Popular Posts

Tuesday 12 January 2016

குர்ஆனை ஒளு இன்றி தொடலாமா

குர்ஆனை ஒளு இன்றி தொடலாமா ?

 குர்ஆனை தூய்மையின்றி தொடலாமா ?

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹூ பரக்கத்துஹூ
 சமூதாய சிந்தனைக்கு :
 அல்லாஹூ தஃஆலா வழங்கிய வேதங்களில் இறுதி வேதம் புனிதம் நிறைந்த அல்குர்ஆன் . இந்த புனித குர்ஆனின் கண்ணியத்தை முஸ்லீம்களின் உள்ளத்தில் இருந்து அகற்றவேண்டும் என்று உலக அளவில் சூழ்ச்சி நடை பெறுகிறது .என்பதை இஸ்லாமியர்கள் அனைவரும் அறிந்த விசையம் ! இஸ்லாத்தை சிரழித்திட வழிகேடற்கள் போடும் சதி திட்டம் .


 பிஜெ மதம் ஒரு பேராபத்து ;
 பிஜெ என்ற அதி மேதாவி தான் சொல்வது மட்டும் தான் மார்க்கம் மற்ற யார் சொன்னாலும் அது மார்க்கம் அல்ல என்று . சொல்வது அனைவருக்கும் தெரிந்த விசையம் , அதை உருதி செய்வதர்க்கு ஒரு உதாரணம் பார்போம் ...
 யார் ? வேண்டுமானாலும் சுத்தம் இல்லாமல் அதாவது ஒளூ இல்லாதவர்களும் , குளிப்பு கடமையானவர்களும் , மாதவிடாய் பெண்களும் , பேருகாலத்தொடக்கு உள்ள பெண்களும் , எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் , குர்ஆனை தொடலாம் , என்று தன் சுய அறிவின் படி கருத்தை சொல்கிறார் :


 ஒளூ வின்றி குர்ஆனைத் தொடலாமா ? என்பதை பற்றிய குர்ஆன் & ஹதீஸ்களை வைத்து ஆறாயிவோம்
 ஒளூ இல்லாதவர்களும் , குளிப்பு கடமையானவர்களும் ,பெண்கள் மாதவிடாய் மற்றும் பேறு காலத்தொடக்கு உள்ளவர்களும் , குர்ஆனை தொடலாம் ? ஓதலாம் ? என்று இஸ்லாமிய பெயர்தாங்கியான பிஜெ என்ற வழிகேடர் கூறுகிறார் .
 இதுவும்ஷரீஅத்தீன் தீர்ப்புக்கு முற்றிலும் மாறுபட்டதும் , ஹராமான செயலுமாகும்.
 ஸூரத்துல் வாகிஆவிலுள்ள 79 ஆவது வசனத்திற்கு அடைப்புக்குறிக்குள் ஒரு வார்த்தையைச் சேர்த்து தவறான அர்த்தம் எழுதி , அதனுடைய விளக்க குறிப்பு 291 ல் பின் வருமாறு எழுதுகிறார் .
 பிஜெ வின் விளக்கம்
 திருக்குர்ஆன் எழுத்துவடிவில் அருளப்படவில்லை எனும் போது எழுத்து வடிவில் அருளப்படாததை தொடும் பேச்சுக்கே இடமில்லை . தொடும் விதத்தில்லாவது அருளப்படிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனைத் தொடமாட்டார்கள் என்று கூறமுடியும் . திருக்குர்ஆன் நபிகள் நாயகத்திற்கு ஓதிக் காட்டப்பட்டதே தவிர எழுத்து வடிவில் அருளப்படவில்லை .எனவே . இதைத் தொடமாட்டார்கள் என்பது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனைக் குறிக்காது . எங்கிருந்து அருளப்பட்டதோ அந்த மூலப்பிரதியைத்தான் குறிக்கும் இவ்வாறு தன்னுடைய சுய விளக்கத்தை எழுதியபின் கடைசி பாராவில் இப்படி எழுதி இருக்கிறார் : எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் குர்ஆனை தொடலாம் , படிக்கலாம் , வாசிக்கலாம் , என்பது தான் குர்ஆனிலிருந்து பெறப்படுகிற ,நபிகள் நாயகத்தின் வழிமுறைகளிலிருந்து பெறப்படுகிற முடிவாகும் .
 நூல் : பிஜெ வின் தர்ஜமா என்ற நாவல் பக்கம் : 1248
 நம்முடைய விளக்கம்
 இதிலும் தன் சொந்தக் கருத்தைத்தான் சொல்கிறார் , ஆதாரம் எதையும் காண்பிக்கவில்லை . குர்ஆனிலிருந்து ,நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளிலுருந்தும் பெறப்படுகின்ற முடிவு என்று பிஜெ கூறியிருப்பதும் தன்னிச்சையான முடிவேயாகும் .
 இவ்வாறு தன் சுய அறிவுப்படி குர்ஆனுக்கு விளக்கம் சொல்ப்வரைப் பற்றி ஹதீஸ்கள் எச்சரிகிறது ஹதீஸ்:
 தன் சுய அறிவின்படி குர்ஆனுக்கு விளக்கம் கூறுகிறவர் தன் தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ
 நூல் : திர்மிதி ,மிஷ்காத் ,,
 ஹதீஸ் = 2
 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யார் வேண்டும் என்றே என்மீது பொய் சொல்கிறாறோ அவர் தன் தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ
 நூல் : திர்மிதி ,மிஷ்காத் ,,


 பிஜெ இது போன்ற ஹதீஸ்களை பார்பது இல்லை போல் ! குர்ஆன் & ஹதீஸ் இவைகளில் இருந்து ஆதாரம் இல்லையே ? மாறாக பெறப்படும் கருத்து என்று சொல்கிறார் . பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் குர்ஆனும் & ஹதீஸூம் அல்லாத வேறு எந்த மனித அபிப்பிராயத்தையும் ஏற்கவே முடியாது என்று முழங்கிக் கொண்டுருப்பவர் . பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் தன்னுடைய அபிப்பிராயத்தை மட்டும் இங்கு புகுத்தி '' இதுதான் சரியான கருத்து '' என்று எவ்வாறு எழுதுகிறார் ? எந்த ஆயத்திலும் & எந்த ஹதீஸிலும் இல்லாத , ஒரு விளக்கத்தை ,தன் அறிவை மட்டும் பயன் படுத்திக் கூறியிருப்பது . இவர் மிக பெரிய பொய்யன் , , வழிகேடன் என்பதற்க்கு சான்றாகும் . ..


 இந்த பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் :
 தன்னுடைய கருத்து மட்டுமே சரியானது , மற்றவை தவறானவை என்ற விதத்திலேயே குர்ஆனுடைய இந்த ஆயத்திற்கு அர்த்தம் எழுதியுள்ளார் , பிஜெ வின் விளக்கத்தை பாருங்கள் :
 ''தூய்மையான ( வான ) வர்களைத் தவிர ( மற்றவர்கள் ) அதைத் தீண்டமாட்டார்கள் '' ( மொழிபெயர்ப்பு = 56 / 79 )
 மற்ற மொழிபெயர்ப்புகளில் உள்ள அர்த்தம் :
 '' பரிசுத்தமானவர்களைத் தவிர ( வேறு எவரும் ) இதனைத் தொடமாட்டார்கள் ''
 பிஜெ தன்னுடைய மொழிபெயர்ப்பில் தூய்மையானவர்கள் வானவர்கள்தாம்என்பதை உறுதிப்படுத்துவதற்காக '' வான '' என்ற ஒரு வார்த்தையை அடைப்புக்குறிக்குள் அதிகப்படுத்தி எழுதியுள்ளார் . இது எந்த மொழிப்பெயர்ப்பாளரும் எழுதாத புதிய கருத்தாகும் மேலும் ,பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் '' லாயமஸ்ஸூஹூ '' என்பதற்க்கு தீண்டமாட்டார்கள்என்று தவறாக அர்த்தம் எழுதியுள்ளார் .'' லாயமஸ்ஸூஹூ '' என்பதற்கு தொடமாட்டார்கள் என்பது அர்த்தம் .
 தொடமாட்டார்கள் என்பதற்கும் , தீண்டமாட்டார்கள் என்பதற்க்கும்நிறைய வேறுபாடு உள்ளது .பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடிப்பதற்குத்தான் தீண்டுதல் என்று சொல்லப்படும் .அவருடைய மொழிபெயர்ப்பில் இது போன்ற தாறு மாறான மொழிபெயர்ப்பைக் கொண்டு விளக்கங்கள் கூறி குழப்பங்கள் செய்து வரும்இந்த வழிகேடர் பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் அடையாளம் கண்டுகொள்ளுங்கள் இது ஒரு சில வசனங்களுக்கு , மட்டும் மல்ல குர்ஆன் முழுமைக்கும் இவ்வாறே தவறான கருத்துக்கள் எழுதப்படுள்ளன ! இஸ்லாமியர்களே நம் ஈமானை பாதுகாக்க இது போன்ற வழிகேடர்கள் சொல்லும் & எழுதும் விளக்கம் வேண்டாம் .அல்லாஹூ நம்மை அனைவரையும் பாதுகாப்பானாக .
👇👆👇👆👇👆👇

