Popular Posts

Tuesday, 6 December 2016

நாயகமே_ﷺ_நிச்சயமாக_நான்_உங்களின்_இளிவான_சிரிய_அடிமையாவேன_என்று_சொல்லலாமா

#நாயகமே_ﷺ_நிச்சயமாக_நான்_உங்களின்_இளிவான_சிரிய_அடிமையாவேன_என்று_சொல்லலாமா?  _________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (30) __________________________________

*♣ நாயகே யாரஸூலல்லாஹ் நிச்சயமாக நான் உங்களின் இளிவான சிரிய அடிமையாவேன் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?*

​அடிமை என்பது அதாவது நாம்
இறைவனுக்கு மட்டும்தானே அடிமை அப்படி இருக்க கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நாம் அடிமை என்று சொல்வது ஷிர்க் என்ற கேள்விக்குறிய பதில். அதாவது (ஹகீகத்) என்ற இலக்கியம் அடிப்படையில் உண்மையில் நாம் அல்லாஹூ தஆலாவுக்குதான் அடிமையாக இருக்கின்றோம். ஆனால் (மஜாஸ் என்ற இலக்கிய மரபின்படி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமை என்று சொல்லப்பட்டுள்ளது. காரணம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை வழிகாட்டலை எடுத்து நடப்பதால் எனவே இப்படி ஒரு செயலை அதற்குறியவரின் பால் சேர்க்காமல் அதற்கு காரணமாக இருந்தவரின் பால் சேர்ப்பது குர்ஆன், ஹதீஸ்களில், மேலும் நமது பேச்சு வழக்கிலும் எழுத்திலும் நிறைந்து காணப்படுகிறது.

​​உதாரணமாக: பசியைப் போக்குபவனும்
சுகத்தை தருபவனும் அல்லாஹ்தான் ஆனால் நமது பேச்சு வழக்கில் இன்ன உணவை சாப்பிட்டேன் பசி போய்விட்டது, டாக்டரிடம் சிகிச்சை எடுத்தேன் நோய் சுகமாகி விட்டது என்றுதான் கூறுகின்றோம். அல்லாஹ் என்று கூறுவதில்லை. அதே போன்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் அடிமைகள் இருந்தார்கள், ஏன் நமது முதலாலியையும் கூட பொஸ் அதாவது எஜமான் என்றுதான் சொல்கிறோம், திருமணத்தின் போது வலியாக மனமகளின் தந்தை வலியாக வருவார் வலி என்றால் பொருப்பு தாரி நமது பொருப்பு தாரி இறைவன்தான் எனவே இதுவெல்லாம் மஜாஸ் என்ற இலக்கிய மரபின்படி குறிப்பிடப்பட்டுள்ளது உண்மையில் எதார்த்தத்தில் இறைவன்தான் எஜமான், என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.​

♦ “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன் மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக (அல்குர்ஆன் : 39:53) ​

♦ உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு முறை அவர்களின் மகனாரும், இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். பேச்சினூடே ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்து உங்கள் தந்தை என் பாட்டனார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அடிமைத்தானே என்று கூற இப்னு உமர் அவர்கள் வேதனையோடு தன் தந்தையிடம் இதை கூறிவிட்டார்கள்.

​​இதனைக்கேட்டதும் தன் மகனையும்
இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் கையைப்பிடித்து கூட்டிக்கொண்டு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ரவ்லாவின் முன் நின்று யா ரஸுலல்லாஹ்! என்னை தங்களுடைய அடிமை என்று தங்களின் அருமை பேரர் கூறிவிட்டார்கள். இது அவரும் சாட்சியாக இங்கு இருக்கிறார். தாங்கள் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் யா ரஸுலல்லாஹ்! தாங்கள் என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு விட்டால் நான் ஈருலகிலும் மேன்மை அடைந்து விடுவேனே யா ரஸுலல்லாஹ்! என்று கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்ட தேம்பித் தேம்பி அழுந்துக்கொண்டிருந்தார்கள்.​சுவர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம்
பெற்ற இந்த அருமை ஸஹாபாவின் செய்கை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீதும் அவர்களின் சந்ததிகள் மீதும் காட்டப்படவேண்டிய அன்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

நாயகமே_ﷺ_நீங்கள்_எனக்கு_உதவிட_வேண்டும்_என்று_சத்தியம்_செய்கிறேன்_என்று_சொல்லலாமா

#நாயகமே_ﷺ_நீங்கள்_எனக்கு_உதவிட_வேண்டும்_என்று_சத்தியம்_செய்கிறேன்_என்று_சொல்லலாமா?  _________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (29) __________________________________

