Popular Posts

Monday 9 May 2016

இறைநேசர்களிடம் உதவி தேடுவது இணைவைத்தலா ?

இறைநேசர்களிடம் உதவி தேடுவது இணைவைத்தலா ?

 வஸீலாவை பற்றிய சிறிய விளக்கம்

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்கதுஹூ
 இஸ்லாமிய மார்க்கத்தில் பரிசுத்தமான ஒரு பொருளை வைத்து அல்லாஹூ தஆலா விடத்தில் உதவி தேடுவதற்க்கு வஸீலா என்று கூறப்படும்.
 வஸீலாஎன்பது:
 [ 1 ]- நல்லஅமல்களையோ

 [ 2 ]- நல்லமனிதர்களையோ

 [ 3 ]- நல்லமனிதர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களையோ

 இறைவன் சமூகத்தில் முன்னிலைப்படுத்தி வைத்து அவர்களின் அல்லது அவைகளின் பொருட்டால் தனது நாட்டம் நிறைவேறுவதை ஆதரவைப்பதாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் இப்படி வஸீலா( உதவி )தேடுவது அனுமதிக்கப்பட்டு இருக்கிறது இதனால் தான்
 இறைவன் குர்ஆனில் இப்படிக் கூறுகிறான்
 يايها الذين امنوا اتقوا الله وابتغوا اليه الوسيلة و جاهدوا في سبيله لعلكم تفلحون (6:35)
 இறை நம்பிக்கையாளர்களே !
 அல்லாஹூவை அஞ்சிக் கொள்ளுங்கள்.இன்னும் அவனளவில் வஸீலாவை( நெருங்குவதை ) த் தேடுங்கள் மேலும் அவனுடைய பாதையில் போர் செய்யுங்கள்.நீங்கள் வெற்றி பெறலாம். ( 6 : 35 )
 நேரடியாக நீங்கள் வஸீலா (உதவி ) தேடிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹூ தஆலாவே சொன்னதற்க்கு பிறகு.அதை ஷிர்கு என்று சொல்லி இந்த நவீன வழிகேடர்கள் ( இறைவனால் இதயத்திலும்,செவியிலும்,முத்திரையிடப்பட்டவர்கள் )குழப்பவாதிகள் எந்த அளவு மடையர்கள் என்பது மட்டும்மல்லாமல்,இறைவனுக்கு முற்றிலும் மாறுசெய்தவர்களாக அகுவார்களா இல்லையா ?
 நன்றாக சிந்தித்துப் பார்போமேயானால் :
 மேற் கூறப்பட்ட வசனத்தில் இறைவன்
 முதலாவதாக அல்லாஹூவை பயந்து கொள்ளுங்கள்
 இரண்டாவதாக வஸீலாவை தேடிக் கொள்ளுங்கள்
 என்று இறைவன் கூறியிருக்கிறான்.இந்த இரு வார்த்தைகளுக்கும் மத்தியில் ஏதாவது ஒரு தொடர்பு இல்லாமல் இருக்காது இறைவன் கூறக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக்கும் மத்தியில் ஏதவாதுஒரு தொடர்ப்பு இருந்துக் கொண்டேதான் இருக்கும் இவ்விரண்டு வார்த்தைகளும் மத்தியில் உள்ள தொடர்பானது நபிமார்களை,இறை நேசர்களை,நம் மனதில் நினைத்து அவர்களை வஸீலாவாக ஆக்கி இறைவனிடத்தில் பிராத்திதால் அவர்களைப் போன்று நமக்கும் ( தக்குவா ) இறையச்சம் ஏற்பட ஒரு வழிகோலாகும் என்ற உள்ளார்ந்த கருத்து அதில் புதைத்திருக்கிறது.
 இப்போது எங்கே போனது ஷிர்க் :

