Popular Posts

Showing posts with label இந்த அப்துல் பாஸித் புகாரி என்பவர் வழிகெட்ட வஹ்ஹாபி அமைப்பைச் சேர்ந்தவர். Show all posts
Showing posts with label இந்த அப்துல் பாஸித் புகாரி என்பவர் வழிகெட்ட வஹ்ஹாபி அமைப்பைச் சேர்ந்தவர். Show all posts

Tuesday, 26 April 2016

இந்த அப்துல் பாஸித் புகாரி என்பவர் வழிகெட்ட வஹ்ஹாபி அமைப்பைச் சேர்ந்தவர்

¶"இந்த அப்துல் பாஸித் புகாரி என்பவர் வழிகெட்ட வஹ்ஹாபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது பற்றி இஸ்லாமிய உம்மத்திற்கு எச்சரிக்கையும் உபதேசமும்"¶

♦இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர். புதிதாக உருவாகி புகழ் பெற்று வருகிறார். இவர் பெரும்பாலும் JAQH  என்னும் வஹாபி அமைப்பை சேர்ந்தவர். இவரது கொள்கைகள், பயான்கள் அனைத்தும் இஸ்லாமிய கொள்கையான அஹ்லுஸ் சுன்னாஹ்விற்கு எதிரானவை. இவர் பாமர முஸ்லிம் மக்களை கவர்வதற்கு கையாளும் தந்திரங்களாவன: தொழுகை, அமல், மரணம், சுவர்க்கம், நரகம் போன்றவைகளை பற்றி உருக்கமாக பேசி மக்களை கவருதல், ஜியாரத் பற்றி தரக்குறைவாக பேசுவார், வஸீலா கேட்பது ஷிர்க் என்று கூறுவான், கூட்டு துஆ இஸ்லாத்தில் இல்லை என்பார் இது போல அவரது அத்தனை கொள்கைகளும் இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானவை.

♦அப்பாவி பாமர மக்கள் இந்த கொடியவனின் உள்ரங்கம் தெரியாமல் இவனது நளினமான பேச்சிலே மயங்கி இவன் பின்னால் சென்று கொண்டு இருக்கின்றார்கள். பொதுவாக இன்று மக்களில் பெரும்பாலானோர் அகீதா (கொள்கை) அறிவு இல்லாமல் உள்ளனர். இவரை போன்ற நளினமாக பேசுவோரின் பேச்சில் மயங்கி வழிகேட்டின் பக்கம் செல்கின்றனர். எனவே, அந்த பாமர மக்களுக்கு இவனை போன்ற வஹாபிகளின் முகத்திரையை கிழித்து உண்மை முகத்தை காட்ட வேண்டும்.

♦(PJ) பீ.ஜே என்று சொல்லக்கூடிய பெரிய ஷெய்த்தானுக்கு இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்ல முடியாது ஏனெனில் அந்த நாடுகள் அவனை தடை செய்துள்ளது. ஆதலால் இன்று வஹாபிகள் தங்களின் வஹாபிஸ கொள்கையை இந்த நாடுகளுக்குள் கொண்டு செல்ல பயன்படுத்தும் ஆயுதம் தான் இந்த சின்ன பீஜே அல்லது சின்ன ஷெய்த்தான் என்று சொல்லக்கூடிய இந்த அப்துல் பாஸித் புகாரி.

♦கடைசியாக, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் ஒழுங்காக வாழ்ந்து வரும் மலேசிய மக்களையும் அவனது நச்சு பேச்சை கொண்டு வழி கெடுக்க அங்கும் காலடி வைத்துவிட்டார். மிக கவலைக்குரிய விடயம். மலேசியா காலா காலமாக நேரான இஸ்லாமிய கொள்கையான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழும் நாடாகும். அந்த நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் கொள்கைகளையும் இந்த வஹாபிகள் மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

♦இதற்கு அந்தந்த நாடுகளில் மறைமுகமாக இயங்கும் வஹாபிஸ இயக்கங்களும், இந்த வஹாபிகளின் கொள்கைகளை அறியாத அப்பாவி சில இயக்கங்களும் இப்படிப்பட்டவர்களை வரவழைத்து தங்களின் பணத்தை வீண் விரயம் செய்கிறார்கள். வீண் விரயம் மட்டுமல்ல அது ஹராமும் கூட. இந்த விடயங்களில் அந்தந்த நாடுகளிலுள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், அரசாங்கமும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.எனவே, அன்பு சகோதரர்களே, தயவு செய்து உங்களால் முடிந்த அளவு இவரை பற்றி உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ, ஈமெயில் மூலமாகவோ தெரியப்படுத்துங்கள்.
நேர்வழியும் பிரயோசனமும் பெற ஏராளமான இஸ்லாமிய உலமாக்களின் பயான்கள் உள்ளன. அவற்றை கேட்டு நேர்வழி பெற செய்யுங்கள்.