*♣ 'நாயகமே! யாரஸூலல்லாஹ்! ﷺ நீங்கள் எனக்கு உதவிட வேண்டும் என்று உங்களிடத்தில் நான் சத்தியம் செய்கிறேன்’ என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?*

"சத்தியம் செய்பவர் யாராக இருந்தாலும் அவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்ய வேண்டும். அல்லது வாய் பொத்தி இருக்க வேண்டும். அல்லாஹ் அல்லாத மற்ற எவர் மீதோ சத்தியம் செய்வது கூடாது. அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு ஒருவர் சத்தியம் செய்தால் அவர் ஷிர்க் இணை வைத்தவராகி விட்டார்" என்று நபியே கூறி இருக்கும் பொழுது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீது சத்தியம் செய்து இணைவைப்பின் பக்கம் மக்களை அலைகிறார்கள் என்று வழிகெட்ட வஹாபிகள் விமர்சனம் செய்வார்கள். அந்த அடிப்படையில் ஒரு விடையத்துக்காக நாம் சத்தியம் செய்வதாக இருந்தால் அது நமது நிலையை உறுதிப்படுத்துவதற்காகவும் நம் கருத்துக்களின் அல்லது செயலின் உண்மை நிலையினை ஊண்றி நிலைநிறுத்துவதற்காகவும் சத்தியம் செய்கிறோம்.

உதாரணமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் விபச்சாரத்தினை நெருங்கமாட்டேன் மேற்படிபோன்ற சத்தியம் அல்லாஹ்வின் மீதுதான் செய்யப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மௌலிதில் இப்படி தன்னிலையை உறுதிப்படுத்த சத்தியம் செய்யப்பட்டிருக்கிறதா? இல்லவே இல்லை. மாறாக நாயகமே யா றஸூலல்லாஹ்! நீங்கள் எனக்கு உதவிட வேண்டும் என்று உங்களிடத்தில் சத்தியம் செய்கின்றேன் என்பதாக பாடப்பட்டிருக்கிறது. அதாவது எனக்கு நீங்கள் கண்டிப்பாக உதவிட வேண்டும் நாயகமே என்று பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் உரிமையுடன் கேட்பதாக அற்புதமாக அமைந்திருக்கிறது!

அதற்காகவே நாயகத்தின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நீங்கள் எனக்கு உதவிட வேண்டும் என்று உங்களிடத்தில் சத்தியம் செய்யும் வகையில் வார்த்தைப் பிரயோகம் இங்கு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது! இதனை புரிந்துகொள்ள பெரியளவிலான அறிவு தேவையில்லை.சாதாரணமாக எல்லோரும் புரிந்து கொள்ளலாம் நபிகள் நாயகத்தின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதவி வேண்டும் என்பதற்காக இங்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சத்தியம் செய்யப்பட்டிருக்கிறதே தவிர நான் இதை செய்வேன் இதை செய்யமாட்டேன் என்று தன்னிலையை உறுதிப்படுத்த சத்தியம் செய்யப்படவில்லை என்பதை புரிந்துகொண்டால் இதில் எந்த ஷிர்க்கோ தவறோ வரமுடியாது.​

எனவே இவ்வரிகள் பிறவற்றின் மீது சத்தியம் செய்யத் தடை என்ற வகைக்குள் கட்டுப்பட்டதல்ல அந்த ஹதீதுகளுக்கும் இந்த மௌலிது வரிகள் ஒருபோதும் முரண்படாது! றஸூல் நாயகத்தின் மஹப்பத்தையும் உதவியையும் வேண்டி எனது நாயகம் என்ற உரிமையில் கவி வடிவில் தன் ஏக்கம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்காகவே சத்தியம் என்ற சொல் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ​கவிநடையில் மஹப்பத்தையும்
நெருக்கத்தையும் காட்ட சொல்லப்பட்ட ஒன்றை இலக்கிய அறிவும் இலக்கண அறிவும் இல்லாது நேரடியாக விளங்கி குதர்க்கம் விளைவிப்பது வழிகெட்ட வஹ்ஹாபிகளின் முட்டால்தனத்தையே காட்டுகின்றது

எனவே நல்ல முறையில் தெளிவாக சிந்தனயோடு நோக்கினால் இதன் தாற்பரியம் புரிய வாய்ப்புண்டு! அப்போதும் கூட புரியவில்லை என்றால் அது அல்லாஹ்வின் நாட்டம்! நாம் ஒன்றும் செய்யமுடியாது! (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். ( திருக்குர்ஆன் 15:72) இதில் அல்லாஹ் தெளிவாக நமக்கு விளக்கி கொடுக்கின்றான், குர் ஆனிலிருந்து பெறப்பட்ட வார்த்தைத்தான் ஸுப்ஹான் மவ்லிதில் இடம் பெற்றுள்ளது தவிர. சுயமாக யாரும் கூறவில்லை, திரு குர் ஆன் வசனம் கூட தெரியாமல் ஸுப்ஹான மவ்லித்தில் தவறு இருக்கிறது என்று கூறுவது உங்கள் தவறு. குர் ஆனுக்கும், ஹதிஸிற்கும் மாற்றமாக யாரும் கூறவில்லை.​