 இவ்வுலகத்தில் ஒவ்வொரு மனிதனுடை வாழ்க்கையும்.பிறருடை உதவியை நம்பித்தான் இறைவன் அமைத்திருக்கிறான்.ஆகவே மனிதன் பிறந்ததிலிருந்து மண்ணுக்கு போகும் வரை
 இறைவனல்லாதவர்களின் உதவியைக் கொண்டுதான் வாழுகிறான்
 மருத்துவச்சியின் உதவியைக் கொண்டுதான் பிறந்தான்
 பெற்றோரின் உதவியைக் கொண்டுத்தான் பரிபாலிக்கப்பட்டான்
 டாக்டரின் உதவியைக் கொண்டுத்தான் சுகம் பெற்றான்
 செல்வந்தார்களின் உதவியைக் கொண்டுத்தான் வாழ்க்கையை நடத்தினான்
 ஆசிரியயரின்,ஷைகின் உதவியை கொண்டுத்தான் முஃமீன் ஆனான்
 சொந்த பந்தங்களின் உதவியை கொண்டுத்தான் தன் இறப்பின் போது கலிமா சொன்னான்
 முஸ்லிம் சகோதரர்க்களின் உதவியைக் கொண்டுத்தான் இறந்த பின் கப்றும்,குளிப்பும் இவனுக்கு கிடைத்தது
 பின்பு அதே முஸ்லிம்களின் உதவியைக் கொண்டுத்தான் கப்ருக்கு சென்ற பின் இவனுக்கு நன்மையும் கிடைத்தது
 இப்போது யார் எந்த வாயைக் கொண்டு இறைவனல்லாத வற்றிடம் உதவி தேடுவது ஷிர்க் கென்று சொல்ல முடியும் ?
 மேலே சொன்ன அனைத்தும் உதவிகளிலும் இறைவன் நமக்கு படிப்பினை கற்றுத்தருகிறான் .அது அவன் அல்லாஹ் ஒருவனை மட்டுமே ஹக்கீய்யான உதவியாளன் என எண்ண வேண்டும் ஒரு வேளை அடியார்களின் எவரேனும் உதவி செய்தாலும் கூட அதுவும் அல்லாஹ் வின் உதவியென்றே நம்பவேண்டும்.காரணம் படைப்புக்கள் அனைத்தும் இறைவனின் பணியளார்களாகவும்,இவ்வாறு நம்புவது தான் ஈமானாகும்.
 சந்தேகத்திற்கிடமின்றி இதை இப்படிப்புறிந்து கொள்ளுங்கள். மின்சாரம் வெளிச்சம் தருகிறது,காற்தாடியை சுற்றுக்கிறது,புகைவண்டியை இழுத்துச் செல்கிறது.இவை அனைத்தையும் மின்சாரக் கம்பி செய்யவில்லை.மாறாக மின்சாரம் செலுத்தப் படும் அதன் பவர் ஹவுஸில் வேலைகளாகும்.இந்த நிலையில் எவரேனும் நமக்கு உதவி செய்கிறாரெனில் அது அவரது சக்தியைக் கொண்டல்ல ! அவரது மனதில் இரக்கம் பிறக்கவில்லை எனில் அவர் நமக்கு எவ்வாறு உதவி செய்வார் ? ஆதலால் அந்த இரக்கமும்.சக்தியும் இறைவனின் தரப்பிலிருந்து அவருக்கு வழங்கப் படுவதால் ஹகீகிய்யான உதவியாளன் அல்லாஹ் ஒருவனே வேறு யாரும் இல்லை.எனவே நாம் இது பற்றி குர்ஆன்,ஹதீஸ்,ஆதாரங்களை வரிசைப் படுத்துகிறோம்.
 குறிப்பு : குர்ஆனை விளங்க வேண்டுமே ஆனால் ஈமானுடைய வெளிச்சத்தைக் கொண்டுதான் விளங்க முடியும். நஜ்துக் கொள்கை என்னும் கண்ணாடியை மாட்டிக் கொண்டு இருக்கும் வரை குர்ஆன்,ஹதீஸை எப்படி விளங்கும் ?
 இந்த ஹதீஸை பாருங்கள் :
 عن ابي هريرة ان العين لتدخل الرجل القبر ( رواه ابن ماجه
 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : கண் திருஷ்டி ஒருவனை கப்ரில் நூழைத்து விடும் (அறிவிப்பவர் : அபூ ஹூரைரா ரலி நூல் : இப்னு மாஜா )
 இந்த ஹதீஸை கொஞ்சம் கவனமாக பாருங்கள் இதில் மிக பெரிய விளக்கம் இருக்கிறது !ஒரு சாதரன மனிதனுடைய தீய பார்வைக்கே ஒருவனை மௌத்தாக்கும் (மரணிக்கும்) சக்தி இருக்குமே ஆனால் ஏன் ? இறைநேசம் பெற்ற இறைநேசர்களின் அன்பு பார்வைக்கு அவன் வாழ்வை சீர்திருத்தம் பெற செய்யும் ஆற்றல் இருக்காதா ?
 பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் :
 சுவனம் செல்ல கலிமா அவசியம்,வணக்கம் அவசியம்,கலிமாவுமில்லை ! அமலும்மில்லை ! அவ்வளவு ஏன் ? மனித இனமே இல்லாத ஒரு நஜீஸான நாய் குகைவாசிகளின் நட்பால் சுவனம் செல்லும் அந்தஸ்தைப் பெறவில்லையா ? பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்கள் ஆனால் இங்கு நாய் மணக்கிறது,நஜீஸ் மணக்கிறது தமிழில் இப்படி ஒரு பழமொழி உண்டு எவ்வள்வு கற்றாலும் நல்லோர்கள் தொடர்பு இல்லையெனில் கரை சேர முடியாது ?
 இந்த நாய்க்கு சுவன வாழ்க்கை எப்படி கிடைத்தது ?
 இந்த நாய் என்ன இறைவன் கடமையாக்கிய தொழுகை,நோன்பு,தானதருமம்,இது போன்ற நல்அமல்கள் செய்ததா ?
 அல்லது இறைவனைக் கொண்டு ஈமான் கொண்டதா ?
 அல்லது நபிமார்களுக்கு துனையாக இருந்ததா ?
 அப்படி எதுவும் இல்லையே !
 அதற்க்கு இந்த அந்தஸ்து கிடைக்க காரணம் என்ன ?
 இறைநேசர்களை நேசித்ததின் காரணமாகத்தான் அந்த நாயிக்கு கிடைத்த பரிசுத்தான் சுவனம் . ஒரு நாய்க்கே இப்படி பட்ட சிறப்பு என்றால் படைப்பினண்க்களிலே சிறந்த படைப்பான நாம் இறை நேசர்களை நேசித்தால் கிடைக்கும் வெகுமதி சுவனம் என்பதில் கடுகு அளவும் சந்தேகமே கிடையாது.ஐந்து அறிவான நாய்க்கே இறைவனிடத்தில் இறை நேசர்களின் அந்தஸ்த்து என்ன என்பதை தெருந்து இருக்கிறது.ஆனால் இந்த வழிகெட்ட குழப்பவாதிகளான அறு அறிவு படைக்கப்பட்ட நாய்களுக்கு அது தெரிய வில்லையே !
 கேட்டுதான் பாருங்களே :