 இனி நம் தஃப்ஸீர்களில் உள்ள விளக்கங்களைப் பார்ப்போம் :
 பரிசுத்தமானவர்கள் என்று அல்லாஹூ தஃஆலா கூறியுள்ள இந்த வார்த்தைக்கு இரண்டு அர்த்தம் கூறப்படும்
 [ 1 ]=பாவங்களை விட்டுப் பரிசுத்தமானவர்கள்
 [ 2 ]= அசுத்தாங்களை விட்டுப் பரிசுத்தமானவர்கள்
 முதல் அர்த்தத்தின் படிபரிசுத்தமானவர்கள் என்பவர்கள் மலக்குகளாகும் .அதன் படி தொடமாட்டார்கள் என்றால் '' லவ்ஹூல் மஹ்ஃபூள்என்னும் பதுகாக்கப்பட்ட பேரேட்டில் உள்ளதை அவர்களைத் தவிர வேறெவரும் தொடமாட்டார்கள் என்பது கருத்தாகும் .
 👆👇👆👆👇👆👇

 இரண்டாவது அர்த்தத்தின் படிபரிசுத்தமானவர்கள் என்பவர்கள் மனிதர்களாகும் . ஒளு இல்லாமலிருப்பது , குளிப்பு கடமையாயிருப்பது , பெண்கள் மாதவிடாய் மற்றும் பேறு காலத்தொடக்கு உள்ளவர்களாக இருப்பது போன்று அசுத்தங்களை விட்டும் பரிசுத்தமாயிருப்பது என்று பொருளாகும் . இதன் படி தொடமாட்டார்கள் என்பது நம் மிடமுள்ள அச்சிடப்பட்ட தாள்களைக் கொண்டகுர்ஆன் ஷரீஃபாகும் . ''' குர்ஆனை (மேற்கூறப்பட்ட சிறிய பெரிய அசுத்தங்களை விட்டும் ) பரிசுத்ட்ட்ட்தமானவர்களான மனிதர்களைத் தவிர வேறு எவறும் தொடமாட்டார்கள் ''' எனக் கருத்தாகும் . இவ்விரண்டு கருத்துகளுமே சரியானது தான் . ஒவ்வொரு கருத்தையும் ஸஹாபாக்களிலும் , தாபியீங்களிலும் , இமாம்களிலும் பலர் கூறியுள்ளனர் .
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 முதல் கருத்தை
 ஹஜரத் இப்னு அப்பாஸ் , அனஸ் , ஸயீது ஜூபைர் ( ரலியல்லாஹூ அன்ஹூம் ) அவர்களும் , முஜாஹித் , இக்ரிமா , ளஹ்ஹாக் , ஜாபிர் பின் ஜைத் ( ரஹிமஹூ முல்லாஹ் ) போன்றோர் கூறியுள்ளார்கள் .
 இரண்டாவது கருத்தை
 ஹஜரத் அலீ , இப்னு மஸூது , ஸஃது பின் அபீவக்காஸ் , ஸயீது பின் ஜைது ( ரலியல்லாஹூ அன்ஹூம் ) அவர்களும் , முஹம்மது பாகர் , அதாஉ , தாவூஸ் , ஜுஹ்ரி , ஸாலிம் , நகயீ , ஹகம் , ஹம்மாது , மாலிக் பின் அனஸ் , அபூஹனிஃபா , ஷாஃபீ , அஹ்மது பின் ஹம்பல் , ( ரஹிமஹூல்லாஹூ ) போன்றோர்கள் க்றியுள்ளார்கள் .
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 இரண்டு கருத்துகளுமே சரியானது தான். என்றாலும் இரண்டில் தீர்ப்புக்குரியதும், அமல் படுத்தப்பட வேண்டியதும் , இரண்டாவது கருத்தைத்தான் என்பது இமாம்கள் அனைவரின் ஏகோபித்த அபிப்பிராயமாகும். எனவே , பரிசுத்தமானவர்களைத் தவிர ( வேறு எவறும் ) இதனைத் தொடமாட்டார்கள் . என்ற ஆயத்திற்கு ஒளூ இல்லாதவர்கள் குர்ஆனைத் தொடுவதும் . குளிப்பு கடமையானவரும் , மாதவிடாய் மற்றும் பேறு காலத்தீட்டு உள்ள பெண்களும் , குர்ஆனைத் தொடுவதும் , ஓதுவதும் ஹராமாகும் . இதற்கு நேர்மாற்றமாக பிஜெ என்ற வழிகேடர் எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் , குர்ஆனைத் தொடலாம் . படிக்கலாம் . வாசிக்கலாம் , என்று பிஜெ எழுதியிருப்பது முற்றிலும் தவறாகும் . ஷரீஅத்தில் ஹராம் என்று தீர்ப்பாளிக்கப்பட்ட ஒரு செயலை ஹலாலாக்கிவைக்கிறார்
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் பரிசுத்தமான மனிதர்கள் மட்டுமே இந்தக் குர்ஆனைத் தொடவேண்டுமெனக் கூறிய ஹதீஸ்களை பார்போம்
 ஹதீஸ் : 1 =