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

நபிகள்_நாயகம்_ﷺ_அன்னவர்கள்_ஆஷிகீன்களின்_நோய்களை_நீக்கி_குணப்படுத்துவார்களா

#நபிகள்_நாயகம்_ﷺ_அன்னவர்கள்_ஆஷிகீன்களின்_நோய்களை_நீக்கி_குணப்படுத்துவார்களா?  _________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (28) __________________________________

*♣ நோய்களுக்கு நிவாரணம் தருவதற்க்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி அவர்களால் முடியும் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?*

​நபி ஈஸா (அலைஹிஸ் ஸலாம்)
அவர்கள் நோய்களை குணப்படுத்துவார்கள் என்று அல்குர்ஆனில் பின்வருமாறு இறைவன் கூறியுள்ளார். "இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்)". (அல்குர்ஆன் : 3:49)

♦ யூசுஃப் நபியின் பிரிவை நினைத்து கண் பார்வையை இழந்த தந்தை எஃகூப் நபியின் முகத்தில் யூசுஃப் நபியின் பரக்கத் நிறைந்த கண்னியமான சட்டையை முகத்தில் போட்டபோது கண் பார்வை மீண்டும் வந்த நீண்ட வரலாற்று செய்தி.“என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்).(அல்குர்ஆன் : 12:93)

​பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து,
(சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்.  (அல்குர்ஆன் : 12:96)​

♦ கைபர் போரின் பொழுது ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண் வலியால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் பிறரின் கையைப் பிடித்து நடந்தாலே தவிர தனியாக நடந்து செல்ல இயலாதவராக இருந்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்களின் இரு கண்களிலும் தங்கள் எச்சிலை உமிழ்ந்தார்கள். அந்த நேரத்திலேயே ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண்வலியிலிருந்து குணமடைந்தார்கள் (நூல்: ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம்) ​

♦ ஜுஅய்த் இப்னு அப்திர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள் சாயிப் இப்னு யஸீத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைத் தொண்ணூற்று நான்கு வயது உடையவர்களாக, (அந்த வயதிலும்) திடகாத்திரமானவர்களாக (கூன் விழாமல்) முதுகு நிமிர்ந்தவர்களாக கண்டேன். அவர்கள், 'எனக்குக் கேள்விப்புலன் மற்றும் பார்வைப் புலனின் நலம் அல்லாஹ்வின் தூதரின் பிரார்த்தனையால் தான் வழங்கப்பட்டுள்ளன என்பதை நான் அறிந்திருக்கிறேன். என் தாயின் சகோதரி என்னை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அழைத்துச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியின் மகன் நோயுற்றிருக்கிறார். இவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்காக பிரார்த்திதார்கள்" என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு (நூல் ஷஹீஹ் புகாரி)

​♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (யாரேனும் ஒரு) மனிதருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால், அல்லது கொப்புளேமா காயேமா ஏற்பட்டால், தமது ஆட்காட்டி விரலைப்பூமியில் வைத்து (மண்ணைத் தொட்டு) விட்டு அதை உயர்த்தி, "அல்லாஹ்வின் பெயரால்! எங்களில் சிலரது உமிழ்நீரோடு எமது இந்தப் பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் நோயுற்றிருப்பவரைக் குணப்படுத்தும்'' என்று கூறுவார்கள்.அறிவிப்பவர்: ஹழ்ரத் உஸ்மான் இப்னு ஹுனைப் ரலியல்லாஹு அன்ஹு. (நூல்: முஸ்லிம்) ​