 வழிகேடர்கள் அதாவது இப்னுதைமிய்யா முதல் இவ்வுலகில் தோன்றிய இயக்கங்கள் அனைத்தும் நபிமார்களிடம்,வலிமார்களிடம் உதவி தேடுவது ஷிர்கு என்றும் மிகபெருய பாவமென்றும் கூறிக் கொண்டிருக்கிறார்களே ! அதற்க்குரிய காரணம் என்னவென்று இதுவரை அவர்களிடம் நீங்கள் கேட்ட துண்டா ? ஒருமுறை அவர்களிடம் கேடுத்தான் பாருங்கள் ! நபிமார்களிடம்,வலிமார்களிடம் உதவி தேடக்கூடாதென்று ஏன் ? சொல்கிறார்கள் தெரியுமா ? நாம் உதவி தேடுபவர்களெல்லாம் இறந்து மண்ணோடு மண்ணாகமக்கிப் போய் விட்டார்கள் என்பதுதான் இவர்கள் தரும் விளக்கமும்,இவர்களால் செய்யப்படும் பிரச்சாரமும்.இவர்கள் கூற்றுக்கு ஆதாரம் எதவது இருக்கா என்று பார்த்தால் அது இவர்களின் சொந்த கருத்தாம் !
 யார் சொல்வதை கேட்பது :

 அல்லாஹ் அல்லாதவர்களிடம் கேட்பது ஷிர்க் கென்று சொல்கிறார்கள் ? இவர்கள் சொல்வது சரியா ?
 அல்லது இறைவன் குர்ஆனில் கேட்கலாம் என்று சொல்லுகிறான் ? நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் மற்றவர் இடம் உதவி தேடலாம் என்று சொல்கிறார்கள் இது சரியா ?
 என்பதை நீங்கள் முடிவு செய்வதுடன் இந்த வழிகேடர்களின் குள்ள நரித்தனமான மார்க்கப்பணியைக் கண்டு ஏமாந்து விட வேண்டாம் மென்று எச்சரிக்கிறோம். உங்கள் மனைவி,மக்களையும்,இவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.யார் இவர்களுடைய இயக்கங்களை ஆதரிக்கிறார்களோ,அவர்கள் எப்படியாவது திருந்தி வருவார்களென்று மட்டும் நினைக்காதீர்கள்.ஏன் என்றால் ?
 நபிகள்கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கிறார்கள் :

