Popular Posts

Thursday 14 July 2016

இஜ்திஹாத்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

         இஜ்திஹாத்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

          اநபி (ஸல்)    
அவர்கள் மு ஆத் பின் ஜபல் (ரழி) அவர்களை யமனுக்கு (கவர்னராக) அனுப்பிய போது "மு ஆதே உன்னிடம் வழக்கு வந்தால் எதைக் கொண்டு தீர்ப்பு வழங்குவீர்"? எனக் கேட்டார்கள். அதற்கு மு ஆத் (ரழி) அவர்கள் "அல்லாஹ்வின் வேதத்தை வைத்து தீர்ப்பு வழங்குவேன்" என பதிலளித்தார்கள். அதற்கு நபியவர்கள் "அதில் நீர் (தீர்ப்பைக் ) காணாவிட்டால்? எனக் கேட்டபோது "நபியின் வழிகாட்டலைக் கொண்டு தீர்ப்பு வழங்குவேன்" என்றார்கள். அதிலும் நீர் காணாவிட்டால்" என நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கேட்க " நான் சுய ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குவேன், அதில் குறைவு செய்யமாட்டேன்" என பதிலளித்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் மு ஆத் (ரழி) அவர்களுடைய நெஞ்சில் அடித்து "அல்லாஹ்வின் தூதர் பொருந்திக்கொள்ளும் வகையில் அவரின் தூதரை (மு ஆத் (ரழி) அவர்களை) ஆக்கிய அல்லாஹுவுக்கே புகழ் அனைத்தும்" எனக் கூறினார்கள்.

      இஜ்திஹாத் இன்று நேற்று அல்ல நபியுடைய காலத்திலையே உண்டானது தான்!

“தீர்ப்புச் சொல்பவர் (ஹாகிம்), இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக அமைந்தால் அவ ருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவரது முடிவு தவறாக அமைந்து விட்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு”  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ருப்னுல் ஆஸ் (ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஸின் மூலம் இஜ்திஹாத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டுவதை விளங்கலாம். உண்மையில் முஸ்லிம் சமூகம் அறிவியல் துறைகளில் முன்னேற்றமடைவதற்கு வழிவகுத்த காரணிகளில் முக்கியமானதாக இருப்பது இஸ்லாம் இஜ்திஹாதிற்கு அளித்த அங்கீகாரமும் உந்துதலுமே என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் இஜ்திஹாதிற்கான அனுமதியை வழங்கியதனால்தான் நபித்தோழர்கள் நபியவர்கள் உயிருடன் இருக்கும்போதே இஜ்திஹாதில் ஈடுபட்டார்கள்.

· அஹ்ஸாப் யுத்தம் முடிந்து திரும்பிய நபியவர் கள், ஸஹாபாக்கள் சிலரை பனூ குரைழாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களை அனுப்பும்போது “ பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்” எனக் கூறினார்கள். பனூ குரைழாவை நோக்கி செல்லும் வழியில் சிலர் அஸர் தொழுகைக் கான நேரத்தை அடைந்து கொண்டார்கள். அப்போது “ பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்” என்ற நபியவர்களின் ஹதீஸைப் புரிந்து கொள்வதில் அவர்கள் மத்தியில் இரண்டு விதமான கருத்துக்கள் தோன்றின. சிலர் பனூ குரைழாவுக்குச் சென்றுதான் அஸரைத் தொழ வேண்டுமெனப் புரிந்து கொண்டார்கள். மற்றும் சிலர் அவ்வாறல்ல, நேரமாகிவிட்டதால் இவ்விடத்திலேயே தொழ வேண்டுமெனக்கூறி அங்கு தொழுதனர். பின்னர் இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எத்தி வைக்கப் பட்டபோது இரு சாராரில் யாரையும் அவர்கள் கண்டிக்கவில்லை என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்கள் : புகாரி, முஸ்லிம்)

“ பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்” என்ற ஹதீஸைப் புரிந்து கொள் வதற்காக அவர்கள் இஜ்திஹாத் செய்திருப்பதைக் காணலாம். சிலர் இந்நபிமொழியின் நேரடிக் கருத் தைப் புரிந்து கொள்ள, ஏனையோர் அது கூறும் உள்ளார்ந்த கருத்தைப் புரிந்தார்கள். அதாவது, அஸ ருத் தொழுகைக்கு அங்கு  சென்றடையக்கூடியவாறு வேகமாகச் செல்ல வேண்டுமென்பதே நபியவர்கள் அவ்வாறு கூறியதன் நோக்கம் என்பது அவர்களது நிலைப்பாடாகும்.

· ஸஹாபாக்களில் இருவர் குளிப்புக் கடமை யானவர்களாக இருந்தனர். அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களில் ஒருவர் தயம்மும் செய்து கொண்டு தொழுதார். மற்றவர் தொழவில்லை. இருவ ரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிய போது அவர்களில் எவரையும் நபியவர்கள் குறை கூற வில்லை என தாரிக் பின் ஷிஹாப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்கள் : அஹ்மத், நஸாஈ )

· நபித் தோழர்கள் இருவர் ஒரு பயணத்தில் ஈடு பட்டிருந்தனர். தொழுகைக்கு நேரமாகியது. அவர்களி டம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே, தூய்மையான மண்ணினால் தயம்மும் செய்தனர். பின்னர் தொழு கையின் நேரம் முடிவடையும் முன்னரே நீரைப் பெற் றுக் கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தொழுகை யைத் திருப்பித் தொழுதார். அடுத்தவர் திருப்பித் தொழவில்லை. பின்னர் இருவரும் நபி (ஸல்) அவர்களி டம் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி யவர்கள் திருப்பித் தொழாதவரைப் பார்த்து “ சரியாக ஸ§ன்னாவைச் செய்தீர். உனது தொழுகை உனக்குப் போதுமானதாகும்” என்றார்கள். திருப்பித் தொழுத வரைப் பார்த்து “ உனக்கு இரண்டு கூலிகள் கிடைக் கும்” என்று கூறினார்கள் என்று அபூ ஸஈத் அல் குத்ரீ (ரழி) அறிவிக்கிறார்கள். ( நூல்கள்  : அபூதாவூத், பைஹகீ, ஹாகிம், தபரானீ, தாரகுத்னீ )

மேற்படி மூன்று நிகழ்வுகளும் ஸஹாபாக்கள் இஜ்தி ஹாத் செய்திருப்பதையும் அதனை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருப்பதையும் காண முடிகின்றது. இஜ்தி ஹாத் செய்வதற்கு நபியவர்களின் அங்கீகாரம் இருந்தத னாலேயே அவர்கள் நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக் கும்போது இஜ்திஹாத் செய்தது போன்று அவர்கள் மரணித்த பின்னரும் மிகப்பரந்த அளவில் இஸ்லாமிய சட்டத்துறையில் இஜ்திஹாதைப் பிரயோகித்திருப்பதை ஆதாரபூர்வமான செய்திகளினூடாக அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment