் உடலுறவு கொள்ளத் தயாரான பொழுது அவள் என்னை நோக்கி நான் உனக்கு ஹறாமாக்கப்பட்டவள். என்னுடன் உடலுறவு கொள்ளாதே என்று சொன்னாள்.



உடனே நான் அவளை விட்டும் விலகிவிட்டேன். அவளிடம் கொடுத்த 120 தீனார்களையும் அவளிடம் இருந்து பெறவுமில்லை. “இறைவா! எனது இவ்வேலை உன்னிடத்தில் புனிமானதாகவும், “இக்லாஸ்” கலப்பில்லாததாயுமிருந்தால் இக்கல்லினால் ஏற்பட்டுள்ள கஷ்டத்தினை நீக்கி வைப்பாயாக” என்று வேண்டினார்.



அந்தக்கல் மீண்டும் சற்று நகர்ந்தது. எனினும் அவ்வழியால் வெளியேறமுடியாமல் இருந்தது.



மூன்றாமவர் “இறைவா! கூலிக்கு வேலை செய்பவர்கள் எனக்குத் தேவைப்பட்டனர். பல கூலியாட்களைக் கொண்டு வேலை வாங்கிவிட்டு அவர்களுக்குரிய கூலிகளையும் கொடுத்து விட்டேன்.



எனினும் அவர்களில் ஒரு கூலியாள் தனது கூலியை வாங்காமல் என்னிடம் விட்டுச் சென்று விட்டார். நான் அதை சும்மாபோட்டு வைக்காமல் எனது மூலதனமான ஆடு, மாடு, ஒட்டகம், அடிமை போன்றவற்றுடன் அதையும் சேர்த்துப் பெருக்கினேன். அவருடைய கூலி வியக்கத்தக்க அளவுக்கு பெருகிவிட்டது.



ஒரு நாள் அவர் என்னிடம் வந்து தான் விட்டுச் சென்ற கூலியை தருமாறு கேட்டார். இதோ நீகாணும் ஆடு, மாடு, ஒட்டகம், அடிமை போன்ற எல்லாமே உண்ணுடையதுதான் எடுத்துச் செல் என்றேன்.



அதற்கவர் என்னை கிண்டல் செய்யாதே என்றார். நான் கிண்டல் செய்ய வில்லை. நான் சொல்வது உண்மைதான் என்று சொன்னேன். அவர் மிக்க மகிழ்ச்சியுடன் அவை அனைத்தையும் எடுத்துச் சென்றார். இறைவா! என்னுடைய இந்த வேலை உன்னிடத்தில் புனிதமானதாயும் “இக்லாஸ்”கலப்பில்லாததாயுமிருந்தால் இக்கல்லினால் ஏற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்கி வைப்பாயாக என்று வேண்டினார். அக்கல் முழுமையாக அகன்று மூவரும் வெளியேறினார்கள். என்று நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்.



ஆதாரம் :புஹாரி அறிவிப்பு :அப்துல்லாஹ்பின்உமர் (றழி

‘தப்லீக் ஜமாத்’.

வெளிவந்தது.மக்கள் அவர்களை புறக்கணித்து,மஸ்ஜிதுகளை விட்டு விரட்டிஅடித்த போது,பல்வேறு இடங்களில் இவர்கள் கேவலப்படுத்தப்பட்டதற்கு பின்னால்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவியுடன் இருந்த ஒரு கூட்டம்,அவர்களும் மார்க்கம் பயின்ற ஆலிம்கள்,இந்த கொள்கையை இந்திய முஸ்லிகளும்,இந்திய இஸ்லாமிய உலமாக்களும் புறக்கணிக்கின்றனர், எனவே இந்த கொள்கையை தற்சமயத்திற்கு நாம் வெளிப்படையாக பேச வேண்டாம்,தற்போது இந்த விஷயங்களையெல்லாம் மறைவாக வைத்துக்கொள்வோம்,முதலில் மனிதர்களை நம் வசமாக ஈர்த்து அவர்களை நம் அபிமானத்திற்கு உரியவர்களாக திருப்பியதற்குப் பின்னால்,அவர்களிடம் மெல்ல,மெல்ல சன்னச்சன்னமாக தனிமையில் அவர்களுக்கு நாம் போதிப்போம் என்ற ஒரு கருத்து அவர்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட போது,அந்த கருத்தை அவர்களிலேயே சிலர் ஏற்க மறுத்தார்கள்.

 அவ்வாறு ஏற்க மறுத்தவர்கள் அவர்களில் இருந்து பிரிந்து டில்லியில் இருந்து வெளியேறி பஞ்சாபை நோக்கி செல்கிறது,அவர்கள் தான் நவாப் சித்திக் ஹசன் கான் பொபாலைச் சேர்ந்தவர்,காதி வஹீதுஸ்ஸமான் அமிர்தரஸை சேர்ந்தவர்.இவர்கள் வெளிப்பட்டு இதே வஹாபியக் கொள்கையை நாங்கள் பகிரங்கமாகத் தான் பேசுவோம்,பெசுவது சரிதான் என்று சொன்னால் அதை ஏன் மக்களிடத்தில் மறைத்து பெசவேண்டும் என்ற வாதத்தை முன் வைத்து பகிரங்கமாக பேசத் துவங்கினார்கள்,அது மட்டுமல்ல அவர்கள் தங்களுக்குத் தாங்களே ‘அஹ்லே ஹதீஸ்’ என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார்கள்.

 இந்த நிலையில் வஹாபிய கொள்கையை மறைத்து பேச வேண்டும் என்று பிரிந்த கூட்டம் செய்யத் அஹ்மத்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவி இவர்களோடு இன்னும் சிலர் சேருகின்றனர்.அவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு நபர் மௌலவி கலீல் அஹமத் அம்பேட்டி,மௌலவி காசிம் நானூத்வி,மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி. இதில் மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியும்,மௌலவி அஷ்ரஃப் அலி தானவியும் அல்லாமா முஹாஜிர் மக்கி ரஹ்மதுல்லாஹி அவர்களிடம் முரீதாகவும்,கலீஃபாக்களாகவும் இருந்தார்கள்.

 ரஷீத் அஹமத் கங்கோஹியிடம் பத்து ஆண்டுகள் வரை மார்க்க கல்வி பயின்ற ஒரு மாணவர் மௌலவி இல்யாஸ் வளர்ந்து வாலிபர் ஆனபொழுது,அவருடைய சிந்தனைக்குள் இருந்து, கற்பனைக்குள் இருந்து இதே வஹாபிய கொள்கைக்கு உரிய ஒரு இயக்கம் ஒருவாயிற்று. அந்த இயக்கத்திற்கு அவர்களால் வைக்கப்பட்ட பெயர் தான் ‘தப்லீக் ஜமாத்’

JAQH (ஜம்யிய்யத்தது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்)

அல்லாஹ்வின்
 மாபெரும்
 கிருபையால்
 போலி
 முகமுடி
 அணிந்து கொண்டு
 வஹாபிய
 கெள்கையை பரப்ப
 நினைக்ககும் ஜாக்
 ஜமாத்தின்
 போலி முகமுடி
 கிழிந்ததது
 JAQH (ஜம்யிய்யத்தது
 அஹ்லில் குர்ஆன் வல்
 ஹதீஸ்)
 தாவா பணி என்றும்
 தூய வழி என்றும்
 அமைதியை நோக்கி
 என்றும்
 தொழுகைக்கு
 அழைக்கின்றோம் என்று
 சொல்லிக்கொண்டு தமிழக
 முஸ்லிம்களிடையே பரவத்
 துவங்கியுள்ளது.
 இந்த இயக்கங்களில்
 உருப்பினர்களாக உள்ள
 அப்பாவி
 இளைஞர்களுக்கே இது
 தெரியாது நல்லது தானே
 சொல்றாங்க நல்லது தானே
 செய்றாங்க என்று
 நினைத்து கொண்டு
 இருக்கிறார்கள்
 வெறித்தனமான போக்கும்,
 சக முஸ்லிம்களின்
 உணர்வுகளை மதிக்காத
 நிலையும்,
 அடுத்தவர்களுடைய மானம்,
 மரியாதையோடு
 விளையாடுகின்ற
 தன்மையும் வளர்ந்து
 கொண்டு வருகிறது.
 முஸ்லிம்களை
 காஃபிராக்குகின்ற கூட்டம்
 தலை தூக்கியிருக்கிறது.
 துவக்க காலத்தில்
 முஸ்லிம்களின்
 கொள்கையில் பலவீனத்தை
 ஏற்படுத்தி,
 அவர்களிடையில்
 பகைமை உணர்வை
 உண்டாக்கி வேடிக்கைப்
 பார்த்த, யூத சக்திகளால்
 உருவாக்கப்பட்ட
 “கவாரிஜ்கள்” என்ற
 வழிகெட்ட கூட்டத்தினர்
 செய்த அதே செயலை
 இன்று இவர்கள் வேறு
 பெயர்களில் செய்து
 கொண்டிருக்கின்றனர்.
 யார் யார், சொர்கத்திற்கு
 செல்வார்கள், யார் யார்
 நரகத்திற்குச் செல்வார்கள்
 என்று தீர்மானிக்கின்ற
 அதிகாரத்தை தன் கையில்
 எடுத்து முஸ்லிம்களின்
 ஈமானோடு விளையாடிக்
 கொண்டிருக்கிறார்கள்.
 இப்படிப்பட்ட காலச்
 சூழ்நிலையில் நாம்
 மிகவும் எச்சரிக்கையாக
 இருக்க வேண்டும்,
 நம்முடைய ஈமானை நாம்
 பாதுகாக்க வேண்டும்.
 நமது இறை நம்பிக்கையை
 பலவீனப்படுத்த தீய சக்திகள்
 செய்யும் திட்டமிட்ட
 பிரச்சாரத்தை முறியடிக்க
 வேண்டும்.
 அல்லாஹ்விடத்தில் உதவி
 வேண்டிக் கொண்டிருக்க
 வேண்டும். ஷைத்தானின்
 தீய தூண்டுதல்களிலிருந்து
 அல்லாஹ்விடத்தில்
 பாதுகாப்பு தேட
 வேண்டும். சரியான
 பாதையில் வழி
 நடத்துமாறு
 அல்லாஹ்விடத்தில்
 பிரார்த்தித்து கொண்டே
 இருக்க வேண்டும்.
 அல்லாஹ் யாருக்கு அருள்
 செய்தானோ அவர்கள்
 நேரான பாதையில்
 சென்று அல்லாஹ்வை
 அஞ்சி வாழ்வார்கள்,
 யாருக்கு அல்லாஹ்வின்
 அருள் இல்லையோ அவர்கள்
 கண்மூடித்தனமான
 வாழ்க்கையில் ஈடுபட்டு
 தங்களை மாய்த்துக்
 கொள்வார்கள்.
 எனவே நாம்
 அல்லாஹ்விடத்தில் நல்
 அமல்கள் மூலமாகவும்
 தொழுகையின்
 மூலமாகவும் வஹாபிச
 கொள்கையிலிருந்த
 ு பாதுகாப்பு
 தேடவேண்டும் யா
 அல்லாஹ் நம்
 அனைவரையும்
 தொழுகையை
 நிலைநாட்டக்கூடிய
 பாக்கியத்தை
 தந்தருள்வாயக.

குர்ஆனை ஒளு இன்றி தொடலாமா

குர்ஆனை ஒளு இன்றி தொடலாமா ?

 குர்ஆனை தூய்மையின்றி தொடலாமா ?

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹூ பரக்கத்துஹூ
 சமூதாய சிந்தனைக்கு :
 அல்லாஹூ தஃஆலா வழங்கிய வேதங்களில் இறுதி வேதம் புனிதம் நிறைந்த அல்குர்ஆன் . இந்த புனித குர்ஆனின் கண்ணியத்தை முஸ்லீம்களின் உள்ளத்தில் இருந்து அகற்றவேண்டும் என்று உலக அளவில் சூழ்ச்சி நடை பெறுகிறது .என்பதை இஸ்லாமியர்கள் அனைவரும் அறிந்த விசையம் ! இஸ்லாத்தை சிரழித்திட வழிகேடற்கள் போடும் சதி திட்டம் .


 பிஜெ மதம் ஒரு பேராபத்து ;
 பிஜெ என்ற அதி மேதாவி தான் சொல்வது மட்டும் தான் மார்க்கம் மற்ற யார் சொன்னாலும் அது மார்க்கம் அல்ல என்று . சொல்வது அனைவருக்கும் தெரிந்த விசையம் , அதை உருதி செய்வதர்க்கு ஒரு உதாரணம் பார்போம் ...
 யார் ? வேண்டுமானாலும் சுத்தம் இல்லாமல் அதாவது ஒளூ இல்லாதவர்களும் , குளிப்பு கடமையானவர்களும் , மாதவிடாய் பெண்களும் , பேருகாலத்தொடக்கு உள்ள பெண்களும் , எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் , குர்ஆனை தொடலாம் , என்று தன் சுய அறிவின் படி கருத்தை சொல்கிறார் :


 ஒளூ வின்றி குர்ஆனைத் தொடலாமா ? என்பதை பற்றிய குர்ஆன் & ஹதீஸ்களை வைத்து ஆறாயிவோம்
 ஒளூ இல்லாதவர்களும் , குளிப்பு கடமையானவர்களும் ,பெண்கள் மாதவிடாய் மற்றும் பேறு காலத்தொடக்கு உள்ளவர்களும் , குர்ஆனை தொடலாம் ? ஓதலாம் ? என்று இஸ்லாமிய பெயர்தாங்கியான பிஜெ என்ற வழிகேடர் கூறுகிறார் .
 இதுவும்ஷரீஅத்தீன் தீர்ப்புக்கு முற்றிலும் மாறுபட்டதும் , ஹராமான செயலுமாகும்.
 ஸூரத்துல் வாகிஆவிலுள்ள 79 ஆவது வசனத்திற்கு அடைப்புக்குறிக்குள் ஒரு வார்த்தையைச் சேர்த்து தவறான அர்த்தம் எழுதி , அதனுடைய விளக்க குறிப்பு 291 ல் பின் வருமாறு எழுதுகிறார் .
 பிஜெ வின் விளக்கம்
 திருக்குர்ஆன் எழுத்துவடிவில் அருளப்படவில்லை எனும் போது எழுத்து வடிவில் அருளப்படாததை தொடும் பேச்சுக்கே இடமில்லை . தொடும் விதத்தில்லாவது அருளப்படிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனைத் தொடமாட்டார்கள் என்று கூறமுடியும் . திருக்குர்ஆன் நபிகள் நாயகத்திற்கு ஓதிக் காட்டப்பட்டதே தவிர எழுத்து வடிவில் அருளப்படவில்லை .எனவே . இதைத் தொடமாட்டார்கள் என்பது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனைக் குறிக்காது . எங்கிருந்து அருளப்பட்டதோ அந்த மூலப்பிரதியைத்தான் குறிக்கும் இவ்வாறு தன்னுடைய சுய விளக்கத்தை எழுதியபின் கடைசி பாராவில் இப்படி எழுதி இருக்கிறார் : எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் குர்ஆனை தொடலாம் , படிக்கலாம் , வாசிக்கலாம் , என்பது தான் குர்ஆனிலிருந்து பெறப்படுகிற ,நபிகள் நாயகத்தின் வழிமுறைகளிலிருந்து பெறப்படுகிற முடிவாகும் .
 நூல் : பிஜெ வின் தர்ஜமா என்ற நாவல் பக்கம் : 1248
 நம்முடைய விளக்கம்
 இதிலும் தன் சொந்தக் கருத்தைத்தான் சொல்கிறார் , ஆதாரம் எதையும் காண்பிக்கவில்லை . குர்ஆனிலிருந்து ,நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளிலுருந்தும் பெறப்படுகின்ற முடிவு என்று பிஜெ கூறியிருப்பதும் தன்னிச்சையான முடிவேயாகும் .
 இவ்வாறு தன் சுய அறிவுப்படி குர்ஆனுக்கு விளக்கம் சொல்ப்வரைப் பற்றி ஹதீஸ்கள் எச்சரிகிறது ஹதீஸ்:
 தன் சுய அறிவின்படி குர்ஆனுக்கு விளக்கம் கூறுகிறவர் தன் தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ
 நூல் : திர்மிதி ,மிஷ்காத் ,,
 ஹதீஸ் = 2
 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யார் வேண்டும் என்றே என்மீது பொய் சொல்கிறாறோ அவர் தன் தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ
 நூல் : திர்மிதி ,மிஷ்காத் ,,


 பிஜெ இது போன்ற ஹதீஸ்களை பார்பது இல்லை போல் ! குர்ஆன் & ஹதீஸ் இவைகளில் இருந்து ஆதாரம் இல்லையே ? மாறாக பெறப்படும் கருத்து என்று சொல்கிறார் . பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் குர்ஆனும் & ஹதீஸூம் அல்லாத வேறு எந்த மனித அபிப்பிராயத்தையும் ஏற்கவே முடியாது என்று முழங்கிக் கொண்டுருப்பவர் . பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் தன்னுடைய அபிப்பிராயத்தை மட்டும் இங்கு புகுத்தி '' இதுதான் சரியான கருத்து '' என்று எவ்வாறு எழுதுகிறார் ? எந்த ஆயத்திலும் & எந்த ஹதீஸிலும் இல்லாத , ஒரு விளக்கத்தை ,தன் அறிவை மட்டும் பயன் படுத்திக் கூறியிருப்பது . இவர் மிக பெரிய பொய்யன் , , வழிகேடன் என்பதற்க்கு சான்றாகும் . ..


 இந்த பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் :
 தன்னுடைய கருத்து மட்டுமே சரியானது , மற்றவை தவறானவை என்ற விதத்திலேயே குர்ஆனுடைய இந்த ஆயத்திற்கு அர்த்தம் எழுதியுள்ளார் , பிஜெ வின் விளக்கத்தை பாருங்கள் :
 ''தூய்மையான ( வான ) வர்களைத் தவிர ( மற்றவர்கள் ) அதைத் தீண்டமாட்டார்கள் '' ( மொழிபெயர்ப்பு = 56 / 79 )
 மற்ற மொழிபெயர்ப்புகளில் உள்ள அர்த்தம் :
 '' பரிசுத்தமானவர்களைத் தவிர ( வேறு எவரும் ) இதனைத் தொடமாட்டார்கள் ''
 பிஜெ தன்னுடைய மொழிபெயர்ப்பில் தூய்மையானவர்கள் வானவர்கள்தாம்என்பதை உறுதிப்படுத்துவதற்காக '' வான '' என்ற ஒரு வார்த்தையை அடைப்புக்குறிக்குள் அதிகப்படுத்தி எழுதியுள்ளார் . இது எந்த மொழிப்பெயர்ப்பாளரும் எழுதாத புதிய கருத்தாகும் மேலும் ,பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் '' லாயமஸ்ஸூஹூ '' என்பதற்க்கு தீண்டமாட்டார்கள்என்று தவறாக அர்த்தம் எழுதியுள்ளார் .'' லாயமஸ்ஸூஹூ '' என்பதற்கு தொடமாட்டார்கள் என்பது அர்த்தம் .
 தொடமாட்டார்கள் என்பதற்கும் , தீண்டமாட்டார்கள் என்பதற்க்கும்நிறைய வேறுபாடு உள்ளது .பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடிப்பதற்குத்தான் தீண்டுதல் என்று சொல்லப்படும் .அவருடைய மொழிபெயர்ப்பில் இது போன்ற தாறு மாறான மொழிபெயர்ப்பைக் கொண்டு விளக்கங்கள் கூறி குழப்பங்கள் செய்து வரும்இந்த வழிகேடர் பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் அடையாளம் கண்டுகொள்ளுங்கள் இது ஒரு சில வசனங்களுக்கு , மட்டும் மல்ல குர்ஆன் முழுமைக்கும் இவ்வாறே தவறான கருத்துக்கள் எழுதப்படுள்ளன ! இஸ்லாமியர்களே நம் ஈமானை பாதுகாக்க இது போன்ற வழிகேடர்கள் சொல்லும் & எழுதும் விளக்கம் வேண்டாம் .அல்லாஹூ நம்மை அனைவரையும் பாதுகாப்பானாக .
👇👆👇👆👇👆👇

 இனி நம் தஃப்ஸீர்களில் உள்ள விளக்கங்களைப் பார்ப்போம் :
 பரிசுத்தமானவர்கள் என்று அல்லாஹூ தஃஆலா கூறியுள்ள இந்த வார்த்தைக்கு இரண்டு அர்த்தம் கூறப்படும்
 [ 1 ]=பாவங்களை விட்டுப் பரிசுத்தமானவர்கள்
 [ 2 ]= அசுத்தாங்களை விட்டுப் பரிசுத்தமானவர்கள்
 முதல் அர்த்தத்தின் படிபரிசுத்தமானவர்கள் என்பவர்கள் மலக்குகளாகும் .அதன் படி தொடமாட்டார்கள் என்றால் '' லவ்ஹூல் மஹ்ஃபூள்என்னும் பதுகாக்கப்பட்ட பேரேட்டில் உள்ளதை அவர்களைத் தவிர வேறெவரும் தொடமாட்டார்கள் என்பது கருத்தாகும் .
 👆👇👆👆👇👆👇

 இரண்டாவது அர்த்தத்தின் படிபரிசுத்தமானவர்கள் என்பவர்கள் மனிதர்களாகும் . ஒளு இல்லாமலிருப்பது , குளிப்பு கடமையாயிருப்பது , பெண்கள் மாதவிடாய் மற்றும் பேறு காலத்தொடக்கு உள்ளவர்களாக இருப்பது போன்று அசுத்தங்களை விட்டும் பரிசுத்தமாயிருப்பது என்று பொருளாகும் . இதன் படி தொடமாட்டார்கள் என்பது நம் மிடமுள்ள அச்சிடப்பட்ட தாள்களைக் கொண்டகுர்ஆன் ஷரீஃபாகும் . ''' குர்ஆனை (மேற்கூறப்பட்ட சிறிய பெரிய அசுத்தங்களை விட்டும் ) பரிசுத்ட்ட்ட்தமானவர்களான மனிதர்களைத் தவிர வேறு எவறும் தொடமாட்டார்கள் ''' எனக் கருத்தாகும் . இவ்விரண்டு கருத்துகளுமே சரியானது தான் . ஒவ்வொரு கருத்தையும் ஸஹாபாக்களிலும் , தாபியீங்களிலும் , இமாம்களிலும் பலர் கூறியுள்ளனர் .
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 முதல் கருத்தை
 ஹஜரத் இப்னு அப்பாஸ் , அனஸ் , ஸயீது ஜூபைர் ( ரலியல்லாஹூ அன்ஹூம் ) அவர்களும் , முஜாஹித் , இக்ரிமா , ளஹ்ஹாக் , ஜாபிர் பின் ஜைத் ( ரஹிமஹூ முல்லாஹ் ) போன்றோர் கூறியுள்ளார்கள் .
 இரண்டாவது கருத்தை
 ஹஜரத் அலீ , இப்னு மஸூது , ஸஃது பின் அபீவக்காஸ் , ஸயீது பின் ஜைது ( ரலியல்லாஹூ அன்ஹூம் ) அவர்களும் , முஹம்மது பாகர் , அதாஉ , தாவூஸ் , ஜுஹ்ரி , ஸாலிம் , நகயீ , ஹகம் , ஹம்மாது , மாலிக் பின் அனஸ் , அபூஹனிஃபா , ஷாஃபீ , அஹ்மது பின் ஹம்பல் , ( ரஹிமஹூல்லாஹூ ) போன்றோர்கள் க்றியுள்ளார்கள் .
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 இரண்டு கருத்துகளுமே சரியானது தான். என்றாலும் இரண்டில் தீர்ப்புக்குரியதும், அமல் படுத்தப்பட வேண்டியதும் , இரண்டாவது கருத்தைத்தான் என்பது இமாம்கள் அனைவரின் ஏகோபித்த அபிப்பிராயமாகும். எனவே , பரிசுத்தமானவர்களைத் தவிர ( வேறு எவறும் ) இதனைத் தொடமாட்டார்கள் . என்ற ஆயத்திற்கு ஒளூ இல்லாதவர்கள் குர்ஆனைத் தொடுவதும் . குளிப்பு கடமையானவரும் , மாதவிடாய் மற்றும் பேறு காலத்தீட்டு உள்ள பெண்களும் , குர்ஆனைத் தொடுவதும் , ஓதுவதும் ஹராமாகும் . இதற்கு நேர்மாற்றமாக பிஜெ என்ற வழிகேடர் எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் , குர்ஆனைத் தொடலாம் . படிக்கலாம் . வாசிக்கலாம் , என்று பிஜெ எழுதியிருப்பது முற்றிலும் தவறாகும் . ஷரீஅத்தில் ஹராம் என்று தீர்ப்பாளிக்கப்பட்ட ஒரு செயலை ஹலாலாக்கிவைக்கிறார்
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் பரிசுத்தமான மனிதர்கள் மட்டுமே இந்தக் குர்ஆனைத் தொடவேண்டுமெனக் கூறிய ஹதீஸ்களை பார்போம்
 ஹதீஸ் : 1 =
 யமன் நாட்டுக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : எழுதிய ஒரு கடிதத்தில் '' லா யமஸ்ஸூல் குர்ஆன இல்லா தாஹிருன் '' பொருள் : சுத்தமானவரைத் தவிர இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் '' என எழுதியனுப்பியதாக அம்ரு பின் ஹஜம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள் அறிவித்துள்ளார்கள் . இந்த ஹதீஸ் தாருகுதீனி , யில் பதிவு செய்யப்பட்டுள்ளது , இதனை ஹாகிம் அவர்கள் மஃரி ஃபாவிலும் , பைஹகீ அவர்கள் கிலாஃபிய்யத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள் .
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 ஹதீஸ் : 2
 '' பரிசுத்தமானவரைத் தவிர ( வேறு எவறும் ) இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் '' ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் :கூறினார்கள் அறிவித்தவர் : இப்னு உமர் ரலயல்லாஹூ அன்ஹூ நூல் : தப்ரானீ
 ஹதீஸ்: 3
 ஹகீம் பின் ஹிஜாம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிய பொழுது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : '' நீ பரிசுத்தமாயிருக்கும் நிஹதீஸ் : 3 லையிலே தவிர இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் என்று கூறி அனுப்பினார்கள் . நூல் : தப்ரானீ , அபிதாவுத் , ஹாகிம் , கஞ்ஜுல் உம்மால் ( 1 / 615 ) நூல் : ரூஹூல் மஃஆனீ ( 9 / 155 ) இப்னு கதீர் (4 / 229 ) குர்துபீ (17 / 225 ) மள்ஹரீ ( 1 / 181 ) மஃஆரிஃபுல் குர்ஆன் (8 /287 )
 ஆகிய விரிவுரைகளிலும் , எடுத்தெழுதப் பட்டுள்ளன .இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றும் இப்னு கதீரில் குறிப்பிடப்பட்டுள்ளது
 ஹதீஸ் ; 4
 சுத்தம் ( ஒளூ ) இல்லாதவர்கள் குர்ஆனை தொட வேண்டாம் , தொடக்கூடாது . என நிச்சியமாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் வாசிகளுக்கு கடிதம் எழுதினார்கள்
 ( அறிவித்தவர் : அபூபக்ரு பின் முஹம்மது பின் ஹஜ்ம் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : தப்ரானி )
 ஹதீஸ் : 5
 தூய்மை மூலம் தவிர எந்த தொழுகையும் ஏற்க்கப்படாது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அறிவித்தவர் : அபு குரைரா ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : முஸ்லிம் , அபூதாவுத் இதில் தூய்மை என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள் இதில் தூய்மை என்பது ஒளூ மற்றும் குளிப்பு , இரண்டையும் குறிக்கும் . அதே போல் தான் தூய்மை இன்றி குர்ஆனை தொடாதே என்பதற்க்கு ஒளூ மற்றும் குளிப்பு இரன்டையும் குறிக்கும் .
 ஹதீஸ் : 6
 மாதவிடாய் ஏற்பட்டவர்களும் , குளிப்பு கடமையானவர்களும் , குர்ஆனை எதனையும் . ஓதலாகாது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள்
 ( அறிவித்தவர் : இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : திர்மிதீ , அபுதாவுத் , )
 ஹதீஸ் : 7
 ஜனாபத் இல்லாத எல்லா நிலையிலும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள் அறிவித்தவர் : அலி ரலியல்லாஹூ அன்ஹூ
 நூல் : திர்மிதீ
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 மேற்கூறப்பட்ட ஹதீஸ்களில் குர்ஆனை ஒளூ வின்றித் தொடுவதும் , குளிப்பு கடமையானவர் , மாதவிடாய் மற்றும் பேறு காலத்தீட்டு உள்ள பெண் ஆகியோர்கள் தொடுவதும் , ஓதுவதும் ஹராம் என்பதைச் ஹதீஸ்கள் மூலம் ஆதாரம் காட்டிவுள்ளோம் இதைத்தான் சட்டமாமேதைகள் ஹராம் என்பதை விளக்கிவுள்ளார்கள் .
 திருக்குர்ஆனை ஓளூ இல்லாமல் தொடலாம் என்பதற்க்கு இன்னோரு உதாரணத்தையும் எழுதியுள்ளார் பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் இதை படியுங்கள் :
 இந்தக்குரஆன்த் தூய்மையானவர்கள் தான் தொடவேண்டும் , மற்றவர்கள் தொடக்கூடாது என்றெல்லாம் இவ்வசனத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பலரும் சட்டங்களை வகுத்துள்ளனர் .ஆனால் இந்த வசனம் எல்லா மக்களுக்கும் , வழிகாட்டுவதற்காக அருளப்பட்டது . எல்லா நிலையிலும் வாசிப்பதற்காக அருளப்பட்டது . எல்லா மாந்தர்களும் படிப்பதற்காக அருளப்பட்டது . முஸ்லிம்கள் அல்லாதாவர்கள் இந்தக் குர்ஆனை வாசித்தால் தான் அவர்கள் நேர்வழி பெற முடியும் . நீங்கள் தூய்மையாக இல்லை , நீங்கள் குர்ஆனைத் தொடக் கூடாது , என்று கூறினால் எந்த நோக்கத்திற்க்காக குர்ஆனை அல்லாஹூ அருளினானோ அந்த நோக்கத்தைச் சிதைத்தவர்களாக நாம் ஆகிவிடுவோம் . நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பல நாடுகளின் தலைவர்களுக்கு திருக்குர்ஆன் வசனங்களை எழுதி இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுத்துள்ளார்கள் . அந்த மன்னர்கள் அதைத் தம் கையால் தொட்டு வாசிப்பார்கள் என்பதை அறிந்தே திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியிருக்கும் போது திர்க்குர்ஆனைத் தூய்மையுடன் தான் தொடவேண்டும் என்று கூறுவது தவறாகும் . குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்பத்தி விடும் .
 பிஜெ வின் தர்ஜமா என்ற நாவல் பக்கம் : 1065
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 நம்முடைய விளக்கம்
 இது, அவர் தன்னுடைய சுய அறிவின்படி எழுதியதாகும் இதற்காவது குர்ஆன் & ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் காட்டி இருக்க வேண்டும் அப்படியும் செய்யவில்லை . குர்ஆனில் நாம் சுயகருத்தை சொல்லலாமா ?
 ஹதீஸ் : 1
 '' எவரொருவர் தன் சுயறிவுப்படி குர்ஆனுக்கு விளக்கம் கூறி ( உண்மையில் ) அது சரியாக இருந்தாலும் உறுதியாக அவர் தவறு செய்தவரேயாவார் ''
 அறிவிப்பவர் :ஜூந்துப் பின் அப்தில்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் திர்மிதி
 ஹதீஸ் : 2
 '' யார் குர்ஆனில் தர்கம் செய்கிறறோ அவர் காஃபிராகி விட்டார் ''
 ( அறிவிப்பவர் : அபூஹூறைறா ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : அஹமது , அபூதாவூத் , )
 அல்லாஹூ திருகுர்ஆனில் இணைவைத்து வணங்குபவர்களை பற்றி :
 ஈமான் கொண்டவர்களே ; நிச்சயமாக இணைவைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே( 9 / 28 )
 இந்த குர்ஆனை தூய்மையானவர்கள்தான் தொடவேண்டும் மென்பதற்க்கு மேலே பல ஆதாரமாக ஹதீஸ்களை காட்டி விட்டோம் ஆனால் பிஜெ குர்ஆனையோ & ஹதீஸையோ காட்டாமல் தன் சொந்த சரக்கை ( சுய அறிவை ) பயன்படுத்திவுள்ளார் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது .
 நாம் பிஜெ பானியிலே கேட்போம் அதாவது
 அல்லாஹூவும் ,அவனுடைய ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்படி நடப்பது சிறந்ததா ?
 தன்னுடைய சுயஅறிவை பயன்படுதும் இந்த பிஜெ என்ற கருத்து கண்ணாயிரத்தை பின்பற்றுவது சிறந்ததா ?
 என்று உங்களிடத்தில் கேட்டால் நீங்கள் கண்களை முடிக்கொண்டே சொல்விற்கள் அல்லாஹூம் , ரஸூலும் சொல்வதைதான் கேட்போம் என்று .......!

Wednesday 6 January 2016

நபிமார்களும், அவ்லியாக்களும் மரணிப்பதில்லை! திருமறை முழக்கம் திருநபி விளக்கம்.


நபிமார்களும், அவ்லியாக்களும் மரணிப்பதில்லை! திருமறை முழக்கம் திருநபி விளக்கம்.





'பீஸபீலில்லாஹ்’ அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு உயிர் இழந்தவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று கருதிவிடாதீர்கள் எங்கிலும் அவர்கள் தங்களின் இறைவனிடம் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கும் அருட்கொடைகளை கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாய் இருக்கிறார்கள்” (அல்குர்ஆன்)
மேலே கூறப்பட்ட திருமறை வசனத்தின் மூலம் புனிதப்போரில் உயிர் துறந்த உத்தமர்கள் ஷுஹதாக்கல் ஆவார்கள் அவர்களுக்கு இவ்வுலகில் மவ்த் மரணம் பேரளவில் மட்டும்தான் ஏற்படுகிறது ஆயினும் அவர்கள் உண்மையில் மரணிப்பதில்லை. அவர்கள் எங்கு இருந்தாலும் உயிரோடுதான் இருக்கிறார்கள் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது மேலும் பல்வேறு அருட்களும் அவர்களுக்கு கிடைக்கின்றன. அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாய் இருக்கிறார்கள் என்ற உண்மையான தத்துவங்கள் கிடைக்கின்றன.மேலே கூறிய மறை வசனம் ஷுஹதாக்கல் எனப்படும் புனிதப்போரில் உயிர் துறந்தவர்களைப் பற்றி அருளப்பட்ட வசனமேயாகும். அந்தத் தியாகிகள் யாவரும் யுத்த களத்தில் மரணத்தைத்தழுவி முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டவர்களேயாவார்கள். அவர்கள் மரணித்ததும் அவர்களை மற்ற நண்பர்கள் நல்லடக்கம் செய்ததும் உண்மையேயாகும். இறைவன் திருமறையில் மேலே கூறிய வசனத்தின் மூலம் ஷுஹதாக்கள் மரணிக்கவில்லை என்று தெளிவாகக்கூறியுள்ளான் இதனால் ஷுஹதாக்கள் உயிர்தியாகிகள் யாவரும் பேரளவில் மரணத்தவர்களேயன்றி 'ஹகீகத்’ யதார்தத்தில் அவர்கள் மரணிக்கவில்லையென்பது தெளிவாகிவிட்டது. மறை வசனத்தில் கூறப்பட்ட ஷுஹத்தாக்கள் உயிர்தியாகிகள் யாரெனில் திருக் கலிமாவை நிலைநாட்டுவதற்காகவும் ஈமானையும், ஸ்திரப்டுத்துவதற்காகவும் காபிர்களுடன் போர்தொடுத்து அந்தப்போரில் காபீரீன்களால் அல்லது தவறுதலாக முஸ்லீம்களால் வெட்டப்பட்டு இறந்தவர்களேயாகும். மேலே கூறப்பட்ட வசனங்கள் யாவும் இவர்கள் விசயத்தில் அருளப்பட்டவைதான்.கலிமாவுக்காகவும், தவ்ஹீதை நிலைநாட்டுவதற்காகவு மின்றி நாட்டைக்கைப் பற்றுவதற்கும், எல்லைப் பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்கும் மேலும் இவ்வுலக விவகாரங்களுக்கும் நடைபெறும் போர் புனிதப்போராக மாட்டாது. அதில் இறப்பவர்கள் ஷுஹதாக்கள் ஆகவும் மாட்டார்கள். அவர்களுக்கு மேலேகூறிய வசனத்தில் உள்ள எந்த ஒரு சிறப்பும் கிடையாது. ஆகவே ஷுஹதாக்கல் எனப்படுவோர் புனிதப்போரில் உயிர்துறந்தவர்களேயல்லாமல் வேறு எந்த நோக்கத்திற்காகவும் உயிர் துறந்தவர்களல்லர்.மேலே கூறிய மறை வசனத்தில் விரிவான விளக்கத்தை அறியாதவர்கள் அவ்வசனத்தில் சுஹதாக்களை மட்டும்தான் அல்லாஹ் கூறியுள்ளான் ஆகையால் ஷுஹதாக்கள்அல்லாத வேறெவரும் ஷஹீதுடைய இடத்தை அடைய முடியாது என்று கருதி. நபிமார்களும், அவ்லியாக்கலும் ஷுஹதாக்களின் பதவியை பெற முடியாது என்றும் ஷுஹதாக்கள் அல்லாத எவரும் மரணித்த பின்பு உயிரோடு இருப்பதில்லை என்றும் வாதிடுகிறார்கள். இன்னொர் திருமறை வசனத்தின் சரியான விளக்கத்தை அறியாதவர்கள் என்றே கூறவேண்டும் மேலே கூறப்பட்ட மறை வசனத்தை சரியாக ஆராய்ந்தால் அவ்வசனத்திலேயே நபிமார்களும் அவ்லியாக்களும் மரணத்தபின் உயிர் உள்ளவர்கள் என்பது தெளிவாகும்.ஷுஹதாக்கள் அல்லாத நபிமார்களும் அவ்லியாக்களும் இயற்கை மரணத்தின்பின் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு மேற்கூறிய வசனத்தில் எந்த வகையில் ஆதாரம் இருக்கிறது என்பதை பின்னால் ஆராய்வோம். நபிமார்கள் அவ்லியாக்கல் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்கள் மூலம் ஆராய்வோம்.1.நபிமார் தமது கப்ரில் மண்ணறையில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். ஆதாரம் –பைஹகீ2. நான் விண்ணுலக யாத்திரை சென்றபோது நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருகே சென்றேன் அப்பொழுது அவர்கள் தங்களின் கப்ரில் மண்ணறையில் நின்றவர்களாய் தொழுதுகொண்டிருந்ததைக் கண்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். ஆதாரம் –புஹாரி3. நபி (ஸல்)அவர்கள் விண்ணுலக யாத்திரை சென்ற இரவு எல்லா நபிமார்களையும் அல்லாஹ் நமது நபிக்கு எழுப்பிக் காட்டினான் நபி (ஸல்) அவர்கள் அந்த நபிமார்களை மஉமூம் தொடர்பவர்களாய் வைத்து இரண்டு ரக்அத் தொழுகை நடாத்தினார்கள். ஆதாரம்- புஹாரி, முஸ்லீம்4. நான் விண்ணுலக யாத்திரை செய்த பொழுது நபிமார்களில் ஒரு கூட்டத்துடன் என்னை நான் கண்டேன் அப்போழுது மூஸா நபி (அலை) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள் மூஸா நபி சுருண்ட முடியுடையவராயும் மஞ்சல் நிறத்தை ஒத்தவராயும் இருந்ததைக் கண்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். ஆதாரம்-புகாரி, முஸ்லீம்மேற்கூறப்பட்ட ஆதாரபூர்வமான நான்கு ஹதீஸ்களின் மூலம் நபிமார் மரணத்தின்பின் உயிரோடு இருப்பார்கள் என்பது தெளிவாகிவிட்டது ஆயினும் உங்களுக்கு ஒரு சநதேகம் தோன்றும் அதை விளக்கி வைக்கிறேன்.இரண்டாவது ஹதீஸில் கூறப்பட்ட மூஸா (நபி) தனது கப்ரில் தொழுதுகொண்டிருந்த விஷயமும் மூன்றாவது ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமாரையும் வைத்து தொழுகை நாடாத்தினார்கள் என்ற விஷயமும். நான்காவது ஹதீஸில் மூஸா நபி சுருண்ட முடியையும் மஞ்சல் நிறத்தையும் உடையவர் என்ற விசயமும் நபிமார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகாதென்று சிலர் கருதி நபிமார்கள் மற்ற உயிரினங்களைப்போல் உயிரில்லாத பிணங்கள் என்றும் கூறுகிறார்கள் அதற்கு பின்வருமாறு அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.நபி (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரை சென்ற சமயம் மூஸா நபி (அலை) அவர்களின் உடலமைப்பில் சடமில்லாத உருவத்தையும், மஉமூம்களாக நின்று தொழுத ஏனைய எல்லா நபிமார்களின் உடலமைப்பில் சடமில்லாத பல உருவங்களையும் இறைவன் நபி (ஸல்) அவர்களின் பார்வைக்கு காட்டிக் கொடுத்தானேயன்றி அந்த நபிமார் சடமுள்ளவர்களாகத் தென்படவில்லை. எனவே மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் நபிமார் மரணித்தபின் உயிருள்ளவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதென்று கூறுகிறார்கள் நபிமார் மரணித்தபின் உயிருள்ளவர்கள் அல்லர். வென்பதற்கு மேலேகூறிய மூன்று ஹதீஸ்களிலும் ஆதாரமில்லை என்று வாதிடுவோர் முதலாவதாக கூறப்பட்ட பைஹகீ அறிவித்த ‘நபிமார் தமது கப்ரில் உயிரோடு இருக்கிறார்கள் இன்னும் தொழுகிறார்கள் என்ற ஹதீஸ் பற்றி என்ன சொல்வார்கள்? அந்த ஹதீஸில் நபிமார் மரணித்தபின் உயிருள்ளவர்கள் என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளதால் அவர்கள் உயிரோடு இருப்பதில் சந்தேகம் இல்லை. மேலும் அந்த ஹதீஸ் ஆதாரமற்ற தென்று கூறுவதற்கும் வழியே இல்லை.மேலே கூறப்பட்ட மூன்று ஹதீஸ்களிலும் நபிமார் மரணதித்தபின் உயிருள்ளவர்கள் என்பதற்கான ஆதாரத்தை கவனிப்போம். மூஸா நபி (அலை) அவர்களும் மற்ற எல்லா நபிமாரும் விண்ணுலக யாத்திரையின்போது நபி (ஸல்) அவர்களுக்கு காட்சி கொடுத்தார்கள் என்பதற்கு நபிமார்களின் உடலமைப்பை பெற்ற உருவங்களை கண்டார்களேயன்றி அவர்களை சடத்துடன் காணவில்லை என்று மேற்கூறப்பட்ட மூன்று ஹதீஸ்களுக்கும் மறுப்பவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.நபீ (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரையின்போது நபிமாரை அவர்களின் சடத்துடன் காணவில்லை என்பது அவர்களின் வாதமாகும். இவர்களின் வாதம் மறுக்கப்படவேண்டியதேயாகும். ஏனெனில் நபி மூஸா (அலை) அவர்களும் மற்ற நபிமார்களும் தொழுவார்கள். என்ற நபி மொழியிலிருந்து அவர்கள் தமது சடத்துடன் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. ஏனெனில் தொழுகை என்பது ருகூஉ, சுஜூது போன்ற பலவகையான செயல்களைக் கொண்டதாகும் செயல்கள் ஆட்ட அசைவுகள் யாவும் சடத்துக்குரிய தன்மைகளேயன்றி றூஹூக்குரியவையல்ல. குனிதல், நிமிர்தல், நிற்றல் ஆகியவையெல்லாம் சடத்துக்கும் உடலுக்குமுறிய தன்மைகளாகும் தொழுகையில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதால் விண்ணுலக யாத்திரையின்போது நபி (ஸல்) அவர்கள் கண்ட நபிமார் யாவரும் தமது சடத்துடனேயே காட்சியளித்தார்கள். என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களை சுருண்ட முடியும் மஞ்சல் நிறமும் உடையவர்கள் என்று வருணித்ததிலிருந்தும் நபி மூஸா (அலை) அவர்கள் தமது சடத்தோடுதான் காட்சியளித்தாகள் என்பது விளங்குகிறது. ஏனைனில் சுருண்ட முடியும் மஞ்சல் நிறமும் சடத்துக்குரிய வருணனையேயன்றி றூஹூக்குரியதல்ல. றூஹூ உயிர் என்பது சுருண்டது, நீண்டது, கறுப்பு, மஞ்சல் என்று வருணிக்கமுடியாததாகும். எனவே நபிமார் மரணத்தின்பின் உயிரோடு இருக்கிறார்கள் என்பது நபி (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரையின்போது நபிமார்களை அவர்களின் சடத்துடனேயே கண்டார்கள் என்பதும் மேற் கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் நிரூபணமாகிவிட்டது.நபிமார் மரணித்த பின்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதில் இமாம்களும், அவ்லியாக்களும் அறிஞர்களும் எவ்வித கருத்து வேறுபாடுகளும் தெரிவிக்கவில்லை. ஆனால் வஹாபிய்யத் எனும் வழிதவறிய கொள்ளை வழிநடப்பவர்களும் இன்னும் அவர்களைப்போன்ற சுன்னத் வல் ஜமாஆத் கொள்கைக்கு முரண்பட்ட கொள்கையுடையவர்களும் நபிமார் மரணித்தபின் உயிரோடு இருப்பதில்லை அவர்களின் சரீரம் இறந்து அழிந்து மண்ணுடன் மண்ணாகிவிட்டது என்று கருதுகிறார்கள்.இமாம்களும் அவ்லியாக்களும் ஏகமாக நபிமார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் தமது சடத்துடன் உயிரோடு இருக்கிறார்கள் என்பதில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. விபரம் பின்னால் வரும்.இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களும் இமாம் கர்றாபி (ரஹ்) அவர்களும் நபிமார் மரணித்தபின் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள் ஆயினும் மரணத்தின்பின்பு நபிமார் தமது சடத்துடன் காட்சியளிப்பதை மறுக்கிறார்கள்.நபிமாருடைய மரணத்தின் பின்பு யாராவது அவர்களை கனவில் அல்லது விழிப்பில் கண்டால் அவர்களின் உடலமைப்பையுடைய உருவத்தைக் காண்கிறார்களேயல்லாமல் அவர்களின் சடலத்தைக் காணவில்லை. என்று வலியுறுத்திக்கூறியுள்ளார்கள்.இமாம்களுக்கிடையில் கருத்துவேறுபாடு இல்லையானால் நான்கு மத்ஹபுகள் தோன்றியிருக்க மாட்டாது “இக்திலாபுல் அயிம்மா றஹ்மதுன் லில்உம்மா” இமாம்களின் கருத்து வேறுபாடு மனிதர்களுக்கு மாபெரும் அருளேயாகும். என்று அறிஞர்கள் ஏகமாக கூறியுள்ளார்கள்.இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களும் இமாம் கர்றாபி (றஹ்) அவர்களும் நபிமார் மரணத்தின்பின்பு சடத்துடனேயே மற்றவர்களின் கனவிலோ, நினைவிலோ காட்சியளிக்கின்றார்கள் என்பதை மறுக்கின்றார்கள். ஆயினும் நபிமார் மரணத்தின் பின்பு உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். இவர்கள் இருவரையும் தவிரவுள்ள ஏனைய இமாம்கள் இவ்விருவருக்கும் மாறாக கூறுகிறார்கள். நபீமார் மரணத்தின்பின்பு உயிரோடு இருப்பதைப்போல் தமது சடத்துடனேயே மற்றவர்களுக்கு காட்சியளிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இதுவரை எழுதியவற்றிலிருந்து நபிமார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதும் கனவிலோ நினைவிலோ தமது சடத்துடனேயே மற்றவர்களுக்கு காட்சியளிக்கின்றார்கள் என்பதும் நிரூபணமாகிவிட்டது.ஆரம்பத்தில் கூறிய திருமறை வசனத்தை ஆராய்வோம். அவ்வசனத்தில் மரணத்தின் பின்னும் உயிரோடு இருப்பவர்கள் ஷுஹதாக்கள் புனிதப்போரில் உயிர் துறந்தவர்கள் என்று அல்லாஹ் அருளியுள்ளான். அந்த ஷுஹதாக்களில் நபிமார்களும் அவ்லியாக்களும் சேர்ந்தவர்களா? இல்லையா? என்பதை ஆராய்வோம்.மேலே கூறப்பட்ட திருமறை வசனத்தில் “குதிலூ பீஸபீலில்லாஹ்” அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு இறந்தவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான் இதனால் புனிதப்போரில் உயிர் துறந்தவர்கள் மட்டும்தான் அவ்வசனத்தில் குறிக்கப்பட்டவர்கள் என்பது மேலெழுந்த வெளிப்படையான விளக்கத்தின்மூலம் கிடைக்கின்றது.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் புனிதப்போருக்கு சென்று யுத்தம் செய்துவிட்டு திரும்பி வந்த சமயம் நாம் சிறிய யுத்தத்திலிருந்து பெரிய யுத்தத்திற்கு வந்துள்ளோம் என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் ரசூலே நாம் செய்துவிட்டு வந்திருப்பது சிறிய யுத்தம் என்றால் பெரிய யுத்தம் எது என்று வினவினார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒருவர் தனது நப்சுடன் போராடுவது பெரிய யுத்தம் என்று அருளினார்கள். இந்த ஹதீஸில் போர்களத்தில் வால் ஏந்தி காபீர்களுடன் யுத்தம் செய்வது சிறிய யுத்தம் என்றும் ஒருவர் தனது நப்சுடன் போரிடுவது பெரிய யுத்தம் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.சிறிய யுத்தத்தில் உயிர் துறந்தவர் ஷஹீத் ஆகிவிடுகிறார் என்றால் பெரிய யுத்தம் என்று நபி (ஸல்) அவர்களால் வருணிக்கப்பட்ட நப்சுடனான போரில் உயிர் துறந்த ஒருவர் ஷஹீதாகி விடுவார் என்பதில் வியப்பொன்றும் இல்லை.‘நுபுவ்வத்’ நபித்துவம் என்ற பதவி நபிமாருக்கும், ‘விலாயத்’ ஒலித்தனம் என்ற பதவி அவ்லியாக்களுக்கும் கிடைப்பதனால் அப்பதவியைப் பெறுபவர் நப்ஸுடன் போராடி வெற்றி பெற்றவராக இருத்தல் வேண்டும் உயர் பதவிக்கு தகுதியற்றவருக்கு அப்பதவியை வழங்குவது நியாயமற்றது ஹக்தாஆலா நியாயமில்லாத வேலை செய்ய மாட்டான் உலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் ஒலிமார்களும் ஜிஹாத் அக்பர் என்னும் பெரிய யுத்தம் செய்தவர்களேதான். அவ்யுத்தத்தில் போராடி வெற்றி பெறாதவர் நபியாகவோ ஒலியாகவோ முடியாது. எனவே மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நப்சுடன் போராடிய அனைவரும் பெரிய யுத்தம் செய்த ஷஹீதுகளேயாவார்கள். சிறியபோரில் உயிர் துறந்தவர் மரணித்த பின்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் நப்ஸுடன் போராடிப் பெரிய யுத்தம் செய்தவர் உயிருடன் இருப்பது நிச்சயமானதாகும்.வாளேந்தி காபீர்களுடன் சமர் செய்வது சிறிய ஜிஹாத் யுத்தம் என்றும் நப்சுடன் போராடுவது பெயரிய யுத்தம் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதன் இரகசியம் என்னவெனில் திருக்கலிமாவை ஏற்றுக் கொள்ளாத காபிரீன்களுடன் வாலேந்திப் போரிடுவது மிகச் சுலபம். ஏனெனில் காபீர் தன்னை விட்டும் வேறானவனேயல்லாமல் தன்னிலிருப்பவன் அல்லன். நப்ஸு என்பது தன்னிலேயே அமைந்த ஒன்றாகும். மேலும் காபிர் சடமுள்ளவனாகும் நப்ஸ் என்பது சடமுள்ளதல்ல ஆகையால் தன்னை விட்டும் வேறான ஒருவனையும், சடமுள்ளவனையும் வெட்டிக் கொன்றுவிடுதல் தன்னிலுள்ளதையும், சடமில்லாததையும் வெட்டிக் கொல்வதைவிடச் சுலபமானதேயாகும். கூண்டில் கிளியிருப்பது போல் மனிதனிலேயே தங்கியுள்ள நப்ஸு எந்த நேரத்தில் எந்த உருவத்தில் தீமை செய்யும் என்பதை அறிந்து கொள்ள முடியாது மேலும் காபீரை வாள்போன்ற ஆயுதத்தினால் வெட்டி விடலாம். ஆனால் நப்ஸ் என்பது வாள் போன்ற ஆயுதத்தினால் வெட்ட முடியாத ஒன்றாகும். ஒரு காபிரை வெட்டி வீழ்த்துவதிலும். நப்ஸை வெட்டி வீழ்த்துவதிலும் நப்சை வெட்டிவீழ்துவதுதான் மிகவும் சிரமமானது.மேலும் நபி (ஸல்) அவர்கள் இன்னோரு ஹதீஸில் உனது பகைவர்களில் உனக்கு மிகவும் கொடிய பகைவன் யாரெனில் உனது இரண்டு விலாவுக்கும் இடையிலுள்ள நப்சு ஆகும் என்று கூறியுள்ளார்கள்.இந்த ஹதீஸில் திருக்கலிமாவை ஏற்றுக் கொள்ளாதவன் பகைவனாய் இருந்தாலும் நப்சானது அவனைவிட பகை கூடியதென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே பகை கூடியவனை வெற்றி கொள்வது பகை குறைந்தவனை வெற்றி கொள்வதைவிட சிறந்ததென்பது தெளிவாகிவிட்டது. ஆகவே பகை குறைந்த காபிரை வெற்றி கொண்டவன் ஷஹீது என்ற பதவியை பெற்று மரணத்தின் பின்னும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் பகை கூடிய நப்ஸுடன் போராடி பெரிய ஜிஹாத் செய்து அதை வெற்றி கொண்டவன் ஷஹீது எனற பதவியைப் பெற்று மரணித்தபின் உயிரோடு இருப்பது வியப்பொன்றுமில்லை.போர்களத்தில் வாளேந்தி போரிடுவது சிறிய யுத்தம் என்பதும் நப்ஸுடன் போராடுவது பெரிய யுத்தம் என்பதும் மேலேகூறிய ஹதீஸ்களினால் நீரூபனமாகிவிட்டதால் சிறிய யுத்தம் செய்தவர் மரணத்தின்பின் உயிரோடு இருப்பதேபோல் பெரிய யுத்தம் செய்தவரும் உயிரோடு இருக்கிறார் என்பதும் தெளிவாகிவிட்டது