 سمعت رسول الله صلي الله عليه واله وسلم يقول يخرج في اخر الامة ولم يقل منها قوم تحقرون صلاتهم فيقرؤون القران لا يجاوز حلوقهم أو حناجرهم يمرقون من الدين مروق السهم من الرمية (رواه مسلم )

 இறுதிக் காலத்தில் ஒரு கூட்டமொன்று வெளியாகும்.அவர்களின் தொழுகையை பார்க்கும் நீங்கள் உங்களின் தொழுகையை அற்பமாகக் கருதுவீர்கள்.இன்னும் அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்.அது அவர்களின் தொண்டைக் குழிக்குக் கிழே இறங்காது.அத்துடன் அவர்கள் வில்லில் இருந்து அம்பு வெளியாவதைப் போல மார்க்கத்தை விட்டும் வெளியேறிப் போய் விடுவார்கள் என்பதை அருமை நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டேன் என்கிறார்கள் ஹழரத் அபூ ஸயீதுல் குத்ரி ரலியால்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள் ( நூல் : முஸ்லிம் ஷரீஃப்,இக்மால்,பாகம்-3,பக்கம் -610 )
 இந்த ஹதீஸை பாருங்கள்:

 பொதுவாக இஸ்லாதில் எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கேட்டால் அவருடைய பாவம் மன்னிக்கப்பட்டு முஸ்லிமாக வாய்ப்பு உண்டு,ஒருவர் காபிராக மாறிய பின்னாலும் அவர் கலிமா சொல்லி இஸ்லாத்தில் நூழையா வாய்ப்பு உண்டு , அதுமட்டுமா ? ஒரு காஃரே கலிமா சொன்னால் முஸ்லிமாகும் வாய்ப்பு இருக்கு ! ஆனால் இவர்கள் இஸ்லாத்தில் நூழையா வாய்பே இல்லை !!! அதனால் தான் இப்படி கூறினார்கள் என்பதை நாம் விளங்கமுடிகிறது ..
 இது வரை உலகத்தில் தோன்றிய வழிகேடர்களுடைய கூற்றைக் காணுங்கள்

 நபிமார்களையும்,வலிமார்களையும் அழைத்து உதவி தேடுவது ஷிர்க்கை உண்டக்கும் ( இப்னு தைமிய்யா : கிதாபுல் வஸீலா=பக்கம்=63 )
 அல்லாஹ் அல்லாத வேறோருவரிடம் உதவி தேடுபவர் குஃப்ரை செய்து விட்டார்.( அப்துல் அஸீஸ் ஆலு சுவூத்=மஜ்மூஅத்துத் தவ்ஹீத்,பக்கம்=112 )
 நபிமார்கள்,வலிமார்கள் ஸாலிஹீன்கள்,ஷூஹதாக்கள்,போன்ற அனைவருமே சரிசமமானவர்களே.ஆனால் சிலர் சிலரை அழைத்து உதவி தேடுகின்றனர்.இது தவறாகும். (மௌதூதி, தஃப்ஹீமுல் குர்ஆன் =2:532,533,)
 இங்கு ஒரு சிலதை மட்டும் சொல்லிவுள்ளேன் அனைத்தையும் சொல்ல வேண்டும் ஆனால் அதே ஒரு கட்டுரையாக வந்து விடும்.மேலே சொன்ன அனைத்தும் வழிகேடர்களின் கருத்தாகும்.இதில் இவர்கள் ஒவ்வொருவரும் அதைச் சொல்வதற்கென ஒரு பிரத்யேகமான பெயரையும்,இயக்கத்தையும்,தோற்று வித்துக் கொண்டுள்ளனர்.ஆக மொத்தத்தில் இவர்களனைவரும் அல்லாஹூ,ரஸூலுடைய மற்றும் வலிமார்களுடைய விரோதிகள் என்பதே எதார்த்தமாகும். அனைத்து வழிகேடர்களும் சொன்ன விசையம் ஒன்றுதான் " இறைவனல்லாதவர்களிடம் உதவி தேடுவது ஷிர்கான விசையம் யார் அப்படி உதவி தேடினாலும் அவர்கள் காஃபிர்கள் தான் " சரி வாருங்கள்
 இனி இவர்களின் கூற்றுக்கள் அனைத்தும் பொய்யானதே என்பதற்க்கு நாம் குர்ஆன்,ஹதீஸ்களில் இருந்தே பதில் தருகிறோம்.
 குர்ஆன் : ஆயத்துக்களை பாருங்கள்

