குரு கிடைத்துவிட்டார் என்று ஒரு சீடன் எப்போது திருப்தி அடைவது? *** ஆன்மீக குரு இருக்கும் விலாசம் அறிந்துகொள்ளும்போதா?? *** தன் குருவை நேரில் சந்திக்கும்போதா??? *** குருவிடம் தீட்சை பெறும்போதா??? குரு இருக்கிறார்... நாம் சந்திக்காத நிலையிலும், தீட்சை பெறாத நிலையிலும்... ஏன் அவர்களின் விலாசம்கூட நமக்கு தெரியாத நிலையிலும் குரு குருவாகவே இருக்கிறார். நாம் அவரை சந்திக்காவிட்டாலும் அவர் நிலையில் மாற்றம் வரப்போவதில்லை. ஏனென்றால் அவரோ இறை அண்மை என்னும் பேரானந்தக் கடலில் சதாசர்வ காலமும் மூழ்கித் திளைக்கிறார். இறைவன் எப்படி இருக்கிறான் கவனிப்போம்... அவனோ பாரபட்சமின்றி தன் படைப்புகள் அனைத்திற்கும் அவையவைதம் எதார்த்தத்திற்கு ஏற்ப படியளக்கின்றான். அவனை அறிந்து கொண்டவருக்கும் அறியாதவருக்கும், அவனை தேடுபவர்க்கும் தேடாதவர்க்கும்... அவன் பொதுவானவனாக நீதி தவறாதவனாக இருக்கிறான்... இருப்பதை எல்லாம் தகுதி அறிந்து உகந்தோருக்கு உகந்தபடி உவந்து கொடுக்கின்றான்... தந்தையை பார்த்து நடத்தை பழகும் குழந்தைபோல ஞானகுருவானவரும் இறை அண்மையைவிட்டு நீங்காதிருக்க இறைவனின் பண்புகளை ஒத்து தன் செயல்களை அமைத்துக் கொள்கிறார்... அந்த அச்சிலேயே சுற்றிவருகிறார்... தனக்கென்று தனிப்பண்புகள் இல்லாத நிலையை அடைய தீராப் பயிற்சியில் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழ்நாள் எனும் கெடுவை கவனமாக கழிக்கிறார். ஒரு குருவை பின்பற்றும் சீடன் தன் குருவின் இந்த விடாப் பயிற்சியின் நிலையை எய்தப் பெறும் வழியை கற்று அறிந்துகொண்டு... தனக்கென இருக்கும் பண்புகளை என்று விட்டொழித்து விழிப்படைகிறானோ... அன்றுதான் அவனுக்கு மெய்யாகவே குரு கிடைக்கிறார்... மாறாக குருவின் காலடியில் இருந்துகொண்டு தன்மயக்கத்தில் இருக்கும் ஒருவர் குருவின் கரம்பற்றி தீட்சை பெற்றதையே குரு கிடைத்துவிட்டதாய் கருதிக் கொள்வது மடமை அன்றி வேறென்ன??? இறைவன் கிடைக்கப் பெறுவதும் இப்படித்தான்!!
சத்தியம் நிச்சயம் வெல்லும். மனப்பேய் பிடித்த மடையர்களுடன் கூடி மார்கத்திற்கு மாறு செய்யாமல் மனதுடன் யுத்தம் செய்யும் மகான்களுடன் கூடி மார்க்கப்படி நடக்க உதவி செய் மாலிக்கி எவ்மித்தினே
Popular Posts
-
வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவையில்லை ஏந்தல் நபிகள் இருக்கும் இடத்தில் இரவே வருவதில்லை திங்கள் நபிகள் உலவும் தெருவில் தென்...
-
பெருநாள் தொழுகையை தொழுகும் முறை ஹனபி :- அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தொழுகைக்கான நிய்யத்து சொல்லும் முறை :- ஈதுல் அள்ஹா உடைய பெருநாள் தொழுகை ...
-
தினம் ஒரு துஆ கெட்ட கனவு கண்டால் أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் பொருள் : எடுத்தெற...
-
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் யார்? சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து பிரிந்து போன பல்வேறு மாறுபட்ட புதுக் கொள்கைக்காரர்கள் தாங்களே உண்மையான சு...
-
ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் எழுதியவர்: மௌலவி S.L . அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை. இஸ்லாத்தின் பார்வையில் பரக்கத் செய்யப்பட்ட ஷஃபான் மா...
-
தினம் ஒரு துஆ கழிவறையில் நுழையும் போது اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ...
-
¶"இந்த அப்துல் பாஸித் புகாரி என்பவர் வழிகெட்ட வஹ்ஹாபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது பற்றி இஸ்லாமிய உம்மத்திற்கு எச்சரிக்கையும் உபதேசமும...
-
இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள தியாகங்கள்" ❇ இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பிறப்...
-
ஈஸால் தவாப் பற்றி ஓர் ஆய்வு. சங்கைக்குரிய ஷெய்குனா மெளலவி அல்ஹாஜ் A. அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் தொடர் -5 08. ஒரு மனிதன் நபி (ஸல்லல்லா...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment