Popular Posts

Monday 9 May 2016

பெருநாள் தொழுகையை தொழுகும் முறை ஷாஃபி :-

பெருநாள் தொழுகையை தொழுகும் முறை ஷாஃபி :-

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

 தொழுகைக்கான நிய்யத்து சொல்லும் முறை :-

 ஈதுல் அள்ஹா உடைய பெருநாள் தொழுகை வாஜிபான இரண்டு ரக்அத் அதிகப்படியான 12 - தக்பீர்களுடன் இந்த இமாமை பின் தொடர்ந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ் விற்காக தொழுகிறேன் - என்று நிய்யது செய்து தக்பீர் கட்டிக்கொள்ள வேண்டும் .

 இரண்டு ரக்அத்தில் செய்ய வேண்டிய தொழுகை முறை :-

 முதல் ரகஅத்தில் :-

 இமாம் அவர்கள் தக்பீர் கட்டி " வஜ்ஜஹத்து " ஓதுவார் அது போன்று நாமும் தக்பீர் கட்டி " வஜ்ஜஹத்து " ஓத வேண்டும் .இமாம் அவர்கள் சூரத்துல் பாதிஹா , துணை சூரா ஓதுவதற்க்கு முன்பு கட்டிய கையை அவிழ்த்து ஏழு ( 7 ) முறை கையை உயர்த்தி தக்பீர் கூறி பிறகு கையை கட்டிக் கொள்வார் நாமும் அது போன்று இமாமை பின் தொடர்ந்து செய்து தக்பீர் கூறி கையை கட்டிக்கொள்ள வேண்டும் .

 இரண்டாவது ரக்அத்தில் :-

 இமாம் அவர்கள் நிலைக்கு வந்த உடனே கையை அவிழ்த்து அதிகப்படியான ஐந்து ( 5 ) - தக்பீர்களை
 கூறி கையை கட்டுவார். அதே போன்று நாமும் தக்பீர் கூறி கையை கட்டிக் கொள்ள வேண்டும் .பின்பு பாதிஹா சூரா மற்றும் துணை சுரா ஓதி தொழுகையை முடிப்பார் . இமாமை பின் தொடர்ந்து நாமும் தொழுகையை முடிக்க வேண்டும் .

 [ நூல் = பத்ஹூல் முயீன் ]

No comments:

Post a Comment