 يايهاالذين امنوا استعينوا بالصبروالصلوة ان الله مع الصبرين(١٥٣:٢)

 முஃமின்களே! நீங்கள் பொறுமையைக் கொண்டும்,தொழுகையை கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளருடன் இருக்கிறான். ( அத்தியாயம் =2 , ஆயத்து = 153 )
 நம்முடைய கேள்வி = இறைவன் அல்லாதவைகள் இடம் உதவி தேட கூடாது. என்று இருந்தால் இங்கு பொருமையைக் கொண்டும்,தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது .இதில் பொறுமையும்,தொழுகையும் ,இறைவனா ?இறைவனல்லாதவைகளாகும்.அப்போ இறைவன் குர்ஆனில் ஷிர்கை செய்யும் படி நம் அனைவரையும் ஏவுகிறானா ? சிந்தியுங்கள்
 அடுத்து மற்றோரிடத்தில்...
 يايها الذين امنوا كونوا انصار الله كما قال عيسي ابن مريم للحواريّن من أنصاري الي الله قال الحواريون نحن انصار الله (٦١:١٤)

 ஈமான் கொண்டவர்களே ! மர்யமின் மகன் ஈஸா ( தம் ) சீடர்களை நோக்கி " அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுபவர் யார் என கேட்டபோது நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள் என்பதாக ஹவாரிய்யீங்கள் சொன்னார்கள். ( அத்தியாயம் =61,ஆயத்து= 14 )
 நம்முடைய கேள்வி : தவ்ஹிதை போதிக்க வந்த நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சமூகத்துடைய வழிகாட்டி நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்கள் யார் இடம் உதவி கேட்க வேண்டும் ? இறைவனிடம் ஆனால் நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்கள் யாரிடம் உதவி தேடினார்கள் இறைவன் இடத்திலா ? இல்லையே ! இறைவன் அல்லாதவர்களீடம் உதவி தேடினார்கள் அதனால் நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்களை காஃபிர் என்று சொல்லி வடலாமா ? (நவூதுபில்லாஹ் ) இறைவனுக்கு மாற்றம் செய்து விட்டார்களா ? சிந்தியுங்கள் !!!
 அடுத்து மற்றோரிடத்தில்..

 . قال يايها الملؤا ايّكم يأتيني بعرشها قبل ان يأتوني مسلمين (٢٧:٣٨)

 பிரதானிகளே ! அவர்கள் வழிப்பட்டவர்களாக என்பால் வருவதற்கு முன்,உங்களில் எவர் அவளுடைய சிம்மாசனத்தை என்னிடம்கொண்டு வருபவர் ? என்று சுலைமான் அலைஹி வஸல்லம் கேட்டார் ( 27 :38 )
 நம்முடைய கேள்வி : மனித இனத்தை சிற்படுத்துவதர்க்காக அனுப்பப்பட்டவர்கள் நபிமார்கள் அவர்கள் எந்த நிலையிலும் தவ்ஹிதை மக்கள் மத்தியில் போதிப்ப வர்கள் எதைகேட்டலும் இறைவனிடம் தான் கேட்டு பெர வேண்டும் என்றால் நபி சுலைமான் அலைஹி வஸல்லம் ஏன் இறைவனிடம் கேட்கவில்லை. அதர்க்காக இவரையும் காஃபிர் என்று சொல்லி விடலாமா ? ( நவூதுபில்லாஹ் ) சிந்தியுங்கள் !!!
 அடுத்து மற்றோரிடத்தில்...

 ان تنصروا الله ينصركم

 நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் . நம்முடைய கேள்வி : இறைவன் தேவையற்றவனாக இருந்தும் இவ்வசனத்தில் தன்னடியார்களிடம் உதவி தேடுகிறான். இறைவன் ஷிர்கை செய்ய ஏவுகிறானா ? அவ்வாறாயின் தேவையுடைய அடியார்களான நாம் நல்லடியார்களிடம் உதவி தேடுவதால் என்ன தவறு நேர்ந்து விடும் ?
 அடுத்து மற்றோரிடத்தில்...

 فاعينوني بقوّةِ

 உங்களின் பலத்தைக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள் ( 18 :95 )
 நம்முடைய கேள்வி : துல்கர்ணைன் அவர்கள் மக்களிடத்தில் உதவி தேடுகிறார் இவறையும் காஃபீர் என்று சொல்லி விடலாமா ? ( நவூதுபில்லாஹ் )
 அடுத்து மற்றோரிடத்தில்...

