Popular Posts

Showing posts with label மீலாது_விழா_என்பது_இஸ்லாத்தின்_பெயரால்_யூதர்களால்_உருவாக்கப்பட்டதா. Show all posts
Showing posts with label மீலாது_விழா_என்பது_இஸ்லாத்தின்_பெயரால்_யூதர்களால்_உருவாக்கப்பட்டதா. Show all posts

Thursday, 1 December 2016

#மீலாது_விழா_என்பது_இஸ்லாத்தின்_பெயரால்_யூதர்களால்_உருவாக்கப்பட்டதா?​

#மீலாது_விழா_என்பது_இஸ்லாத்தின்_பெயரால்_யூதர்களால்_உருவாக்கப்பட்டதா?​
__________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (14) __________________________________

♣  மீலாது விழா என்பது இஸ்லாத்தின் பெயரால் யூதர்களால் உருவாக்கப்பட்டதா?

மீலாது நபி விழா என்பது யூத கலாச்சாரம் கிருத்துவ கலாச்சாரம் என்றும் கேலி பேசும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் உண்மையை சத்தியத்தை மறைக்கிறார்கள். நாம் மீலாது விழா கொண்டாடுவது போல் யூதர்களும் கிருத்துவர்களும் எந்த மீலாதையும் கொண்டாடுவதில்லை. மீலாது விழா, யூதர்களின் கலாச்சாரம் என்று சொல்வது வழிகெட்ட வஹ்ஹாபிகளால் கடைந்தெடுத்த பொய்யாகும். யூதர்கள் என்ற வார்த்தை அரசியல் ரீதியில் இன்று முஸ்லிம்களிடம் அசூசையான சொல்லாக இருப்பதால் குருட்டுத்தனமாக இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

யூதர்கள் மூஸா (அலைஹி வஸல்லம்) நபிக்காகவோ மற்ற யாருக்காகவோ இப்படி செய்ததில்லை. நபிமார்களின் தகுதியை குறைத்து மதிப்பதும் – அவர்களை அவமதிப்பதும் தான் யூதக் கலாச்சாரமாகும். மீலாது விழாக்களை எதிர்க்கிற வஹ்ஹாபி தறுதலைகள் தான் யூதக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள்,கிருத்துவர்கள் ஈஸா  நபியின் (அலைஹி வஸல்லம்) பிறந்த நாள் என்று டிஸம்பர் 25 தேதி ஒரு நாளில் கிருஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள், அதை எப்படி கொண்டாடுகிறார்கள்- கிருஸ்துமஸ் மரம் வைக்கிறார்கள்- குடில் அமைக்கிறார்கள். ஸ்டார் என நட்சத்திர பலூன்களள வீட்டு வாசலில் மாட்டி வைக்கிறார்கள், மது அருந்துகிறார்கள்.ஹராமா காரியங்களை செய்கிறார்கள், இசை கச்சேரி, ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் என்று அனாசாரத்தில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம்கள் இப்படியா மீலாது விழா கொண்டாடுகிறார்கள்? கண்ணும் கல்பும் உள்ளவர்கள் யாராவது மீலா விழாக்களை இத்தோடு ஒப்பிடுவார்களா? அல் குர் ஆனுடையவும்  சுன்னாவினுடையவும் எல்லைகளை விட்டு வெளியேறிவிட்ட வழிகெட்ட வஹ்ஹாபி கூட்டம் தான் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதை
மௌலிதை இன்று விமர்ச்சிக்கிறது. ​

நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் யஹூதிகள் நோன்புற்றதை கண்ட நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி ஏன் இவர்கள் நோன்பு நோற்கின்றார்கள்? எனக்கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள் அவர்களின் நபீ மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவுபடுத்தி அவர்களின் நபீமார்களின் வெற்றிகளை நினைக்கும் முகமாக நோற்கிறார்கள். என பதிலளித்தார்கள். அப்போது நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவர்களை விட மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவு படுத்துவதற்கு நானே மிகத்தகுதியானவன் எனக் கூறி ஆஸூறா தினத்தில் நோன்புவைத்தார்கள் . இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் இருந்தால் 9ம் நாளையும் சேர்த்து நோன்புவைப்பேன் என்றும் கூறினார்கள் .​

ஆகவே இவர்கள் கூறுவது போல ஒரு வாதத்திற்கு யூதர்களால்தான் மீலாது விழா உருவாக்கப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும், அது எவரால் உருவாக்கப்பட்டாலும் நற்செயல்களை செய்ய முடியும். அதற்காக நாங்களும் அக்கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று வந்துவிடாது. கிறிஸ்மெஸ், வெஸாக் போன்ற அந்நிய மத சடங்குகளுக்கு ஒப்பானது என்ற கண்ணோட்டத்தில் மீலாத் விழாக்களையும் நோக்க முடியாது. இருவரும் விழாக்கொண்டாடுகிறோம். ஆனால் அவர்கள் சிலை போன்ற ஹறாமாக்கப்பட்டவைகளை உபயோகிப்பதன் மூலம் எம்மை விட்டும் வேறுபடுகிறார்கள் ஆகவே எது எப்படி இருந்தாலும் மீலாது விழா கொண்டாடுவதற்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தில் ஆதாரங்கள் உள்ளன.

♣  நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழா (பிறந்த நாளை) ஏன் கொண்டாட வேண்டும்?

​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதற்க்கும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதற்கும் அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதற்கும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதற்க்கும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதற்கும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதற்கும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வது அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதற்காகதான் மீலாது விழா கொண்டாட்படுகின்றது. இதனை இஸ்லாம் மார்க்கம் அங்கிகரித்த விடயமாகும். எனவே இவ்வாறு எங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு முஸ்தஹப்பான அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அள்ளித்தரக்கூடிய காரியமாகும்.​​

♣  மீலாது விழா அன்று ஏன் ஸூப்ஹான மௌலித் ஏன் ஓத வேண்டும்?​

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்வதற்கு காலம் நேரம் உண்டா? ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நாளும் ஸூப்ஹான மௌலித் ஓதலாம் எனவே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த அழகைக் குறித்தும், பிறந்த அன்று நடந்த நிகழ்சிகள், அற்புதங்கள் பற்றியும் ஆதாரப்பூர்வமான பல செய்திகள் 'ஸூப்ஹான மௌலித்' கிதாபில் உள்ளன. இதன் காரணமாகவே மற்ற மாதங்களில் ஓதுவதை விட நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்திலும் அவர்கள் பிறந்த தினமான மீலாது ஷரீப் அன்று அதை விஷேசமாக நாம் ஓதி வருகிறோம்.

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*