 யமன் நாட்டுக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : எழுதிய ஒரு கடிதத்தில் '' லா யமஸ்ஸூல் குர்ஆன இல்லா தாஹிருன் '' பொருள் : சுத்தமானவரைத் தவிர இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் '' என எழுதியனுப்பியதாக அம்ரு பின் ஹஜம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள் அறிவித்துள்ளார்கள் . இந்த ஹதீஸ் தாருகுதீனி , யில் பதிவு செய்யப்பட்டுள்ளது , இதனை ஹாகிம் அவர்கள் மஃரி ஃபாவிலும் , பைஹகீ அவர்கள் கிலாஃபிய்யத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள் .
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 ஹதீஸ் : 2
 '' பரிசுத்தமானவரைத் தவிர ( வேறு எவறும் ) இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் '' ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் :கூறினார்கள் அறிவித்தவர் : இப்னு உமர் ரலயல்லாஹூ அன்ஹூ நூல் : தப்ரானீ
 ஹதீஸ்: 3
 ஹகீம் பின் ஹிஜாம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிய பொழுது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : '' நீ பரிசுத்தமாயிருக்கும் நிஹதீஸ் : 3 லையிலே தவிர இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் என்று கூறி அனுப்பினார்கள் . நூல் : தப்ரானீ , அபிதாவுத் , ஹாகிம் , கஞ்ஜுல் உம்மால் ( 1 / 615 ) நூல் : ரூஹூல் மஃஆனீ ( 9 / 155 ) இப்னு கதீர் (4 / 229 ) குர்துபீ (17 / 225 ) மள்ஹரீ ( 1 / 181 ) மஃஆரிஃபுல் குர்ஆன் (8 /287 )
 ஆகிய விரிவுரைகளிலும் , எடுத்தெழுதப் பட்டுள்ளன .இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றும் இப்னு கதீரில் குறிப்பிடப்பட்டுள்ளது
 ஹதீஸ் ; 4
 சுத்தம் ( ஒளூ ) இல்லாதவர்கள் குர்ஆனை தொட வேண்டாம் , தொடக்கூடாது . என நிச்சியமாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் வாசிகளுக்கு கடிதம் எழுதினார்கள்
 ( அறிவித்தவர் : அபூபக்ரு பின் முஹம்மது பின் ஹஜ்ம் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : தப்ரானி )
 ஹதீஸ் : 5
 தூய்மை மூலம் தவிர எந்த தொழுகையும் ஏற்க்கப்படாது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அறிவித்தவர் : அபு குரைரா ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : முஸ்லிம் , அபூதாவுத் இதில் தூய்மை என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள் இதில் தூய்மை என்பது ஒளூ மற்றும் குளிப்பு , இரண்டையும் குறிக்கும் . அதே போல் தான் தூய்மை இன்றி குர்ஆனை தொடாதே என்பதற்க்கு ஒளூ மற்றும் குளிப்பு இரன்டையும் குறிக்கும் .
 ஹதீஸ் : 6
 மாதவிடாய் ஏற்பட்டவர்களும் , குளிப்பு கடமையானவர்களும் , குர்ஆனை எதனையும் . ஓதலாகாது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள்
 ( அறிவித்தவர் : இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : திர்மிதீ , அபுதாவுத் , )
 ஹதீஸ் : 7
 ஜனாபத் இல்லாத எல்லா நிலையிலும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள் அறிவித்தவர் : அலி ரலியல்லாஹூ அன்ஹூ
 நூல் : திர்மிதீ
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 மேற்கூறப்பட்ட ஹதீஸ்களில் குர்ஆனை ஒளூ வின்றித் தொடுவதும் , குளிப்பு கடமையானவர் , மாதவிடாய் மற்றும் பேறு காலத்தீட்டு உள்ள பெண் ஆகியோர்கள் தொடுவதும் , ஓதுவதும் ஹராம் என்பதைச் ஹதீஸ்கள் மூலம் ஆதாரம் காட்டிவுள்ளோம் இதைத்தான் சட்டமாமேதைகள் ஹராம் என்பதை விளக்கிவுள்ளார்கள் .