 وتعاونوا علي البرّ والتقوي

 இன்னும் நீங்கள் ஒருவர் மற்றவருக்கு நன்மையைக் கொண்டும்,பயபக்தியைக் கொண்டும் உதவி செய்யுங்கள் நம்முடைய கேள்வி : நன்மை , பயபக்தி ,கொண்டு உதவி செய்யுங்கள் என்றால் இவ்விரண்டும் இறைவனா ? சிந்தியுங்கள் !
 இறைவன் அல்லாதவைகள் இடம் உதவி தேடக்கூடாது என்றால் !!! அப்போ தவ்ஹிதை முழுக்க முழுக்க நிறைந்த இருக்கின்ற குர்ஆன்ஷரீஃப் ,ஷிர்க்கை போதிக்கிறதா ? குஃப்ரியத்தை போதிக்கிறதா ? வழிகேட்டை போதிக்கிறதா ? நன்றாக சிந்தித்து பாருங்கள் வழிகேடர்கள் கூற்று சரியா ? குர்ஆன் கூற்று சரியா ?
 ஹதீஸ்களை பாருங்கள் !!!

 ! اطلبوا الحوائج الي ذوي الرحمة من امتي
 எனது ரஹ்மத்துடைய உம்மத்துக்கள் பால் உங்களை தேவைகளை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.ரஹ்மத்துடைய உம்மத்துக்கள் என்பதன் கருத்து இறை நேசர்கள் தான் ( ஷரஹூ ஜாமிவுல் ஸகிர் பாகம் -1)

 ان اراد عونا فليقل يا عبادالله اعينوني يا عبادالله اعينوني يا عبادالله اعينوني

 ( அல்லாஹ்வுடைய அடியார்களிடம் ) உதவி தேட வேண்டுமானால் அல்லாஹ்வின் அடியார்களே ! எனக்கு உதவி செய்யுங்கள்.அல்லாஹ்வின் அடியார்களே ! எனக்கு உதவி செய்யுங்கள்.அல்லாஹ்வின் அடியார்களே ! எனக்கு உதவி செய்யுங்கள்.எனக் கூறுவீர்களாக என்று கூறும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள் அல்லாஹ்வின் அடியார்களே ! என்பது இறை நேசர்கள் ,மலக்குகள் , (ஃபத்ஹூல் ஹக் ,பக்கம் -71 )
 اذا تحيرتم في الامور فاستعينوا باهل القبور
 காரியங்களில் நீங்கள் திகைப்படைந்து விடுவீர்களேயாயின் கப்ருகளை உடையோரைக் கொண்டு உதவி தேடிக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் குறிப்பாகக் கப்ருகளை சுட்டிக் காட்டுகிறார்கள் பாருங்கள் அன்பர்களே ! கப்ருகள் உடையவர்கள் என்பது இறை நேசர்களே ( மிர்காத் ,பக்கம் =408,தஃப்ஸிர் ரூஹூல் பயான்,பாகம்-5,பக்கம்=380 ,)
 சுருக்கமாக சொன்னால் குர்ஆன் பல இடங்களில் இறைவனல்லாதவற்றிடம் உதவிகோருமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.ஏன் ! நபி தோழர்களில் ஒரு கூட்டத்தாருக்கு "அன்ஸார் " என்பது பெயர்.இதற்கு " உதவி செய்வோர் " என்பதுதான் அர்த்தம்.இனி இறைவனல்லாதவர்களிடம் உதவி தேடுதல் ஷிர்க்கெனில் இந்தப்பெயரே தவறாகும். ஆனால் இப்பெயரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபிதோழர்களில் ஒருக்கூட்டத்திற்க்கு சூட்டினார்.இன்னும் குர்ஆனும் அதே பெயரை கொண்டுதான் அவர்களைப் பற்றி பேசுகிறது . இப்போ உங்களுக்கு உண்மை புரிகிறதா ? இவர்கள் யார் என்று ? இந்த வழிகேடர்களை பற்றி இறைவன் குர்ஆனில் கூறுகிறான் நீங்களே பாருங்கள் இவர்களின் லச்சனத்தை இவர்கள் யார் என்று உங்களுக்கே புரியும் !!!
 واذا قيل لهم امنوا كما امن الناس قلوا انؤمن كما امن السفهاء الا انهم هم السفهاء ولكن لا يعلمون (١٤:٢)

