Popular Posts

Showing posts with label தவ்ஹீத் பெயரில் வஹாபிகள். Show all posts
Showing posts with label தவ்ஹீத் பெயரில் வஹாபிகள். Show all posts

Tuesday, 12 January 2016

JAQH (ஜம்யிய்யத்தது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்)

அல்லாஹ்வின்
 மாபெரும்
 கிருபையால்
 போலி
 முகமுடி
 அணிந்து கொண்டு
 வஹாபிய
 கெள்கையை பரப்ப
 நினைக்ககும் ஜாக்
 ஜமாத்தின்
 போலி முகமுடி
 கிழிந்ததது
 JAQH (ஜம்யிய்யத்தது
 அஹ்லில் குர்ஆன் வல்
 ஹதீஸ்)
 தாவா பணி என்றும்
 தூய வழி என்றும்
 அமைதியை நோக்கி
 என்றும்
 தொழுகைக்கு
 அழைக்கின்றோம் என்று
 சொல்லிக்கொண்டு தமிழக
 முஸ்லிம்களிடையே பரவத்
 துவங்கியுள்ளது.
 இந்த இயக்கங்களில்
 உருப்பினர்களாக உள்ள
 அப்பாவி
 இளைஞர்களுக்கே இது
 தெரியாது நல்லது தானே
 சொல்றாங்க நல்லது தானே
 செய்றாங்க என்று
 நினைத்து கொண்டு
 இருக்கிறார்கள்
 வெறித்தனமான போக்கும்,
 சக முஸ்லிம்களின்
 உணர்வுகளை மதிக்காத
 நிலையும்,
 அடுத்தவர்களுடைய மானம்,
 மரியாதையோடு
 விளையாடுகின்ற
 தன்மையும் வளர்ந்து
 கொண்டு வருகிறது.
 முஸ்லிம்களை
 காஃபிராக்குகின்ற கூட்டம்
 தலை தூக்கியிருக்கிறது.
 துவக்க காலத்தில்
 முஸ்லிம்களின்
 கொள்கையில் பலவீனத்தை
 ஏற்படுத்தி,
 அவர்களிடையில்
 பகைமை உணர்வை
 உண்டாக்கி வேடிக்கைப்
 பார்த்த, யூத சக்திகளால்
 உருவாக்கப்பட்ட
 “கவாரிஜ்கள்” என்ற
 வழிகெட்ட கூட்டத்தினர்
 செய்த அதே செயலை
 இன்று இவர்கள் வேறு
 பெயர்களில் செய்து
 கொண்டிருக்கின்றனர்.
 யார் யார், சொர்கத்திற்கு
 செல்வார்கள், யார் யார்
 நரகத்திற்குச் செல்வார்கள்
 என்று தீர்மானிக்கின்ற
 அதிகாரத்தை தன் கையில்
 எடுத்து முஸ்லிம்களின்
 ஈமானோடு விளையாடிக்
 கொண்டிருக்கிறார்கள்.
 இப்படிப்பட்ட காலச்
 சூழ்நிலையில் நாம்
 மிகவும் எச்சரிக்கையாக
 இருக்க வேண்டும்,
 நம்முடைய ஈமானை நாம்
 பாதுகாக்க வேண்டும்.
 நமது இறை நம்பிக்கையை
 பலவீனப்படுத்த தீய சக்திகள்
 செய்யும் திட்டமிட்ட
 பிரச்சாரத்தை முறியடிக்க
 வேண்டும்.
 அல்லாஹ்விடத்தில் உதவி
 வேண்டிக் கொண்டிருக்க
 வேண்டும். ஷைத்தானின்
 தீய தூண்டுதல்களிலிருந்து
 அல்லாஹ்விடத்தில்
 பாதுகாப்பு தேட
 வேண்டும். சரியான
 பாதையில் வழி
 நடத்துமாறு
 அல்லாஹ்விடத்தில்
 பிரார்த்தித்து கொண்டே
 இருக்க வேண்டும்.
 அல்லாஹ் யாருக்கு அருள்
 செய்தானோ அவர்கள்
 நேரான பாதையில்
 சென்று அல்லாஹ்வை
 அஞ்சி வாழ்வார்கள்,
 யாருக்கு அல்லாஹ்வின்
 அருள் இல்லையோ அவர்கள்
 கண்மூடித்தனமான
 வாழ்க்கையில் ஈடுபட்டு
 தங்களை மாய்த்துக்
 கொள்வார்கள்.
 எனவே நாம்
 அல்லாஹ்விடத்தில் நல்
 அமல்கள் மூலமாகவும்
 தொழுகையின்
 மூலமாகவும் வஹாபிச
 கொள்கையிலிருந்த
 ு பாதுகாப்பு
 தேடவேண்டும் யா
 அல்லாஹ் நம்
 அனைவரையும்
 தொழுகையை
 நிலைநாட்டக்கூடிய
 பாக்கியத்தை
 தந்தருள்வாயக.