பீ ஜே யின் விள‌க்க‌வுரைக‌ளை ஏற்றுக் கொள்ள‌லாமா?? பீ ஜே யின் வீடியோவை ஆதாரமாக‌ காட்ட‌லாமா????

பீ ஜே யின் விள‌க்க‌வுரைக‌ளை ஏற்றுக் கொள்ள‌லாமா??

பீ ஜே யின் வீடியோவை ஆதாரமாக‌ காட்ட‌லாமா????



த‌வ்ஹீத் ஜ‌மாஅத் என்ர‌ என்ற‌ பெய‌ரில் அத‌ன் அர்த்த‌ம் தெரியாம‌ல் இன்று மார்க்க‌ச் சொற்பொழிவாற்றும் ( பீ ஜெய்னுல் ஆப்தீன் ) என்ர‌ பீ ஜே என்ப‌வ‌ரின் மார்க்க‌ சொற்பொழிவுக‌லை கேட்டு அத‌ன் பிர‌கார‌ம் ந‌ட‌க்க‌லாமா??? அந்த‌ வீடியோக்க‌ளை அவ‌ர்க‌ளின் ஆத‌ரவால‌ர்க‌ள் ஆதாரமாக‌ காட்ட‌ முடியுமா??? என்ற‌ கேள்வி இப்போது வேரிட்டுல்ல‌து.



இவ்வாரு ஒரு கேள்வி உண்டாகக் கார‌ண‌ம் யாதெனில் இவ‌ர் ஏற்க‌னவே பேசிய‌ மார்க்க‌ உரைக‌ளில் ப‌ல‌ ஹ‌தீத்கலை பிழையாக கூறி அத‌ற்கு பிழையான விள‌க்க‌ம் சொல்லியிருப்ப‌து இந்த‌ உல‌கம் முழுவ‌து அறிந்த‌ விடைய‌மே.அதை அவ‌ரே பின்ன‌ர் தான் பேசிய‌து பிழை என்று ஒப்புக்கொண்ட‌ கானொளி ப‌திவுகளையும் பார்த்திருப்பார்க‌ள் என்ரு நினைக்கிரோம்.



மாறாக‌ இன்னும் எத்த‌னை விடைய‌ங்க‌ளை பிழையாக சொல்லி முடித்து விட்டு அதை ஆராய்ந்து கொண்டிருகிறாரோ தெரிய‌வில்லை??? இன்னும் தான் பேசிய‌ விடைய‌ங்க‌ளில் எத்த‌னையை பிழை என்று சொல்வாரோ புரிய‌வில்லை??? கார‌ண‌ம் அவ‌ரின் க‌ருத்து பிழையாக இருந்தால் அதை ஆராய்ந்து வாபஸ் வாங்குவோம் என்ப‌தே ஒளிய‌ பிழையில்லாவ‌ன்ணம் ஆராய்ந்து முடிவு க‌ண்ட‌ பின் சொல்ல‌ வேன்டும் என்ப‌து அல்ல‌ என்று தெளிவாகிற‌து.



அன்பார்ந்த‌ ந‌ண்ப‌ர்க‌லே நாம் இப்போது ந‌ன்றாக‌ சிந்திக்க‌ வேண்டிய‌து இதுதான்.....



இவ்வாரு இவ‌ர் கூறிய‌ க‌ருத்துக்க‌ளை ச‌ரி க‌ண்டு அத‌ன் ப‌டி செய‌ல்ப‌ட்டு பீ ஜே அதை பிழை என்று ஏற்ருக் கொள்வ‌த‌ற்கு முத‌ல் ம‌ர‌ணித்த‌வ‌ர்க‌ளின் நிலை என்ன????இன்னும் இவ‌ர் பேசிய‌ க‌ருத்துக்க‌ளில் எதை பிழை என்று சொல்வாரோ என்று தெரியாமல் வாழும் அவ‌ர்க‌ளின் ஆத‌ரவாளர்க‌ளின் நிலை என்ன‌????



இது ப‌ற்றி இவ‌ர்க‌ள் சிந்திக்க‌ வேண்டாமா??? இவ‌ர்க‌ளின் ஈமான் ச‌ரியான‌தா???இவ‌ரின் மார்க்க‌ சொற்பொழிவுக‌லை கேட்க‌ளாமா???இவ‌ரின் வீடியோக்க‌ளை இவ‌ர்க‌ள் ஆதாரமாக எவ்விட‌த்திலும் சுட்டிக்காட்ட‌லாமா??இவ‌ர் குர்ஆனுக்கு கொடுக்கும் த‌ர்ஜிமாக்கள் ச‌ரியான‌தா??? அதை ஏற்றுக் கொள்ள‌ முடியுமா???இவ‌ர் ஹ‌தீக‌லுக்கு பொருள் சொல்வ‌தை ஏர்றுக் கொள்ள‌லாமா????



இப்ப‌டியான‌ கேள்விக‌ல் உங்க‌லுக்கும் எழும் என‌ நினைக்கிரேன்.என‌வே அன்பினிய‌ ச‌கோத‌ர‌ர்க‌ளே இவ‌ரின் வீடியோக்க‌லை ஆதாரமாக காட்டுவ‌தையும்,இவ‌ரின் க‌ருத்துக்க‌லை ச‌ரி க‌ண்டு அத‌ன் ப‌டி ந‌ட‌ப்ப‌தையும் விட்டுவிடுங்க‌ல். நீங்க‌ள் உங்க‌லுக்கு ந‌ல் வ‌ழி காட்ட‌க் கூடிய‌ த‌ன‌து க‌ருத்துக‌ளை ஆராய்ந்து குரானுக்கும்,ஹ‌தீதுக்கும் முர‌ண‌ற்ற வ‌கையில் க‌ருத்தூட்டும் ஒரு மார்க்க‌ ஞானியை தேடிக் கொள்ளுங்க‌ல்.

 

வஹாபிகள் என்றால் யார்?

வஹாபிகள் என்றால் யார்

 அரேபியாவில் நஜ்து மாகாணம், (இன்று அதன் பெயர் ரியாத்) அங்கு வசிப்பவர்களுக்கு நஜ்தியர் என்று பெயர்.

 நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவிய அந்த நஜ்து வாசிகளுக்கு அவர்களின் உள்ளத்தில் குடிக்கொண்டிருந்த பொறாமை குணம் சற்றும் மாறாமல் அது நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே இருந்தது.
 நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 சமூகம் வந்து உபதேசங்களை கேட்கும் இவர்கள் வெளியில் சென்றதும் அதற்கு நேர் மாற்றமான நச்சு வார்த்தைகளை பேசுவார்கள். குதர்க்க வாதம் புரிவார்கள். இரவெல்லாம் இஸ்லாத்துக்கு எதிராக சதியாலோசனை செய்துகொண்டு இருப்பார்கள். இதற்கு காரணம் அந்த தீயவர்களின் உள்ளத்தில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது இருந்த பொறாமை. இவர்களின் நிலையை தெரிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இவர்களுக்கு உபதேச தோரணையிலும், கண்டித்தும் பல முறை சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்கள். ஆனால் அது இந்த தீயவர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது. இவர்களை பற்றி தான் அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா தனது திருமறையில் நயவஞ்சகர்கள் (முனாபிகீன்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு எச்சரிக்கை செய்து இருப்பதை திருமறையில் பல இடங்களில் காணலாம். இவர்களின் போக்கு பற்றி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு வேதனை ஏற்படுவதுண்டு.
 ஷைத்தான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வரும் போது இந்த நஜ்தியர்களின் உருவத்தில் தான் வருவான். அவனைக் கண்டதும் ஷெய்குன் நஜ்தி (நஜ்தி பெரியார்) வருகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறுவார்கள். இதை அண்மையில் இருக்கும் ஸஹாபாக்கள் இவன் ஷைத்தான் என்று புரிந்து கொள்வார்கள்.

 ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்கள் முபாரக்கான கரங்களை ஏந்தி " யா அல்லாஹ்! எங்கள் ஷாம் தேசத்துக்கும் (சிரியா) பரக்கத்து செய்வாயாக! யா அல்லாஹ்! எங்கள் யெமன் தேசத்திற்கு பரக்கத்து செய்வாயாக!" என்று துஆ கேட்டார்கள். அப்பொழுது பக்கத்திலிருந்த சஹாபாக்கள், " யா ரசூலல்லாஹ்! எங்களுடைய நஜ்து தேசத்துக்கும்" என்றார்கள். மறுமுறையும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன் கூறிய படியே ஷாம், யெமன் இரு தேசங்களுக்காகவும் துஆ செய்தார்கள். மீண்டும் நஜ்தியர்கள் தங்கள் தேசத்துக்காக துஆ கேட்கும் படி கூறவே, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மூன்றாம் முறையாக " அங்கு தான் அதிர்ச்சிகளும், கொந்தளிப்புகளும், பித்னாக்களும் உண்டாகும். ஷைத்தானின் கொம்பு வெளியாகும். அங்குதான் ஷைத்தானுடைய கூட்டங்கள் வெளிக்கிளம்பும்" என்று கூறினார்கள். (ஸஹிஹ் புகாரி)

 நஜ்தியர்களின் முனாபிக் (நயவஞ்சக) செயல்கள் காரணமாக அடிக்கடி பித்னாக்கள் வேகத்துடன் ஏற்படுவதும், அது பலம் இழப்பதுமாக இருந்தது.
 நஜ்தியர்களால் ஏற்படும் சிறு சிறு குழப்பங்களை எல்லாம் அப்பொழுது வாழ்ந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களாலும் ஆட்சியாளர்களாலும் அப்போதைக்கப்போது அடக்கி ஒடுக்கப்பட்டன. பின்னர், அப்பொழுது தான் நஜ்தில் இப்னு தைமியா என்பவன் வெளியாகி தீனில் தலையிட்டு நூதன கொள்கைகளை உண்டு பண்ணி, நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஷரிஅத்திற்கு விரோதமான மஸாயீல்களை திரட்டி, 'ஸிராத்தல் முஸ்தகீம்' என்ற நூலை வெளியிட்டு புதிய கிளர்ச்சியை உருவாக்கினான். இந்த நூலில் அதிகமாக நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அஹ்லுல் பைத்துகள், சஹாபாக்கள், இமாம்கள், அவ்லியாக்கள் முதலியோர்களை இழிவுச் சொற்களால் நிந்தித்து எழுதி இருக்கிறான். இதை அவனுடைய சகோதரர்களும், உறவினர்களும் கண்டித்து, மறுத்தும் இருக்கிறார்கள். அது மற்றும் அன்றி அப்போது வாழ்ந்த தலை சிறந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களான ஷெய்குல் இமாம் ஷைக் முஹம்மது ஃபர்ஸ் , குதுவதுல் முஹத்திதீன் ஷைக் இப்னு ஹஜர் மக்கி, செய்யத் அஹ்மத் கபீர் பாரியி இன்னும் மக்காவின் முப்தியா இருந்த அல்லாமா செய்யத் அஹ்மத் தஹ்லான் மக்கி ஆகிய மார்க்க மேதைகள் இந்த இப்னு தைமியாவை லஃனத்துச் செய்து காஃபிர் என்று மார்க்க தீர்ப்பு (ஃபத்வா) வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இவனுடைய சூழ்ச்சியை அறியாமல் சில அறிவீனர்கள் இவனை பின்பற்றினார்கள். இவனுடைய அட்டூழியம் பொறுக்க முடியாமல் எகிப்து அரசாங்கம் பல முறை இவனை சிறை காவலில் வைத்தது. அப்போதும் இவன் அடங்கவில்லை. இறுதியாக சிரியா அரசாங்கம் இவனை கைது செய்து திமிஷ்க் நகர் சிறை கூடத்தில் சாகும் வரை சிறையில் வைத்தது. அங்கேயே இவன் இறந்தான்.
 ஏறத்தாள 600 வருடங்களுக்கு பின் நஜ்தை சார்ந்த தர்இய்யா என்ற ஊரில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பிறந்தான். இவன் தலையெடுத்து இப்னு தைமியாவுடைய கொள்கைகளைப் பின்பற்றி அதற்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து புதியதோர் மத்ஹபை உண்டாக்க முற்பட்டு இப்னு தைமியா எழுதிய ஸிராத்தல் முஸ்தகீம் என்ற நூலை விரிவு படுத்தி அதற்கு மிருது கொடுத்து ' கிதாபுத் தவ்ஹீத்' என்ற பெயரால் வெளியிட்டான்.

 இந்த சந்தர்ப்பத்தில், துருக்கி அரசர் சுல்தான் அப்துல் ஹமீத் கான் காலமானார். பதவியின் காரணமாக அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டது. துருக்கியின் உதவியை பெற்று கொண்டிருந்த பக்கத்து அரசர்களும் பலம் இழந்தார்கள். அது ஹிஜாஸையும் தாக்கியது. இதை தக்க தருணமாக கொண்டு இப்னு வஹ்ஹாப் நஜ்தி ஒரு படையை திரட்டிகொண்டான்.

 இந்த படையின் தலைவனாக ஸுஊத் என்பவனை நியமித்தான். இவன் ஹஜ்ஜுக்கு போவதாக பாசாங்கு செய்து பெரும் படையுடன் புனித மக்காவுக்குள் நுழைந்து பொருள்களை சூறையாடி ஆண், பெண், வயோதிபர்கள், வாலிபர்கள், குழந்தைகள் என்று பாராமல் கொலை செய்தான். அந்த மக்காவாசிகள் உயிர் தப்ப கார்மானம் தேடி ஹரம் ஷரீபுக்குள் நுழைந்தார்கள். அப்பொழுதும் அந்த கயவர்கள் அந்த மக்களை உயிரோடு விடவில்லை. ஞாபகார்த்தமான மஸ்ஜிதுகளும், கப்ருகளும் தாக்கப்பட்டன. மக்காவில் புரிந்த அட்டூழியம் போலவே மதீனா முனவ்வராவிலும் அந்த கயவர்கள் கொஞ்சமும் இரக்கமின்றி முஸ்லிம்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார்கள். அப்போது அங்கு இருந்த செய்யதுனா அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதா ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) ஆகியவர்களுடைய மக்பராக்களும் வீழ்த்தப்பட்டது. ஸலவாத்து நூல்கள் ஃபிக்ஹு கிதாபுகள் முதலியவை எரிக்கப்பட்டன. ஜித்தா, தாயிப், மக்கா, மதினா ஆகியவை இந்த கொடுமைகளுக்கு உட்பட்டது.

 இந்த அநியாயக்காரர்களின் அட்டூழியம் பெருகி கடைசியாக அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் கப்ரு ஷரீஃபை தரைமட்டமாக்க முற்பட்டபோது, அந்த சில ஷைத்தான்கள் அதிசயமாக செத்து மடிந்தார்கள். இவர்கள் இந்தளவுக்கு காட்டுமிராண்டித்தனமாக அப்பாவி மக்களை கொல்லுவதற்க்கு காரணம் அங்கு வாழ்ந்த மக்கள் சுன்னத் வல் ஜமாஅத்தாக இருந்ததே. முஹம்மது இப்னு வஹ்ஹாப் நஜ்தியுடைய மத்ஹப்பின் பிரகாரம் சுன்னத் வல் ஜமாஅத் மக்கள் முஷ்ரிக்குகள், பித்அத்துக்காரர்கள் என்று அவன் நினைத்ததே.

 அந்த சமயம் உள்நாடு, வெளிநாடுகளிலுள்ள உலமாக்கள், முஃப்திகள் இப்னு வஹ்ஹாப் நஜ்தியின் கொள்கை முற்றும் முழுதாக தவறு என்றும் அதை கடுமையாக ஆட்சேபித்து தக்க ஆதார சான்றுகளுடன் அவரை லஃனத்து செய்து குப்ஃபார் (இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவர்) எனக் தீர்ப்புக்கூறி பல ஃபத்வா கிதாபுகள் வெளியிட்டனர்.

 இறுதியாக இந்த இப்னு வஹ்ஹாப் நஜ்தி, யெமன் நாட்டில் ஒரு தக்வாவுடைய சுன்னத் வல் ஐமாஅத் பெரியாரோடு தன் மத்ஹபை பற்றி தர்க்க வாதம் புரிந்து இறுதியில் படுதோல்வியடைந்து அங்கேயே அகால மரணம் ஆனான். (இவனது அதிர்ச்சிக்குரிய அகால மரணம் பற்றிய விபரம் ஃபுதூஹாதுல் மகிய்யா என்ற நூலிலும் மஙானி கிதாபிலும் காணலாம்)

 ஆனாலும் இவன் தனது படைக்கு தலைவனாக நியமித்த ஸுஊது என்பவன் அரேபியாவின் ஆட்சியை பிடித்தான். வெறும் அரேபியா என்ற நாட்டை தன் பெயரை முன்னாள் சொருகி ஸஊதி அரேபியா என்று மாற்றினான். அவனுடைய பரம்பரையே இன்று வரை அரேபியாவை ஆட்சி செய்கிறது.

 நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன் அறிவிப்பின்பட, நஜ்தில் ஷைத்தானின் கொம்பாக தோன்றி ஃபித்னாக்களையும், குழப்பங்களையும் உருவாக்கியவன்தான் இந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி.

 இவனை பின்பற்றி , இவனது மத்ஹபை ஏற்று, இவனது சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தலைசாய்த்து நடப்பவர்களையே "வஹாபிகள்" என்று சொல்லப்படும்.

முஹ்தசிலாக்களின் வழியில் பயணிக்கும் TNTJ ..

முஹ்தசிலாக்களின் வழியில் பயணிக்கும் TNTJ
 ++++++++++++++++++++++++++++++++++++++++++

 தனக்குப்பின் இஸ்லாமிய சமுதாயத்தில் பலப்பிரிவுகளும் கூட்டங்களும் தோன்றும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தான் வாழும் போதே முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் கூறியது போன்று நபி(ஸல்) அவர்களுக்குப் பின் பல வழிகெட்ட கூட்டங்கள் இஸ்லாமின் பெயரால் தோன்றின. தாங்கள் மட்டுமே சத்தியத்தில் இருப்பதாக ஒவ்வொரு கூட்டத்தினரும் வாதிட்டனர். நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் கடைபிடித்த சத்தியக்கொள்கையில் இருந்த நல்லோர்களை வழிகேடர்கள் என இவர்கள் கூறினர்.

 இவர்களில் ஒரு பிரிவினர்தான் முஃதஸிலாக்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றினர். ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தோன்றி அழிந்துபோன ஒரு கூட்டத்தைப் பற்றி இன்று நாம் ஏன் பேச வேண்டும் என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.

 அழிந்துபோன இந்த பிரிவினர் முன்பு கூறிச் சென்ற, நபிமொழிகளுக்கு எதிரான சில வழிகெட்ட கொள்கைகளை, தற்போது தமிழகத்தில் சிலவருடங்களாக சகோதரர் பீஜே அவர்கள் கூறி வருகிறார். அவரின் இயக்கத்தைச் சார்ந்தவர்களும் அதை உண்மை என நம்புகின்றனர். இதனால் தற்போது இஸ்லாமிய சமுதாயத்தில் மிகப்பெரிய கொள்கைக் குழப்பம் ஏற்பட்டு, நபிமொழிகளை நம்பும் முஸ்லிம்களை இணைவைப்பாளர்கள் என இவர்கள் கூறிவருகின்றனர்.

 முஃதஸிலாக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை அவனுடைய தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறியவாறு விளங்கவில்லை. ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மறுத்து தன் சுய அறிவையே மார்க்கமாக ஆக்கிக்கொண்டனர். தங்களின் அறிவுக்கு ஒத்துவராத நபிமொழிகளை சம்பந்தம் இல்லாத குர்ஆன் வசனங்களை காட்டி அந்த நபிமொழிகள் குர்ஆனுடன் முரண்படுகிறது எனக் கூறினர். தங்கள் அறிவுக்கு ஒத்துவராத ஹதீஸ்கள் நபியின் கூற்றாக இருக்காது என அவர்களாக எண்ணிக்கொண்டனர். சுயஅறிவே இவர்களின் அடிப்படை ஆதாரம். இதற்கு ஏற்றவாறு குர்ஆனைப் புரிந்தார்கள். இதற்கு ஒத்துவராத ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை பொய்யானக் காரணங்களைக் கூறி அவற்றில் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி மறுத்தனர். இதுவே அவர்களின் வழிகேட்டிற்கு காரணம்.

 தற்போது தமிழகத்தில் உள்ள சகோதரர் பீஜே அவர்களும் இதே வேலையை செய்து வருகிறார். நபிமொழிகளின் மீதுள்ள நம்பிக்கையை விட தன்அறிவின் மீதுள்ள நம்பிக்கை இவருக்கு மிகைத்துவிட்டது. தன் அறிவிக்குப்படுவதே மார்க்கம். தன் அறிவிக்கு ஒத்துவராதவை ஹதீஸ்களாக இருந்தாலும் அவை மார்க்கமாகாது என்ற நிலைக்கு வந்துவிட்டார். முஃதஸிலாக்களுக்கும் இவருக்கும் இடையே சில வித்தியாசங்கள் இருந்தாலும் பல ஒற்றுமைகள் உள்ளன. அந்த ஒற்றுமைகளை கீழே காணலாம்.

 கொள்கை ஒற்றுமை

 முஃதஸிலாக்கள் குர்ஆன் வசனங்களை நேரடிப் பொருளில் புரியாமல் தன் சுய சிந்தனைக்கு ஏற்றவாறு வசனங்களை வளைத்தது போல் இவரும் குர்ஆன் வசனங்களை தன் கருத்திற்கு ஏற்றவாறு வளைத்தும் ஒடித்தும் வருகிறார். உதாரணமாக (2:102) வது வசனத்தை பல இடங்களில் வெட்டி அதன் எதார்த்தமான அர்த்தத்தை மாற்றி இதுவரை யாரும் கூறாத விளக்கத்தை கூறியுள்ளார். அதுவும் குா்ஆனுக்கு முற்றிலும் எதிரான விளக்கம்.
 இஸ்லாமிய வரலாற்றில் முஃதஸிலாக்கள் மட்டுமே மறுத்த சில நபிமொழிகளை இன்று இவர் மட்டுமே மறுத்து வருகிறார். இந்த நபிமொழிகளை மறுப்பதற்கு முஃதஸிலாக்கள் என்ன வாதங்களை வைத்தார்களோ அதே வாதங்களை இன்று இவரும் கூறி வருகிறார். உதாரணமாக சூனியம் கண்ணேறு தொடர்பான பல நபிமொழிகளை மறுத்துள்ளார்.
 நபிமொழிகளை மறுக்கும் போது அவை குர்ஆனுக்கு முரண்படுகிறது என முஃதஸிலாக்கள் கூறியது போல் பொய்யானக் காரணத்தைக் கூறுகிறார்.
 நபிமொழிகளை நம்பிய முஸ்லிம்களை இணைவைப்பாளர்கள் என முஃதஸிலாக்கள் துணிந்து கூறியது போல் தற்போது இவரும் கூறுகிறார்.
 இவர் முஃதஸிலாக்களின் கொள்கைகளை ஒவ்வொன்றாக படித்து அறிந்துவிட்டு அவற்றைக் கூறவில்லை. இவர் ஆதாரங்களின் அடிப்படையில் சிந்திக்காமல் நாத்திகச் சிந்தனையின் அடிப்படையில் சிந்திப்பதால் இவரை அறியாமலேயே இதற்கு முன்பு இவரைப் போன்று சிந்தித்த முஃதஸிலாக்களுடன் சில விசயங்களில் ஒன்றுபட்டுள்ளார். நாம் இன்ன இன்ன கொள்கையில் முஃதஸிலாக்களுடன் சேர்ந்துள்ளோம் என்ற உண்மை தாமதமாகவே இவருக்குத் தெரிய வந்துள்ளது.

 ஏகத்துவத்திற்காக பல தியாகங்களைச் செய்த சகோதரர் பீஜே தற்போது தடம்மாறி முஃதஸிலாக்களின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார். இதை இலங்கையைச் சார்ந்த அறிஞர்கள் அவருக்கு உணர்த்தினர். ஆனால் அவர் உணர்ந்தபாடில்லை.

 தனது ஆன்லைன்பீஜே இணையதளத்தில் முஃதஸிலாக்களைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டார். அதில் இவருக்கும் முஃதஸிலாக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மட்டும் சுட்டிக்காட்டி இவர் முஃதஸிலா வழியில் செல்லவில்லை என்பது போல் சித்தரித்துள்ளார். ஆனால் இவருக்கும் முஃதஸிலாக்களுக்கும் இடையே உள்ள பல ஒற்றுமைகள் குறித்து வாய்திறக்கவில்லை.

 முஃதஸிலாக்களின் அனைத்துக் கொள்கையையும் இவர் கூறுகிறார் என்று நாம் குற்றம்சாட்டவில்லை. முஃதஸிலாக்கள் விட்டுச் சென்ற சில வழிகெட்ட கொள்கை இவரிடம் உள்ளது என்பதே நம் விமர்சனம். சூனியம் கண்ணேறு சம்பந்தமான நபிமொழிகளை மறுத்து அதை நம்பக்கூடியவர்கள் இணைவைப்பாளர்கள் என்று முஃதஸிலாக்களைத் தவிர வேறு எந்த நல்லறிஞர்களும் கூறவில்லை. சகோதரர் பீஜே அச்சுப்பிசகாமல் அப்படியே இதேக் கருத்தைக் கூறுகிறார்.

 இது சாதாரண மசாயில் பிரச்சனை இல்லை. முஃமின் முஷ்ரிக் என்ற கொள்கை ரீதியிலான பிரச்சனை. இக்கொள்கையில் இவர் முஃதஸிலாக்களுடன் இணைத்துள்ளதால் இவர் முஃதஸிலாக்களின் வழியில் செல்கிறார் என்ற விமர்சனம் இவருக்கு 100 சதவிகிதம் பொருந்தக்கூடியதே. இதை எப்படி மறுக்க முடியும்?

 இது பொய்யான விமர்சனமோ காழ்ப்புணர்வினால் கூறும் அவதூறோ அல்ல. மாறாக அவர் செய்த செயலால் அவரே இழுத்துக்கொண்ட இழுக்காகும். கொள்கை ரீதியில் முஃதஸிலாக்களுக்கும் இவருக்கும் இவ்வளவு பெரிய ஒற்றுமை இருக்கும் போது எனக்கும் முஃதஸிலாக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இவர் மறுப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் தில்லுமுல்லு வேலையாகும்.

 இந்தக் கட்டுரையில் முஃதஸிலாக்களைப் பற்றி நீங்கள் அறியும் ஒவ்வொரு தருணங்களிலும் சகோதரர் பீஜேவிற்கும் முஃதஸிலாக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை பளிச்சென்று அறிவீர்கள் இன்ஷா அல்லாஹ்.

 முஃதஸிலாக்களின் துவக்கம்

 வாஸில் இப்னு அதாஃ என்பவனே முஃதஸிலாக்களின் தலைவன். இவனைப் பற்றி இமாம் தஹபீ(ரஹ்) கூறியதை அறிந்து கொள்ளுங்கள்.

 سير أعلام النبلاء
 (5 / 464)
 210 وَاصِلُ بنُ عَطَاءٍ أَبُو حُذَيْفَةَ المَخْزُوْمِيُّ مَوْلاَهُم *
 البَلِيْغُ، الأَفْوَهُ، أَبُو حُذَيْفَةَ المَخْزُوْمِيُّ مَوْلاَهُم، البَصْرِيُّ، الغَزَّالُ. وَقِيْلَ: وَلاَؤُهُ لِبَنِي ضَبَّةَ. مَوْلِدُه: سَنَةَ ثَمَانِيْنَ، بِالمَدِيْنَةِ. وَهُوَ وَعَمْرُو بنُ عُبَيْدٍ رَأْسَا الاعْتِزَالِ، طَرَدَهُ الحَسَنُ عَنْ مَجْلِسِهِ لَمَّا قَالَ: الفَاسِقُ لاَ مُؤْمِنٌ وَلاَ كَافِرٌ. فَانضَمَّ إِلَيْهِ عَمْرٌو، وَاعْتَزَلاَ حَلْقَةَ الحَسَنِ، فَسُمُّوا المُعْتَزِلَة

 இவன் சொல்லாற்றலும், பேச்சாற்றலும் மிகுந்தவன். ஹிஜ்ரீ 80 ஆம் ஆண்டில் மதீனாவில் பிறந்தான். இவனும் அம்ர் இப்னு உபைத் என்பவனுமே முஃதஸிலா கொள்கையின் தலைவர்கள். இவன் இமாம் ஹஸனுல் பஸரீ(ரஹ்) அவர்களின் சபையில் இருந்தபோது பெரும்பாவம் செய்தவன் முஃமினாகவும் இருக்க மாட்டான். காஃபிராகவும் இருக்கமாட்டான் எனக் கூறியபோது ஹஸன் இவனைத் தன்னுடைய சபையிலிருந்து வெளியேற்றினார். இதன் பிறகு இவனுடன் அம்ரு என்பவனும் இணைந்துகொண்டான். இவ்விருவரும் ஹஸன்(ரஹ்) அவர்களின் சபையை புறக்கணித்தார்கள். எனவே, இவர்களுக்கு முஃதஸிலாக்கள் (விலகியவர்கள்) என்று பெயர் வந்தது.

 நூல்: சியரு அஃலாமின் நுபலா பாகம் 5 பக்கம் 464

 வரம்புமீறிய சிந்தனையும் அளவுக்கு அதிகமான பேச்சும் வாஸில் பின் அதாஉ வழிகெடுவதற்கு காரணமாகும்.

 பெரும்பாவம் செய்தவன் காஃபிராகமாட்டான் என நபிமொழிகள் தெளிவாகக் கூறுகிறது. உதாரணத்திற்கு ஒரு சில நபிமொழிகளை அறிந்துகொள்வோம். :

 அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
 “”எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது “எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், “அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?” எனக் கேட்டேன். அவர் விபசாரத்திலோ திருட்டிலோ — ஈடுபட்டிருந்தாலும்தான்” என்று பதிலளித்தார்கள்.”
 புகாரி (1237)

 விபச்சாரமும் திருட்டும் பெரும்பாவமாகும். இப்பாவங்களை செய்தவன் ஓரிறைக்கொள்கையை ஏற்றிருந்தால் அவன் ஓரிறைக் கொள்கையை ஏற்றதற்காக அல்லாஹ் அவனுக்கு சொர்க்கத்தைத் தருகிறான். முஃமின்களுக்கே அல்லாஹ் சொர்க்கத்தை தருவான். எனவே பெரும்பாவம் செய்தவன் முஃமினாகமாட்டான் என்ற கருத்தை இந்த நபிமொழி தகர்க்கின்றது.

 பத்ருப்போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

 (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்கரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
 நுால் புகாரி (18)

 திருட்டு விபச்சாரம் பச்சிளம் குழந்தைகளை கொலை செய்தல் அவதூறு கூறுதல் ஆகியவை பெரும்பாவங்களாகும். மறுமையில் அல்லாஹ் நாடினால் இப்பாவங்களை மன்னிக்கலாம் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பெரும்பாவம் செய்தவன் இறைநம்பிக்கையாளன் அல்ல என்றால் அவனை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். எனவே இந்த நபிமொழியும் பெரும்பாவம் செய்தவன் இறைநம்பிக்கையிலிருந்து வெளியேறிவிடுகிறான் என்ற கருத்தை தகர்க்கிறது.

 வாஸில் என்பவன் நபிமொழிகளை ஏற்று அதனடிப்படையில் தீர்ப்புக் கூறவில்லை. மாறாக இவற்றை கவனிக்காமல் தன்னுடைய சுய சிந்தனை அடிப்படையில் பெரும்பாவம் செய்தவன் காஃபிராகவும் மாட்டான். முஃமினாகவும் இருக்கமாட்டான். இரண்டிற்கும் இடையிலான ஒரு நிலையில் இருக்கிறான் எனக் கூறினான்.

 நபிமொழிகளை மறுத்து சுய சிந்தனையை புகுத்தியதே முஃதஸிலாக்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம். இதே வேலையை சகோதரர் பீஜே தற்போது ஹதீஸ்களில் செய்கிறார். இதனாலேயே இவர் முஃதஸிலா வழியில் செல்கிறார் என்கிறோம்.

 முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்குவோர்

 அல்லாஹ்வின் மார்க்கத்தில் உள்ள ஒரு முஸ்லிமை பெரும்பாவம் செய்த காரணத்திற்காக அவன் முஸ்லிமே இல்லை என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும். முஸ்லிமை கொல்வதற்கு நிகரான மாபெரும் ஃபித்னாவாகும். இந்த ஃபித்னாவில்தான் முதன்முதலில் முஃதஸிலாக்கள் உருவாகிறார்கள்.

 ஆனால் சகோதரர் பீஜேவிற்கு இவை பெரிய குற்றமாகத் தெரியவில்லை. ஏனென்றால் இவரும் முஃதஸிலாக்களைப் போன்று நபிமொழிகளை நம்பும் முஸ்லிம்களுக்கு முஷ்ரிக் பட்டம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். எனவேதான் இவருக்கு முஃதஸிலாக்களின் இந்த ஃபித்னா பாரதூரமாகத் தெரியவில்லை. முஃதஸிலாக்களுக்கு எப்படி வக்காலத்து வாங்குகிறார் என்று பாருங்கள்.

 இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றும் உள்ளது. அவர்கள் முஃதஸிலாக்கள் என்று அழைக்கப்படும்போது இதர வழிகேடான கொள்கைகள் அவர்களிடம் தோன்றவில்லை. மாறாக பெரும்பாவம் செய்தவனை முஃமின் என்றும் சொல்லக்கூடாது, காஃபிர் என்றும் சொல்லக் கூடாது என்ற இந்தக் கொள்கையே இருந்தது.

 இந்த ஒன்றிலேயே சமுதாய அறிஞர்களின் கருத்துக்களை விட்டும் அவர்கள் தனித்து இருந்தார்கள். இதனாலேயே அவர்கள் முஃதஸிலாக்கள் – விலகியவர்கள் என்று அழைக்கப்படவும் செய்தார்கள். இது முஃதஸிலா என்ற பெயர் தோன்ற காரணமாக இருந்த நிகழ்வு.

 முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் சமாதி வழிபாட்டுக் கொள்கையைவிட இது பயங்கரமானது அல்ல. இறைச் செய்தி மட்டுமே மார்க்கம் என்ற அடிப்படையைத் தகர்த்து சஹாபாக்களைப் பின்பற்றுவோம், இமாம்களைப் பின்பற்றுவோம் எனக் கூறும் சலபி மத்ஹபினர் மற்றும் நான்கு மத்ஹபினரின் கொள்கையை விட இது பாரதூரமானதல்ல.

 (ஆன்லைன் பீஜே இணையதளம்)
http://www.onlinepj.com/deen_kula_penmani/2015-dkp/jan-dkp-2015/#.VUzovtKUewQ

 இஸ்லாமிய வரலாற்றில் முஃதஸிலாக்கள் உருவாக்கிய இந்தக் கொள்கைக் குழப்பம் சகோதரர் பீஜேவிற்கு சிறிய பிரச்சனையாகத் தெரிகிறது. சமாதி வழிபாட்டுடன் ஒப்பிடும் போது இது பாரதூரமானதல்ல எனக் கூறி முஃதஸிலாக்களின் வழிகேட்டை சாதாரணது போல் சித்தரிக்கிறார்.

 இனம் இனத்தைச் சாரும் எனக் கூறுவார்கள். இந்தப் பழமொழி இவர் விசயத்தில் இங்கே பொருந்திப் போகிறது. இமாம் ஹஸன் பஸரி இப்பிரச்சனையில் மிகச்சரியாக நடந்துகொண்டார்கள். ஆனால் முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்கிய சகோதரர் பீஜே இமாம் ஹஸன் பஸரீ அவர்களை அநியாயமாக விமர்சனம் செய்வதைப் பாருங்கள்.

 ஹஸன் பஸரி அல்லாஹ்வின் தூதர் அல்ல. அவருடன் ஒரு கொள்கையில் வாசில் பின் அதா என்பவர் முரண்பட்டால் அவருடன் விவாதித்து அவர் சொல்வது சரியல்ல என்று விளக்கம் சொல்வதுதான் ஹஸன் பஸரியின் கடமையாகும். அவ்வாறு கூறி ஆதாரம் காட்டாமல் நான் சொன்னதை எப்படி மறுக்கலாம் என்று ஒருவரை வெளியேற்றியதே இஸ்லாத்தின் அடிப்படையில் ஏற்கத்தக்கதல்ல.

 அப்படியே ஹஸன் பஸரியின் சபையை விட்டு ஒரு சிறிய கொள்கைப் பிரச்சனைக்காக ஒருவர் விலக்கப்பட்டால் அதை அல்லாஹ்வின் தூதர் விலக்கி வைத்தது போல் எடுத்துக் கொண்ட செயலும் கண்டிக்கத்தக்கதே.

 நான் சொல்வதை எவரும் எதிர்க்கக் கூடாது என்று ஹஸன் பஸரி நடந்து கொண்டதால் ஒதுக்கி வைக்கப்பட்ட வாசில் பின் அதாவின் வழி வந்தவர்கள் இதன் பின்னர் இன்னும் சில தவறான கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டனர். இக்கொள்கையை இவர்கள் உருவாக்குவதற்கு முன்னரே இவர்கள் முஃதசிலாக்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டனர்.

 (ஆன்லைன் பீஜே இணையதளம்)
http://www.onlinepj.com/deen_kula_penmani/2015-dkp/jan-dkp-2015/#.VUzovtKUewQ

 முஃதஸிலாக்கள் நபிமொழிகளுடன் மோதியிருக்கும் போது ஹஸன் பஸரீ என்ற தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனையைப் போல் இதை சித்தரிக்கிறார். அல்லாஹ்வின் தூதருக்காக கோபம் கொண்ட ஹஸன் பஸரீ அவர்களை அல்லாஹ்வின் தூதர் போல் நடந்துகொண்டதாக விமர்சித்துள்ளார். மொத்தத்தில் முஃதஸிலாக்கள் உருவாகியதற்கு ஹஸன் பஸரீயே காரணம் என பலியை இமாம் ஹஸன் பஸரீ மீது சுமத்தியுள்ளார்.

 குர்ஆன் வசனங்களை ஒடித்து நபிமொழிகளை மறுத்து இவர் கூறும் சுயக்கருத்தை யாராவது எதிர்த்தால் அவரை ஜமாத்தை விட்டும் விலக்குவதும் சமுதாயத்தில் அவரை கேவலப்படுத்த முயற்சிப்பதும் சகோதரர் பீஜே அவர்களின் இயல்பாகிவிட்டது. சகோதரர் பீஜேவிற்கு மாற்றுக்கருத்து சொன்னால் நம்மை ஒரு வழி செய்துவிடுவார் என்ற பயத்தை பரவலாக ஏற்படுத்தியுள்ளார். இந்த லட்சணத்தில் நான் சொல்வதை எவரும் எதிர்கக்கூடாது என்பது போல் ஹஸன் பஸரீ நடந்துகொண்டார் என விமர்சிக்கும் தகுதி இவருக்கு இருக்கிறதா?

 குா்ஆன் சுன்னா அடிப்படையில் தான் பதிலளித்தப் பிறகும் அதை ஏற்காமல் எந்த ஆதாரமும் இன்றி தன் மனோ இச்சைப்படி ஒரு மாபெரும் கொள்கை குழப்பத்தை ஏற்படுத்தி அதில் பிடிவாதமாகவும் இருந்தால் அவர்களை விரட்டாமல் மடியில் வைத்து கொஞ்சவா முடியும்? திமிர்பிடித்து விலகிச் சென்றவர்களைத் தான் ஹஸன் பஸரீ அவர்களும் அப்படியே விட்டுவிட்டார். முஃதஸிலாக்கள் வழிகேடர்கள் எனக் கூறிய சகோதரர் பீஜே தற்போது முஃதஸிலாக்களின் மீது ஏன் இவ்வளவு கரிசனம் காட்டுகிறார் என்று புரிகிறதா?

 ஐந்து அடிப்படைகளும் ஒற்றுமைகளும்

 முஃதஸிலாக்கள் தங்களுக்கென ஐந்து அடிப்படை கொள்கையை வகுத்துள்ளனர். இந்த ஐந்து கொள்கைகளை கொண்டவர்களையே முஃதஸிலா எனக் கூற முடியும். டிஎன்டிஜே முஃதஸிலாக்கள் கூறிய இந்த ஐந்து விசயங்களில் எந்த ஒன்றிலும் உடன்படவில்லை. மாறாக இவர்களுக்கு எதிரான கருத்தைக் கூறுகிறது. அவ்வாறிருக்க எங்களை எப்படி முஃதஸிலாக்களுடன் சம்பந்தப்படுத்தலாம் என்று சகோதரர் பீஜே கேட்கிறார். இந்தக் கேள்விக்கு பதிலை அறிந்துகொள்வதற்கு முன்னால் முஃதஸிலாக்கள் உருவாக்கிய ஐந்து கொள்கைகளைப் பற்றி அறிவோம்.

 1. தவ்ஹீத்
 அல்லாஹ் தனக்கு இருப்பதாக சொன்ன தன்மைகளை அல்லாஹ்விற்கு இல்லை என மறுக்க வேண்டும். அல்லாஹ் கேட்பான். பார்ப்பான். வருவான் எனக் கூறினால் அல்லாஹ் படைப்பினங்களுக்கு ஒப்பாகிவிடுவான். எனவே, இவ்வாறு கூறுவது இணைவைப்பாகும். இதை மறுப்பது தான் தவ்ஹீதாகும். அல்லாஹ்விற்கு இந்தத் தன்மைகள் இருப்பதாக கூறும் வசனங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

 2. நேர்மை
 அல்லாஹ் நேர்மையானவன். எனவே, அடியார்களில் யாராவது வழிகெட்டுப்போனால் அவர்கள் வழிகெட்டதற்கும் அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த விஷயம் விதிப்படி நடப்பதில்லை. மனிதர்களில் அவரவரின் முயற்சிக்கேற்பவே நன்மை தீமைகள் ஏற்படுகின்றன. மொத்தத்தில் விதியை மறுக்க வேண்டும் என்கின்றனர்.

 3. இரண்டு நிலைகளுக்கிடையில் ஒரு நிலை
 பெரும்பாவம் செய்தவனை முஃமின் என்றும் சொல்லக் கூடாது. காஃபிர் என்றும் சொல்லக் கூடாது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையில் ஒரு நிலையில் அவன் இருக்கிறான் என்றே கூற வேண்டும் என்றனர்.

 4. வாக்குறுதி மற்றும் எச்சரிக்கை நிறைவேற்றுதல்
 பெரும்பாவம் செய்தவன் மரணித்து விட்டால் அவனுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. அவன் நரகத்தில் நிரந்தரமாக கிடப்பான். அல்லாஹ் பெரும்பாவம் செய்தவர்களுக்கு என்ன தண்டனையைக் கூறி எச்சரிக்கிறானோ அதை கண்டிப்பாக நிறைவேற்றுவான். மன்னிக்கமாட்டான் எனக் கூறினர்.

 5. நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்
 ஆட்சியாளர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் அநியாயம் செய்துவிட்டால் அதை பொறுத்துக் கொண்டு இருக்கக் கூடாது. மாறாக அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும்.

 இந்த ஐந்து வழிகெட்ட கருத்துக்களில் ஒன்றைக்கூட டிஎன்எஜே கூறவில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த ஐந்து வழிகெட்ட கொள்கைக்கும் எது மூலக்காரணமாகவும் ஆணிவேராகவும் உள்ளதோ அந்த நோய் சகோதரர் பீஜேவிடம் உள்ளது. இந்த அடிப்படையில் சகோதரர் பீஜேவிற்கும் முஃதஸிலாவிற்கும் இடையே பெரிய சம்பந்தம் உள்ளது. நபிமொழிகள் முஃதஸிலாக்களின் இந்த ஐந்து அடிப்படைகளையும் நிராகரிக்கின்றன. பின்வரும் கருத்தே நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது.

 அல்லாஹ் தனக்கு இருப்பதாக சொன்ன தன்மைகளை நாம் மறுத்து அதற்கு வேறு ஒரு விளக்கம் தரக்கூடாது. அந்தத் தன்மைகள் அல்லாஹ்விற்கு மனிதனைப் போன்றில்லாமல் அவனுடைய தகுதிக்கு ஏற்ப உள்ளது என்றே நம்ப வேண்டும்.
 அனைத்தும் விதியின் படியே நடக்கின்றன. நன்மை அல்லாஹ்வின் நாட்டத்தால் ஏற்படுவதைப் போன்று தீமைகளும் அவன் நாட்டத்தாலே ஏற்படுகிறது.
 பெரும்பாவம் செய்தவன் பாவி என்றாலும் அவன் இஸ்லாமை விட்டு வெளியேற மாட்டான்.
 அல்லாஹ் ஒரு பெரும்பாவத்திற்கு ஒரு தண்டனையை கூறி எச்சரித்தால் அந்த தண்டனையை அவன் கட்டாயம் நிறைவேற்றி ஆகவேண்டும் என்ற கட்டாயம் அல்லாஹ்விற்கு இல்லை. அவன் கருணையாளன்; அவன் நினைத்தால் மன்னிப்பான். அவன் நினைத்தால் தண்டிப்பான்.
 ஆட்சியாளர்கள் முஸ்லிம்களாக இருக்கும் வரை அவர்களிடம் அநியாயங்கள் வெளிப்பட்டாலும், நாம் பொறுமையாகவே இருக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யக் கூடாது. கட்டுப்பட்டே நடக்க வேண்டும். அவர்களிடம் வெளிப்படையாக இணைவைப்போ, இறைமறுப்போ காணப்பட்டால் மட்டுமே எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
 முஃதஸிலாக்கள் ஏற்படுத்தியுள்ள இந்த ஐந்து அடிப்படைகளுக்கும் நேர் எதிராக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் குர்ஆனுக்கு முரண் என மறுத்துவிட்டு இந்த ஹதீஸ் மறுப்புக்கொள்கையின் மீதுதான் நாம் முன்னர் குறிப்பிட்ட ஐந்து அடிப்படைகளை இவர்கள் நிறுவியுள்ளனர்.

 இவர்கள் கூறியுள்ள இந்த ஐந்து கருத்துக்களையும் ஆதாரங்களின் அடிப்படையில் சிந்திக்காமல் பாமரத்தனமாக மேலோட்டமாக சிந்தித்துப்பார்த்தால் சரியானவை போன்று தெரியும். இந்த சிந்தனையை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளே இவை. இதற்கு எதிராக வரும் நபிமொழிகளை சம்பந்தம் இல்லாத குர்ஆன் வசனங்களை காட்டி அவ்வசனங்களுக்கு இவை முரண்படுவதால் இவற்றை ஏற்கக்கூடாது என்றனர். தன் சுய சிந்தனையை ஆதாரமாகக் கொள்ளாமல் நபிமொழிகளை அவற்றின் வழியிலேயே ஏற்றிருந்தால் இந்த ஐந்து அடிப்படைகளையும் இவர்கள் கூறியிருக்கவே மாட்டார்கள்.

 இன்று சகோதரர் பீஜே அவர்கள் இதே அடிப்படையில் தான் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்து வருகிறார். எனவேதான் சூனியம் கண்ணேறு தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பதில் இவர் முஃதஸிலாக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார். இப்பிரச்சனைக்கு நபிமொழிகளைக் கொண்டு விடைதேடாமல் பாமரத் தனமாக நாத்திகன் சிந்திப்பது போல் தன் மனோஇச்சையை ஆதாரமாகக் கொண்டதால் இந்த நபிமொழிகளை நம்புவது இணைவைப்பு என்ற பாரதூரமான கொள்கை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இதை அப்படியே இதற்கு முன் முஃதஸிலாக்கள் அச்சுப்பிசகாமல் கூறியுள்ளனர். இருவரின் அடிப்படையும் ஒன்று என்பதால் வழிகேடுகள் தானாக ஒன்றிணைந்துவிட்டது.

 முஃதஸிலா என்றால் நபிமொழிகளை மறுத்து புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை விட்டு விலகி தனியே சென்றவன் என்பது பொருள். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்து புதுப் புது இணைவைப்புகளை கண்டுபிடிக்கிற விசயத்தில் இந்த அளவுகோல் 100 சதவிகிதம் சகோதரர் பீஜேவிற்கு பொருந்திப்போகிறது.
தொடர்ந்து படிக்க:
http://www.islamkalvi.com

முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தி

'' தவ்ஹீத் பெயரில் வஹாபிகள்''
எச்சரிக்கை

 நபி ஸல் அவர்களின் தீர்க்க தரிசனத்தால் பிற்காலத்தில் நடக்கவுள்ள விபரீதங்கள் பற்றி விளக்கமாக முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.அவற்றில் சிலதை இங்கு எழுதுகின்றேன்.

 முற்காலத்தில் வாழ்ந்த ஸாலிஹான நல்லோர்களும் அதை அடுத்துள்ள காலத்திலுள்ள நல்லவர்களும்மரணித்து விடுவார்கள். இப்படியே படிப்படியாக “ஸாலிஹீன்“ நல்லவர்கள் சென்ற பின் (மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில்) தொலிக்கோதுமையின் சருகுகள் போன்ற அல்லது பேரீத்தம் பழச் சக்கைகள் போன்றகுப்பைகள்தான் எஞ்சியிருப்பர். (அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே எல்லாம் அறிந்த மேதைகள் என்று சொல்லிக் கொள்வர்.) ஆனால் அல்லாஹ்“ அவர்களை கணக்கெடுக்கவே மாட்டான். என்று நபி ஸல் அவர்கள அருளினார்கள்.
 புஹாரி,பாகம் – 02,ஹதீஸ் இலக்கம் – 952
 பாடம் - கிதாபுர்ரிகாக்

 கடைசி காலத்தில அறிவும், தெளிவும், அனுபவமுதிர்ச்சியும் இல்லாத ஒரு கூட்டம் வருவார்கள். அவர்கள் நபி ஸல் அவர்களின்ஹதீஸில் இருந்தே ஆதாரம் எடுத்துப் பேசுவார்கள். ஆனால் அவர்களின் ஈமான் (உதட்டளவில்தான் இருக்குமேயன்றி) உள்ளத்தில் நுழைந்திருக்காது. மேலும் அவர்கள் புனித இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள்.

 புஹாரி,ஹதீஸ் இலக்கம் – 3611,பாடம் – கிதாபுல்மனாகிப்
 முஸ்லிம், பாகம் – 01,பக்கம் – 342

 இந்த உம்மத்தில் பிற்காலத்தில் வாழும் மக்கள் முற்காலத்தில் வாழ்ந்தவர்களை நிந்திக்க – சபிக்க ஆரம்பித்தார்களானால் (கலியுகம் வந்துவிட்டதாக பொருள். ஆகவே) கியாமத் நாளை எதிர்பாருங்கள் என்று நபி ஸல் அவர்கள் அருளினார்கள்.
 மிஷ்காத்,பக்கம் – 470,ஹதீஸ் இலக்கம் – 5450
 திர்மிதீ,ஹதீஸ் இலக்கம் – 2211

