Popular Posts

Monday 9 May 2016

உயிருடன் இருக்கிற மூமின்களின் பிரார்த்தனையால் ,தான தர்மத்தாலும் மரணித்து விட்ட மூமின்களுக்குப் பிரயோஜனம் கிடைக்கிறது .அதில் சந்தேகம் இல்லை !

உயிருடன் இருக்கிற மூமின்களின் பிரார்த்தனையால் ,தான தர்மத்தாலும் மரணித்து விட்ட மூமின்களுக்குப் பிரயோஜனம் கிடைக்கிறது .அதில் சந்தேகம் இல்லை !
 மூமினாக மரணித்தவர் வேதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தாலும் சரி வேதனைக்கு உட்படுத்தப் படமலிருந்தாலும் சரி
 உயிருடன் இருக்கிற மூமின்களுடைய பிரார்த்தனையாலும் , தான தர்மத்தாலும் மரணித்து விட்ட மூமின்களுக்குப் பிரயோஜனம் ஏற்படுகிறது .
 இப்போது நாம் சொல்லுகிற ஹதீஸ்கள் மரணித்தவர்களுக்கு உயிருடன் இருப்பவர்கள் பிரார்த்தனை புரிவதால் ஏற்படும் நன்மைகளைக் குறிக்கின்ற ஹதீஸ்கள் ---
 ஹதீஸ் ஆதாரம் ===: 1 :::::::
 حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ ، أَخْبَرَنَا سَلَّامُ بْنُ أَبِي مُطِيعٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْأَبِي قِلَابَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ رَضِيعِ عَائِشَةَ ، عَنْ عَائِشَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " مَا مِنْ مَيِّتٍ تُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ مِنَ الْمُسْلِمِينَ يَبْلُغُونَ مِائَةً ، كُلُّهُمْ يَشْفَعُونَ لَهُ إِلَّا شُفِّعُوا فِيهِ " ، قَالَ : فَحَدَّثْتُ بِهِ شُعَيْبَ بْنَ الْحَبْحَابِ ، فَقَالَ : حَدَّثَنِي بِهِ أَنَسُ بْنُ مَالِكٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
 நூறு முஸ்லிம்கள் ஒரு மையத்திற்காக ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றி , அவருக்காக சிபாரிசு செய்வார்களாயின் அவர்களது சிபாரிஷை அல்லாஹூ தாலா அங்கீகரிக்கிறான் " என்பதாக நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள் .
 ஹதீஸ் ஆதாரம் : 2
 ذلك عن عبد الله بن عباس رضي الله تعالى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما من رجل مسلم يموت فيقوم على جنازته أربعون رجلاً لا يشركون بالله شيئاً إلا شفعهم فيه
 முஷ்ரிக்காக இல்லாத நார்பது பேர்கள் மரணித்தவருக்காக ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றினால் அவர்களது இந்த சிபாரிஷை அல்லாஹூ தாலா அங்கிகரிக்கிறான் " என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள் .
 மேலே நாம் கூறிய இவ்விரு ஹதீஸ்களையும் இமாம் முஸ்லிம் - ரஹ்மத் துல்லாஹி அலைஹி அவர்கள் ரிவாயத்துச் செய்திருக்கிறார்கள்
 " எனது உம்மத்துக்கு அல்லாஹ் பெரும் கிருபை ஞெய்துள்ளான் .கப்ரில் பாவிகளாக பிரவேசிப்பவர்கள் முஸ்லிம்களது துஆ ,இஸ்திஃபார்களின் காரணமாக கப்ரைவிட்டு பாவமற்றவரகளாகி வெளியேறுவார்கள் " என்று நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருப்பதாக இமாம் தப்ரானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறி இருக்கிறார்கள்

No comments:

Post a Comment