Wednesday, 6 January 2016

வஹாபிகள் என்றால் யார்?

வஹாபிகள் என்றால் யார்

 அரேபியாவில் நஜ்து மாகாணம், (இன்று அதன் பெயர் ரியாத்) அங்கு வசிப்பவர்களுக்கு நஜ்தியர் என்று பெயர்.

 நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவிய அந்த நஜ்து வாசிகளுக்கு அவர்களின் உள்ளத்தில் குடிக்கொண்டிருந்த பொறாமை குணம் சற்றும் மாறாமல் அது நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே இருந்தது.
 நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 சமூகம் வந்து உபதேசங்களை கேட்கும் இவர்கள் வெளியில் சென்றதும் அதற்கு நேர் மாற்றமான நச்சு வார்த்தைகளை பேசுவார்கள். குதர்க்க வாதம் புரிவார்கள். இரவெல்லாம் இஸ்லாத்துக்கு எதிராக சதியாலோசனை செய்துகொண்டு இருப்பார்கள். இதற்கு காரணம் அந்த தீயவர்களின் உள்ளத்தில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது இருந்த பொறாமை. இவர்களின் நிலையை தெரிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இவர்களுக்கு உபதேச தோரணையிலும், கண்டித்தும் பல முறை சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்கள். ஆனால் அது இந்த தீயவர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது. இவர்களை பற்றி தான் அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா தனது திருமறையில் நயவஞ்சகர்கள் (முனாபிகீன்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு எச்சரிக்கை செய்து இருப்பதை திருமறையில் பல இடங்களில் காணலாம். இவர்களின் போக்கு பற்றி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு வேதனை ஏற்படுவதுண்டு.
 ஷைத்தான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வரும் போது இந்த நஜ்தியர்களின் உருவத்தில் தான் வருவான். அவனைக் கண்டதும் ஷெய்குன் நஜ்தி (நஜ்தி பெரியார்) வருகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறுவார்கள். இதை அண்மையில் இருக்கும் ஸஹாபாக்கள் இவன் ஷைத்தான் என்று புரிந்து கொள்வார்கள்.

 ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்கள் முபாரக்கான கரங்களை ஏந்தி " யா அல்லாஹ்! எங்கள் ஷாம் தேசத்துக்கும் (சிரியா) பரக்கத்து செய்வாயாக! யா அல்லாஹ்! எங்கள் யெமன் தேசத்திற்கு பரக்கத்து செய்வாயாக!" என்று துஆ கேட்டார்கள். அப்பொழுது பக்கத்திலிருந்த சஹாபாக்கள், " யா ரசூலல்லாஹ்! எங்களுடைய நஜ்து தேசத்துக்கும்" என்றார்கள். மறுமுறையும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன் கூறிய படியே ஷாம், யெமன் இரு தேசங்களுக்காகவும் துஆ செய்தார்கள். மீண்டும் நஜ்தியர்கள் தங்கள் தேசத்துக்காக துஆ கேட்கும் படி கூறவே, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மூன்றாம் முறையாக " அங்கு தான் அதிர்ச்சிகளும், கொந்தளிப்புகளும், பித்னாக்களும் உண்டாகும். ஷைத்தானின் கொம்பு வெளியாகும். அங்குதான் ஷைத்தானுடைய கூட்டங்கள் வெளிக்கிளம்பும்" என்று கூறினார்கள். (ஸஹிஹ் புகாரி)

 நஜ்தியர்களின் முனாபிக் (நயவஞ்சக) செயல்கள் காரணமாக அடிக்கடி பித்னாக்கள் வேகத்துடன் ஏற்படுவதும், அது பலம் இழப்பதுமாக இருந்தது.
 நஜ்தியர்களால் ஏற்படும் சிறு சிறு குழப்பங்களை எல்லாம் அப்பொழுது வாழ்ந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களாலும் ஆட்சியாளர்களாலும் அப்போதைக்கப்போது அடக்கி ஒடுக்கப்பட்டன. பின்னர், அப்பொழுது தான் நஜ்தில் இப்னு தைமியா என்பவன் வெளியாகி தீனில் தலையிட்டு நூதன கொள்கைகளை உண்டு பண்ணி, நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஷரிஅத்திற்கு விரோதமான மஸாயீல்களை திரட்டி, 'ஸிராத்தல் முஸ்தகீம்' என்ற நூலை வெளியிட்டு புதிய கிளர்ச்சியை உருவாக்கினான். இந்த நூலில் அதிகமாக நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அஹ்லுல் பைத்துகள், சஹாபாக்கள், இமாம்கள், அவ்லியாக்கள் முதலியோர்களை இழிவுச் சொற்களால் நிந்தித்து எழுதி இருக்கிறான். இதை அவனுடைய சகோதரர்களும், உறவினர்களும் கண்டித்து, மறுத்தும் இருக்கிறார்கள். அது மற்றும் அன்றி அப்போது வாழ்ந்த தலை சிறந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களான ஷெய்குல் இமாம் ஷைக் முஹம்மது ஃபர்ஸ் , குதுவதுல் முஹத்திதீன் ஷைக் இப்னு ஹஜர் மக்கி, செய்யத் அஹ்மத் கபீர் பாரியி இன்னும் மக்காவின் முப்தியா இருந்த அல்லாமா செய்யத் அஹ்மத் தஹ்லான் மக்கி ஆகிய மார்க்க மேதைகள் இந்த இப்னு தைமியாவை லஃனத்துச் செய்து காஃபிர் என்று மார்க்க தீர்ப்பு (ஃபத்வா) வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இவனுடைய சூழ்ச்சியை அறியாமல் சில அறிவீனர்கள் இவனை பின்பற்றினார்கள். இவனுடைய அட்டூழியம் பொறுக்க முடியாமல் எகிப்து அரசாங்கம் பல முறை இவனை சிறை காவலில் வைத்தது. அப்போதும் இவன் அடங்கவில்லை. இறுதியாக சிரியா அரசாங்கம் இவனை கைது செய்து திமிஷ்க் நகர் சிறை கூடத்தில் சாகும் வரை சிறையில் வைத்தது. அங்கேயே இவன் இறந்தான்.
 ஏறத்தாள 600 வருடங்களுக்கு பின் நஜ்தை சார்ந்த தர்இய்யா என்ற ஊரில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பிறந்தான். இவன் தலையெடுத்து இப்னு தைமியாவுடைய கொள்கைகளைப் பின்பற்றி அதற்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து புதியதோர் மத்ஹபை உண்டாக்க முற்பட்டு இப்னு தைமியா எழுதிய ஸிராத்தல் முஸ்தகீம் என்ற நூலை விரிவு படுத்தி அதற்கு மிருது கொடுத்து ' கிதாபுத் தவ்ஹீத்' என்ற பெயரால் வெளியிட்டான்.

 இந்த சந்தர்ப்பத்தில், துருக்கி அரசர் சுல்தான் அப்துல் ஹமீத் கான் காலமானார். பதவியின் காரணமாக அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டது. துருக்கியின் உதவியை பெற்று கொண்டிருந்த பக்கத்து அரசர்களும் பலம் இழந்தார்கள். அது ஹிஜாஸையும் தாக்கியது. இதை தக்க தருணமாக கொண்டு இப்னு வஹ்ஹாப் நஜ்தி ஒரு படையை திரட்டிகொண்டான்.

 இந்த படையின் தலைவனாக ஸுஊத் என்பவனை நியமித்தான். இவன் ஹஜ்ஜுக்கு போவதாக பாசாங்கு செய்து பெரும் படையுடன் புனித மக்காவுக்குள் நுழைந்து பொருள்களை சூறையாடி ஆண், பெண், வயோதிபர்கள், வாலிபர்கள், குழந்தைகள் என்று பாராமல் கொலை செய்தான். அந்த மக்காவாசிகள் உயிர் தப்ப கார்மானம் தேடி ஹரம் ஷரீபுக்குள் நுழைந்தார்கள். அப்பொழுதும் அந்த கயவர்கள் அந்த மக்களை உயிரோடு விடவில்லை. ஞாபகார்த்தமான மஸ்ஜிதுகளும், கப்ருகளும் தாக்கப்பட்டன. மக்காவில் புரிந்த அட்டூழியம் போலவே மதீனா முனவ்வராவிலும் அந்த கயவர்கள் கொஞ்சமும் இரக்கமின்றி முஸ்லிம்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார்கள். அப்போது அங்கு இருந்த செய்யதுனா அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதா ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) ஆகியவர்களுடைய மக்பராக்களும் வீழ்த்தப்பட்டது. ஸலவாத்து நூல்கள் ஃபிக்ஹு கிதாபுகள் முதலியவை எரிக்கப்பட்டன. ஜித்தா, தாயிப், மக்கா, மதினா ஆகியவை இந்த கொடுமைகளுக்கு உட்பட்டது.

 இந்த அநியாயக்காரர்களின் அட்டூழியம் பெருகி கடைசியாக அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் கப்ரு ஷரீஃபை தரைமட்டமாக்க முற்பட்டபோது, அந்த சில ஷைத்தான்கள் அதிசயமாக செத்து மடிந்தார்கள். இவர்கள் இந்தளவுக்கு காட்டுமிராண்டித்தனமாக அப்பாவி மக்களை கொல்லுவதற்க்கு காரணம் அங்கு வாழ்ந்த மக்கள் சுன்னத் வல் ஜமாஅத்தாக இருந்ததே. முஹம்மது இப்னு வஹ்ஹாப் நஜ்தியுடைய மத்ஹப்பின் பிரகாரம் சுன்னத் வல் ஜமாஅத் மக்கள் முஷ்ரிக்குகள், பித்அத்துக்காரர்கள் என்று அவன் நினைத்ததே.

 அந்த சமயம் உள்நாடு, வெளிநாடுகளிலுள்ள உலமாக்கள், முஃப்திகள் இப்னு வஹ்ஹாப் நஜ்தியின் கொள்கை முற்றும் முழுதாக தவறு என்றும் அதை கடுமையாக ஆட்சேபித்து தக்க ஆதார சான்றுகளுடன் அவரை லஃனத்து செய்து குப்ஃபார் (இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவர்) எனக் தீர்ப்புக்கூறி பல ஃபத்வா கிதாபுகள் வெளியிட்டனர்.

 இறுதியாக இந்த இப்னு வஹ்ஹாப் நஜ்தி, யெமன் நாட்டில் ஒரு தக்வாவுடைய சுன்னத் வல் ஐமாஅத் பெரியாரோடு தன் மத்ஹபை பற்றி தர்க்க வாதம் புரிந்து இறுதியில் படுதோல்வியடைந்து அங்கேயே அகால மரணம் ஆனான். (இவனது அதிர்ச்சிக்குரிய அகால மரணம் பற்றிய விபரம் ஃபுதூஹாதுல் மகிய்யா என்ற நூலிலும் மஙானி கிதாபிலும் காணலாம்)

 ஆனாலும் இவன் தனது படைக்கு தலைவனாக நியமித்த ஸுஊது என்பவன் அரேபியாவின் ஆட்சியை பிடித்தான். வெறும் அரேபியா என்ற நாட்டை தன் பெயரை முன்னாள் சொருகி ஸஊதி அரேபியா என்று மாற்றினான். அவனுடைய பரம்பரையே இன்று வரை அரேபியாவை ஆட்சி செய்கிறது.

 நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன் அறிவிப்பின்பட, நஜ்தில் ஷைத்தானின் கொம்பாக தோன்றி ஃபித்னாக்களையும், குழப்பங்களையும் உருவாக்கியவன்தான் இந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி.

 இவனை பின்பற்றி , இவனது மத்ஹபை ஏற்று, இவனது சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தலைசாய்த்து நடப்பவர்களையே "வஹாபிகள்" என்று சொல்லப்படும்.

முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தி

'' தவ்ஹீத் பெயரில் வஹாபிகள்''
எச்சரிக்கை

 நபி ஸல் அவர்களின் தீர்க்க தரிசனத்தால் பிற்காலத்தில் நடக்கவுள்ள விபரீதங்கள் பற்றி விளக்கமாக முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.அவற்றில் சிலதை இங்கு எழுதுகின்றேன்.

 முற்காலத்தில் வாழ்ந்த ஸாலிஹான நல்லோர்களும் அதை அடுத்துள்ள காலத்திலுள்ள நல்லவர்களும்மரணித்து விடுவார்கள். இப்படியே படிப்படியாக “ஸாலிஹீன்“ நல்லவர்கள் சென்ற பின் (மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில்) தொலிக்கோதுமையின் சருகுகள் போன்ற அல்லது பேரீத்தம் பழச் சக்கைகள் போன்றகுப்பைகள்தான் எஞ்சியிருப்பர். (அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே எல்லாம் அறிந்த மேதைகள் என்று சொல்லிக் கொள்வர்.) ஆனால் அல்லாஹ்“ அவர்களை கணக்கெடுக்கவே மாட்டான். என்று நபி ஸல் அவர்கள அருளினார்கள்.
 புஹாரி,பாகம் – 02,ஹதீஸ் இலக்கம் – 952
 பாடம் - கிதாபுர்ரிகாக்

 கடைசி காலத்தில அறிவும், தெளிவும், அனுபவமுதிர்ச்சியும் இல்லாத ஒரு கூட்டம் வருவார்கள். அவர்கள் நபி ஸல் அவர்களின்ஹதீஸில் இருந்தே ஆதாரம் எடுத்துப் பேசுவார்கள். ஆனால் அவர்களின் ஈமான் (உதட்டளவில்தான் இருக்குமேயன்றி) உள்ளத்தில் நுழைந்திருக்காது. மேலும் அவர்கள் புனித இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள்.

 புஹாரி,ஹதீஸ் இலக்கம் – 3611,பாடம் – கிதாபுல்மனாகிப்
 முஸ்லிம், பாகம் – 01,பக்கம் – 342

 இந்த உம்மத்தில் பிற்காலத்தில் வாழும் மக்கள் முற்காலத்தில் வாழ்ந்தவர்களை நிந்திக்க – சபிக்க ஆரம்பித்தார்களானால் (கலியுகம் வந்துவிட்டதாக பொருள். ஆகவே) கியாமத் நாளை எதிர்பாருங்கள் என்று நபி ஸல் அவர்கள் அருளினார்கள்.
 மிஷ்காத்,பக்கம் – 470,ஹதீஸ் இலக்கம் – 5450
 திர்மிதீ,ஹதீஸ் இலக்கம் – 2211

