Popular Posts

Monday 9 May 2016

முஹ்யித்தீன் மௌலித் பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 03

Risny Hassan with Umar Ali and 48 others.

முஹ்யித்தீன் மௌலித்
 பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 03

 விமர்சனம் 3
 அப்துல் காதிர் ஜீலானி எப்படி அறிந்து கொண்டார்? அவருக்கு வஹி ஏதும் வந்ததா?

 விளக்கம்
 வந்தவர் மலக்குதான் என்று வஹீ வாந்தால்தான் அவரை மலக்கு என்று நம்ப முடியும் என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. இம்ரான் ரலியல்லாஹ_ அன்ஹ_ அவர்களின் சம்பவம் அவரது வாதத்திற்கு மறுப்பாக அமைந்துள்ளது. வஹீ வராமலேயே அவர்கள் மலக்குகளை புரிந்து கொண்டார்கள்.

 மேலும் ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்த நிகழ்சியை குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
 “நபியே) இவ்வேதத்தில் மர்யமைப்பற்றி நினைவு கூர்வீர்களாக! தமது குடும்பத்தை விட்டு கிழக்கிலுள்ள ஒர் இடத்திற்கு அவர் ஒதுங்கிச் சென்ற போது அவர்களை விட்டும் (மறைப்பதற்காக) ஒரு திரையை அவர் ஆக்கிக் கொண்டார். அப்போது அவரிடம் நம்முடைய ரூஹை(ஜீப்ரிலை) நாம் அனுப்பினோம். அவருக்க நிறைவான ஒரு மனிதராக அவர் தோற்றமளித்தார். (ஜீப்ரீலைக் கண்டவுடன்) நிச்சயமாக நாம் உம்மை விட்டு அர்ரஹ்மானிடம் உதவி தேடுகிறேன்.நீர் பயபக்தியுள்ளவராக இருந்தால் (இங்கிருந்து சென்று விடும்)என்ற அவர் கூறினார்.

 (அதற்கு)நிச்சயமாக நான் பரிசுத்தமான ஒரு ஆன் குழந்தையை உங்களுக்கு கொடையாக அளிப்பதற்காக (வந்துள்ள)உம் ரப்பின் தூதர்தன் என்று கூறினார் மர்யம்:17-18-19
 நபி அல்லாதவரான மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்த ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஒரு நபி வந்து இவர் ஜீப்ரீல்தான் என்று கூறி அறிமுகப்படுத்தி வைக்க காத்திருக்காமல் அவர்கள் அல்லாஹ்வின் த}தரான மலக்கு என்று அவர்களின் கூற்றைக் கொண்டே உறுதி செய்கிறார்கள் மரயம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
 ஸஹாபாக்கள் மலக்குகளை அறிய மாட்டார்கள் நபி மூலம்தான் மலக்கை அறிய முடியும்? என்ற விமர்சகரின் வாதம் தவறானது என்பதை மறுத்ததுரைக்கின்றன

No comments:

Post a Comment