 அன்புத்தம்பி!
 தற்காலத்தில் சமூகத்தைக் குழப்புகின்ற பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் நஜ்தியின் கொள்கைகளைப் பிரதிபலிப்பவைகளாகவே இருக்கின்றன. இவர் வழி தவறிய இப்னு தைமிய்யா, இவர் மாணவர் இப்னு கைய்யூம் ஆகியோரைப் பின்பற்றியதோடு தனது சொந்தக் கருத்துக்களையும் சேர்த்து ஒரு புது மார்க்கத்தை தோற்றுவித்தார்.
 முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் மதீனாவின் கிழக்குத்திசையிலுள்ள நஜ்த் மாகாணத்தின் வாதிபனிஹனிபா என்ற சிற்றூரில் ஹிஜ்ரி 1111அல்லது 1114இல் பிறந்து, ஹிஜ்ரி 1204இல் மரணித்தார். இவர் தந்தை அப்துல் வஹ்ஹாப் அப்பகுதியின் காழியாக விளங்கினார். இவர் சகோதரர் சுலைமான் என்பவர் மிகச் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார்.
 முஹம்மத் இப்னு அப்துல் வஹாபின் நடவடிக்கைகளை அவதானித்த தந்தை, சகோதரர், ஆசிரியர்கள், அறிஞர்கள் அனைவரும் இவர் தீய பாதையில் செல்வதாகவும் இவரின் பிரச்சாரத்தால் மக்கள் வழிதவறிச் செல்லும் ஆபத்து உண்டு என்றும் மக்களை எச்சரித்தனர். இவரின் வழி தவறிய கருத்துக்களுக்குத் தக்க விளக்கத்தை பல நூற்களின் மூலம் எழுதி வெளியிட்டனர். இவ்வாறு எழுதப்பட்டவைகளுள் இவரின் சகோதரரான சுலைமான் இப்னு அப்துல் வஹாப் எழுதிய “ஷவாஇக்குள் இலாஹிய்யா“ என்ற நூல் பிரசித்தி பெற்றதாகும்.
 அன்புத் தம்பி! முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் நஜ்தியின் குழப்பத்தை நிகர்த்த ஒரு பெரிய குழப்பம் இஸ்லாமிய வரலாற்றில் நடந்ததில்லை என்று அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபை நீர் கேள்விப் பட்டிருப்பீர். 125,000 உயிர்களைக் கொன்று குவித்த பாஸிஸவாதி என்று சரித்திரம் அவனைப் பற்றி எழுதிவைத்துள்ளது. ஆனால்,
 முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தியுடன் சேர்ந்து இப்னு சுஊத் செய்த கொலைக் கலாச்சாரம் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுபையும் மிஞ்சி விட்டதாக அப்போது புனித மக்கா, மதீனாவின் முப்தியாக விளங்கியவரும், பிரபல சரித்திர ஆசிரியரும், பல்துறை சார்ந்த பன்னூலாசிரியருமான இமாம் ஸைனி தஹ்லான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அத்துறறுஸ் ஸனிய்யா மற்றும் குலாசத்துல் கலாம் ஆகிய நூற்களில் எழுதியுள்ளார்கள்.
 வஹாபிகளின் கொடுமைகளைத் தாங்காதவர்கள் புனித ஹரத்தில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் கொடுங்கோலர்களான வஹாபிகள் புனித ஹரம் ஷரீப் என்றும் பார்க்காமல் உள்ளே புகுந்து உலமாக்கள், பெண்கள், சிறு குழந்தைகள் அனைவரையும் சரித்தனர். இத்தோடு இவர்களின் கொலைவெறி அடங்கவில்லை. தாயின் மார்பில் அமுதுண்டிருந்த பச்சிளம் பாலகரையும் பதைக்கப் பதைக்க பதம் பார்த்தனர். இந்தப் பாஸிஸவாதிகள் இவையனைத்தையும் மேற்படி ஹரத்தின் முப்தியாக இருந்த இமாம் ஸைனி தஹ்லான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மேற்படி நூலில் கண்ணீர் மல்க எழுதி வைத்துள்ளார்கள்.
 அன்புள்ள தம்பி!
 இப்படிப் பல்லாயிரக் கணக்கான உலமாக்களையும் மற்றும் உயிர்களையும் கொன்று குவித்து அவர்களின் ஜனாஸாவையும் குருதியையும் உரமாக்கி வளர்ந்ததுதான் இந்த வஹாபிசமாகும்.
 வஹாபிகளின் கொடுங்கோண்மை கட்டுக்கடங்காமல் சென்றபோது இவர்களை அடக்குவதற்கு எகிப்திலிருந்து மேலதிகப் படை அனுப்பப்பட்டது. இப்படை இவர்களை அடக்கி முஸ்லிம்களின் பகுதியிலிருந்து விரட்டியடித்தது. இவ்வாறு வஹ்ஹாபிகள் தோற்கடிக்கப்பட்டது முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என முஸ்லிம் உலகம் கருதியது.
 இதனை புகழ்பூத்த மார்க்கப் பேரறிஞர் அல்லாமா ஷாமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது மிகப் பிரசித்தி பெற்றதும் உலகம் பூராகவும் பாடநூலில் இடம்பெற்றதுமான றத்துல் முக்தார் பாகம் - 03, பக்கம் - 309இல் இவ்வாறு வரைந்துள்ளார்.
 வழி ததறிய கவாறிஜிகள் தற்காலத்தில் நஜ்திலிருந்து வெளிப்போந்த (இப்னு) அப்துல் வஹாபைப் பின்பற்றியவர்களைப் போன்றிருந்தனர். இவர் (வஹாபி)கள் ஹன்பலி மத்ஹபை பின்பற்றுவதாக கூறினர். ஆயினும் தாங்கள் மட்டும்தான் முஸ்லிம்கள். தங்களின் கொள்கைகளுக்கு மாற்றமானவர்கள் முஷ்ரிகுகள் என்று நம்பினர். இதனால் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரையும் அக்கொள்கை சார்ந்த உலமாக்களையும் கொன்றனர். அவர்களின் பலம் உடைக்கப்பட்டு அவர்களின் (கட்டுப்பாட்டு) பிரதேசங்களும் சீரழிக்கப்பட்டு முஸ்லிம் படைகளுக்கு ஹிஜ்ரி 1233இல் வெற்றி கிட்டும்வரை இது நடந்தது.
 உலகம் பூராகவும் பாடத்திட்டத்தில் இருக்கும் தப்ஸீர் ஸாவியின் பாகம் - 03, பக்கம் - 230இல் இப்படி விபரிக்கப்பட்டுள்ளது.
 அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்
 “நிச்சயமாக ஷைத்தான் உங்களின் விரோதியாக உள்ளான். எனவே நீங்களும் அவனை விரோதியாக எடுத்துக் கொள்ளுங்கள்“.
 இத்திருவசனம் கவாரிஜிகள் விடயத்தில் இறங்கியது என்று ஒரு கூற்று உள்ளது. இவர்கள் குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் புரட்டுத் தனமான வலிந்துரைகள் செய்தனர். (தவறான கருத்துக்களால்) முஸ்லிம்களின் உடமைகளையும், உயிர்களையும் சூறையாடுவது ஹலால் என்றனர். இவர்களின் சிந்தனையை ஒத்த ஒரு கூட்டம் ஹிஜாஸ் மண்ணில் நம் கண் முன்னே தோன்றியுள்ளது. இக்கூட்டத்தை “வஹாபிகள்“ என்று கூறப்படுகிறது. அவர்கள் ஏதோ உண்மையைக் கூறுவதாகக் கூறுகின்றனர்.
 ஆனால், உண்மையில் அவர்கள் பொய்யானவர்கள். ஷைத்தான் அவர்களில் மேலாதிக்கம் செய்துள்ளான். அதனால் அல்லாஹ்வின் நினைவை விட்டும் அவர்களை மறக்கடிக்க வைத்துள்ளான். இவர்கள் ஷைத்தானின் கூட்டத்தினர். அறிக! நிச்சயமாக ஷைத்தானின் கூட்டத்தினர் கைசேதத்திற்குரியவர்கள்.
 தப்ஸீர் ஸாவி:பாகம் - 03, பக்கம் - 288
 உலகம் முழுவதும் பாடத்திட்டத்திலுள்ள மற்றுமொரு சட்டநூல் ஹாஷியத்துல் ஷர்வானி ஆகும். இந்நூல் பாகம்- 04, பக்கம் - 230இல் அவர்கள் கூறுவதையும் கேளுங்கள்.
 ஸஹாபாக்கள் நான்கு இமாம்கள் உள்ளிட்ட சட்ட அறிஞர்கள், சூபியாக்கள் போன்றோரின் சுவடு(நூற்)கள் போன்றதை அவர்கள்மீது சினம் கொண்டிருக்கும் பித்அத்துக் காரர்களான றாபிழிகள், வஹாபிகள் போன்றோருக்குக் கையளிப்பது ஹறாமாகும். இவர்கள், இவற்றைக் கிண்டல் செய்வது காபிர்கள் கிண்டல் செய்வதை விட கடுமையாக உள்ளது.
 ஆதாரம்:ஷர்வானி பாகம்- 04, பக்கம் - 230
 தேவ்பந்து மத்ரஸாவில் நீண்ட காலம் ஹதீதுப்பாடம் கற்றுக்கொடுத்தவரும், புகாரி ஷரீபுக்கு விளக்கம் எழுதியவருமான அன்வர் ஷாஹ்கஷ்மீரி என்பவர் இப்படி எழுதியுள்ளார்.
 “முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் நஜ்தி என்பவர் அறிவு குறைந்த ஓர் அற்பத்தனமான மனிதனாகும். இவர் (குப்ர் பத்வா) தீர்ப்பளிப்பதில் தீவிரமானவர். குப்ர் பற்றி சிந்தித்து தீர்ப்பளிப்பதாயின் அவர் ஷரீஅத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவராகவும், குப்ரியத்தின் வகைகளையும் அது உண்டாவதற்கான காரணங்களை நன்கு அறிந்தவராகவும் இருத்தல் வேண்டும். இத்தகுதி இல்லாத ஒருவர் இதில் இறங்குவது அறவே கூடாது,
 பைழுல் பாரி : பாகம் - 01, பக்கம் - 170
 அன்புத் தம்பி அப்துல்லாஹ்!
 நான் மேற்கூறியவைளை நன்கு சிந்தித்துப் படித்துப் பார்! சட்டம், தீர்ப்பு, ஹதீஸ், வரலாறு உள்ளிட்ட துறைகளில் துறைபோகக் கற்ற பேரறிஞர்கள் வஹாபிகளைப் பற்றி வழங்கிய தீர்ப்பை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்.
 வஹாபி ஒரு பாஸிஸ கொள்கைக்காரன்,அறிவு குறைந்த அற்பன், காபீர்களைவிடக் கொடியவன். என்று அவர்கள் அவனைக் குறித்துக் கூறியிருப்பதையும் சிந்தித்துப்பார். இவற்றைக் கூறியவர்கள் அவனின் அடாவடித்தனத்தை கண்முன்னே கண்டவர்கள், அனுபவித்தவர்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்.
 கேடுகெட்ட காபீர்களை விட கொடிய சுபாவம் கொண்ட பாஸிஸவாதிகளான வஹாபிகளின் அடி வருடிகள்தான் நமது நாட்டில் தூய இஸ்லாம் போதிக்கப் புறப்பட்டிருக்கும் தௌஹீது ஜமாஅத்தினர் என்பதையும் முதலில் விளங்கிக் கொள்!
 வழி தவறிய வஹாபிகளினால் இஸ்லாம் ஒரு போதும் புனிதம் பெறப் போவதில்லை. முஸ்லிம்களுக்குள் பிரிவினையையும், பகைமை உணர்வையும் விதைத்து முஸ்லிம்கள் அதிகம் மதிக்கின்ற அறிஞர்களையும் அவர்களின் அரிய நூற்களையும் அவமதித்து, அவற்றினைப் பார்க்காது தடைவிதித்தும், முஸ்லிம்களின் அனைத்து விடையங்களிலும் சந்தேகங்களையும், சலனங்களையும் தோற்றுவித்து இஸ்லாத்தைப் புனிதப்படுத்துவதாக இவர்கள் கூறுவது எவ்வளவு கேவலமானது என்பதை உணர்ந்து பார்!
 அன்புத் தம்பி!
 உன்கடிதத்திற்கு சுருக்கமாக பதில் எழுதவே நினைத்தேன் கடிதம் நீண்டு விட்டது. ஆயினும் வஹாபிகள் பற்றிய இவ்விளக்கம் உனக்கு பெரும் தெளிவைக் கொடுத்திருக்கும். என்று நம்புகின்றேன். மற்றவை உன் மறுமடல் கண்டு.

வஹாபிகளை பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் முன் அறிவி

ஹுதைபா பின் யமானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறியதாக, நிச்சயமாக நான் ஒரு மனிதனை பற்றி அச்சப்படுகிறேன் அவர் தன்னுடைய முகம் பிரகாசிக்கும் அளவுக்கு குர்ஆனை அதிகமாக ஓதி இஸ்லாத்தை எடுத்துரைப்பார். அல்லாஹ்வின் நாட்டப்படி இது தொடரும்.எப்போது அவர்களை புறக்கணித்து அவர்கள் அனைவரையும் பிற்படுத்தி அவர் தன்னுடைய அயலவர்களை இணைவைப்பாளர்களாக குற்றம் சுமத்தி தன்னுடைய வாளால் தாக்குகின்றாரோ அப்போது அவரில் இருந்து இந்த பிரகாசம் பறிக்கப்படும்.

 பின்னர் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கேட்டார்கள், யாருக்கு இந்த குற்றச்சாட்டு பொருந்தும், குற்றம் சுமத்தியவருக்கா? குற்றச் சாட்டிற்கு உள்ளானவரா? அப்போது அவர்களே அதற்கு மொழியாக குற்றம் சுமத்தியவருக்கே இந்த குற்றச்சாட்டு பொருந்தும் என்றார்கள்.

 சஹிஹ் இப்னு ஹிப்பான்

மஸ்ஜிதுன் நபவி ஒரு தர்கா

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்.

 நம்ம போலி தௌஹீது ஜமாத் செய்யது இப்ராகீம் அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் அதன் ஒரு Doom பச்சையிலிருந்து சிகப்பு நிறமாக மாரும் ஒரு Video'வை விமர்சித்து பேசியிருக்கிறார்.

 அதன் சாராம்சம் கீழ்வருமாறு::

 (1) இந்த மாதிரியெல்லாம் இஸ்லாத்தில் நடக்குமா??

 (2) சம்பவம் நடந்ததாக கூறப்படும் ((24/03/15)) அன்று நாங்கள் அங்கேதான் இருந்தோம்.

 (3) மஸ்ஜிதுன் நபவி ஒரு தர்கா .

 (4) ஐந்து வேளை அங்கேதான் தொழுதோம்.

 (5) அது ஏதோ light தவறுதலாக எறிந்திருக்கும்.

 (6) கப்ருக்கு மேலே கட்டடம் கட்ட கூடாது.

 (7) மஸ்ஜிதுன் நபவியில் உள்ள கட்டடம் இடிக்கப்பட வேண்டும்.

 மேல் உள்ள அனைத்தும் செய்யது இப்ராகீம் அவர்கள் விமர்சித்து பேசியவைகள்.

 இப்ப கேள்வி என்னன்னா..

 (1) இஸ்லாத்தில் இது போன்றெல்லாம் நடக்குமா என்றால், அப்ப நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் செய்த அனைத்து முஃஜிசாத்துகளையும் அதனை ஒத்த ஹதீஸ்களையும் மறுப்பீர்களா..??

 (2) சம்பவம் நடந்த அன்னக்கு அங்கதான் இருந்தனு சொல்றீங்களே அதனை தங்களால் நிரூபிக்க இயலுமா..?? நிரூபித்தே ஆக வேண்டும்.

 (3) மஸ்ஜிதுன் நபவி ஒரு தர்கானு சொல்றீங்களே அப்புறம் எத கிழிக்குறதுக்கு அங்க போனீங்க..??

 (4) உடைக்கப்பட வேண்டிய கட்டடம்னு சொல்லிட்டு அப்புறம் என்ன அத்தருக்கு அங்க ஐவேளை தொழுதீங்க...??

 (5) தமிழ்நாட்டில் தாங்கள் எந்த தர்காவிலும் சென்றதைகூட நாங்கள் பார்த்ததில்லை, அப்படியிருக்க நபியின் தர்காவிலே ஐவேளை தொழுததற்கான காரணம் அவசியம் குடுத்தே ஆக வேண்டும்.

 (6) தாங்கள் இஸ்லாத்திற்காக உயிரையும் கொடுக்கும் சத்திய கூட்டம் என்றால், மஸ்ஜிதுன் நபவி இடிக்கப்பட வேண்டிய கட்டடம்னு சவ்தியில சொல்லிட்டு வாங்க சார் பாப்போம். அப்ப உங்க வீராப்பு தெரிஞ்சுடும்.

 (7) ஏதோ Light தவறுதலா எரிஞ்சுடுக்கும் அப்படின்னா, அப்ப அங்க நின்னுட்டு தக்பீர் சொல்பவர்களெல்லாம் மடையர்களா..?? அவர்களுக்கு தெறியாதா light எப்படி எறியும்னு..?? அங்க நிக்குற அரபியெல்லாம் கிருக்கனுங்களா..??
 அங்க இருக்குறவங்களுக்கு தெறியலயாம் ஆனா இவரு கண்டு புடிச்சுட்டாரு மண்ணடி ஆய்வு மண்ணண் அண்ணணின் அடி விழுது.

 அடி விழுகத்தான் போகுது

ஸஹீஹான ஹதீஸை மறுப்பவரின் நிலை

ஸஹீஹான ஹதீஸை மறுப்பவரின் நிலை
 கேள்வி:
 ஸஹீஹான ஹதீஸை மறுப்பவர் காஃபிராகி விடுவாரா?சிலர் புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் வரும் சில ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி அவற்றை மறுக்கின்றனா.இவர்களின் நிலை என்ன?இவர்கள்காஃபிராகி விடுவார்களா?
 பதில்:
 நபியவர்களின் ஸுன்னா இஸ்லாமிய சட்டவாக்கத்தின் இரண்டாவது மூலாதாரமாகும். அல்குர்ஆனைப் பொன்றே அதுவும் வஹீயாகும்.“அவர் (நபி (ஸல்) ) மனோ இச்சைப்படி பேசுவதில்லை.அ(வர் பேசுவ)து வஹீயே அன்றி வேறில்லை”. (53: 3 – 4)
 நபி (ஸல்) அவர்களது பேச்சுக்கும் அவர்களது ஹதீஸுக்கும் மற்றும் அவர்களது சட்டங்களுக்கும் முஃமின்கள் பூரணமாகக் கட்டுப்பட வேண்டுமென்று அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நபி (ஸல்) அவர்களது பேச்சைக் கேட்டு அதை ஏற்காமல் மறுப்பவனிடம் அறவே ஈமான் இல்லை என்று தன்மீது சத்தியமிட்டு அல்லாஹ் கூறியுள்ளான்.(நபியே!) உம் இரட்சகன் மீது சத்தியமாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமாயாகக் கட்டுப்படும்வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (4:65)
 எனவேதான், பொதுவாக ஸுன்னாவின் ஆதாரத் தன்மையை மறுப்போர், அல்லது நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை, அது நபியவர்களின் கூற்றுத்தான் என்பதை அறிந்த நிலையில் அதனை மறுப்போர் காஃபிர்களாகக் கருதப்படுவர் என்பதில் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
 இமாம் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறாh;கள்.“ரசூல் (ஸல்) அவர்களைத் தொட்டும் ஒரு செய்தி கிடைத்து, அது ஸஹீஹானது என்று ஏற்றுக் கொண்ட பின் தக்வா இன்றி யார் அதை மறுக்கின்றாரோ அவா; காஃபிராவார்;”
 இமாம் சுயூத்தீ (ரஹ்) அவர்கள்கூறினார்கள் :
 “அறிந்து கொள்ளுங்கள்! உஸுலலுல் ஹதீஸில் அறியப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாக வந்த ஹதீஸ் ஆதாரமாகக் கொள்ளத்தக்கது என்பதை மறுப்பவர் காஃபிராகி விடுவார். இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு அவர் வெளியேறி விடுவார். மேலும் அவா; யூதர்களுடன் அல்லது கிறிஸ்வதவர்களுடன் அல்லது அவர் நாடிய நிராகரிக்கும் கூட்டத்துடன் மறுமையில் எழுப்பப்படுவார்.”(மிஃப்தாஹுல் ஜன்னா பக்-14)
 மேலும், அல்லாமா இப்னுல் வஸீர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “ ரஸுல் (ஸல்) அவர்களது ஹதீஸ்தான் என்று அறிந்த நிலையில் ஒருவர் ஹதீஸை பொய்ப்படுத்ு தெளிவான குஃப்ர் ஆகும்.”(அல்அவாஸிம் வல்கவாஸிம் 2⁄274)
 அல்லஜ்னா அத்தஇமா (சஊதி ஃபத்வா வழங்கும் சபை) பின்வருமாறு ஃபத்வா வழங்கியுள்ளது.
 “சுன்னாவைக் கொண்டு அமல் செய்ய மறுப்பவார் காபிராவார். ஏனெனில் அவா;
 அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மற்றும் முஸ்லிம்களது ஏகோபித்த முடிவையும் பொய்ப்படத்துவராவார்”( ஃபத்வா இரண்டாவது தொகுதி 2⁄194)

உளு இன்றி குர்ஆனைத் தொடலாமா?

குர்ஆனைத் தொடுதல்:

குர்ஆனைத் தொடக்கூடியவர் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கிலிருந்து தூய்மையானவராக இருக்க வேண்டும். அதாவது உளு இல்லாதவர்களும், குளிப்பு கடமையானவர், மாதவிடாய் பெண்கள் மற்றும் பிள்ளைப் பேறு உதிரப் போக்குள்ள பெண்கள் ஆகியோர் இறைவேதம் குர்ஆனைத் தொடக்கூடாது.

பரிசுத்தமானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டுமென்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் மூன்று:
இறைமறை வேதம் அல்குர்ஆன்
இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளான ஹதீது.
நபித் தோழர்களின் ஏகோபித்த முடிவான இஜ்மாஃ

குர்ஆன்: இறைவன் கூறினான்:

لَا يَمَسُّهُ اِلَّا الْمُطَّهَّرُوْنَ (الواقعة 79

‘தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் 56:79)

இச்செய்தியின் மூலம் இறைவன் குர்ஆனின் மாண்பை வெளிப்படுத்துகிறான். தூய்மையானவர்கள்தான் என்று கூறி ஒரு வரைமுறையை இறைவன் விதித்துவிட்டதால் மற்றவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற அழுத்தமான அர்த்தம் இவ்வசனத்தில் உள்ளடங்கியுள்ளது.

(நூல்: ஃதகீரா 1-238 ஆசிரியர் -கர்ராஃபீ)

மனிதர்களில் தூய்மையானவர்கள் என்பதன் பொருள்:
ஷிர்க் எனும் இணைவைப்பு, குஃப்ர் எனும் இறைமறுப்பு இவ்விரண்டை விட்டும் நீங்கி உளத்தூய்மையுடன் இருப்போர்.
புலன்களுக்குத் தெரிகின்ற நஜீஸ் எனும் அசுத்தத்தை விட்டும் உடல் தூய்மையாக இருப்போர்.
ஹதஃத் எனும் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கை விட்டும் நீங்கியிருப்போர்.

மேற்கண்ட வசனத்திலுள்ள வாசகம் வெளித்தோற்றத்தில் அமைந்திருந்தாலும் கட்டளை வாக்கியமாகவே இங்கே கருதப்படும்.

(நூற்கள்: தஃப்ஸீர் பஙவி 5-301, தஃப்ஸீர் இப்னு கதீர் 4-299)

ஹதீது:

عَنْ حَكِيْمِ ابْنِ حِزَامِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: لَمَا بَعَثَنِيْ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم اِلٰى اليمن قال :لَاتَمْس القُرْآنَ اِلَّا وَاَنْتَ طَاهِرٌ

ஹகீம் இப்னு ஹிஜாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய சமயம் என்னிடம் கூறினார்கள். நீங்கள் தூய்மையானவர்களாக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொட வேண்டும். (இல்லையென்றால் தொடக்கூடாது)’

நூற்கள்: ஹாகிம் எண்: 6066, தப்ரானி (கபீர்) எண்: 306, தார குத்னீ எண்: 366)

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِي الله عنه قَالَ: قَالَ النَبِيُّ صلى الله عليه وسلم لَايَمَسَّ الْقُرْآنَ اِلَّاطَاهِرٌ

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்தார்கள்: ‘பரிசுத்தமானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

நூற்கள்: தாரகுத்னீ 383, தப்ரானி (ஸஙீர்) 1160

عَنْ عُثْمَانِ بِنِ اَبِي العَاصِ قَالَ: وَفَدْنَا عَلَى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فوجدُوْنِيْ اَفْظَلَهُمْ اَخَذًا لِلْقُرْآنِ وَقَدْ فَظَلْتَهُمْ بِسُوْرَةَ البَقَرة قَالَ النَّبِيُ صلى الله عليه وسلم قَدْ اَمَّرْتُكَ عَلٰى اَصْحَابِكَ وَاَنْتَ اَصْغَرُهُمْ وَلَا يَمَسَّ الْقُرْآنَ اِلا وانت طاهر (رواه التبراني فى الكبير

உத்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘நாங்கள் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்தோம். எங்களில் குர்ஆனை நன்கு ஓதக் கூடியவனாக நானிருந்தேன். இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்னிடம் சொன்னார்கள். ‘நீர் சிறுவராக இருப்பினும் உம் கூட்டத்தினருக்கு தலைவராக உம்மை நியமிக்கிறேன். நீர் தூய்மையானவராக இருக்கும்போது தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’

(நூல்: தப்ரானி (கபீர்) 8255)

عن عبد الله بن ابي بكر ابن محمدبن عمرو بن حزم عن ابيه عن جدّه قال: كان فى كتاب النبي صلى الله عليه وسلم لعمروبن حزم: لا يمس القرآن الّا علٰى طهر(رواه مالك وابن حبان والدار مي والبيهقى والدار قطني

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது. ‘து|ய்மையானவரான நிலையில்;தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’

நூற்கள்: முஅத்தா 466, தாரமி 2195, பைஹகி 376, தாரகுத்னி 385, இப்னு ஹிப்பான் 6703.

குர்ஆன் ஓதக்கூடாத நிலைகள்:
குளிப்பு கடமையானவர்கள் – ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குர்ஆனை ஓதக் கூடாது.
மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதக் கூடாது.
பேறுகால உதிரப் போக்குள்ள பெண்கள் குர்ஆன் ஓதக் கூடாது. உளு இல்லாதவர்கள் குர்ஆனைத் தொடாமல் ஓதுவது கூடும்.

சான்றுகள்:

عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال لا تقرأ الحائض ولا الجنب شيئا من القرآن (رواه الترمذي والبيهقي فى السنن الكبري والبن عساكر والدار قطني وابن ماجة

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் எங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஆனால் குளிப்பதற்கு கடமையான நிலையில் ஓதிக் காண்பிக்க மாட்டார்கள்’.

அறிவிப்பாளர்: அலி ரலியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதீ எண்: 136

عن علي قال قال رسول الله صلى الله عليه وسلم يقرونا القرآن علٰى كل حال مالم يكن جنبا (رواه الترمذي

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிவறை சென்று வந்த பின்னால் குர்ஆன் ஓதுவார்கள். மாமிசம் உண்பார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவதிலிருந்து தடுப்பது குளிப்பு கடமை என்ற நிலை மட்டுமே.

அறிவிப்பாளர்: அலி ரலியல்லாஹு அன்ஹு நூல்: தப்ரானி 6873.

عن علي انه اتي بوضوء فتوضأ وضوءه للصّلاة قال: هٰكذا رايت رسول الله  توضأ ثمّ شيئا من القرآن ثم قال: هٰذا لمن ليس بجنب قاما الجنب فلا ولآيه     (رواه احمد

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உளு செய்யும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தொழுகைக்கு உளு செய்வது போல் உளு செய்து விட்டு கூறினார்கள், ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளு செய்யும்போது இவ்வாறே நான் பார்த்தேன். பிறகு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனில் சில வசனங்கள் ஓதிய பிறகு கூறினார்கள். குளிப்பு கடமையில்லாத நபருக்கு குர்ஆன் ஓதுவது கூடும். ஆனால் குளிப்பு கடமையானவரோ ஒரு வசனம் கூட ஓதக் கூடாது.

இஜ்மாஃ

இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் உமர் ரலியல்லாஹு அன்ஹு தனது சகோதரியின் இல்லத்திற்கு வருகை தந்தபோது குர்ஆன் ஓதப்படும் ஓசையைக் கேட்டார்கள். பிறகு தனது சகோதரியிடம் கேட்டார்கள்.

فقال عمر: اعطوني الكتاب الذي عندكم اقراه

‘உங்களிடம் உள்ள குர்ஆனை என்னிடம் கொடுங்கள்.’

فقالت له اخته: انك رجس ولا يمسه الا المطهرون فقم واغتسل و توضَّأ

‘நீங்கள் அசுத்தத்தில் உள்ளீர்கள். இக்குர்ஆனை சுத்தமானவர்கள் தான் தொட வேண்டும். ஆகவே எழுந்து குளித்து விட்டு அல்லது உளு செய்து விட்டு வாருங்கள்.’

فقام عمر فتوضأ ثم اخذ الكتاب فقراطه (رواه الدارمي والبيهقي فى دلائل النبوة

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து சென்று உளு செய்து விட்டு குர்ஆனை எடுத்தார்கள். தாஹா எனும் அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: பைஹகி (தலாயிலுன்னுபுவ்வா) 546

ثم رجع فقلنا له : توضأ يا ابا عبدالله لعلنا ان نسألك عن آي من القرآن قال: فاسألوا فاني لا امسه انه لا يمسّه الا المطهرون قال فسالناه فقرأ علينا قبل ان يتوضّا (رواه ابن ابي شيبة والبيهقي فى السنن الكبرى)

அப்துர் ரஹ்மான் இப்னு யஜீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஸல்மான் ஃபார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அவர்கள் கழிவறை சென்று வந்தார்கள். அவர்களிடம் நாங்கள் கூறினோம். நீங்கள் ஒளு செய்து கொள்ளுங்கள். நாங்கள் குர்ஆனில் சில வசனங்கள் பற்றி உங்களிடம் கேட்க விரும்புகிறோம்.

ஸல்மான் ஃபார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்களைப் பார்த்து சொன்னார்கள்: ‘என்னிடம் கேளுங்கள். நான் குர்ஆனை தொடப் போவதில்லையே. குர்ஆனைத் தொடுவதற்குத்தான் தூய்மை அவசியம். பிறகு அவர்களிடம் (சில கேள்விகள் கேட்டோம்) அவர்கள் உளு செய்வதற்கு முன்பாக சில வசனங்களை எங்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள்.

நூற்கள்: இப்னு அபீஷைபா எண் 1100, பைஹகீ 416

விவாதம்: 1

56-79 வசனத்தில் இறைவன் கூறிய வேதம் தற்போது மக்கள் கைகளில் தவழும் குர்ஆனல்ல. வானுலகிலுள்ள லவ்ஹுல் மஹ்ஃபூல் பலகையில் எழுதப்பட்ட வேதத்தையே குறிக்கிறது.

மேலும் இவ்வசனத்திலுள்ள தூய்மையானவர்கள் என்பது மலக்குகளையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஏனென்றால் அவர்கள் தான் பாவம் மற்றும் இணைவைப்பிலிருந்து தூய்மையானவர்கள்.

விளக்கம்:

لا يمسه الّا الطهرون

தூய்மையானவர்களைத் தவிர (வேறு எவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள்(56-79)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள வேதம் குர்ஆனை குறிப்பதுபோல மக்கள் கைகளிலுள்ள குர்ஆனையும் குறிக்கும். காரணம் இவ்வசனத்திற்குப் பிறகு,

تنزيل من رب العالمين

அகிலங்களின் அதிபதியி(இறைவனி)டமிருந்து இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டது.’ (6-80)

என்று கூறப்பட்டுள்ளது. இறைவனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்ட குர்ஆன் என்பது மனிதர்களின் கரங்களிலுள்ள குர்ஆனைத்தான் குறிக்குமே தவிர லவ்ஹுல் மஹ்பூலிலுள்ள குர்ஆனை அல்ல. எனவே தூய்மையானவர்களே தொட வேண்டும் என்ற வசனத்திலுள்ள வேதம் விண்ணுலகிலுள்ள குர்ஆனையும், மண்ணுலகிலுள்ள குர்ஆனையும் அறிவிக்கும். ஏனெனில் எதார்த்தத்தில் இரண்டும் ஒன்றே.

இவ்வசனத்திலுள்ள தூய்மையானவர்கள் என்பது மலக்குகளை மற்றும் மனிதர்களை குறிக்கும். மலக்குகள் மட்டும் தான் குறிக்கும் என்ற சிலரது கருத்தை ஒருவாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட அதுவும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்குத்தான் வலு சேர்க்கிறது.

அதாவது விண்ணிலுள்ள குர்ஆனை அங்கிருக்கும் தூய்மையானவர்கள் தொடுகிறார்கள் என்றால், அதுபோன்று மண்ணுலகிலிருக்கும் குர்ஆனையும் இங்குள்ள தூய்மையானவர் தான் தொட வேண்டும் என்ற கருத்தை இவ்வசனம் நமக்கு பாடமாக போதிக்கிறது.

மேலும் மண்ணுலகிலுள்ள குர்ஆன் பரிசுத்தம் வாய்ந்ததென்று இறைவன் குர்அனில் தெளிவுபடுத்துகிறான்.

رَسُوْلٌ مِّنَ اللهِ يتْلُوا صُحَفًا مُّطَهَّرةَ(البينة :2

இறைவனிடமிருந்து வந்த தூதர் தூய்மையான ஏடுகளை ஓதுவார் (98:2)

فِيْ صُحْفٍ مُكَرَّمَةٍ مَّرْقُوْعَةٍ مُّطَهَّرَةِ ( عبس : 13-14

‘இது கண்ணியமிக்க உயர்வுள்ள தூய்மையான ஏடுகளில் உள்ளது. வேதங்கள் தூய்மையானவை என இறைவன் அடையாளம் காட்டி விட்டான். ஆகவே சுத்தமில்லாதவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது.

நூல்: ஷரஹுல் உம்தா (1:384)

விவாதம் 2:

இறைவன் கூறினான் هُدًا لِنَّاسِ(البقرة : 185இந்த வேதம் மக்களனைவருக்கும் நேர்வழி காட்டக் கூடியது.’

இறைநம்பிக்கையுள்ள தூய்மையானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டும் என சட்டமிருந்தால் இறைமறுப்பாளர்கள் எவ்வாறு குர்ஆனைத் தொட முடியும்? ஓத முடியும்? எவ்வாறு நேர்வழி பெற முடியும்? குர்ஆன் எல்லோருக்கும் நேர்வழி காட்டும் என இறைவன் கூறியது நடைமுறையில் சாத்தியமற்றதாகி விடுகிறது. இது குர்ஆன் மக்களை சென்றடைய விடாமல் தடுக்கும் சூழ்ச்சியாகும்.

விளக்கம்:

குர்ஆன் மொழி பெயர்ப்புகளை தமிழ்- ஆங்கிலம் மற்றும் பிற மொழி பெயர்ப்புகளை இறைமறுப்பாளர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் அதைப் படித்து புரிவதற்கும் இறைவனை அறிவதற்கும் மற்றும் இஸ்லாம் மார்க்கத்தை தெரிவதற்கும் வாய்ப்புண்டாகும்.

தர்ஜமாவில் குர்ஆன் வசனங்களிலிருந்தாலும் இறை மறுப்பாளர்கள் அதைத் தொடுவதற்கும் தடையில்லை. ஏனென்றால் தர்ஜமாவிற்கு குர்ஆன் என்று கூறப்படாது. குர்ஆனின் சட்டம் குர்ஆனுக்குத்தானே தவிர தர்ஜமாவிற்கு அல்ல.

அதேபோல குர்ஆனுக்கு அரபி மொழியில் விளக்கம் எழுதப்பட்ட தப்ஸீருக்கும் குர்ஆன் என்று சொல்லப்பட மாட்டாது. தப்ஸீர் என்பது குர்ஆனின் விரிவுரை நூலாகும். எனவே குர்ஆனுக்குரிய சட்டம் இதற்குக் கிடையாது.

இறை மறுப்பாளர்களால் படிக்கவும், புரியவும் முடியாத அரபி மொழியில் அமைந்த மூல குர்ஆன் பிரதியைக் கொடுக்காமல் படித்துப் புரியும் வகையிலுள்ள மொழி பெயர்ப்பு தர்ஜமாக்களை கொடுக்க வேண்டுமென்றுதான் சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் கூறுகின்றனர்.

وانزلنا اليك الذكر لتبين لناس مانزل اليهم (النحل : 44

நபியே! மக்களுக்கு தெளிவுபடுத்த  வேண்டுமென்பதற்காக உங்களுக்கு குர்ஆனை இறக்கி வைத்தோம்.’

لقد من الله على المؤمنين اط بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته يزكيهم ويعلمهم الكتاب والحكمة ( آل عمران : 164

‘இறை நம்பிக்கையாளர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்து இறைவன் உறுதியாக பேரருள் புரிந்துள்ளான். அவனுடைய வசனங்களை அவர்களுக்கு அவர் ஓதிக்காட்டுவார். அவர்களை தூய்மைப்படுத்துவார். வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு கற்று கொடுப்பார்.’ (3-164)

குர்ஆன் அரபி மொழியிலிருப்பதால் அரபி பேசுபவர்கள் எளிதாக விளங்கிக் கொள்ள இயலுமென்றிருந்தால் இறைவன்  திருத்தூதரை அனுப்பி வைத்திருக்க மாட்டான். மக்களுக்கு விளக்கமளிக்க மற்றும் கற்று கொடுக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருக்க மாட்டான்.

அதிய்யி இப்னு ஹாதிம் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ‘நோன்பு காலத்தில் கருப்பு கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்கு தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள். (2-187) என்ற இறைவசனம் இறங்கிய போது கறுப்புக் கயிறொன்றையும், வெள்ளைக் கயிறொன்றையும் எடுத்து என் தலையணைக்குக் கீழே வைத்துக் கொண்டேன். இரவு முழுவதும் கவனித்துக் கொண்டிருந்தேன். எனக்கு தெளிவாகவில்லை. காலையில் இறைத்தூதர் நபிகளாரிடம் சென்று நடந்தவற்றைக் கூறினேன். அவர்கள் கூறினார்கள்: ‘கருப்புக் கயிறு என்பது இரவின் இருளையும், வெள்ளைக் கயிறு என்பது வைகறை வெளிச்சத்தையும் குறிக்கும்.’

நூற்கள்: புகாரி எண்: 1783,  முஸ்லிம் எண் 1824

ولقد يسرنا القرآن للذكر فهل من مذّكر (القمر:17

 ‘ஓதி அறிவுரை பெற குர்ஆனை திண்ணமாக நாம் எளிதாக்கியுள்ளோம். அறிவுரை பெறுவோர் உண்டா?  (54-17)

ஓதுவதற்கும் விளக்கமளிக்கப்பட்டால் விளங்குவதற்கும் மேலும் அறிவுரை பெறுவதற்கும் குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது என்றே இவ்வசனத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் என்னதான் தெளிவுபடுத்தினாலும் எல்லோராலும் விளங்க முடியாத எத்தனையோ நூல்கள் இவ்வையகத்தில் உண்டு. இறைமறை வேதம் குர்ஆன் அவ்வாறல்ல என்பதுதான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

விவாதம் 3

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திஹ்யத்துல் கல்பி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தனது தூதராக ரோமபுரி மன்னர் ஹெர்கலிஸிடம் அனுப்பி வைத்தார்கள். இஸ்லாத்தில் இணைய அழைப்பு விடுத்து அவருக்கு ஒரு கடிதத்தையும் கொடுத்தனுப்பினார்கள். அக்கடிதத்தில் கீழ்காணும் இவ்வசனம் எழுதப்பட்டிருந்தது.

ياَ اَهْلَ الكِتَابِ تَعَالَوْ اِلٰى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ اَلَا نَعْبُدَ اِلَّا الله وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَخَذَ بَعَضُنَا بعضا اَرْبَابًا مِن دُوْنِ اللهِ فَاِنْ تَوَلَّوْا فَقولوا اشهدوا بِاَنَّا مسلمون (ال عمران: 64

‘வேதமுடையவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியிலுள்ள பொதுவான விசயத்தின் பக்கம் வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு எதையும் இணையாக்க மாட்டோம். அல்லாஹ்வைத் தவிர நம்மில் யாரும் எவரையும் தெய்வங்களாக ஆக்கக் கூடாது. அவர்கள் புறக்கணித்தால் உறுதியாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறிவிடுங்கள்’ (3:64)

நூற்கள்: புகாரி எண் 6,  முஸ்லிம் எண் 3322

இறைவசனம் எழுதப்பட்ட அக்கடிதத்தை இறைமறுப்பாளரான ஹெர்குலிஸ் தொடுவார் என்று தெரிந்தேதான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்தனுப்பியுள்ளார்கள். தொடுவது கூடாது என்றிருந்தால் இறைவசனத்தை அக்கடிதத்தில் எழுதியிருக்க மாட்டார்கள்.

இறைமறுப்பாளர்களுக்கே தொடுவது கூடும் எனும் போது இறை நம்பிக்கையாளர்களுக்கு ஏன் கூடாது?

விளக்கம்:

குர்ஆனுடைய வசனம் எழுதப்பட்ட கடிதத்தை சுத்தமில்லாமல் தொடலாம் என்பதற்குத் தான் இந்த ஹதீஃத் ஆதாரமே தவிர குர்ஆனையே தொடலாம் என்பதற்கல்ல. அது போன்ற கடிதத்திற்கு குர்ஆன் என்று கூறப்படாது. எனவே குர்ஆனுடைய சட்டம் இதற்கு பொருந்தாது.

அல்ஹாஃபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹெர்கலிஸ் மன்னனுக்கு எழுதிய கடிதத்தில் இறைவசனம் அல்லாமல் வேறு செய்திகளும் எழுதப்பட்டிருந்தன. இக்கடிதம் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தஃப்ஸீர் மற்றும் ஃபிக்ஹ் நூற்களைப் போன்றுள்ளதால் அவற்றிற்குரிய சட்டமே இக்கடிதத்திற்கும் பொருந்தும்.

விவாதம் 4

ஈமான் இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் தூய்மையானவனே! ஏனெனில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்பினார்கள்.

اِنَّ الْمُؤْمِنَ لَا يَنْجُسُ (رواه البحاري و مسلم

‘உறுதியாக இறைநம்பிக்கையாளன் அசுத்தமாக மாட்டான்.’

நூல்: புகாரி 276,   முஸ்லிம் 556

எனவே உளு இல்லாமல் குர்ஆனைத் தொட எத்தடையுமில்லை.

விளக்கம்:

இஸ்லாமிய மார்க்கத்தில் சுத்தம் இருவகைப் படும்.
உள்ள சுத்தம். 2. உடல் சுத்தம்.

ஈமான் – இறைநம்பிக்கை கொள்ளாமல் இணை வைப்போர் அனைவரும் உள்ளம் அசுத்தமானவர்கள். இவர்களைப் பற்றி இறைவன் அருள்மறையில் கூறினான்:

اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجِسُ (التوبة :28

‘இணை வைப்போரெல்லாம் உறுதியாக அசுத்தமானவர்களே’

இறை மறுப்பாளர்களின் உடலும், உடையும் தூய்மையாக இருந்தாலும் அவர்கள் அசுத்தமானவர்களே என்று இவ்வசனம் கூறுவதற்குரிய காரணி அவர்களின் உள்ளங்களை கருத்தில் கொண்டே தவிர அவர்களின் உடல்களை கவனித்தல்ல என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இணைவைப்பை விட்டுவிட்டு ஈமான் – இறைநம்பிக்கை கொள்கின்றபோது உள்ளம் தூய்மை பெறுகிறது. இதையே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்பினார்கள்.

‘உறுதியாக இறை நம்பிக்கையாளன் அசுத்தமாக மாட்டான்’. நூல்: புகாரி 276.

இத்தகைய இறைநம்பிக்கையாளர்களுக்கு உடல் சுத்தம் அவசியமென இஸ்லாம் மார்க்கம் போதிக்கிறது. அதனால்தான் உளு, குளிப்பு மற்றும் நஜீஸ் அகற்றுதல் போன்ற சட்டங்கள் அவர்களுக்கு உண்டு என்பதையும் இஸ்லாம் சொல்லிக் காட்டுகிறது.

இறைநம்பிக்கையாளன் தூய்மையானவன். எனவே குர்ஆனைத் தொட உளு அவசியமில்லை என்ற வாதத்தை வஹ்ஹாபிகள் முன்வைத்தால் தொழுகைக்கும் ஒளு அவசியமில்லை என்ற அபாயகரமான அர்த்தமல்லவா வந்து விடும். தொழுகைக்கு உளு கட்டாயம் என்பதற்கு சான்றுகள் உள்ளன என்று வஹ்ஹாபிகள் கூறினால் அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்ளலாம். குர்ஆனைத் தொடுவதற்கு உளு தேவை என்பதற்கும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

விவாதம் 5:

குர்ஆன் ஓதுவது திக்ரில் உள்ளடங்கிய வணக்கம். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நேரங்களிலும் திக்ர் செய்துள்ளார்கள் என்று ஹதீதில் வந்துள்ளது.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்:

عن عائشة قالت كان انبي صلى الله عليه وسلم على كل احيانه (رواه مسلم والترمذي واحمد

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  அல்லாஹ்வை எல்லா நேரங்களிலும் திக்ர் செய்யும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.’

நூல்: முஸ்லிம் 558, அஹ்மத் 23274, திர்மிதி 330

எல்லா நேரங்களிலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திக்ர் செய்துள்ளார்கள் என்றால் குர்ஆன் ஓதுவது திக்ரில் கட்டுப்பட்டதுத என்ற அடிப்படையில் குளிப்பு கடமையான சமயத்திலும் குர்ஆன் ஓதியிருப்பார்கள் என யூகிக்க முடிகிறது.

விளக்கம்:

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்றில் வஹ்ஹாபிகள் சுற்றி வளைத்து தங்களது யூகத்தை திணிக்கிறார்கள். குளிப்பு கடமையானவர்கள் குர்ஆன் ஓதலாம் என்பதற்கு எந்த சான்றும் அதிலில்லை.

ஏனென்றால் எல்லா நேரங்களிலும் குர்ஆன் ஓதுவார்கள் என்ற வாக்கியம் இடம் பெறவில்லை. திக்ர் செய்வார்கள் என்றுதான் உள்ளது. திக்ர் என்பது பல பொருளுள்ள ஒரு பொதுச் சொல். குர்ஆன், இறைப்புகழ் மற்றும் பிரார்த்தனை சம்பந்தப்பட்டவைகளை குறிக்கும் வார்த்தைதான் திக்ர்.

ஆகவே ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் செய்தியின் மூலமாக குர்ஆன் அல்லாத மற்ற திக்ருகளை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதியுள்ளார்கள் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்:

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் குர்ஆனை எங்களுக்கு ஓதிக் காண்பிப்பார்கள். ஆனால் குளிப்பு கடமையான நிலையில் மட்டும் ஓத மாட்டார்கள்.’

நூல்: அஹ்மத், அபூதாவூது, திர்மிதி, இப்னு மாஜா, நஸாயீ.

மேலும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியது நாவால் மொழியும் திக்ரைப் பற்றியதல்ல. உள்ளத்தால் நினைக்கும் திக்ரைப் பற்றியதுதான் என்பதையும் நம்மால் வெள்ளிடை மழையென அறிந்து கொள்ள முடியும்.

காரணம் எல்லா நேரமும் என்பது கழிவறையில் இருக்கும் காலத்தையும் உள்ளடக்கும். ஆனால் கழிவறையில் இருக்கும் போது நாவால் திக்ர் செய்தல் இஸ்லாமிய மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

‘ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

عَنِ ابْنِ عُمَرَ اَنْ رَجُلٌا مَرَّ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يبُول فسلَّمَ قَلَمْ يردُّ عَلَيْهِ (رواه مسلم وابو داؤد والترمذي والنسائي وابن ماجة

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக சென்ற நபித் தோழர் ஒருவர் ஸலாம் சொன்னார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் ஸலாம் கூறவில்லை.’

நூல்: முஸ்லிம் 555, திர்மிதி 37

எனவே எல்லா நேரமும் திக்ர் செய்தல் என்பது கழிவறையில் இருந்தாலும் கூட உள்ளத்தால் செய்யும் திக்ரில் மட்டுமே சாத்தியமாகும். இதிலிருந்து ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் எல்லா நேரமும் திக்ர் என்ற கூற்று குர்ஆன் ஓதுவதற்கு அறவே பொருந்தாது என்று உறுதிபடக் கூற முடியும்.

விவாதம் 6

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் குர்ஆன் ஒன்று திரட்டப்படவில்லை. எனவே தூய்மையானவர்கள் குர்ஆனைத் தொடவேண்டும் என இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் கட்டளையிட்டிருக்க வாய்ப்பில்லை.

விளக்கம்:

எல்லா வசனங்களும் ஒன்று திரட்டப்பட்ட தொகுப்புக்கு குர்ஆன் என்று சொல்லப்படுவது போன்றே குர்ஆனின் சில வசனங்கள் மட்டும் எழுதப்பட்டவைகளுக்கும் குர்ஆன் எனக் கூறலாம்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் மரப்பலகைகளிலும் எலும்புத் துண்டுகளிலும் மற்றும் கற்களிலும் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டன. இவைகளுக்கெல்லாம் குர்ஆன் எனும் வார்த்தையை இறைவனும் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பிரயோகித்துள்ளனர்.

குர்ஆனை தெளிவாக நிறுத்தி ஓதுவீராக! (முஜம்மில் 4) ورتل القرآن ترتيلا

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

عن ابي سعيدٍ الخُذْري قَال قَال رسول صلى الله عليه وسلم لا تكتبوا عني شيئًا الاَّ القرأن فمن كتب عني شيئًا غير القرأن فليمحه (رواه احمد وم

‘நான் கூறுபவற்றில் குர்ஆனைத் தவிர வேறெதையம் எழுதாதீர்கள். குர்ஆன் அல்லாததை யாராவது எழுதியிருந்தால் அவர் அதை அழித்து விடட்டும்.’

நூல்: அஹ்மத் எண்: 10731, முஸ்லிம் எண்: 5326

குர்ஆன் வசனங்கள் மட்டும் எழுதப்பட்டவைகளுக்கு அவை சில வசனங்களாக இருப்பினும் குர்ஆன் எனும்சொல் பொருந்துமென்பதை மேற்கண்ட இறைவசனமும் நபிமொழியும் அறிவிக்கின்றன.

குர்ஆனைத் தவிர வேறெதையும் எழுதக்கூடாது என்ற தடையை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்னர் தளர்த்தி விட்டார்கள். அம்ர் இப்னு ஹஜ்ம் அவர்களுக்கு கூறினார்கள்:

عن عبد الله ابن عمرو قال قال  رسول الله صلى الله عليه وسلم اكتب فوالذي نفسى بيده ما خرج منِّي الا الحقُّ (رواه احمد وابو داود والدارمي

(அம்ரே  நான் கூறுவதை) எழுதுக! எனது ஆத்மா யார் கைவசமுள்ளதோ அ(ந்த இறை)வனின் மீது ஆணை(யிட்டுக் கூறுகிறேன்) என்னிடமிருந்து வெளிப்படுகின்ற (சொல்-செயல்) அனைத்தும் சத்தியமே. – நூல்: அஹ்மத் எண் 6221.

குர்ஆனோடு மற்றவை கலந்து விட வாய்ப்புள்ளது என்று அஞ்சிய சமயத்தில் குர்ஆனை மட்டும்தான் எழுத வேண்டுமென இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அந்த அச்சம் இனியில்லை என்ற நிலைவந்தபோது தனது மணிமொழிகளான ஹதீதுகளை எழுதுவதற்கு அனுமதி வழங்கினார்கள்.

விவாதம் 7:

தூய்மையில்லாமல் குர்ஆனைத் தொடக்கூடாதென்பதற்கு இஜ்மாஃ -ஒருமித்த கருத்து என்ற ஆதாரத்தை ஒப்புக் கொள்ள இயலாது. ஏனெனில் தாபியீன்களிலும் அதன்பின் வந்தவர்களிலும் ஒருசிலர் சுத்தமில்லாமல் குர்ஆனைத் தொடலாம் என்ற மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளனர். அதனால் இஜ்மாஃ – ஒருமித்த கருத்து என்ற ஆதாரம் அடிபட்டுப் போய்விடுகிறது.

விளக்கம்:

இந்த வாதம் ஏற்புடையதல்ல. ஏனென்றால் சுத்தமானவர்கள் தான் குர்ஆனைத் தொடவேண்டும் என்பதில் சஹாபா பெருமக்கள் ஒருமித்த கருத்துடையவர்களாக இருந்துள்ளனர். அவர்களின் காலத்தில் இதற்கு மாற்று கருத்துத தெரிவித்த ஒரு நபித்தோழர் கூட கிடையாது.

இதன்மூலம் தூய்மையின்றி குர்ஆனைத் தொடுவது மார்க்கத்தில் விலக்கப்பட்ட செயல் -ஹராம் என்பதே நபித்தோழர்களின் இஜ்மாஃ ஆக இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

விவாதம் 9:

தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொட மாட்டார்கள். (56:79)

இந்த வசனத்தில் தூய்மையானவர்கள் தான் குர்ஆனைத் தொடுவார்கள் என்ற செய்தி கூறப்பட்டுள்ளதே தவிர தூய்மையானவர்கள் தான் தொட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. எனவே செய்தியாக கூறப்பட்டதை கட்டளை அர்த்தமாக மாற்றக்கூடாது.

விளக்கம்:

அரபி இலக்கணப்படி செய்தி வாசகம் சூழ்நிலைக்கேற்ப சிலகட்டங்களில் கட்டளை வாசகமாக பொருள் கொள்ளப்படும். உதாரணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்தார்கள்.

لا يعضد شجرها (رواه الخاري والمسلم

மக்காவிலுள்ள மரம் வெட்டப்படமாட்டாது. நூல் புகாரி 109, முஸ்லிம் 2415

மக்காவின் மரம் வெட்டப்படாது என்ற செய்தி வாசகமா கஉள்ள இந்த நபிமொழி மக்காவின் மரம் வெட்டப்படக் கூடாது என்ற கட்டளை வாசகத்தின் பொருளைத் தருகிறது.

இமாம் ஜஸ்ஸாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: ‘பரிசுத்தமானவர்கள் தவிர (வேறெவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்ற வசனம் வெளித்தோற்றத்தில் செய்தி வாக்கியமாக இருப்பினும் அதன் அர்த்தம் கட்டளை வாக்கியத்திற்குரியதே. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், பரிசுத்தமானவரே குர்ஆனைத் தொட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதே இதற்கு காரணியாகும்.

விவாதம் 11

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவத்தில்தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டது.

எழுத்து வடிவில் அருளப்படாததைத் தொடுகின்ற பேச்சுக்கே இடமில்லை. தொடும் விதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தால் மட்டுமே தொடுதல் சம்பந்தப்பட்ட சட்டம் வரும்.

விளக்கம்:

பலகையில் பதியப்பட்டடோ அல்லது காகிதத்தில் எழுதப்பட்டோ குர்ஆன் அருளப்படவில்லை என்பதைத பாமர இஸ்லாமியனும் தெரிந்து வைத்துள்ளான்.

குர்ஆனுக்கு எழுத்துக்கள் உண்டு. குர்ஆன் ஓதுகின்றபோது எழுகின்ற ஒலிக்கும் எழுத்துக்கள் உண்டு. நபித்தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட குர்ஆனுக்கும் எழுத்துக்கள் உள்ளன. குர்ஆனில் எழுத்துக்கள் எழுதப்பட்டு கண்களுக்குத் தென்படும் வகையில் ஏதோ ஒரு பொருளாக குர்ஆன் அருளப்படவில்லை என்பது உண்மை. அதற்காக குர்ஆனுக்கு எழுத்து அமைப்பு இல்லை என்று கூறினால் அதைவிட வடிக்கட்டிய மதியீனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இறைவன் தனது அருள் மறையில் பல்வேறு இடங்களில் பிரயோகிக்கம் குர்ஆன் என்னும் சொல் நம்மிடம் உள்ள வேதத்தைக் குறிக்கிறது.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் குர்ஆனுடைய வசனங்கள் பலகைகளிலும், கற்களிலும், எலும்புகளிலும் எழுதி வைக்கப்பட்டன. இவைதான் குர்ஆன் என்றும் அன்று கருதப்பட்டது.

عن عبج الله ابن عمر قال نهي رسول الله صلى الله عليه وسلم يسافر بالقرآن الى ارض العدز (رواه البخاري والمسلم

‘அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘பகைவர் நாட்டிற்கு பயணம் செய்யும் போது குர்ஆன் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள்.’

நூல்: புகாரி 2768 முஸ்லிம் 3474

மேற்கண்ட ஹதீதில் கூறப்பட்ட குர்ஆன் என்னும் சொல் எழுத்து வடிவில் நம் கைகளில் உள்ள வேதத்தையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஒலி வடிவில் அமைந்த குர்ஆனை அல்ல.

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நால்வர் குர்ஆனைத் தொகுத்தார்கள். அவர்கள் அனைவரும் அன்ஸாரி தோழர்கள்;.

உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு

முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு

அபூ ஜைத் ரலியல்லாஹு அன்ஹு

ஜைத் இப்னு ஃதாபித் ரலியல்லாஹு அன்ஹு

-நூல்: புகாரி 3526

ஒலி வடிவில் அமைந்த குர்ஆனையா தொகுத்தார்கள். இந்த நான்கு தோழர்களும் இல்லையே!  எழுத்து அமைப்பிலுள்ள குர்ஆனைத் தானே!

انا انزلناه قرآنا عربيا  (سورة اليوسف : 2

‘உறுதியாக நாம் இதை அரபி மொழியில் அமைந்த குர்ஆனாக இறக்கி வைத்தோம்.’ (12:2)

மேலும் இறைவன் சொன்னான்:

بلسان عربي مبين (سورة الشعرآء : 195

தெளிவான அரபி மொழியில் குர்ஆனை ஜிப்ரயீல் இறக்கினார். (26:195)

மேற்கண்ட வசனங்கள் மூலமாக குர்ஆன் அரபி சொற்களால் அமைந்த வேதம் என்பதை இறைவன் அறிமுகம் செய்கிறான்.

உத்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (குர்ஆனை தொகுப்பதற்காக) ஜைத் இப்னு ஃதாபித் , அப்துல்லாஹ் இப்னு ஜுபைர், சயீத் இப்னு ஆஸ் மற்றும் அப்துர் ரஹ்மானிப்னு ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரை அழைத்து (அந்நால்வரில் குறைஷிக் குடும்பத்தைச் சார்ந்த மூவருக்கு சொன்னார்கள்.)

‘குர்ஆனை தொகுத்து எழுதும்போது உங்களுக்கும் ஜைத் இப்னு ஃதாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இடையில் ஏதாவதொன்றில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குறைஷி மொழியைக் கொண்டு குர்ஆனை எழுதுங்கள். ஏனென்றால் அவர்கள் மொழியில் தான் குர்ஆன் இறங்கியது.

யார் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒன்றுக்குப் பத்து என்ற அடிப்படையில் நன்மை கிடைக்கும். ‘அலிஃப் லாம் மீம்’ என்பது ஓர் எழுத்தென்று நான் சொல்லமாட்டேன். மாறாக அலிப் ஓர் எழுத்து லாம் ஓர் எழுத்து மீம் ஓர் எழுத்து.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதி

மேற்கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து குர்ஆன் எழுத்தமைப்பைக் கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

குர்ஆனும், ஹதீது குத்ஸியும் இறைவனுடைய பேச்சுக்கள் என்றாலும் இரண்டுக்கும் மத்தியில் வேறுபாடு உண்டு.

குர்ஆன் – பொருளும் வார்த்தையும் இறைதரப்பிலிருந்து வந்தது.

ஹதீது குத்ஸி – பொருள் இறைவனுடையது வார்த்தைகள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குரியது.

எனவேதான் குர்ஆனுடைய வசனத்திற்கு பதிலாக தொழுகையில் ஹதீது குத்ஸியை ஓதினால் தொழுகை கூடாது. அதேபோன்று ஹதீது குத்ஸியை படிக்கும்போது ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மை என்பதும் கிடைக்காது.

இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘சுத்தமில்லாதவன் குர்ஆனை சுமந்து செல்லக் கூடாது. குர்ஆனுள்ள பை மற்றும் உறைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும். தூய்மையில்லாதவன் குர்ஆனைத் தொட்டால் அது அழுக்காகி விடும் என்பதற்காக இச்சட்டமென்று யாரும் கருதிவிடக் கூடாது. சுத்தம் தேவை என்பதற்குண்டான காரணி குர்ஆனுக்குரிய கண்ணியத்தையும் மாண்பையும் அளிப்பதுவே.

நூல்: அல்ஜாமிஉ லி அஹ்காமில் குர்ஆன்.

ஆசிரியர்: இமாம் குர்துபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டுமென்பதில் அதிக அக்கறை செலுத்தியுள்ளார்கள். அதற்கு ஆதாரம்

‘பகைவர் உள்ள பகுதிக்கு பயணம் செ;யயும்போது குர்ஆனை எடுத்துச் செல்ல வேண்டாமென்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, முஸ்லிம்.

குறிப்பு: 1

குளிப்பு கடமை நிலையில் உள்ளோரும் மாதவிடாய் பெண்களும் பிள்ளைப்பேறு உதிரப்போக்குள்ள பெண்களும் குர்ஆன் ஓதுதல் என்ற எண்ணமில்லாமல் திக்ர் அல்லது பிரார்த்தனை என்ற அடிப்படையில் குர்ஆனுடைய வசனத்தை ஓதுவது மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்தார்கள்:

عن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم الا عال بالنيات (رواه البخاري

‘உறுதியாக செயல்களனைத்தும் எண்ணங்களைப் பொறுத்ததாகும்.’

அறிவிப்பாளர்: உமர் ரலியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி.

இந்த நபிமொழியின் கருத்துப்படி திக்ருடைய நிய்யத்தில் குர்ஆன் வசனத்தைக் கூறுவது கூடும். ஏனென்றால் குர்ஆன் ஓதுவதற்கும் திக்ர் செய்வதற்கும் மத்தியில் நிறைய வேறுபாடுகளுண்டு. குர்ஆன் ஓதினால் ஒவ்வோர் எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்குமென்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். – நூல்: திர்மிதி

குர்ஆன் ஓதுவதால் ஒவ்வோர் எழுத்திற்கும் கிடைக்கிற பத்து நன்மைகள்  திக்ர் – பிரார்த்தனை செய்யும்போது கிடைப்பதில்லை. திக்ர் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுகின்ற போது அதற்குரிய நன்மைகள் நமக்கு உறுதியாக கிடைக்கும். அதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் ஒரு எழுத்திற்குப் பத்து என்ற அடிப்படையில் ஓதுவதற்குரிய நன்மைகள் இவற்றிற்கில்லை.

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் புறப்படுவதற்காக ஒட்டகை மீது அமர்ந்து விட்டால் மும்முறை ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறுவார்கள். பிறகு (இதை எங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்த இறைவன் தூய்மை மிக்கவன். நாங்கள் இதை அடக்கிப் பயன்பெற இயலாதவர்களாக உள்ளோம். மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமேம திரும்பக் கூடியவர்களாக இருக்கிறோம்’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர்  ரலியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம், திர்மிதி, அபீதாவூத், அஹ்மத், தாரமீ.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஸுப்ஹான எனத் தொடங்கும் வாசகங்கள் அத்தியாயத்தின் 13 ஆம் வசனத்தின் ஒரு பகுதியாகவும் 14ஆம் வசனமாகவம் இடம் பெற்றுள்ளன. எனினும் பயணி குளிப்பு கடமையான நிலையிலிருந்தாலும் அப்பயணி  பெண்ணாக இருப்பின் மாதவிடாய் நிலையிலிருந்தாலும் இவற்றைக் கூறலாம். அதற்கு எத்தடையுமில்லை. காரணம் பயணப் பிரார்த்தனை என்பதுதான் இங்கு நோக்கமே தவிர குர்ஆன் ஓதுதல் என்பதல்ல.

அதே போன்று ஒரு செயலைத் தொடங்கும்போது  بسم الله الرحمٰن الرحيم என்று கூறுகிறோம். இது குர்ஆனிலுள்ள ஒரு வாசகம். ஒருசெயலைத் தொடக்கம் செய்பவர் குளிப்பு கடமை நிலையிலிருந்தாலும் பெண்களாக இருந்தால் மாதவிடாய் அல்லது பேறுகால உதிரப் போக்கு நிலையிலிருந்தாலும் இதைக் கூறுவது கூடும். ஏனென்றால் செயல் தொடக்கப் பிரார்த்தனை என்ற நோக்கில் தான் இதைக் கூறப்படுகிறது. குர்ஆன் ஓதுதல் என்ற எண்ணத்தில் இல்லை. ஆகவே இதைக் கூற எத்தடையம் மார்க்கத்தில் இல்லை.

குறிப்பு – 2:

சுத்தமில்லாமல் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற சட்டம் குர்ஆன் எழுத்து வடிவில் உள்ளபோது தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லையானால் அச்சட்டமும் இல்லை.

குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்கள் குர்ஆன் பதிவு செய்யப்பட்ட ஒலி-ஒளிப் பேழைகள் மற்றும் குறுந்தகடுகளை உளு இல்லாமல் தொடுவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது. காரணம் அவற்றில் குர்ஆன் எழுத்து வடிவில் தென்படவில்லை.

குர்ஆன் ஓதினால் ஓர் எழுத்திற்குப் பத்து நன்மை கிடைக்குமென்பது கூட எழுத்து வடிவில் மொழிந்தால் தான். குர்ஆன் வசனங்களை மனதால் நினைப்பவருக்கு அந்த நன்மையில்லை என்பது நாமறிந்ததே. வெளியில் தெரிகின்ற எழுத்தின் சட்டம் மனதில் அல்லது ஒளி நாடாவில் அல்லது குறுந்;தகடில் மறைந்துள்ள எழுத்திற்குக் கிடையாது. அறத்குச் சான்றாக ஒன்றைக் குறிப்பிடுவது இங்கே பொருத்தமாகும். கழிவறைக்குச் செல்பவன் இறை நாமம் பொறித்த மோதிரம் அணிந்திருந்தால் அதைக் கழற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும்.

عن انس قال كان النبي اذادخل الخلاء وضع خاتمه (رواه ابو داؤد والترمذي والنسائي وابن ماجة

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; கழிவறை செல்லும்போது மோதிரத்தை கழற்றி வைத்து விடுவார்கள்.’

நூல்: அபூதாவூத் 18, திர்மிதி 1668

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரோம் நாட்டிற்கு கடிதம் எழுத நாடியபோது ரோம் மக்கள் முத்திரையிடப்பட்ட கடிதத்தை தான் படிப்பார்கள் என நபித்தோழர்கள் கூறினார்கள். ஆகவே வெள்ளியால் ஆன ஒரு மோதிரத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தயார் செய்தார்கள். அதன் வெண்மையை நான் பார்த்தேன். அம்மோதிரத்தில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று பொறிக்கப்பட்டிருந்தது.

அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: புகாரி 6629, முஸ்லிம் 3902.

இறைவனுடைய திருநாமம் எழுத்து வடிவில் மோதிரத்தில் பதியப்பட்டிருந்தததால் கழிவறை செல்கின்ற போது கழற்றி வைத்துவிட வேண்டுமென மார்க்கம் பணிக்கிறது. கண்களுக்குத் தெரியும் வகையில் உள்ளதால் இச்சட்டம்.

குறுந்தகடுகளை கணிணியில் போட்டுப் பார்க்கின்றபோது குர்ஆன் எழுத்துக்கள் மட்டும் தெரிந்தால் குர்ஆனின் சட்டம் அந்தக் கணிணிக்குப் பொருந்தும். உளுவுடனேயே அக்கணிணியைத் தொட வேண்டும். ஆனால் குர்ஆன் எழுத்துக்களோடு மொழி பெயர்ப்பு அல்லது விரிவுரை ஆகியவை சேர்த்துத் தெரிந்தால் குர்ஆனுக்குரிய சட்டம் இதற்கில்லை. உளு இல்லாமலேயே இதைத் தொடலாம்.

குறிப்பு – 3

பரிசுத்தமானவர்களே தொட வேண்டுமென்பது குர்ஆனுக்கு மட்டுமே உரிய சட்டமாகும். எனவே

ஹதீது நூற்கள்

பிரார்த்தனைப் புத்தகங்கள்

ஃபிக்ஹ் கிரந்தங்கள்

குர்ஆன் மொழிபெயர்ப்பு தர்ஜமாக்கள்

குர்ஆன் விரிவுரை தஃப்ஸீர்கள்

அவ்ராத் தொகுப்புகள்

மற்றும் மௌலித் கிதாபுகள்

ஆகியவற்றைத் தொடுவதற்கு உளு கட்டாயம் அல்ல. அவற்றில் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டிருந்தாலும் உளு இன்றி தொடுவது கூடும். ஏனெனில் இவற்றிற்கு குர்ஆன் என்று கூறப்படாது.

ஆனாலும் மேற்கண்ட நூல்களைத் தொடுவதற்கு உளு செய்து கொள்வது மார்க்கத்தில் வரவேற்கத்தக்க மற்றும் புகழுக்குரிய செயலாகும்.

குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் பெண்கள் மற்றும் பேறுகால உதிரப் போக்குள்ள பெண்கள் ஓதக் கூடாதென்ற சட்டம் குர்ஆனுக்கு மட்டுமே. இச்சட்டம் மற்ற நூல்களுக்கு இல்லை. எனவே இத்தகையவர்கள் மேற்கண்ட கிதாபுகள் – கிரந்தங்கள் – தர்ஜமாக்கள்-தஃப்ஸீர்கள்-தொகுப்புகள் மற்றும் புத்தகங்களைத் தொடுவது ஆகும் என்பது போலவே ஓதுவது கூடும்.

குறிப்பு 4

உளு இன்றிக் குர்ஆனைத் தொடக் கூடாது. அதுபோன்று குர்ஆன் வைக்க மட்டும் பயன்படுத்துகின்ற பெட்டி ரேஹாலி பலகை போன்றவைகளையும் அவற்றில் குர்ஆன் இருக்கும் போது உளு இல்லாமல் தொடக் கூடாதென்பது ஷாஃபி, மத்ஹபின் சட்டம். அவற்றை குர்ஆன் இல்லாத நிலையில் தொடுவதற்குத் தடையில்லை.

இறைவேதம் குர்ஆன் புனிதமானது. அதுபோல குர்ஆன் உள்ள இடமும் புனிதமானது என்பது இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்து. ஏனென்றால் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘தூர்ஸீனா’ மலைக்கு வேதத்தைப் பெறுவதற்காக வருகை தந்தபோது இறைவன் கூறினான்.

انى انا ربك فاخلع  نعليك انك بالوادي المقدس طوي (طه: 12

‘(மூஸாவே) உறுதியாக நானே உங்கள் இறைவன். ஆகவே, உங்கள் இரு காலணிகளையும் கழற்றுங்கள். திண்ணமாக நீங்கள் துஆ என்ற தூய்மையான பள்ளத்தாக்கில் உள்ளீர்கள். (20-12)

வேதம் மட்டும் அல்ல. வேதம் இறங்குகிற இடமும் தூய்மையானதுதான் என்பதை இவ்வசனத்தின் மூலம் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

குறிப்பு 5

குர்ஆனை மட்டும் ஓரு பெட்டியில் வைத்து தூக்கிச் செல்வதென்றால் உளுவுடனேயே அப்பெட்டியைத் தொட வேண்டும். அதேசமயம் மற்ற பொருட்களுடன் குர்ஆனுமுள்ள பெட்டியை உளு இன்றி சுமந்து செல்ல மார்க்கத்தில் அனுமதி உண்டு.

ஏனெனில் இவ்விரு நிலைகளுக்கும் வேறுபாடுள்ளது. ஒருவன் மற்ற பொருட்களுடன் குர்ஆனையும் எடுத்துச் செல்கின்றபோது அவனது எண்ணம் ஒட்டுமொத்த பொருட்கள் என்பதுதானே தவிர குர்ஆன் மட்டும் என்பதல்ல.

குர்ஆனை தனித்து எடுத்துச் சென்றால் அவனது நோக்கமே குர்ஆன்தான். எண்ணங்களைப் பொருத்தே நமது மார்க்கத்தில் சட்டங்கள் அமையும்.