Popular Posts

Friday 22 July 2016

துஆவின் தொடக்கத்தில் ஸலவாத் அவசியம்

துஆவின் தொடக்கத்தில் ஸலவாத் அவசியம் :

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் அமர்ந்திருந்த போது ஒரு மனிதர் பள்ளிக்குள் வந்து தொழுதார். தொழுது முடித்தவுடன் "இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக! மேலும் எனக்கு கிருபை செய்வாயாக!" என்றார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "தொழுபவரே அவசரப்பட்டுவிட்டீர்; தொழுது முடித்து (துஆவுக்காக) அமர்ந்து விட்டால் அல்லாஹ்வை அவனுக்கு தகுதியான வார்த்தைகளால் புகழ்வீராக. இன்னும் என்மீது ஸலவாத் சொல்லி அதன் பிறகு அவனிடம் பிரார்த்திப்பீராக" என்று கூறினார்கள். இந்நிகழ்வு நடந்த சிறிதுநேரத்தில் வேறொரு மனிதர் வந்து தொழுதார். அதன் பின் அல்லாஹ்வை புகழ்ந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொன்னார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து, "தொழுதவரே நீர் பிரார்த்திப்பீரானால் உமது துஆ ஒப்புக் கொள்ளப்படும்" என்று கூறினார்கள். (திர்மிதி, மிஷ்காத் 86)

No comments:

Post a Comment