#வீடுகளில்_நபிபுகழ்_ﷺ_மௌலித்_பாடுவதற்காக_ஆதாரம்_உண்டா? _________________________________
மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (33) __________________________________
*♣ மௌலித் என்றால் என்ன?*
பள்ளிவாசலில், மத்ரஸாக்கள்,
பாடசாலை, வீடு, கடை போன்ற இடங்களில் மனிதர்கள் ஒன்று கூடி திர்குர்ஆன் வசனங்களிற் சிலதை ஓதி, ஒரு நபீ அல்லது ஒரு வலீ அல்லது ஒரு நல்ல மனிதனைப் புகழ்ந்து அவரின் பிறப்பு இறப்பு பற்றிக் கூறி அவரின் வாழ்விலும், அவர் மறைந்த பின்னும் அவரால் வெளியான அற்புதங்களைக் கூறி, அவரின் உயர் குணங்களையும் விஷேட தன்மைகளையும் எடுத்தோதி, அவர் சொன்ன பேச்சுகள் தத்துவங்களைப் பேசி, அல்லது பாடி, அங்கு கூடும் மக்களுக்கு சாப்பாடு பழவகை விநியோகம் செய்து, சிறுவர்களுக்கும் மேலும் மார்க்க அறிஞர்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கி அவர்களை கௌரவித்தல் இவ்வாறு செய்தலே முஸ்லிம்களிடம் மௌலித் ஓதுதல் என்று சுருக்கமாக சொல்லப்படுகிறது.
*♣ வீடுகளில் கவி (மௌலித்) பாடுவதற்காக ஆதாரம்*
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு
முறை நான் ஆயிஷா நாயகியிடம் சென்றேன் அப்போது அவர்களுக்கு அருகில் ஹஸ்ஸான் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்து கவி பாடிக்கொண்டும் தம் பாடல்களால் ஆயிஷா நாயகி அவர்களை பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள். (நூல் : முஸ்லிம் 1901)
*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*
No comments:
Post a Comment