Popular Posts

Wednesday 6 January 2016

ஸஹீஹான ஹதீஸை மறுப்பவரின் நிலை

ஸஹீஹான ஹதீஸை மறுப்பவரின் நிலை
 கேள்வி:
 ஸஹீஹான ஹதீஸை மறுப்பவர் காஃபிராகி விடுவாரா?சிலர் புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் வரும் சில ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி அவற்றை மறுக்கின்றனா.இவர்களின் நிலை என்ன?இவர்கள்காஃபிராகி விடுவார்களா?
 பதில்:
 நபியவர்களின் ஸுன்னா இஸ்லாமிய சட்டவாக்கத்தின் இரண்டாவது மூலாதாரமாகும். அல்குர்ஆனைப் பொன்றே அதுவும் வஹீயாகும்.“அவர் (நபி (ஸல்) ) மனோ இச்சைப்படி பேசுவதில்லை.அ(வர் பேசுவ)து வஹீயே அன்றி வேறில்லை”. (53: 3 – 4)
 நபி (ஸல்) அவர்களது பேச்சுக்கும் அவர்களது ஹதீஸுக்கும் மற்றும் அவர்களது சட்டங்களுக்கும் முஃமின்கள் பூரணமாகக் கட்டுப்பட வேண்டுமென்று அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நபி (ஸல்) அவர்களது பேச்சைக் கேட்டு அதை ஏற்காமல் மறுப்பவனிடம் அறவே ஈமான் இல்லை என்று தன்மீது சத்தியமிட்டு அல்லாஹ் கூறியுள்ளான்.(நபியே!) உம் இரட்சகன் மீது சத்தியமாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமாயாகக் கட்டுப்படும்வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (4:65)
 எனவேதான், பொதுவாக ஸுன்னாவின் ஆதாரத் தன்மையை மறுப்போர், அல்லது நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை, அது நபியவர்களின் கூற்றுத்தான் என்பதை அறிந்த நிலையில் அதனை மறுப்போர் காஃபிர்களாகக் கருதப்படுவர் என்பதில் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
 இமாம் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறாh;கள்.“ரசூல் (ஸல்) அவர்களைத் தொட்டும் ஒரு செய்தி கிடைத்து, அது ஸஹீஹானது என்று ஏற்றுக் கொண்ட பின் தக்வா இன்றி யார் அதை மறுக்கின்றாரோ அவா; காஃபிராவார்;”
 இமாம் சுயூத்தீ (ரஹ்) அவர்கள்கூறினார்கள் :
 “அறிந்து கொள்ளுங்கள்! உஸுலலுல் ஹதீஸில் அறியப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாக வந்த ஹதீஸ் ஆதாரமாகக் கொள்ளத்தக்கது என்பதை மறுப்பவர் காஃபிராகி விடுவார். இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு அவர் வெளியேறி விடுவார். மேலும் அவா; யூதர்களுடன் அல்லது கிறிஸ்வதவர்களுடன் அல்லது அவர் நாடிய நிராகரிக்கும் கூட்டத்துடன் மறுமையில் எழுப்பப்படுவார்.”(மிஃப்தாஹுல் ஜன்னா பக்-14)
 மேலும், அல்லாமா இப்னுல் வஸீர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “ ரஸுல் (ஸல்) அவர்களது ஹதீஸ்தான் என்று அறிந்த நிலையில் ஒருவர் ஹதீஸை பொய்ப்படுத்ு தெளிவான குஃப்ர் ஆகும்.”(அல்அவாஸிம் வல்கவாஸிம் 2⁄274)
 அல்லஜ்னா அத்தஇமா (சஊதி ஃபத்வா வழங்கும் சபை) பின்வருமாறு ஃபத்வா வழங்கியுள்ளது.
 “சுன்னாவைக் கொண்டு அமல் செய்ய மறுப்பவார் காபிராவார். ஏனெனில் அவா;
 அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மற்றும் முஸ்லிம்களது ஏகோபித்த முடிவையும் பொய்ப்படத்துவராவார்”( ஃபத்வா இரண்டாவது தொகுதி 2⁄194)

No comments:

Post a Comment