Popular Posts

Wednesday 16 March 2016

கியமத் நாளின் 14 விடயங்கள்

14 விடயங்கள் நடந்து விட்டால் கியாம நாளை எதிர்14 விடயங்கள் நடந்து விட்டால் கியாம நாளை எதிர்பாருங்கள் !!
நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-

இந்த பதினான்கு விடயங்கள் நடந்துவிட்டால் மறுமை நாளை எதிர்பாருங்கள்

1 . பொதுச் சொத்தை தம் சொந்தப் பொருளைப் போல் ஆக்கிக் கொள்வார்கள் .

2 . அமானிதத்தை தம் பங்குக்கு கிடைத்த பொருளாக ஆக்கிக் கொள்வார்கள் .

3. ஜகாத்தை கொடுக்க மாட்டார்கள் . (கொடுப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கும் )

4. மார்க்கக் கல்வியை உலக லாபத்திற்காக கற்பார்கள் .(பதவிக்காகவும் பொருளுக்காகவும் கற்பார்கள் )

5. கணவன் மனைவிக்கு கட்டுப்பட்டு நடப்பான் .

6. தாயை வேதனைப்படுத்துவான் .

7. நண்பனை அனைத்து விஷயங்களிலும் நெருக்கமாக்கிக் கொண்டு பெற்ற தந்தையை தூரமாக்கி விடுவான்.

8. பள்ளிவாசலில் உலக பேச்சுக்கள் அதிகமாகிவிடும்.

9 . பாவச் செயலில் ஈடுபட்டவன் அச்சமூகத்தின் தலைவனாவான்.

10 . இழிநிலையானவன் முக்கிய்மானவனாகக் கருதப்படுவான் .

11 . அடாவடித் தனத்திற்கு பயந்து அந்த மனிதனுக்கு மரியாதை செய்வார்கள் .

12 . ஆடல் பாடல்களில் ஈடுபடும் பெண்கள் , இசைக் கருவிகள் அதிகமாகிவிடும்.

13 . பலவகையான (பல பெயரில்) மதுபானங்கள் அருந்தப்படும் .

14 . காலத்தால் பிந்தியவன் முந்தைய சமுதாயத்தினரை பழிப்பார்கள் .

இந்த நிலைகள் ஏற்பட்டால் அனல் காற்றையும் பூமி அதிர்ச்சியையும், மனிதன் உருமாற்றபடுவதையும் , வானத்திலிருந்து கற்கள் எறியப்படுவதையும் எதிர்பாருங்கள் .
அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி )
நூல் :திர்மிதி பாருங்கள் !!
Present by ;SSF,கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளை,புதுக்கோட்டை மாவட்டம் ,தமிழ்நாடு.

No comments:

Post a Comment