♦ ஒரு தடவை, கண்பார்வையற்ற ஒரு மனிதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, யாரசூலல்லாஹ்! என்னைக் குணப்படுத்தும்படியாக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள் என வேண்டிக் கொண்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீ விரும்பினால் உனக்காக பின்னர் துஆச் செய்கின்றேன். அது உனக்கு சிறந்ததாக அமையும். அல்லது இப்போதே விரும்பினால் அதை செய்கிறேன் என்று கூறினார்கள். ​​இப்போதே துஆச் செய்யுங்கள் என அவர் வேண்டிக் கொண்டார்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து, அம்மனிதரை உழுச் செய்யுமாறு ஏவினார்கள். பூரணமாக உழு செய்தபின், இரண்டு ரஅகத்துகள் தொழச் சொன்னார்கள். அதன்பின் இவ்வாறு பிரார்த்தியுங்கள் என்று கீழ்க்காணும் துஆவை கற்றுக் கொடுத்தார்கள் யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் நபிமார்களுக்கெல்லாம் அருளான முஹம்மத் (ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம்) அவர்களின் பொருட்டினால் உன்னை முன்னோக்கிக் கேட்கிறேன். முஹம்மதே! நிச்சயமாக நான் எனது குறித்த தேவை நிறைவேற்றப்படுவதற்காக தங்களைக் கொண்டு எனது இரட்சகனிடம் முன்னோக்கியுள்ளேன். யாஅல்லாஹ்! எனது விடயத்தில் அவரை பரிந்துரைக்கச் செய்வாயாக! (இமாம் நஸாயி, இமாம் பைஹகீ, இமாம் தபரானீ, இமாம் திர்மித, இமாம் ஹாகிம் இன்னும் பல ஹதிஸ்கள் உள்ளன).​

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கண்பார்வையிழந்த ஸஹாபி ஒருவருக்கு பின்வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். (அதனை ஓதிய அவர் பார்வை பெற்று நலமடைந்தார். தேவைகள் ஏற்படும் போதெல்லாம் ஸஹாபாக்கள் இந்த துஆவை ஓதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்) இச்சிறப்பு மிக்க துஆ இதோ!​​யா அல்லாஹ்! உன்னிடம் கேட்கிறேன்.
ரஹ்மத்துடைய நபியாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பொருட்டைக் கொண்டு உன்பால் முகம் நோக்குகின்றேன். யா ரசூலல்லாஹ்! உங்கள் பொருட்டைக் கொண்டு நாயன்பால் எனது இத்தேவைக்காக முகம் நோக்குகின்றேன். என் தேவை நிறைவேறுவதற்காக நாயனே! எனது விடயத்தில் அன்னாரின் ஷபாஅத்தை ஏற்றுக்கொள்வாயாக!. (நூல்கள்: "திர்மிதி 2 -197, இப்னுமாஜா 1 - 441, நஸாயி 658, 659, முஸ்தத்றக் 1 - 519, இப்னுஹுசைமா2 - 226)

♦ நான் ஸலாமா (ரலியல்லாஹூ அன்ஹு) அவர்களின் கெண்டைக்காலில் அடிபட்ட ஒரு காயத்தின் அடையாளத்தைப் பார்த்தேன். உடனே நான் அவரிடம் 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கவர், 'கைபர் போரன்று எதிரிகளின் தாக்குதலால் எனக்கு காலில் அடிபட்டுவிட்டது. 'ஸலாமா காயம் பட்டுவிட்டார்' என்று மக்கள் கூறினார்கள். பின்னர், அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் என்னை கொண்டு சென்றார்கள். அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் என் மீது மூன்று முறை ஊதினார்கள். அதன் பிறகு இந்த நேரம் வரை அந்தக் காயத்தின் காரணமாக எந்த வலியும் எனக்கு ஏற்படவில்லை.' என்று கூறினார்கள். ​​அறிவிப்பவர்: ஹழ்ரத் யஜீது பின் அப்திர்
ரஹ்மான் (ரலியல்லாஹு அன்ஹூ)​(நூல்: அபூதாவூத்) ​

♦ ஹழ்ரத் கதாதா பின் நுஃமான் (ரலியல்லாஹு அன்ஹூ) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது: அவர்களின் கண் உஹதுப் போரில் போய்விட்டது. (எதிரிகள் ஈட்டியில் குத்தியதால் அவரின் கண் துண்டித்து கீழே விழுந்து விட்டது. அவர் அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்தார். அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவரின் கண்ணை அதன் இடத்தில் மீண்டும் பொருத்தினார்கள். அது சரியாக பொருந்திவிட்டது!  (நூல்: தப்ரானி, பைஹகி) ​

♦ ஹழ்ரத் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மகள் அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு கைஸான் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபிக்கு சொன்னார்கள்: இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுடைய ஜுப்பா. இது ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில் காணப்பட்டது. அவர்களுடைய மரணத்திற்கு பிறகு அதை நான் எடுத்து கொண்டேன். இதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அணியக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த ஜுப்பாவை நோயாளிகளுக்கு கழுவிக் கொடுத்து நாங்கள் நோய் நிவாரணத்தை தேடி கொள்வோம். அவர்கள் அதன் மூலம் சுகமும் பெறுகின்றனர் என கூறினார்கள். (ஸஹிஹ் முஸ்லிம் பாகம் 2, பக்கம் 190, மிஷ்காத் பக்கம் 374)

♦ உம்மத்திற்கு முஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியொன்று இருந்தது. மக்கள் அதன் மூலம் நோயிலிருந்து சுகம் பெறுகின்றனர். சில நேரங்களில் தண்ணீர் பாத்திரத்தில் அத்திருமுடியை முக்கி எடுத்து அந்நீரைப் பருகுவர்.

ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மவ்ஹிப் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். எனது மனைவி ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தை என்னிடம் கொடுத்து உம்மு சல்மா (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் அனுப்பிவைத்தாள். ஒருவனுக்கு கண் திரிஷ்டி அல்லது ஏதோ ஒன்று ஏற்படுமாயின் இவ்வாறு தண்ணீர்ப் பாத்திரம் ஒன்றை உம்மு சல்மாவிடம் என் மனைவி அனுப்புவது வழக்கம். அதேபோல் தான் என்னையும் அனுப்பிவைத்தாள் உம்மு சல்மா அவர்கள் எனது தண்ணீர்ப் பாத்திரத்தைக் கண்டதும் தன்னிடமிருந்த வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து அதில்வைக்கப்பட்டிருந்த நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலைமுடியை எடுத்து நான் கொண்டு சென்ற தண்ணீர்ப் பாத்திரத்தினுள் அதைவிட்டு அசைத்தார்கள் அப்பொழுது நான் பாத்திரத்தினுள் எட்டிப்பார்த்தேன் அங்கு சிவந்த முடிகள் இருப்பதை கண்டேண் என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 5896, மிஷ்காத், மேலும் பார்க்க புகாரி ஓரக் குறிப்பு பக்கம் 875)

♦ அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு “உம்முடைய மேலங்கியை விரியும்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து) விட்டுப் பின்னர், “அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக!“ என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை“ என அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (நூல் புகாரி 119)

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

ஆஷிகீன்களின்_கஷ்டங்களை_சிரமங்களை_நபிகள்_நாயகம்_ﷺ_அன்னவர்கள்_களைவார்களா?

#ஆஷிகீன்களின்_கஷ்டங்களை_சிரமங்களை_நபிகள்_நாயகம்_ﷺ_அன்னவர்கள்_களைவார்களா?  _________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (27) __________________________________

*♣ சிரமங்களை (கவலைகள்,துன்பங்கள்) நீக்குவதன் மூலம் என் உயிருக்கு நீங்கள் சுகமளியுங்கள் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?*​

(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார் நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார் இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.(அல்குர்ஆன் 9:128)

♦ எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,  (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
(அல்குர்ஆன் : 7:157)​

♦ நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம் அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் -இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது. (திருகுர்ஆன் 21:84)​

ஆகவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நமக்காக பிரார்த்தனையும் செய்கின்றார்கள், நமது கவலைகள், துன்பங்கள், கஷ்டங்கள் சிரமங்கள் அனைத்தையும் போக்குகின்றார்கள், அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்கின்றார்கள், அல்லாஹ் உடைய இந்த வசனத்தை எல்லாம் வழிகெட்ட வஹ்ஹாபிகள் ஓதி உள்ளார்களா? இல்லை தெரிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்குகிறார்களா?​

♦ மேலும் மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, 'நமக்கு ஏற்பட்டுள்ள கவலையிலிருந்து (துன்பங்களிலிருந்து) நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)' என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம் (அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான்.

எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். 'நீங்கள் (நபி) நூஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்' என்று சொல்வார்கள்.

உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம்(அலை) அவர்களிடம்) செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.​உடனே, இறைநம்பிக்கையாளர்கள்
(இப்ராஹீம் - அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸா அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.

உடனே, அவர்கள் மூஸா (அலைஹிஸ் ஸ்லாம்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, 'நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசா அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.

​உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள்.
அப்போது நான், 'என்னுடைய
இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன்விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) 'உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும்.

​​அப்போது நான் என்னுடைய தலையை
உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.

​​பிறகு மூன்றாம் முறையாக
(இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், 'குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை' என்று சொல்வேன்.என இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தார்கள். ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ) (நூல்கள்: புகாரி 7510, 7440, 4712, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவுத், இப்னு மாஜா, நஸாயீ)

♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு, எல்லா இறைத்தூதர்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும். இதை அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல் முஸ்லிம் 338, மேலும் பார்க்க 335,337,339,339,340,341)

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*