♦www.worldtamilbayan.com இது உலக இஸ்லாமிய உலமாக்களின் பயான்கள் அடங்கிய உலகின் மிகப்பெரிய தமிழ் பயான் இணையத்தளம். இதில் 2000 க்கும் மேற்பட்ட பயான்கள் உள்ளன. இவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். உலக இஸ்லாமிய உலமாக்கள், அறிஞர்கள் பற்றி அறிந்துக்கொள்ள இந்த தளம் இருக்கிறது. www.islamicscholars.tk

♣ அப்பாவி பாமர மக்களை வழிகெடுக்க வந்தவர்களைப் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் ஹபீப் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினதும் முன்னச்சரிக்கைகள்:

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.(அல்குர்ஆன் : 6:159)

♦ நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் : 2:42)

♦ எவன் தன் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்ட சமயத்தில் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகளால் செய்த குற்றங்களை (முற்றிலும்) மறந்து விடுகின்றானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இந்த அநியாயக்காரர்கள்) யாதொன்றையும் அறிந்து கொள்ளாதவாறு நாம் அவர்களுடைய உள்ளங்களில் திரையையும், அவர்களுடைய காதுகளில் மந்தத்தையும் நிச்சயமாக ஆக்கிவிட்டோம். ஆதலால், (நபியே!) நீங்கள் அவர்களை நேரான வழியில் (எவ்வளவு வருந்தி) அழைத்தபோதிலும் ஒரு காலத்திலும் அவர்கள் நேரான வழிக்கு வரவே மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 18:57)

♦ (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
(அல்குர்ஆன் : 2:9)

♦ இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்; சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்; ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?. (அல்குர்ஆன் : 63:4)

♦ அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். மேலும்,, இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள், ”இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்.” என்று கூறினார்கள். (ஷஹீஹ் புகாரி 3611)

♦ அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மேலும்,,) கடைசி காலத்தில் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்களும் வருவார்கள். நீங்களும், உங்களின் மூதாதையர்களும் கேள்விபடாத விஷெயங்களையெல்லாம் உங்களிடத்தில் கொண்டு வருவார்கள். அவர்களைப் பற்றி (உங்களிடம் நான்) முன்னெச்சரிக்கை செய்கின்றேன் (எனது எச்சரிக்கையின்படி நீங்கள் அவர்களிடம் கவணமாக நடந்து கொண்டீர்களானால்) அவர்கள் உங்களை வழிகெடுத்துவிடவும் முடியாது. உங்களை குழப்பத்தில் ஆழ்த்தவும் முடியாது. அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
(நூல் : முஸ்லிம்,முஸ்னத் அஹ்மத் பாகம் 2 பக்கம் 349,மிஷ்காத் 154)

♦”நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்” இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (ஷஹீஹ் புகாரி 100)

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்“  நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் “அல்கவ்ஸர்“) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்“ என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், “இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது“ என்று கூறுவான்.  என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார். (ஷஹீஹ் புகாரி 7049)

♦ஆகவே அப்துல் பாஸித் புஹாரி என்பவர் சத்தியத்தை மறைத்து அசத்தியத்தை கூறி தூய மார்க்கத்தை குழப்புகின்றவர். அந்த அடிப்படையில் இந்த கட்டுரையின் நோக்கம் குர்ஆன் ஹதீஸுக்கு முறனான விளக்கங்களையும், கருத்துக்களையும் பேசிக்கொண்டியிருக்கும் வழி கெட்ட வஹ்ஹாபிகளை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அடையாளம் காட்டுவதாகும்.இது புரியாமல் சிலர் இந்த கட்டுரையை பார்த்து மற்றவர்களைப் பற்றி குறை சொல்லி புறம் பேசித்திரிவது என்று தவறாக விமர்சனம் செய்யலாம். ஆனால் அவ்வாறு இல்லை, ,, உங்களுடைய ஈமானை அசுத்தப்படுத்தக்கூடிய அழிக்க்கூடிய சில விச கிருமிகளை
நம் சமூதாயத்திற்க்கு அடையாலம் காண்பித்து அவர்களினதும் உங்களினதும் ஈமானை பாதுகாக்கும் முயற்ச்சி என்பதை புரிந்து கொள்ளவேண்டும். ஆகவே நேரான பாதையினை அதாவது நபிமார்கள், ஸஹாபாக்கள், இமாம்கள், வலிமார்கள் காட்டிய நேர்வழியில் செல்லுங்கள்.

நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!(அல்குர்ஆன் : 1:6)

(அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.(அல்குர்ஆன் : 1:7)

அந்த நேர்வழி பெற்றவர்களை அல்லாஹ் யார் என்பதை பின்வரும்  வசனத்தில் கூருகிறான். "எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப்போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள்".(அல்குர்ஆன் : 4:69)

அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு தெளிவாக்குவதற்கும் உங்களுக்கு முன்னிருந்த (நல்ல) வர்களின் நேரான வழிகளில் உங்களை வழி நடத்துவதற்கும், உங்களுடைய தவ்பாவை ஏற்றுக்கொள்வதற்கும் விரும்புகிறான். (அல் குர்ஆன் 4:26)

♦ எனவே இவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் ஈமானை பாதுக்காக்க முயற்சிப்போமாக. ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமின் சகோதரன் ஆவான், ஆதலால் தன் சகோதரனின் ஈமானை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். நாம் அனைவரும் கடைசி வரை நேரான இஸ்லாமிய கொள்கையாகிய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்து எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஸஹாபாக்கள், அவ்லியாக்கள் சென்ற சிராத்துல் முஸ்தகீம் வழியில் செல்வோமாக!ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

💐💐ஹலாவதுல் ஈமான்💐💐
✳ BY Moulavi
S.L Abdhur Rahman Ghawsi