 திருக்குர்ஆனை ஓளூ இல்லாமல் தொடலாம் என்பதற்க்கு இன்னோரு உதாரணத்தையும் எழுதியுள்ளார் பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் இதை படியுங்கள் :
 இந்தக்குரஆன்த் தூய்மையானவர்கள் தான் தொடவேண்டும் , மற்றவர்கள் தொடக்கூடாது என்றெல்லாம் இவ்வசனத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பலரும் சட்டங்களை வகுத்துள்ளனர் .ஆனால் இந்த வசனம் எல்லா மக்களுக்கும் , வழிகாட்டுவதற்காக அருளப்பட்டது . எல்லா நிலையிலும் வாசிப்பதற்காக அருளப்பட்டது . எல்லா மாந்தர்களும் படிப்பதற்காக அருளப்பட்டது . முஸ்லிம்கள் அல்லாதாவர்கள் இந்தக் குர்ஆனை வாசித்தால் தான் அவர்கள் நேர்வழி பெற முடியும் . நீங்கள் தூய்மையாக இல்லை , நீங்கள் குர்ஆனைத் தொடக் கூடாது , என்று கூறினால் எந்த நோக்கத்திற்க்காக குர்ஆனை அல்லாஹூ அருளினானோ அந்த நோக்கத்தைச் சிதைத்தவர்களாக நாம் ஆகிவிடுவோம் . நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பல நாடுகளின் தலைவர்களுக்கு திருக்குர்ஆன் வசனங்களை எழுதி இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுத்துள்ளார்கள் . அந்த மன்னர்கள் அதைத் தம் கையால் தொட்டு வாசிப்பார்கள் என்பதை அறிந்தே திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியிருக்கும் போது திர்க்குர்ஆனைத் தூய்மையுடன் தான் தொடவேண்டும் என்று கூறுவது தவறாகும் . குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்பத்தி விடும் .
 பிஜெ வின் தர்ஜமா என்ற நாவல் பக்கம் : 1065
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 நம்முடைய விளக்கம்
 இது, அவர் தன்னுடைய சுய அறிவின்படி எழுதியதாகும் இதற்காவது குர்ஆன் & ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் காட்டி இருக்க வேண்டும் அப்படியும் செய்யவில்லை . குர்ஆனில் நாம் சுயகருத்தை சொல்லலாமா ?
 ஹதீஸ் : 1
 '' எவரொருவர் தன் சுயறிவுப்படி குர்ஆனுக்கு விளக்கம் கூறி ( உண்மையில் ) அது சரியாக இருந்தாலும் உறுதியாக அவர் தவறு செய்தவரேயாவார் ''
 அறிவிப்பவர் :ஜூந்துப் பின் அப்தில்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் திர்மிதி
 ஹதீஸ் : 2
 '' யார் குர்ஆனில் தர்கம் செய்கிறறோ அவர் காஃபிராகி விட்டார் ''
 ( அறிவிப்பவர் : அபூஹூறைறா ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : அஹமது , அபூதாவூத் , )
 அல்லாஹூ திருகுர்ஆனில் இணைவைத்து வணங்குபவர்களை பற்றி :
 ஈமான் கொண்டவர்களே ; நிச்சயமாக இணைவைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே( 9 / 28 )
 இந்த குர்ஆனை தூய்மையானவர்கள்தான் தொடவேண்டும் மென்பதற்க்கு மேலே பல ஆதாரமாக ஹதீஸ்களை காட்டி விட்டோம் ஆனால் பிஜெ குர்ஆனையோ & ஹதீஸையோ காட்டாமல் தன் சொந்த சரக்கை ( சுய அறிவை ) பயன்படுத்திவுள்ளார் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது .
 நாம் பிஜெ பானியிலே கேட்போம் அதாவது
 அல்லாஹூவும் ,அவனுடைய ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்படி நடப்பது சிறந்ததா ?
 தன்னுடைய சுயஅறிவை பயன்படுதும் இந்த பிஜெ என்ற கருத்து கண்ணாயிரத்தை பின்பற்றுவது சிறந்ததா ?
 என்று உங்களிடத்தில் கேட்டால் நீங்கள் கண்களை முடிக்கொண்டே சொல்விற்கள் அல்லாஹூம் , ரஸூலும் சொல்வதைதான் கேட்போம் என்று .......!

No comments:

Post a Comment