 அன்புத்தம்பி!
 தற்காலத்தில் சமூகத்தைக் குழப்புகின்ற பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் நஜ்தியின் கொள்கைகளைப் பிரதிபலிப்பவைகளாகவே இருக்கின்றன. இவர் வழி தவறிய இப்னு தைமிய்யா, இவர் மாணவர் இப்னு கைய்யூம் ஆகியோரைப் பின்பற்றியதோடு தனது சொந்தக் கருத்துக்களையும் சேர்த்து ஒரு புது மார்க்கத்தை தோற்றுவித்தார்.
 முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் மதீனாவின் கிழக்குத்திசையிலுள்ள நஜ்த் மாகாணத்தின் வாதிபனிஹனிபா என்ற சிற்றூரில் ஹிஜ்ரி 1111அல்லது 1114இல் பிறந்து, ஹிஜ்ரி 1204இல் மரணித்தார். இவர் தந்தை அப்துல் வஹ்ஹாப் அப்பகுதியின் காழியாக விளங்கினார். இவர் சகோதரர் சுலைமான் என்பவர் மிகச் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார்.
 முஹம்மத் இப்னு அப்துல் வஹாபின் நடவடிக்கைகளை அவதானித்த தந்தை, சகோதரர், ஆசிரியர்கள், அறிஞர்கள் அனைவரும் இவர் தீய பாதையில் செல்வதாகவும் இவரின் பிரச்சாரத்தால் மக்கள் வழிதவறிச் செல்லும் ஆபத்து உண்டு என்றும் மக்களை எச்சரித்தனர். இவரின் வழி தவறிய கருத்துக்களுக்குத் தக்க விளக்கத்தை பல நூற்களின் மூலம் எழுதி வெளியிட்டனர். இவ்வாறு எழுதப்பட்டவைகளுள் இவரின் சகோதரரான சுலைமான் இப்னு அப்துல் வஹாப் எழுதிய “ஷவாஇக்குள் இலாஹிய்யா“ என்ற நூல் பிரசித்தி பெற்றதாகும்.
 அன்புத் தம்பி! முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் நஜ்தியின் குழப்பத்தை நிகர்த்த ஒரு பெரிய குழப்பம் இஸ்லாமிய வரலாற்றில் நடந்ததில்லை என்று அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபை நீர் கேள்விப் பட்டிருப்பீர். 125,000 உயிர்களைக் கொன்று குவித்த பாஸிஸவாதி என்று சரித்திரம் அவனைப் பற்றி எழுதிவைத்துள்ளது. ஆனால்,
 முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தியுடன் சேர்ந்து இப்னு சுஊத் செய்த கொலைக் கலாச்சாரம் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுபையும் மிஞ்சி விட்டதாக அப்போது புனித மக்கா, மதீனாவின் முப்தியாக விளங்கியவரும், பிரபல சரித்திர ஆசிரியரும், பல்துறை சார்ந்த பன்னூலாசிரியருமான இமாம் ஸைனி தஹ்லான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அத்துறறுஸ் ஸனிய்யா மற்றும் குலாசத்துல் கலாம் ஆகிய நூற்களில் எழுதியுள்ளார்கள்.
 வஹாபிகளின் கொடுமைகளைத் தாங்காதவர்கள் புனித ஹரத்தில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் கொடுங்கோலர்களான வஹாபிகள் புனித ஹரம் ஷரீப் என்றும் பார்க்காமல் உள்ளே புகுந்து உலமாக்கள், பெண்கள், சிறு குழந்தைகள் அனைவரையும் சரித்தனர். இத்தோடு இவர்களின் கொலைவெறி அடங்கவில்லை. தாயின் மார்பில் அமுதுண்டிருந்த பச்சிளம் பாலகரையும் பதைக்கப் பதைக்க பதம் பார்த்தனர். இந்தப் பாஸிஸவாதிகள் இவையனைத்தையும் மேற்படி ஹரத்தின் முப்தியாக இருந்த இமாம் ஸைனி தஹ்லான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மேற்படி நூலில் கண்ணீர் மல்க எழுதி வைத்துள்ளார்கள்.