 (நல்ல) மனிதர்கள் ஈமான் கொண்டது போல் நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால்.மூடர்கள் ஈமான் கொண்டது போல் நாங்களுமா ஈமான் கொள்வோம் ? என்று அந்நயவஞ்சகர்கள் (முனாஃபிக்கள் ) கூறுகினர்.( முஃமிங்களே ) அறிந்து கொள்ளுங்கள் ! நிச்சயமாக அவர்கள்தாம் மூடர்கள்.எனினும்( தங்களின் மூடத்தனத்தை ) அவர்கள் அறிகிறார்களில்லை. ( 2 : 13 ) இவர்கள் முஸ்லிம் அல்ல! காஃபிரும் அல்ல! மாறாக இந்த குழப்பவாதிகள் அனைவரும் முனாஃபீகிங்கள் !!இவர்களை இனம்கண்டுகொள்ளுங்கள் .
 இனிவாருங்கள் நாம் வஸீலாவை பற்றி நம்முடைய மேன்மக்கள் இடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்ட இன்னும் குர்ஆன்,ஹதீஸ் வாயிலாக எனக்கு கற்று கொடுக்கப்பட்ட செய்திகளை உங்களுக்கு ஞாபகம் உட்டுகிறேன் .
 நல்ல மனிதர்களை வஸீலாவாக்குவதற்க்குரிய ஆதாரங்கள் :

 اوئك الذين يدعون يبتغون الي ربهم الوسيلة ايهم اقرب (١٧:٥٧) قالمعني ينظرون ايهم اقرب فيتوسلون ( روح المعاني =٨, ص=٩٤ )

 அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தம்மில் இறை நெருக்கம் பெற்றவர்கள் யார் என்பதைக் கவனித்து அவரைக் கொண்டு வஸீலாவாக்கிய நிலையில் இறைவனை வணங்குவார்களே அப்படி ப்பட்டவர்கள் ( இஸ்ரா 57=,ருஹூல் மஆனி பாகம் =8,பக்கம்=94 )
 اللهم انصرنا علي الاعداء بحق عبادك الفقراء المهجرين
 இறைவா முஹாஜிர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கின்ற உனது அடியார்களின் பொருட்டினால் விரோதிகளுக்கு பாதகமாக எங்களுக்கு சாதகமாக உதவி செய்தருள்வாயாக என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் ( மிஷ்காத் பக்கம்=447,மிர்காத் பாகம்=10,பக்கம்=13 )
 உங்கள் சிந்தனைக்கு : இந்த துஆவை பாருங்கள் கேட்பவர்கள் யார் ? இந்த உலகத்தின் தலைவர் மட்டும் அல்ல.இந்த மார்க்கத்தின் போதகர் மட்டும் அல்ல.ரஸூல்மார்களுக்கும் ,நபிமார்களுக்கும் எல்லாம் தலைவர், ஏன் உலகத்தை படைக்க காரணமாக இருந்தவர் நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி இறைவனிடம் துஆ செய்துள்ளார்கள் யாரை வஸீலாவக வைத்து கேட்டுள்ளார்கள் என்பதை பாருங்கள் எதற்க்காக் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ செய்தார்கள் என்று தெரியுமா ! இந்த மாறி வழிகேடர்கள் வருவார்கள் என்பது தெரியும் அதனால் தான் இப்படி துஆ செய்தார்கள்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நீனைத்து இருந்தால் தன் போர்டால் என்று கேட்டிருப்பார்கள் அப்படி கேட்டுருந்தால் இந்த வழிகேடர்கள் பார்திர்களா நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னைத்தான் வஸீலாவக வைத்து துஆ கேட்டார்களே தவிர மற்ற யாரையும் வஸீலாவக வைது கேக்கவில்லை என்று சொல்லுவார்கள் என்பதை புரிந்து கொண்ட நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தன் ஸஹாபாளை வஸீலாவாக வைத்து துஆ செய்தார்கள் என்பது நமக்கு தெளிவாக தெரிகிரது.
 عن انس رضي الله عنه انّ عمر بن الخطاب رضي الله عنه كان اذا قحطوا استسقي بالعبّاس ابن عبدالمطلب فقال اللهم انّا كنّا نتوسّل اليك بنبينا فتسقينا وانّا نتوسّل اليك بعمّ نبينا فاسقنا فيسقوا ( رواه =البخار=باب الاستسقاء , ج=١ ,ص=١٣٧, مشكوة =١٣٢ )

 பஞ்சம் ஏற்பட்டு விட்டால் நிச்சயமாக உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களைக் கொண்டு மழை தேடுபவர்களாக ஆகியிருந்தார்கள்.அதாவது, இறைவா ! நிச்சய்மாக நாங்கள் எங்களின் நபியை உன்னளனவில் ( வஸீலாவாக ) உதவிச் சாதனமாக ஆக்கிப் பிரார்த்திப்பவர்களாக.ஆகியிருந்தோம்.நீ எங்களுக்கு மழை பொழியச் செய்திருக்கிராய்.மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியின் சிறிய தப்பனாரைக் கொண்டு ( முன்னிலையாக்கி ) வஸீலாவாக்கி கேட்கிறோம்.மழை பொழியச் செய்வாயாக என்று கூறுவார்கள்.உடனே மழை பெய்து விடும் ( புகாரி,பாகம்=1, பக்கம்=137, மிஷ்காத்-132 )
 வஸீலாவில் சிறந்தது எது :
 அமலை வஸீலாவாக ஆகலாம் அல்லவா ? எதற்க்கு மனிதரை வஸீலாவாக ஆக்கவேண்டும் என்று சில மடையர்கள் சொல்கிறார்கள் அல்லவா ? இப்போது உங்களிடம் ஒரு கேள்வி ? அமல் சிறந்ததா ? அல்லது அந்த அமலை செய்தவர் சிறந்தவரா ? நீங்கள் அமல்தான் சிறந்தது என்று சொன்னால் நாமும் தொழுகிறோம்,ஸஹாபாகளும் தொழுதார்கள்,ஏன் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் தொழுதார்கள்.ஆகமொத்தத்தில் எல்லோரும் தொழுததும் தொழுகைதான்.ஆனால் எல்லா தொழுகையும் ஒரே அந்தஸ்தில்லா இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம்.நம்முடைய தொழுகையை பற்றி நமக்கு தெரியாத என்ன ? இந்தஅமல்தான் சிறந்தது என்றால் நமக்கு ஏன் இறையச்சம் ஏற்ப்படவில்லை. நமக்கு ஏன் அந்த சிறப்பு கிடைக்க வில்லை.
 சற்று சிந்தியுங்கள் : அமல் சிறந்ததா என்று பார்த்தால் அந்த அமல் செய்த மனிதர் சிறந்தவராக இருப்பதினால் தான் அந்த அமல் சிறப்பு பெற்றது இல்லை என்றால் அந்த அமலுக்கு எந்த பயனும் இல்லை உதரணம் காட்டினால் உங்களுக்கு விளங்கும்-நாம் யார் ? முஸ்லீம்கள் நாம் செய்யும் சில அமல்களை இன்று நமக்கு மத்தியில் வாழ்கின்ற மற்றுமதத்தினர்களும் செய்கிரார்கள் நோன்பு,தொழுகை, இது போன்று அமல்களை செய்கிறார்கள் அதை நாம் கண்கூடாக பார்கிறோம். அமல்தான் சிறந்தது என்றால் இவர்கள் வைத்த அமல்கள் இவர்களை சுர்கத்தில் நூழையச் செய்திடுமா ? இல்லவே இல்லை அமல் செய்யும் மனிதனை வைத்துதான் அந்த அமல் சிறப்பு பெருகிறது. உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் யார் ? அவர்களின் சிறப்பு என்ன ? எனக்கு பின் நபி வருவதாக இருந்தால் அது உமரகத்தான் இருக்கும் .உமர் உடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான்.இப்படி சிறப்பு பெற்ற அவர்களே தன்னுடைய அமலை முற்படுத்தி துஆ செய்யவில்லை.ஆனால் துஆ செய்து இருக்களாம். ஏன் அப்படி செய்யவில்லை தன்னைவிட சிறந்தவர் ரஸூலுடைய சிரியதந்தை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை முற்ப்படுத்தி துஆ செய்தார்கள்.என்பது நமக்கு மிக தெளிவாக தெரிகிறது.அன்பர்களே.
 سمعت رسول الله صلي الله عليه وسلم يقول انّ خير التابعين رجل يقال له أويس وله والدة وكان به بياض فمروه فليستغفر لكم (رواه = مسلم ,مشكوة=٥٨٢)

 தாபிஈங்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும்.அவர்களிடமசென்று உங்களுக்காக பிழை பொறுக்கத் தேடிக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களு

No comments:

Post a Comment