Popular Posts

Monday 9 May 2016

நெஞ்சில் தக்பீர் கட்டுவது தொடர்பான பலவீனமான செய்தி குறித்து தவறான தகவல்களை பகிரும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் "¶

¶"நெஞ்சில் தக்பீர் கட்டுவது தொடர்பான பலவீனமான செய்தி குறித்து தவறான தகவல்களை பகிரும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் "¶

 இதுவெல்லாம் அரபி இலக்கணம், இலக்கியம் தெரியாத மக்களை வஹ்ஹாபிகள் ஏமாற்றும் வார்த்தை ஜாலங்கள்

 இந்த ஹதீஸை தங்கள் கிரந்தத்தில் பதிவு செய்துள்ள இமாம் அஹ்மது அவர்களே இந்த அறிவிப்பாளரை குறைவு படுத்தி இருக்க இந்த ஹதீஸை ஸஹிஹ் என்று எப்பிடி சொல்ல முடியும், சிந்தியுங்கள்,

 حدثنا يحيى بن سعيد عن سفيان حدثني سماك عن قبيصة بن هلب عن ابيه قال رأيت النبي صلى الله عليه وسلم ينصرف عن يمينه وعن يساره ورأيته قال يضع هذه على صدره – رواه احمد

 இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை வலது பக்கமும் இடது பக்கமும் திரும்பும்போது பார்த்தேன்,(தொழுகையில்) நெஞ்சின் மீதுஇக்கையை வைப்பதையும் பார்த்தேன்,அறிவிப்பாளர் – ஹுல்ப் ரழியல்லாஹு அன்ஹுநூல் : அஹ்மத்- எண் : 20961

 இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் வரிசையில் சிமாக் என்பவர்வருகிறார்.இவரைப் பற்றி ஹதீஃத் கலை வல்லுனர்கள்பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்,நம்பகமானவரென்றுநிறையை மட்டுமே கூறியவர்களுமுண்டு, இவ்வாறுகூறியவர்கள் எண்ணிக்கையில் மிகமிக சொற்பமானவர்கள்,இவருடைய குறை-நிறை இரண்டையும் கூறியவர்களும்இருக்கிறார்கள்,இவர்களும் குறைந்த எண்ணிக்கையில்உள்ளவர்களே,சிமாக் பலவீனவர்,அவருடைய ஹதீஃதைஆதாரமாக ஏற்கக்கூடாது என்று குறைமட்டுமே சொன்னஹதீஃத் கலை அறிஞர்கள்தான் ஏராளம்,நிறை கண்டோர்.

 *அவைகளை பின்வருமாறு தருகிறோம்

 1- قال يعقوب بن شيبة قلت لابن المديني رواية سماك عن عكرمة فقال مضطربة

 1. இக்ரிமா வழியாக சிமாக் அறிவிப்பது தடுமாற்றமுள்ளதாகும்.- இப்னுல் மதீனீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

 2- قال النسائي ليس به بأس وفي حديثة شيئ

 2-சிமாக் என்பவர் பரவாயில்லை என்று சொல்லத்தக்கவரே.அவர் அறிவிக்கும் ஹதீஃதில் பலவீனமுண்டு.- நசாயீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

 3- قال ابن ابي خثيمة سمعت ابن معين سئل عنه ماالذي عابه قال اسند الاحاديث لم يسندها غيره وهو ثقة

 3- சிமாக் நம்பகமானவர்.ஆனால் யாருமே அறிவித்திராதநபரின் வழியாகவெல்லாம் ஹதீஃதை அறிவிக்கும் குறைபாடுஇவரிடமுண்டு.- இப்னு மஈன் ரஹ்மத்துல்லாஹி அலைஹிகுறை கண்டோர்

 4- قال ابوطالب عن احمد مضطرب الحديث

 சிமாக் ஹதீஃத் அறிவிப்பதில் தடுமாற்றமுடையவர்.- அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

 இதுபோன்று பல ஹதீஸ் கலை வல்லுனர்கள்பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்கள்

 ஹதீஃத் கலை அறிஞர்களில் பலர் சிமாகை குறைகண்டுஇருக்க ஓரிரு அறிஞர்களின் கருத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு அரபி ஞானம் தெரியாத அப்பாவி இளைஞர்களைஏமாற்றி நெஞ்சின் மீது கைகட்ட வைத்து அவர்களின் வணக்கவழிபாடுகளை பாழடித்துக் கொண்டிருக்கிறார்கள் வஹ்ஹாபிசமுல்லாக்கள்.அப்பாவி இளைஞர்களே! ஆதாரபூர்வமான ஹதீள்தைமட்டுமே பின்பற்றுவோம் என்பதில் நீங்கள் உறுதியாகஇருந்தால் இப்போதிலிருந்து தொழுகையில் நெஞ்சின் மேலேகைகட்டுவதை விட்டுவிடுங்கள்!

 ஏனென்றால்,சிமாக்இடம்பெறும் ஹதீஃத் பக்கா பலவீனமான ஹதீஃத்.வஹ்ஹாபிய புரோகிதர்களையே பின்பற்றுவோம் என்றநிலையிலிருந்தால் மறுமை வாழ்வு என்னாகும் என்பதைஒரு கனம் யோசியுங்கள்!அறிவிப்பாளர் வரிசையில் சிமாக் இடம் பெற்ற ஹதீஃதைப்பின்பற்றுவதிலிருந்து பின் வாங்கமாட்டோம்,தொழுகையில்நெஞ்சின் மீது கைகட்டுவதை விடமாட்டோம் என்பதில்வஹ்ஹாபி இளைஞர்களே! நீங்கள் பிடிவாதமாக இருந்தால்!

 இன்றிலிருந்து புதிய முறையில் நீங்கள் கைகட்டவேண்டும்.நெஞ்சின் மீது இருகைகளையும் வைக்கக்கூடாது.ஒரெவொருகை மட்டுமே நீங்கள் வைக்கவேண்டும்.காரணம், நெஞ்சின்மீது கைவைப்பதற்கு நீங்கள் ஆதாரமாக எடுத்த அஹ்மதிலேபதிவுசெய்யப்பட்ட ஹதீஃத்தில் ஒரு கை வைப்பதற்குண்டானவார்த்தையே இடம்பெற்றுள்ளது. ‘ ஹாதிஹீ ‘ என்றவார்த்தை தான் அது.அதன் பொருள் இந்த(கை) என்பதாகும்.

 ஆகவே,நெஞ்சின்மீது வலது கையை மட்டும் வையுங்கள்!அல்லது இடது கையை மட்டும் வையுங்கள்!அது எப்படி ஒரு கையை வைப்பது?தொழுகையில் இவ்வாறுசெய்வது அழகிய நடமுறை அல்லவே என நீங்கள் கூறினால்அந்த ஹதீஃதை ஆதாரமாகக் கொண்டு நெஞ்சின்மீது கைகட்டுவதை நிறுத்திவிடுங்கள்! அதுதான் நீங்கள் நியாயவாதி-கள் என்பதின் அடையாளம்.அவ்வாறில்லாமல் அந்த ஹதீஃதில் இடம் பெற்ற ‘ நெஞ்சின்மீது ‘ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். ‘ஒரு கை ‘என்பதை விட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தால்வஹ்ஹாபி இளைஞர்களே!உங்களின் சுயநலத்திற்காகஹதீஃதை சிதைத்த குற்றத்திற்கு உள்ளாகுவீர்கள் என்பதைமறந்துவிடாதீர்கள்!நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்

No comments:

Post a Comment