 அன்புள்ள தம்பி!
 இப்படிப் பல்லாயிரக் கணக்கான உலமாக்களையும் மற்றும் உயிர்களையும் கொன்று குவித்து அவர்களின் ஜனாஸாவையும் குருதியையும் உரமாக்கி வளர்ந்ததுதான் இந்த வஹாபிசமாகும்.
 வஹாபிகளின் கொடுங்கோண்மை கட்டுக்கடங்காமல் சென்றபோது இவர்களை அடக்குவதற்கு எகிப்திலிருந்து மேலதிகப் படை அனுப்பப்பட்டது. இப்படை இவர்களை அடக்கி முஸ்லிம்களின் பகுதியிலிருந்து விரட்டியடித்தது. இவ்வாறு வஹ்ஹாபிகள் தோற்கடிக்கப்பட்டது முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என முஸ்லிம் உலகம் கருதியது.
 இதனை புகழ்பூத்த மார்க்கப் பேரறிஞர் அல்லாமா ஷாமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது மிகப் பிரசித்தி பெற்றதும் உலகம் பூராகவும் பாடநூலில் இடம்பெற்றதுமான றத்துல் முக்தார் பாகம் - 03, பக்கம் - 309இல் இவ்வாறு வரைந்துள்ளார்.
 வழி ததறிய கவாறிஜிகள் தற்காலத்தில் நஜ்திலிருந்து வெளிப்போந்த (இப்னு) அப்துல் வஹாபைப் பின்பற்றியவர்களைப் போன்றிருந்தனர். இவர் (வஹாபி)கள் ஹன்பலி மத்ஹபை பின்பற்றுவதாக கூறினர். ஆயினும் தாங்கள் மட்டும்தான் முஸ்லிம்கள். தங்களின் கொள்கைகளுக்கு மாற்றமானவர்கள் முஷ்ரிகுகள் என்று நம்பினர். இதனால் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரையும் அக்கொள்கை சார்ந்த உலமாக்களையும் கொன்றனர். அவர்களின் பலம் உடைக்கப்பட்டு அவர்களின் (கட்டுப்பாட்டு) பிரதேசங்களும் சீரழிக்கப்பட்டு முஸ்லிம் படைகளுக்கு ஹிஜ்ரி 1233இல் வெற்றி கிட்டும்வரை இது நடந்தது.
 உலகம் பூராகவும் பாடத்திட்டத்தில் இருக்கும் தப்ஸீர் ஸாவியின் பாகம் - 03, பக்கம் - 230இல் இப்படி விபரிக்கப்பட்டுள்ளது.
 அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்
 “நிச்சயமாக ஷைத்தான் உங்களின் விரோதியாக உள்ளான். எனவே நீங்களும் அவனை விரோதியாக எடுத்துக் கொள்ளுங்கள்“.
 இத்திருவசனம் கவாரிஜிகள் விடயத்தில் இறங்கியது என்று ஒரு கூற்று உள்ளது. இவர்கள் குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் புரட்டுத் தனமான வலிந்துரைகள் செய்தனர். (தவறான கருத்துக்களால்) முஸ்லிம்களின் உடமைகளையும், உயிர்களையும் சூறையாடுவது ஹலால் என்றனர். இவர்களின் சிந்தனையை ஒத்த ஒரு கூட்டம் ஹிஜாஸ் மண்ணில் நம் கண் முன்னே தோன்றியுள்ளது. இக்கூட்டத்தை “வஹாபிகள்“ என்று கூறப்படுகிறது. அவர்கள் ஏதோ உண்மையைக் கூறுவதாகக் கூறுகின்றனர்.
 ஆனால், உண்மையில் அவர்கள் பொய்யானவர்கள். ஷைத்தான் அவர்களில் மேலாதிக்கம் செய்துள்ளான். அதனால் அல்லாஹ்வின் நினைவை விட்டும் அவர்களை மறக்கடிக்க வைத்துள்ளான். இவர்கள் ஷைத்தானின் கூட்டத்தினர். அறிக! நிச்சயமாக ஷைத்தானின் கூட்டத்தினர் கைசேதத்திற்குரியவர்கள்.
 தப்ஸீர் ஸாவி:பாகம் - 03, பக்கம் - 288
