Popular Posts

Monday 9 May 2016

இமாம்கள் சூனியத்தை மறுத்தார்களா? அன்பான ததஜ சகோதரர்களே சிந்தியுங்கள்!

இமாம்கள் சூனியத்தை மறுத்தார்களா? அன்பான ததஜ சகோதரர்களே சிந்தியுங்கள்!

 இமாம்கள் சூனியத்தை மறுத்தார்கள் என்று “பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்” என்ற புத்தகத்தில் பக்கம் 204 முதல் 220 வரை பீஜே எழுதியுள்ளார்.

 அப்படி சொன்ன இமாம்கள் உண்மையில் என்ன சொன்னார்கள். பீஜே சொல்வதைப் போன்று சூனியத்தை மறுத்தார்களா என்றால் அப்படி மறுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 உதாரணமாக ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்த அபூபக்ர் ராசீ என்பவர் சூனியத்தை மறுத்தார் என்று பக்கம் 206 ல் கூறியுள்ளார்.

 ஆனால் அபூபக்ர் ராசீ அவர்கள் சூனியம் பொய் என்று கூறவில்லை. அவர் கூறியது அல்லாஹ் நாடினால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று தான். அது மட்டுமில்லாமல் சூனியத்தை மறுத்தவர்கள் முஃதஸிலாக்கள் தான் என்றும் கூறியுள்ளார்.

 அவர் சொன்னது இது தான். அதை அரபி மூலத்துடன் கீழே தருகிறேன்.

 قَالَ الْحَسَنُ: الْمُرَادُ مِنْهُ التَّخْلِيَةُ، يَعْنِي السِّحْرُ إِذَا سَحَرَ إِنْسَانًا فَإِنْ شَاءَ اللَّهُ مَنَعَهُ مِنْهُ وَإِنْ شَاءَ خَلَّى بَيْنَهُ وَبَيْنَ ضَرَرِ السِّحْرِ . . . وَثَالِثُهَا: أَنَّ الضَّرَرَ الْحَاصِلَ عِنْدَ فِعْلِ السِّحْرِ إنما يحصل بِخَلْقِ اللَّهِ وَإِيجَادِهِ وَإِبْدَاعِهِ

 تفسير الرازي = مفاتيح الغيب أو التفسير الكبير (3/232)

 “ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சூனியம் செய்தால் அல்லாஹ் நாடினால் அந்த பாதிப்பை தடுத்துவிடுவான். அவ்ன் நாடினால் அந்த பாதிப்பை அவனுக்கு ஏற்படும்படி விட்டுவிடுவான். சூனியத்தை செய்யும் போது ஏற்படும் பாதிப்பை அல்லாஹ்வே படைக்கிறான். அவனே அதை உருவாக்குகிறான். அவனே அதை ஏற்படுத்துகிறான்”.

 தஃப்ஸீருர் ராசீ (பாகம் 3 பக்கம் 232)

 அதே முஃதஸிலாக்கள் சாட்டையடியாக அவர்களுக்கு மறுப்பும் கூறியுள்ளார்.

 وَاعْلَمْ أَنَّ الْمُعْتَزِلَةَ أَنْكَرُوا ذَلِكَ بِأَسْرِهِمْ

 تفسير الرازي = مفاتيح الغيب أو التفسير الكبير (32/368)

 “முஃதஸிலாக்களே சூனியத்தை ஒட்டுமொத்தமாக மறுக்கின்றனர் என்பதை நீ அறிந்துகொள்”.

 தஃப்ஸீருர் ராசீ (பாகம் 32 பக்கம் 368)

 இப்போது சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். தெளிவாகவே அபூபக்ர் ராசீ அவர்கள் தனது நூலில் சூனியம் உண்டு எழுதியுள்ளார்கள்.

 இப்போதே ஏன் இதை மறைத்து இருட்டடிப்பு செய்ய வேண்டும். தனது கொள்கையை நிலைநாட்ட மற்ற இமாம்கள் மீது ஏன் பழி சுமத்த வேண்டும்?

 ததஜ சகோதரர்கள் சிந்தியுங்கள்.

 இப்படிக்கு

 எம்.எஸ்சல்மான் பாரிஸ் Misc

 (ததஜ வின் கோவை மாவட்ட முன்னாள் பேச்சாளர்)

No comments:

Post a Comment