*சூரா கஹ்ஃப்*
*(ஜும்ஆ நாளில் ஓதவும்)*
*1.*வெள்ளிக்கிழமையன்று சூரா கஹ்ஃப் ஓதுபவருக்கு அடுத்த வெள்ளிக்கிழமை வரை (மேலும் 3 நாட்கள் அதிகபட்ஙமாக) செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
மேலும் ஒரு ஒளி கொடுக்கப்படும்.
அதன் மூலம் தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் பாதுகாக்கப்படுவார்.
*அறிவிப்பாளர் : இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ்,*
*நூல் : தப்ஸீருல் குர்துபீ*
*2.* வெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதி வருபவருக்கு அவரது கால் பாதத்தின் கீழிலிருந்து வானத்தில் உச்சி வரை ஒரு ஒளி கொடுக்கப்படும்.
அது அவரின் மறுமை நாளில் ஒளியாக பிரகாசிக்கும்.
மேலும் இரண்டு ஜும்ஆவிற்க்கு மத்தியில் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
*அறிவிப்பாளர் : இப்னு உமர் ரலியல்லாஹுஅன்ஹு*
*நூல் : தப்ஸீர் இப்னு கதீர்*.
*3.* சூரா கஹ்ஃபை ஓதி வருபவருக்கு ஒரு ஒளி கொடுக்கப்படும்.
அதன் மூலம் கப்ரின் வேதனையை விட்டும் அவர் காப்பாற்றப்படுவார்.
*அறிவிப்பாளர் : அனஸ் ரலியல்லாஹுஅன்ஹு*
*நூல் : தப்ஸீருல் குர்துபீ*
No comments:
Post a Comment