 உலகம் முழுவதும் பாடத்திட்டத்திலுள்ள மற்றுமொரு சட்டநூல் ஹாஷியத்துல் ஷர்வானி ஆகும். இந்நூல் பாகம்- 04, பக்கம் - 230இல் அவர்கள் கூறுவதையும் கேளுங்கள்.
 ஸஹாபாக்கள் நான்கு இமாம்கள் உள்ளிட்ட சட்ட அறிஞர்கள், சூபியாக்கள் போன்றோரின் சுவடு(நூற்)கள் போன்றதை அவர்கள்மீது சினம் கொண்டிருக்கும் பித்அத்துக் காரர்களான றாபிழிகள், வஹாபிகள் போன்றோருக்குக் கையளிப்பது ஹறாமாகும். இவர்கள், இவற்றைக் கிண்டல் செய்வது காபிர்கள் கிண்டல் செய்வதை விட கடுமையாக உள்ளது.
 ஆதாரம்:ஷர்வானி பாகம்- 04, பக்கம் - 230
 தேவ்பந்து மத்ரஸாவில் நீண்ட காலம் ஹதீதுப்பாடம் கற்றுக்கொடுத்தவரும், புகாரி ஷரீபுக்கு விளக்கம் எழுதியவருமான அன்வர் ஷாஹ்கஷ்மீரி என்பவர் இப்படி எழுதியுள்ளார்.
 “முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் நஜ்தி என்பவர் அறிவு குறைந்த ஓர் அற்பத்தனமான மனிதனாகும். இவர் (குப்ர் பத்வா) தீர்ப்பளிப்பதில் தீவிரமானவர். குப்ர் பற்றி சிந்தித்து தீர்ப்பளிப்பதாயின் அவர் ஷரீஅத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவராகவும், குப்ரியத்தின் வகைகளையும் அது உண்டாவதற்கான காரணங்களை நன்கு அறிந்தவராகவும் இருத்தல் வேண்டும். இத்தகுதி இல்லாத ஒருவர் இதில் இறங்குவது அறவே கூடாது,
 பைழுல் பாரி : பாகம் - 01, பக்கம் - 170
 அன்புத் தம்பி அப்துல்லாஹ்!
 நான் மேற்கூறியவைளை நன்கு சிந்தித்துப் படித்துப் பார்! சட்டம், தீர்ப்பு, ஹதீஸ், வரலாறு உள்ளிட்ட துறைகளில் துறைபோகக் கற்ற பேரறிஞர்கள் வஹாபிகளைப் பற்றி வழங்கிய தீர்ப்பை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்.
 வஹாபி ஒரு பாஸிஸ கொள்கைக்காரன்,அறிவு குறைந்த அற்பன், காபீர்களைவிடக் கொடியவன். என்று அவர்கள் அவனைக் குறித்துக் கூறியிருப்பதையும் சிந்தித்துப்பார். இவற்றைக் கூறியவர்கள் அவனின் அடாவடித்தனத்தை கண்முன்னே கண்டவர்கள், அனுபவித்தவர்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்.
 கேடுகெட்ட காபீர்களை விட கொடிய சுபாவம் கொண்ட பாஸிஸவாதிகளான வஹாபிகளின் அடி வருடிகள்தான் நமது நாட்டில் தூய இஸ்லாம் போதிக்கப் புறப்பட்டிருக்கும் தௌஹீது ஜமாஅத்தினர் என்பதையும் முதலில் விளங்கிக் கொள்!
 வழி தவறிய வஹாபிகளினால் இஸ்லாம் ஒரு போதும் புனிதம் பெறப் போவதில்லை. முஸ்லிம்களுக்குள் பிரிவினையையும், பகைமை உணர்வையும் விதைத்து முஸ்லிம்கள் அதிகம் மதிக்கின்ற அறிஞர்களையும் அவர்களின் அரிய நூற்களையும் அவமதித்து, அவற்றினைப் பார்க்காது தடைவிதித்தும், முஸ்லிம்களின் அனைத்து விடையங்களிலும் சந்தேகங்களையும், சலனங்களையும் தோற்றுவித்து இஸ்லாத்தைப் புனிதப்படுத்துவதாக இவர்கள் கூறுவது எவ்வளவு கேவலமானது என்பதை உணர்ந்து பார்!
 அன்புத் தம்பி!
 உன்கடிதத்திற்கு சுருக்கமாக பதில் எழுதவே நினைத்தேன் கடிதம் நீண்டு விட்டது. ஆயினும் வஹாபிகள் பற்றிய இவ்விளக்கம் உனக்கு பெரும் தெளிவைக் கொடுத்திருக்கும். என்று நம்புகின்றேன். மற்றவை உன் மறுமடல் கண்டு.